திங்கள், 11 மார்ச், 2019

கருணாநிதி காவல்துறை 2009 அடக்குமுறை பட்டியல்




aathi1956 <aathi1956@gmail.com>

ஞாயி., 3 ஜூன், 2018, பிற்பகல் 8:24

பெறுநர்: நான்



Vasu Murugavel
மறக்க முடியுமா...?. உரையாடித் தொலைப்போம்.

1. தமிழீழப் படுகொலை நடந்த 2009இல் மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறப்போகிறோம் என்று
சொல்லிவிட்டு பின்னர் பின்வாங்கியதன் காரணம் என்ன?

2. தமிழீழ ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டியதன் அவசியம்
என்ன?... சட்டம் இவர்களுக்கு மட்டும் கடுமையாக்கப்பட்டதேன்?

3. போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுக்க காரணங்கள் என்ன ?

4. போரை நிறுத்து என துண்டறிக்கை கொடுத்ததற்காக எங்களது தோழர்கள் 13 பேர் 10 நாட்களாக புதுக்கோட்டை சிறையில் அடைத்த காரணம் என்ன ?

5. உங்கள் ஆட்சி மாறும் வரை ’தமிழீழம்’, ’புலிகள்’, ‘ முத்துக்குமார்’, ‘இலங்கை’
என்று பேசும், எழுதப்பட்ட எந்த வித துண்டறிக்கைகளோ, சுவரொட்டிகளோ அச்சகங்கள் அச்சடிக்க தடையை திமுக அரசு விதித்திருந்தது. இதை அச்சிட்ட அச்சகங்களை கண்டறிந்த காவல்துறை
சிலவற்றை மூடியதும், வழக்கு பதிவு செய்து அச்சுக் கூடங்களை கையகப்படுத்தியதும் நடந்தது. வேண்டுமானால் அச்சக தோழர்களை சந்தித்து உண்மை அறிந்து கொள்ள திமுக நண்பர்கள் முயற்சி எடுக்கலாம். இதை பல இடங்களில் சொல்லியும் திமுக நண்பர்கள் பதில் சொல்லாமல் சென்றதை கவனித்து இருக்கிறேன்..

6. கடற்கரை ஓரத்தில் காவல்துறை கண்கானிப்பு பலப்படுத்தப்பட்டு தமிழீழத்தில் இருந்து வருபவர்களை கைது செய்வதும், உதவி பொருட்கள் அனுப்பபடுவது தடுக்கபட்டும் செய்யப்பட்டது..
மறைந்த தோழர். புதுக்கோட்டை முத்துக்குமார். இதை சொல்லி இருக்கிறார்.

7. கருணாநிதியை விமர்சனம் செய்தார்கள் என்பதற்காக சிவனடியார்களை மூன்று மாதம் பொய் வழக்கில் சிறை வைக்கப்பட்டார்க
ள்

8. தமிழீழ போர் சி.டிக்களை தமிழக காவல்துறை பறிமுதல் செய்தது. அத்தகைய சி.டிக்களை நகல் எடுக்க முடியாமல் தடை செய்தது. காரைக்குடிக்கு சி.டிக்களை கொண்டு வந்த எங்களது தோழர்
திருச்சியில் கைது செய்யப்பட்டார்.

9. போரை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து போராடிய வழக்கறிஞர்களை தாக்கி போராட்டத்தை உடைத்தது திமுக அரசு.

10. சுவரொட்டிகளை திமுக அரசின் காவல்துறை இரவோடு இரவாக கிழித்துப் போடுவார்கள் . அல்லது சுவரொட்டிகள் பறிமுதல் செய்யப்படும். ஒட்டுபவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்

11. தமிழீழப் படுகொலையை கண்டித்தும், திமுக அரசினை விமர்சித்து பேசினார் என்பதற்காக புஇமு தோழர் நெல்லையில் கடுமையாக காவல்துறையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பொய் வழக்கில் அடைக்கப்பட்டார்

12. முத்துக்குமார் தீக்குளித்ததும் அவர் தமிழ் தீவிரவாதி என தனது ஊடகங்களில் செய்தி வெளியிடச் செய்தார். பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றார்.

13. இரண்டாவது ஈகியரான பள்ளப்பட்டி ரவி தீக்குளித்து இறந்ததும். கடன் தொல்லையாலும்., உடல் நலக் கோளாறினாலும், குடித்துவிட்டும் தற்கொலை செய்தார் என செய்தி வெளியிட வைத்தது அரசு. பின்பு இதை மாற்றி எழுதவைக்க போராட்டம் நடத்த வேண்டி இருந்தது.

