சனி, 29 ஏப்ரல், 2017

TNLA ராஜாராம் திருமா துரோகம் திருமாவளவன் விமர்சனம் மறுபக்கம் தனித்தமிழ்நாடு

aathi tamil aathi1956@gmail.com

6/6/15
பெறுநர்: எனக்கு
தமிழ்நாடு விடுதலைப்படையைச் சேர்ந்தவர்
ராஜாராம். இவர் திருமாவளவனை தலித்துகளின்
நம்பிக்கைக்குரிய தலைவனாக பார்த்தார்.
அப்போதெல்லாம் திருமாவளவனிடம் இப்போது இருக்கும்
ஆள் பலம், பண பலம் உட்பட எதுவும் கிடையாது.
எங்கு சென்றாலும், நடந்தோ, பேருந்திலோ செல்வார்
திருமா. இதைக் கண்ட ராஜாராம்,
திருமாவளவனுக்காக ஒரு காரை வாங்கி
பரிசளித்தார்.
சில ஆண்டுகளுக்கு பிறகு, போலீசால் தேடப்பட்டு
வந்த ராஜாராம் போலீசில் சிக்கினார். இவர் போலீசில்
சிக்கியவுடன், திருமாவளவனை பயம் பிடித்து ஆட்டத்
தொடங்கியது.
மிகுந்த அச்சம் அடைந்த திருமா, சிறிது காலம்
முன்பு வரை, தன்து உற்ற தோழனாக இருந்து வந்த
செல்வப் பெருந்தகையை அணுகி, தனது பெயர் இந்த
வழக்கில் வராமல் பார்த்துக் கொள்ளச் சொல்லி பகீரத
பிரயத்தனம் செய்தார். செல்வப் பெருந்தகை தனக்கு
காவல்துறை உயர் அதிகாரிகளோடு உள்ள தொடர்பை
பயன்படுத்தி திருமாவளவனின் பெயர் எதிலும்
வராமல் பார்த்துக் கொண்டார்.
காவல்துறை ராஜாராமிடமிருந்து வாங்கி
வைத்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தின் படியே,
திருமாவளவன் அந்த வழக்கில் கைது செய்யப்
பட்டிருக்க வேண்டும். ஆனால், பலரிடம் கெஞ்சி,
கூத்தாடி, திருமாவளவன் தனது பெயர்
அவ்வழக்கினில் வராமல் பார்த்துக் கொண்டார்.
இது தவிர, ராஜாராம், போலி என்கவுண்டரில்
சுட்டுக் கொல்லப் படப் போகிறார் என்ற செய்தி
அறிந்த்தும், அவரைக் காப்பாற்ற முயற்சி எதுவும்
எடுக்காமல் நிம்மதி பெருமூச்சு விட்டவர்தான்
இந்த்த் திருமாவளவன்.
தனது நண்பன் நடந்து செல்கிறானே என்று அவனுக்காக
கார் வாங்கிக் கொடுத்த ராஜாராம் எங்கே ?
அதே நண்பனை போலீஸ் என்கவுண்ட்டரில் கொல்லப்
போகிறார்கள் என்று தெரிந்தும், மவுனியாக இருந்த
திருமாவளவன் எங்கே ?////

பிரபாகரன் தந்தை மரணத்திற்கு காரணம் திருமா சவுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக