சனி, 29 ஏப்ரல், 2017

முருகன் பாண்டிய மன்னன் மள்ளர் பள்ளர் சாதி மதம் மெய்யியல் கடவுள் வழிபாடு

aathi tamil aathi1956@gmail.com

29/3/15
பெறுநர்: எனக்கு
முருகன் யார்?
----------------------
- தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்.
தமிழ்க்கடவுள் என உலகமெங்கும் வணங்கப்பெறும்
முருகக் கடவுள் பாண்டியவேந்தனாவான். மீனாட்சி
எனும் தாடாதகைப் பிராட்டிக்கும்,
சுந்தரபாண்டியனுக்கும் பிறந்த உக்கிரபாண்டியன்
எனும் இயற்பெயர் கொண்டவனே முருகன் ஆவான்.
மலையத்துவசப்பாண்டியனுக்கும், சூரசேன சோழனின்
மகளான காஞ்சனமாலைக்கும் பிறந்தவளே தாடாதகைப்
பிராட்டி என்னும் மீனாட்சி ஆவாள். குறிஞ்சி
நிலத்தலைவன் என பிற்காலத்தே தொல்காப்பியம் போன்ற
இலக்கிய நூல்கள் குறிப்பிடும் முருகன் மருதநிலக்
கிழவனேயாவான். ஏனெனில் நால்வகை நிலங்களும்
மருதநில வேந்தர்களாலேயே ஆளப்பட்டு வந்தன.
பழங்காலத்தில் தமிழகத்தின் மேல் நடந்த பகைவர்களின்
பெரும் படையெடுப்பை ஆறு இடங்களில் படைவீடு
அமைத்து தமிழினம் காத்த பாண்டிய வேந்தனே
முருகன் ஆவான். அறுபடை வீடு எனக் கொள்ளப்படும்
முருகனின் இன்றைய திருத்தலங்கள் எல்லாம் தமிழகம்
காக்க முருகனால் அமைக்கப்பட்ட படைவீடுகளே ஆகும்.
"திருமுருகாற்றுபடை" யில் நக்கீரர் முருகனை
வேந்தர் மரபினன் எனவும் மள்ளர் (பள்ளர்) எனவும்
கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,
"செருவில் ஒருவ பொருவிறல் மள்ள!" (செய்யுள் -
262)
"அரும் பெறல் மரபின் பெரும் பெயர்
முருக !" (செய்யுள் - 269)
இங்கு அரும்பெறல் மரபு என மள்ளர் மரபை நக்கீரர்
குறிப்பிடுகிறார்.
மள்ளர் மரபினரைச் சேர சோழ பாண்டிய வேந்தர்களாக
சங்க இலக்கியங்களில் முதல் பிற்கால
சிற்றிள்ளக்கியங்கள் வரை புகழ்ந்து
பாடபட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இம்மள்ளர்
மரபினரே பள்ளர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
இப்பள்ளரே தொல்காப்பியம் போற்றும் மருதநில
""வேந்தன் (இந்திரன்)"" வழிவந்த இந்திர குலத்தவர்
(தேவேந்திர குலத்தவர்) எனவும் இன்றும்
அழைக்கப்பட்டுவருகின்றனர். எனவே முருகன் மருத
நிலத்து மள்ளர் குலத்தை சார்ந்தவன் எனும் போது அவன்
மருத நிலக் கிழவனாகவும், தமிழனாகவும் ஆகிறான்
.
முருகன் தெய்வானையை திருமணம் செய்த இடமே
""திருபரங்குன்றம்"" ஆகும். திருபரங்குன்றத்தில்
ஆண்டுதோறும் முருகன்-தெய்வானை திருமணவிழா
மரபுவழிச் சடங்காக இன்றும் சிறப்பாக
நடைபெற்றுவருகிறது. சூரனை அழித்தபின்
தேவேந்திரனின் மகளாகிய தெய்வானையை முருகன்
மணம் முடிப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.
திருமணம் முடிந்தபின் மாமனார் வீட்டிற்கு மணமக்கள்
"" மறுவீடு"" செல்லுதல் என்பது தமிழர் மரபாகும்.
அம்மரபுப்படியே சிவனும் பார்வதியும், முருகன்-
தெய்வானை திருமணம் முடிந்தபின் மணமக்களை
முருகனின் மாமனாரான தேவேந்திரனின் இல்லத்திற்கு
மறுவீடு அனுப்பி வைக்கின்றனர். அவ்வாறான
இத்திருமண சடங்கு மரபில் முருகனும்
தெய்வானையும் மறு வீட்டிற்கு வருவது இன்றைய
தேவேந்தர்களின்(பள்ளர்களின்) அறமடத்திற்கே ஆகும்.
மறுவீடு வரும் தம் குல மக்களை தேவேந்ததிரனின்
வழிவந்தவர்களாகிய பள்ளர்கள் தங்களின் அறமடத்தில்
வரவேற்று மரியாதை செய்கின்றனர். தொல்காப்பியம்
போற்றும் மருதநில வேந்தனே தேவேந்திரன்(இந்திரன்)
என்பதும் அவனே, மருதநிலத் தமிழர்களான
பள்ளர்களின் வழிவந்தோன் என்பதும் இதன் மூலம்
தெளிவாகிறது.
பள்ளர் குலத்து மரபினனான தேவேந்திரனின் மகளான
தெய்வானையை முருகன் மணம் புரிந்ததிலிருந்து
முருகன் பள்ளர் குலத்தவன் என்பதையும் அவன் தமிழர்