14. தமிழீழ தேசியதலைவர் புகைப்படத்தை சுவரெழுத்தில் கூட அழிக்க உத்தரவிட்டிருந்தார் கருணாநிதி.. விடுதலை சிறுத்தைகளுக்கே கூட இது நடந்தது. அவர்களின் சுவரெழுத்தில் பிரபாகரன் படம்
கருப்பு மை பூசி அழிக்கப்பட்ட படம் என்னிடம் இருக்கிறது. தேவையெனில் பதிவேற்றம் செய்கிறேன்.

15. மூன்றாவது ஈகியரான சென்னை அமரேசன் எழுதி வைத்திருந்த கடிதம் காவல்துறையால் கைப்பற்ற பட்டு அழிக்கப்பட்டது. இன்று வரை கிடைக்கவில்லை.

16. அனைத்து ஈகியரின் நினைவு ஊர்வலமும் உடனடியாக நடத்த கோரி நெருக்கடி செய்யப்பட்டு
முடிக்கப்பட்டது.

17. தமிழீழ போர் காட்சிகள் தொலைக்காட்சியிலோ, ஊடகத்திலோ வெளியிடக்கூடாது என சட்டம்
கொண்டுவந்து தடுத்தார்.

18. போர்காட்சிகளை வெளியிடலாம் என உயர் நீதி மன்றத்தில் சென்று உணர்வாளர்கள் உத்தரவு
வாங்கி வந்த உடன் ‘மக்கள்’ தொலைக்காட்சி அதை வெளியிட்டது. உடனடியாக அந்த
தொலைக்காட்சி அலுவலகத்தில் காவல்துறை குவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிறுத்தப்படாவிடில் உள்ளே
நுழைந்து கைப்பற்றுவோமென காவல்துறை மிரட்டி அதை நிறுத்தியது.

19. போர்காட்சிகள் 2011 ஏப்ரல் திமுக ஆட்சியில் இருக்கும் வரை அச்சகங்கள் அச்சடிக்கவில்லை.
மறைமுகமாகவே இவை அச்சடிக்கப்ப்ட்
டன.

20. சென்னை மற்றும் இதர இடங்களில் உள்ள அரசு கருத்தரங்க கூடங்கள் தமிழீழ பிரச்சனைக்கும்,
தமிழீழம் சாரத தமிழர் பிரச்சனை, தமிழ் மொழி பிரச்சனை என்ற எதற்கும் கருத்தரங்கம் நடத்த
அனுமதி மறுக்கப்ப்ட்டது.

21. சென்னை தேவ நேய பாவணர் அரங்கம் ஒவ்வொருமுறையும் காவல்துறை அனுமதி பெற்று
ந்டத்தவேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. போர் முடியும் வரை இங்கு எந்த நிகழ்வும் தமிழர்
பிரச்சனை சார்ந்து நடத்த அனுமதிக்கப்படவில்லை.. கீற்று ரமேஸ் பலமுறை சென்னை காவல்துறை
தலைமை அலுவலகத்தில் 8 மணி நேரம் அலைந்ததை நான் நேரில் கண்டு இருக்கிறேன். ( நாங்கள்
எங்களது போராட்ட அனுமதிக்காக அலைந்து கொண்டிருக்கும் சுழல் இருக்கும். நிகழ்வின் முதல் நாள்
வரை அனுமதி பற்றிய விவரங்கள் கிடைக்காது)

22. தமிழீழப் போரை நிறுத்த வேண்டும் என்று பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக கொளத்தூர்மணி,
மணியரசன், சீமான் கைது செய்யப்பட்டனர் சனவரியில்.

23. பின்னர் மீண்டும் சீமான் கைது செய்யப்பட்டார் பேசியதற்காக. நெல்லையில் இருந்து அவர்
தலைமறைவாக வெளியேறி பல ஊர்களுக்கு பயணம் செய்து பேச வேண்டி இருந்தது. சீமானும், அமீரும் கைது செய்யப்பட்டார்கள்.

24. நாஞ்சில் சம்பத்தும், கொளத்தூர் மணியும் திரும்பவும் கைது செய்யப்பட்டார்கள்.

25. சோனியாவிற்கு கருப்பு கொடி காண்பிக்க முயற்சி செய்து, திரள அனுமதி மறுக்கப்பட்டதால்
‘கருப்பு பலூனை’ பறக்க விட்டார்கள் என்பதற்காக இயக்குனர். பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பட உணர்வாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

26. கோவை ராணுவ வண்டி தாக்குதலுக்காக பல உணர்வாளர்களை வேட்டையாடி கைது செய்து பொய் வழக்கில் சிறையில் அடைத்தது

27. முத்துக்குமாரை இழித்து பேசினார் என்பதற்காக ஈ.வி.கே.எஸ் வீட்டில் அருகே சென்று முற்றுகையிட சென்ற இயக்குனர் செந்தமிழன், அருணா பாரதி உள்ளிட்ட 40 பேர் ஒரு மாதத்திற்கும்
மேல் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

28. முத்துக்குமாரின் மரணத்தின் ஊர்வலத்தின் போது கல்லூரிகள், பள்ளிகள் காலவரையின்றி அடைக்கப்பட்டன.

29. கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தை தாக்கினார்கள் என்று தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்தது

30. போரில் காயமடைந்து எவரேனும் தமிழகத்தின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருகிறார்களா என்று கண்கானிக்கப்பட்டு நடவெடிக்கை எடுக்கப்பட்டது. மருந்துகள், ரத்தம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழீழத்திற்கு அனுப்பமுடியாமல் செய்யப்ப்ட்டது. இதையும் மீறி ரத்தம் மருந்து பொருட்களை அனுப்பினார் என்பதற்காகத்தான் திமுக அரசால் 2010இல் புதுக்கோட்டை முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். திமுக ஆட்சியில் தான் அவர் கொலையும் செய்யப்பட்டார்.

31. மே மாதம் 2009இல் பெரியார் திக அலுவலகத்தை தாக்கிய திமுக குண்டர்கள், பெரியாரின் சிலையையும் உடைத்தார்கள்.. பெதிக அலுவலகம் அண்ணா அறிவாலயத்திலிருந்து குறைந்த பட்ச தூரத்திலேயே உள்ளது. கருணா நிதியின் கோபாலபுர வீடு இருக்கும் அதே பிரதான சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

32. பிரணாப் 70,000 தமிழர்கள் மட்டுமே போர் பகுதியில் இருப்பதாக பச்சை பொய் சொன்ன போது திமுக கண்டிக்கவே இல்லை.

33. தஞ்சையில், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் அவர்களது இல்லம் உட்பட பல த.தே.பொ.க. தோழர்களின் வீடுகளுக்கும் சென்று சோதனையிட்டது காவல்துறை. ஈரோட்டில் பெ.தி.க. செயலாளரின் வீட்டில் குறுந்தகடுகளைக் கைப்பற்றி அவரை ரிமாண்ட் செய்தது காவல்துறை. --க. அருணபாரதி, த.தே.பொ.க.

34. தஞ்சையில் இந்திய அரசின் விமானப்படைத் தளத்திலிருந்து, இலங்கையின் பலாலி விமானத்தளத்திற்கு ஆயுதம் அனுப்புகிறார்கள் என்று செய்தியறிந்து, தஞ்சை விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்ட, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், பெ.தி.க. தலைவர் தோழர் கொளத்தூர் மணி, த.தே.வி.இ. செயற்குழு உறுப்பினர் தோழர் சிவகாளிதாசன் உள்ளிட்ட தலைவர்களும், பெண்கள் - குழந்தைகள் உள்ளிட்ட தோழர்களுமாக 275 பேரை கருணாநிதியின் காவல்துறை ரிமாண்ட செய்தது. இரவு 4 மணிக்கு நீதிபதி வீட்டில் வழக்கறிஞர்கள் பலரும் போராடி பிணை வாங்கி அனைவரும் அதிகாலை 5 மணியளவில் விடுதலையாயினர்.--க. அருணபாரதி,த.தே.பொ.க. இன்றைக்கு, முன்னெச்சரிக்கை கைது செய்யக் கூடாது என மனு போடுகின்ற தி.மு.க. நிர்வாகிகள், தாம் ஆட்சியிலிருந்த போது, அவர்களது தில்லி கூட்டாளிகள் தமிழகம் வரும்போதெல்லாம், அவர்களுக்கு சொறிந்து விடுவதற்காக ஈழஅகதிகளை முகாமிற்கு சென்று எத்தனை முறை முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் என்பதை நாமறிவோம்.
2009 இனப்படுகொலை நடக்கும் வரை நடந்த அடக்குமுறைகள் இவை. 2009-2011 இரண்டு வருடங்களில் செய்த அயோக்கியதனத்தை சொல்லவும் வேண்டுமா ??