மரபினன் என்பதையும் எவராலும் மறுக்க இயலாது.
நக்கீரர் தம் முருகாற்றுப்படையில் முருகன் மள்ளன்
எனக்கூறும் இலக்கியச்சான்றோடு மேலே கூறப்பட்ட
முருகன்-தெய்வானை திருமணச் சடங்கை நடைமுறைச்
சான்றாக இணைத்துப்பார்க்கையில் முருகன் தமிழனே
என்பது ஐயந்திரிபுர விளங்குகிறது.
கி.பி 1528-ல் ஏழுதப்பட்ட பழனிச்
செப்புப்பட்டையம் முருகனுக்கும் பள்ளர்களுக்கும்
உள்ள தொடர்பை தெளிவாகச் சுட்டுகிறது . தங்களின்
முன்னோன்னாகிய முருகனுக்கு அக்காலத்திலயே
""தேவேந்திரர் அறமடம் "" அமைத்து கோவிலுக்கு
வரும் அனைவருக்கும் பள்ளர்கள் அன்னமிட்ட
செய்தியும், இச்செலவிற்காக தமிழ்நாடு முழுவதும்
உள்ள தேவேந்திர குலத்தார் மடத்திற்கு கொடைகள்
வழங்கிய செய்தியும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.
தம் முன்னோனாகிய முருகனுக்கு கோவில் கட்டிய
பள்ளர்கள், பழங்காலத்தில் இருந்து இன்று வரையும்
பழனி முருகன் கோவிலில் முதல்மரியாதை பெற்று
வருகின்றனர். இவ்வாறு முருகனுக்கும்
தமிழருக்கும் உள்ள உறவை இச்செப்புப்பட்டயம் மேலும்
உறுதி செய்கிறது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பள்ளர்களுக்கு
பதினெட்டு அறமடங்கள் பழங்காலந்தொட்டு இருந்து
வருகின்றன. திருச்செந்தூரில் உள்ள பிற
அறமடங்களுக்கும் பள்ளர்களின் அறமடங்களுக்கும்
பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. பள்ளர்களின்
அறமடங்கள் மட்டுமே அதிக எண்ணிக்கை கொண்டதும்
2000 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மிகப்
பழமையானதும் ஆகும்.
பாண்டியர்களாகிய பள்ளர்களின் வீழ்ச்சிக்குப்பின்
தெலுங்கு வடுகர்களும் அவர்களின் அடியாட்களும்
கோவில்களை கொள்ளையிட்டதோடு அதைத்தொடர்ந்து
கோவில்களைக் கைக்கொள்ளும் வகையில் அவர்களுக்கென
மடங்களையும் உருவாக்கிக்கொண்டனர். இம்மடங்கள்
அனைத்தும் 500 வருடங்களுக்கு உட்பட்டவையே ஆகும்.
இந்திய விடுதலைக்குப்பின் திருச்செந்தூர் முருகன்
கோவிலின் நிர்வாகம் பள்ளர்களின் நிர்வாகத்திலிரு
ந்து முற்றிலுமாக பறிக்கப்பட்டது.
கழுகுமலை முருகன் கோவிலில் தேர்த்திருவிழா
பள்ளர்களால் தேரோட்டப்பட்டு ஆண்டுதோறும்
மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.பாண்டியர்
வீழ்ச்சிக்குப்பின் கோவில் நிர்வாகம் தெலுங்கு
வடுகர்களால் பள்ளர்களிடமிருந்து பறிக்கப்பட்டது.
எனினும் இன்றும் கழுகுமலை முருகன் கோவிலில்
பள்ளர்களுக்கு மரபு சார்ந்த முதல் மரியாதை
செய்யப்பட்டு வருகிறது.
முருகனுக்கும் தமிழுக்கும், முருகனுக்கும்
பள்ளருக்கும் உள்ள உறவானது குருதி சார்ந்தது.
முருகன் பள்ளர் வழிவந்த பாண்டியவேந்தன்
என்பதாலேயே முருகனையும் தமிழையும்
பிரிக்கவியலாது.எனவேதான் ஆரியம், திராவிடம்,
தலித்தியம் என எத்தனை எத்தனையோ பெருங்கேடுகள்
மேலெழுகின்ற போதிலும் அவற்றையெல்லாம்
உடைத்தெறிந்து துள்ளியெழுகுது வேல்.!

4 கருத்துகள்:

  1. பள்ளன் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன். அருமையான பதிவு நண்பரே. சுந்தர பாண்டியன்-மீனாட்சி மகன் முருகன், பள்ளர் குலத்தவர்கள் என்றால், சிவன்-பார்வதி எங்கிருந்து வந்தனர், ஆரியர்களா. எப்படி தமிழ் கடவுள் முருகனுக்கு பெற்றோர் ஆகினர்.. பாண்டிய மன்னன் வரலாறு, சிவன் வரலாறு இதில் பழமையானது எது? விவரமாக கூறுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பராண்டி பாண்டி முருகாண்டி வரலாறில் தங்கள் கேள்விக்கு பதில் இருக்கிறது.

      நீக்கு
  2. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    பதிலளிநீக்கு
  3. வில்லவர் மற்றும் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவார்.

    பதிலளிநீக்கு