இனப்படுகொலை தீக்குளிப்பு போலீஸ் திமுக

சிவசேனா போல செயல்படுவோம் ஈவேரா 1973




aathi1956 <aathi1956@gmail.com>

ஞாயி., 3 ஜூன், 2018, பிற்பகல் 3:55





பெறுநர்: நான்








Kannan Mahalingam
23 ஆண்டு இரகசியம்
"முதன்முதலில் வடநாட்டுக்காரன் கடையில் மறியல் செய்யலாம் என்று இருக்கிறேன். அவனுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்போம். பம்பாயில் சிவசேனைக்காரன் நம்மவர்களை அங்கு விரட்டவில்லையா? அவன் அங்கு செய்யும்போது நாம் ஏன் இங்கு செய்யக்கூடாது? துணியவேண்டும்" 10.11.1973 அன்று ஜெயங்கொண்ட சோழபுரத்தில் ஆற்றிய உரை, - விடுதலை - 12.11.1973.
மதவாத கருத்துகளை கொண்டிருக்கிற சிவசேனாவை உதாரணமாக எடுத்து கொண்டு அவனை போல் செயல்பட வேண்டும் என்று சொன்னால் அவன் பகுத்தறிவாதியா?
மதவாதி அப்படி ஒரு கருத்தை சொன்னால், அதை முட்டாள்தனம் என சொல்பவன் பகுத்தறிவாளியா, அவனை போலவே நாமும் செயல்பட வேண்டும் என்று சொல்பவன் பகுத்தறிவாளியா? ஈவெராமசாமி, எந்த வடநாட்டானை எதிர்த்தாரோ, அதே வடநாட்டானிடம் வாக்கு சேகரிக்க - இன்றைக்கு ஈவெரா அடிமைகள், அதே வட நாட்டான் மொழியில் சுவரொட்டி அடிக்கிறார்கள். அந்த காரியம் ஈவெராமசாமி அடிமைகளுக்கு இழிவாக தெரியவில்லை. காரணம் ஈவெராமசாமி, வடநாட்டவர்களுக்கு எதிரான போரை, ஒரு பொழுது போக்குக்கு தான் செய்தார். "முதன்முதலில் வடநாட்டுக்காரன் கடையில் மறியல் செய்யலாம் என்று இருக்கிறேன்." என்று 1973ல் கூறும் ஈவெராமசாமி, வடநாட்டவர்களுக்கு எதிராக 1950 அக்டோபர் 16 லும் இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் செய்தார்.
பிறகு 1973 வரை, தமிழ்நாட்டில் வட நாட்டவர்கள் இருப்பதையே மறந்து அமைதியாக இருந்துவிட்டார். திரும்ப 1973 - ல்தான் மீண்டும் வடநாட்டானுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்.
1950-க்கும் 1973-க்கும் இடையேயான இந்த 23 ஆண்டுகளில்தான் ஈ.வெ.ராமசாமிக்கு 150 கோடி ரூபாய் சொத்து சேர்ந்தது என்று சொன்னால், அந்த 23 ஆண்டு இரகசியம் என்னவென்று புரிந்து கொள்ளலாம்.
3 மணி நேரம் · பொது




Shiv Sena


Chairperson Uddhav Thackeray
Lok Sabha leader Anandrao Adsul
Rajya Sabha leader Sanjay Raut
Founder Balasaheb Thackeray
Founded 19 June 1966 (52 years ago)
Headquarters Shivsena Bhavan,
Ram Ganesh Gadkari Chowk,
Dadar,
Mumbai,
400 028, Maharashtra, India
Newspaper Saamana

திமுக துப்பாக்கிச்சூடு 1970 படுகொலை 5பேர்

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 3 ஜூன், 2018, பிற்பகல் 3:13
பெறுநர்: நான்
Arul Raja Pillai வடிவேல் சுப்ரமணியம் உடன்.
தி.மு.க ஆட்சியில் மின்சார கட்டணத்தில் ஒத்த பைசா குறைக்க கேட்டு போராடிய விவசாயிகளை சுட்டு கொன்றுவிட்டு
துப்பாக்கியில் இருந்து குண்டுகள் வராமல் மல்லிகைபூக்களா கொட்டும் என ஏளனம் பேசியவர் தான்
# கருணாநிதி...
19-06-1970 அன்று சுட்டு கொல்லப்பட்ட விவசாயிகள் விவரம்
1. மாரப்ப கொங்குவேளாள கவுண்டர்
2. ஆயி கொங்குவேளாள கவுண்டர்
3. ராமசாமி கொங்குவேளாள கவுண்டர்
பிறகு 05-07-1970 அன்று அய்யம்பாளையம் அருகே இருவர் விவசாயிகளின் என குடிமக்களின் உயிரை குடித்த வரலாறு தி.மு.க வின் வரலாற்று பக்கத்தில் உண்டு...
இன்னிக்கு பொறந்தநாளாம்
# HBDkalaignar95
கொங்கு கவுண்டர் நாராயணசாமி நாயுடு தலைமை
போராட்டம் படுகொலை மின்சாரம் கருணாநிதி

சிற்பம் கலை நூல் பட்டியல் விரிவான கட்டுரை சிலை சமஸ்கிருதம் புத்தகம்


இந்துக் கலை - சிற்பக்கலை

By யாழ்அன்பு, August 18, 2013 in மெய்யெனப் படுவது




யாழ்அன்பு 411




Posted August 18, 2013


சிவசக்தி அந்தரசக்தி





இந்துக் கலை - சிற்பக்கலை



இந்துக்கள் இன்று நேற்றல்ல இற்றைப்படுத்த இயலாத பண்பாட்டுப் பழமையையும், பாரம்பரியத்தையும் கொண்டவர்கள். இப்பண்பாட்டு உணர்வு சமயம், கலை, தத்துவம், என்பவற்றின் கூட்டுருவாக்கம் எனலாம். இந்துக்கலை என்பது வெறும் காட்சிப்பொருளே அன்றின் கற்பனைப்பொருளே அல்ல, இந்துக்கள் தம் ஆத்ம தேடலின், ஆத்மீக தாகத்தின் வடிகால்களாகவே கலை ஞானத்தை தம் எதிர்கால தலமுறையினருக்கு விட்டுச்சென்றனர்.

இந்துக் கலைகள் அறுபத்து நான்கு என்பது மரபு. அவற்றுள் சிறந்தவை நுண்கலைகள் இவை கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம் என்பனவாகும். இவை ஒருகலைஞனின் உள்ளார்ந்த ஆற்றலாக வெளிப்படுபவை.

“இந்திய மக்கள் மிகத்தொன்மையான காலம் தொட்டே கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம் ஆகிய நுண்கலைகளைப் பொன்னெனப்போற்றி வளர்த்து வந்திருக்கின்றனர். இக்கலைப்படைப்புக்கள் உலகையே வியக்கவைக்குமளவிற்கு கலைத்துவம் மிக்க அற்புதமான படைப்புகளாக விளங்குகின்றன என்பர் கலைவிமர்சகர்கள்” Anandu Coomaraswamy (1969;ix) எனும் கருத்து ஆழ்ந்து நோக்கற் பாலது.

இந்த நுண்கலைகளுள் தலையாயது சிற்பக்கலை. இதுவே விக்கிரகவியல் கலையின் தாயூற்று. ஆதலால் விக்கிரகவியல் கலையின் மேன்மையையும் சிறப்பையும். கூறமுற்படும்போது சிற்பக்கலையை தவிர்ப்பது பொருத்தமற்றது எனும் தன்மையால் இங்கே இரண்டையும் பற்றி ஆராய முற்படுகின்றோம்.



மனிதன் படைத்த கலைகளுள் மிகச் சிறந்தது சிற்பக்கலை என்பர். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இக்கலை வளர்ந்து வருகின்றது. மனித நாகரீகத்தையும் அதன் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பக்கலையைவிட சிறந்தது வேறொன்றில்லை. நாடுகளின் தொன்மை வரலாற்றை அம்மக்கள் வளர்த்த சிற்பக்கலை வழியாகவே பெரிதும் அறிய முடிகின்றது.



கண்ணால் கண்ட உருவங்களையோ கற்பனை உருவங்களையோ வடிவமைத்துச் செய்வது சிற்பம் எனப்படும். அதனை வடிப்பவன் சிற்பி எனப்படுவான். கல், உலோகம், செங்கல், மரம், சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை, மெழுகு என்பன சிற்பம் வடிக்க ஏற்றவை என பிங்கல நிகண்டு கூறும். கல்லில், கருங்கல், மாக்கல், பளிங்குக்கல், சலவைக்கல் என்பனவும் உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பும் ஏற்றனவாகக் கருதப்பட்டன.



வடிவம் முழுவதையும்-முன்புறம் பின்புறம் இரண்டையும்-காட்டும் சிற்பங்களை “முழுவடிவச் சிற்பங்கள்” என்றும் வடிவத்தின் ஒருபுறம் மட்டும் காட்டும் சிற்பங்களைச் “புடைப்புச் சிற்பங்கள்” என்றும் வகைப்படுத்துவர். கோயில்களில் காணப்படும் முதன்மைத் தெய்வத் திருமேனிகளும் உற்சவச் திருமேனிகளும் முழுவடிவச் சிற்பங்கள் ஆகும்.



சிற்பாசாரிகளால் செதுக்கப்படுபவை சிற்பம், அவற்றிட்கு சிவாச்சாரியர்கள் மந்திர தந்திர, யந்திர அனுஷ்டாணங்களைச் செய்து இறைநிலைப்படுத்தும் போது எழுபவை விக்கிரகம்.

“மனிதனது உணர்வுகளை ஆத்மீகத்தின் பால் ஈடுபாடு கொள்ளச்செய்யும் முயற்சியின் ஒரு பயனாக அமைவதே திருவுருவ வழிபாடு ஆகும்”

இப்படியான் இந்நிறத்தான் இவன் இறை எனக் கூறமுடியாத, ஓர் உருவம் ஒரு நாமம், ஓர்வடிவம் இலானுக்கு பல் உருவம் பல நாமம் கற்பித்து கல்லில் செதுக்கியும் பொன், வெள்ளி, ஈயம், பித்தளை, செப்பு முதலாய உலோகத்தால் வார்த்தும் வழிபடும் முறையே விக்கிரக வழிபாடு எனலாம்.

இறை அனுபூதிமான்கள் சித்தத்தை சிவன்பால் வைத்து சித்தநிலையால் சிந்திய அருள் வாக்குகளை தன் அகக் கண்ணிலே அமர்த்தி மந்திர ஜபம் செய்து அதை மனதிலே நிறுத்தி தன்விரல் நுணிகளின் வழியே சிற்றுளி கொண்டு சிற்பத்தை பிரசவிப்பான் சிற்பி. இக்கலையில் வல்லுநரை “ஸ்தபதி” என அழைப்பர். அவனால் படைக்கப்பட்ட “விக்கிரகம்” பக்குவ நிலைப்படா ஆன்மாக்கள் கட்புலனுக்கு உட்படுத்தி பக்குவப்பட கால்கோள்கிறது.

விக்கிரகம் என்பது வி+கிரகம் எனவரும். “வி” என்பது மேலான எனவும் “கிரகம்” என்பது இல்லம் எனவும் பொருள்கொண்டு “இறைவனின் மேலான இல்லம்” எனப்பொருள் புலப்படுத்தப்படுகின்றது.

விம்பம், விக்கிரகம், மூர்த்தி பேதம், பிரதிமை, படிமம் போன்ற பல சொற்களால் திருவுருவம் அழைக்கப்படுகின்றது. “திரு” என்பது தெய்வத்தன்மை எனவும்“ உருவம்” என்பது அழகிய வடிவம் எனவும் பொருள் கொள்ளப்பட்டு “தெய்வத்தன்மை பொருந்தி அழகிய வடிவமே திருவுருவம்” ஆகும்.



“திருவுருவங்கள் இறைவனை மனத்தால் கிரகிப்பதற்கு உறுதுணையாக அமைவன அத்துடன் இறைவனைப்பற்றிய புராணங்கள் கூறும் தத்துவப் பொருள் செறிந்த தெய்வீக வரலாற்றை அறிவதற்கும் உணர்வதற்கும் பெருந்துணை புரிவன. திருவுருவங்களும் அவற்றிட்கு நிகழும் கிரியைகளும் வழிபடுவோனது உள்ளத்திலே படிப்படியாகப் பரம்பொருள் தத்துவச் சிறப்பினை உணரவைப்பன சமய அனுபவத்தை வளர்பபதற்கு அவை உதவுவன”



என்ற பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ணஐயர் அவர்களுடைய கருத்து விக்கிரகவியல் கலையின் சிறப்பினை அறிவதற்கு ஒரு மைல் கல் எனலாம்.

மேற்படி சிறப்பினை உடைய விக்கிரகக் கலைபற்றி அறிய உதவும் சான்றுகளாக தொல்பொருட் சின்னங்கள், நாணயங்கள், கல்வெட்டுக்கள், இலக்கியங்கள் எனும் வரலாற்றியல் மூலாதாரங்களை ஆதாரப்படுத்த முடியும்.

மொஹாஞ்சதாரோவிற் கிடைத்த வெண்கலத்தாற் செய்யப்பட்ட நடனமாதின் உருவம் சிந்துவெளி மக்களின் சிற்ப அறிவைப் புலப்படுத்துகின்றது. இதன் இடதுகை நிறைய வளையல்கள் காணப்படுகின்றன. இதனது கூந்தல் மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்டுள்ளது. (Sundaram1974:13) இச் சிலை வழவழப்பாகவும் ஒழுங்காகவும் அமைந்துள்ளது. வேறுசில உருவச்சிலைகள் நடனஞ்செய்வதற்கு ஏற்றவாறு நிற்கும் கோலத்தில் அமைந்துள்ளன. இச்சிலைகள் சிவபிரானது நடனக் கோலத்தின் முன்னோடியாக அமையலாம் எனபர் றோலண்ட் (Rowland 1967;15) அனால் இது ஆராய்ச்சிக்குரியதாகும் என்பர் சுந்தரம்.

இங்கு கிடைத்துள்ள திமில் பருத்த எருது, குட்டியுடன் இருக்கும் குரங்கு, தனித்திருக்கும் குரங்கு, சிவயோகியின் வடிவம், தரைப்பெண் வடிவங்கள் என்பன அக்கால மக்களின் சிற்ப அறிவை அறிய உதவுகின்றன.

சிந்துவெளிக் கலாசாரத்தின் பின் உருக்கொண்ட வேத கால கலாசாரம் அருவ வழிபாட்டை ஆதரிப்பதால் அங்கு எத்தகைய தொல்பொருட் சான்றுகளும் கிடைத்தில.

எனினும் வேதகாலத் தெய்வங்களான சூரியன், இந்திரன் ஆகியோரது சிற்பங்கள் பாஜாவில் உள்ள பழையவிகாரையின் விறாந்தையில் உள்ளன. இதிலிருந்து மெளரியருக்கு முற்பட்ட சிற்பக்கலையின் சிறப்பை ஊகிக்க முடியும்.

வடஇந்திய வரலாற்றில் சிற்பக்கலையின் உன்னத வளர்ச்சிக்கான சான்றுகளை குப்தர்கால சிற்பங்களில் காணமுடியும் குசானர் கால லிங்க வழிபாட்டின் தொடர்ச்சியாக லிங்கத்தை ஒருமுகத்துடனும், நான்கு முகத்துடனும் படைத்து வழிபடும் மரபினைக் குப்தர்கள் பேணினர். மேலும் திருமாலை அவதாரச்சிற்பமாக வடிக்கும் மரபு இங்கேயே தோற்றம் கண்டது.

வட மதுரையில் உள்ள திருமாலின் சிற்பம், உதயகிரி குகைவாயிலில் உள்ள திருமாலின் வராக அவதார புடைப்புச் சிற்பம், பித்தரக் கோன் கோயிலில் காணப்படும் புராணக் கதை கூறும் சுடுமட் சிலைகள், தசாவதாரக் கோயிலில் நுழைவாயிலின் இருபுறமும் உள்ள கங்கை யமுனை சிற்பங்கள் என்பன குப்தர்களின் சிற்பக்கலைக்கு தக்க சான்றெனலாம்.

தமிழ்நாட்டுச் சிற்பங்களின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலை இலக்கணங்கள் அவற்றில் அளவாய் அமைந்துள்ள நிலையாகும். இவ்விரு கலைகளுமே கோயில்களால் வளர்க்கப்பட்டமையால், இவை எளிதாக கைவரப்பெற்றன. சிற்ப வடிவங்கள் நின்றாலும் அமர்ந்தாலும் கிடந்தாலும் வேறெந்த அமைதியில் தோன்றினாலும், அவை பெரும்பாலும் ஆடற்கலை இலக்கணத்தையொட்டி அமைந்திருப்பதைக் காணலாம். சிற்பிகள் ஆடற்கலை இலக்கணத்தை நன்கறிந்து தம் கலைஉணர்வு, கற்பனைத் திறன் கலந்து அமைப்பதால், தெய்வத் திருமேனிகள் நிறுவப்படும் இடத்துக்குத் தக்கவாறு கலையழகை மட்டுமன்றி அவ்வடிவ அமைப்புகளின் உட்கருத்தையும் உணர்த்தும் வகையில் உள்ளன.

சிற்பக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண், மரம், தந்தம்,கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் "மண்ணீட்டாளர்கள்" எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது.

அ. தட்சிணாமூர்த்தி "தமிழர் நாகரிகமும் பண்பாடும்" என்ற நூலில் தமிழர் சிற்பக்கலையின் சிறப்பியல்புகளை விளக்கியிருக்கின்றார். அதற்காக மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் பின்வரும் கருத்தை தனது நூலில் தருகின்றார்.

"நமது சிற்பங்கள் அயல்நாட்டுச் சிற்பங்களைப்போன்று, வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துக்களையும் உணர்சிகளையும் ஊட்டுகின்றன."

மேலும் வை. கணபதி அவர்களின் பின்வரும் குறிப்பையும் தருகின்றார்.

"நம் நாட்டுச் சிற்பக்கலை மரபின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலையின் இலக்கணங்களையும் இக்கலையில் புகுத்தியதாகும்."

தென்னக வரலாற்றில் சங்க காலத்திலும் அதற்கு முன்னரும் மண், சுதை, மரம், உலோகம் என்பவற்றினால் சிற்பங்கள் ஆக்கப்பட்டமையினை அறியமுடிகின்றது. இங்கு கற்சிற்பங்கள் தோன்றவில்லை. இந்நிலையினையே சங்க மருவிய காலத்திலும் காணமுடிகின்றது.

“வழுவறு மரனும் மண்ணும் கல்லும்

எழுதிய பாவையும் ......”

(மணிமேகலை 21:115-116)



“மண்ணினுங் கல்லினும் மரத்தினும் சுவரினும்

கண்ணிய தெய்வம் காட்டுநர்”

(மணிமேகலை 21: 25-123)

எனும் வரிகளே இதற்கு தக்க சான்று. எனினும் “சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று கனக விசயரை வென்று இமயத்திலிருந்து கல் கொணர்ந்து கண்ணகிக்குச் சிலை எடுத்தான்” எனச் சிலம்பு கூறுவதில் இருந்து (சிலப்பதிகாரம் 28:225-231) கற்சிற்பங்கள் தென்னகவரலாற்றில் அரும்புவதை அவதானிக்கலாம்.

சங்க காலத்தில் உலோகத் திருமேனிகளும் வழக்கிலிருந்தன. “இவை பொன் புனைந்த பாவைகள்” என மதுரைக்காஞ்சி (வரி;410) குறிப்பிடுகின்றது. “பொற்சிலை” பற்றிய குறிப்பு ஒன்று குறுந்தொகையிற் (292:3-4)காணப்படுகின்றது நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த ஆதிச்ச நல்லூரில் நடைபெற்ற அகழ்வாய்வில் தாய்க்கடவுள், நாய், கோழி ஆகிய செப்புத்திருமேனிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை வரலாற்றுக் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் உலோகத் திருமேனிகள் இருந்தன என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

சங்கமருவிய காலத்திலும் மாங்காட்டு மறையவன். திரு வேங்கட மலையில் திருமாலின் கிடந்த வண்ணத்தையும் திருவரங்கத்தில் செங்கண்நெடியவன் நின்ற வண்ணத்தையும் கண்டதாகக் கூறுகின்றான். (சிலம்பு 2:11வரி 40-51)

தமிழகத்தில் பல்லவர்களின் மாமல்லக் குகைக் கோயில் சிற்பங்கள் வரலாற்றுப் புகழ் பெற்றவை. இவை உலக அரங்கில் சிற்பக்கூடம் என்ற சிறப்பினை மாமல்ல புரத்திற்கு கொடுத்ததெனலாம்.

பல்லவ சிற்பம் என்றாலே ஒரு தனி பாணி - மிகவும் இயல்பான தோற்றம் , அதிலும் ஒரு கம்பீரம், சிற்பியின் கலைத்திறன் ஆகமங்கள் என்ற கட்டுப்பாடுகளுக்குள் அடைக்கும் முன்னர் பிறந்த படைப்பு.

மல்லையில் அற்புத புடைப்பு சிற்பத்தை பார்க்கமுடியும்.மல்லை மகிஷாசுர மர்த்தினி மண்டபத்தில் உள்ள மகிஷாசுர மர்த்தினி சிற்பமும், சேஷ சயன பெருமாள் சிற்பமும். ஆகும்.



சிற்பக் கலைக்கு மெருகேற்றிய பல்லவ மன்னன் ராஜசிம்ஹன் காலத்து சோமஸ்கந்தர் வடிவங்கள் பல இடங்களில் உள்ளன. மல்லை கடற்கரை கோயிலில் அற்புதமான வடிவம் ஒன்று உள்ளது. மல்லை கடற்கரை கோயில் உண்மையில் மூன்று ஆலயங்கள் கொண்டது. முதலில் இருந்த சயன பெருமாள் கோயில், அதனை ஒட்டி ராஜ சிம்ஹன் எடுப்பித்த ராஜசிம்மேஷ்வரம் மற்றும் ஷத்ரியசிம்மேஷ்வரம் என்ற இரு சிவ ஆலயங்கள்,

கீழ் உள்ள சோமஸ்கந்தர் வடிவம் ராஜசிம்மேஷ்வர ஆலயத்தில் உள்ளது.



மேலும் நாயன்மார்கள் பாடலிலிலும் பல்லவர் சிற்பங்களின் பாங்கினைக் காணமுடியும்.



மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை

முதுபிணக்கா டுடையானை முதலா னானை

ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை

ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்

பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்

புணர்வரிய பெருமானைப் புனிதன்றன்னைக்

காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான்றன்னைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.



என்ற அப்பர் பாடலடியினைச் சான்றாகக் குறிப்பிட முடியும்.



பொதுவாக செப்புத் திருமேனி என்றவுடன் நாம் சோழர் காலம் என்றே நினைப்போம். எனினும் அவர்களுக்கு முன்னரே பல்லவர் காலத்தில் பல அற்புத செப்புத் திருமேனிகள் வடிக்கப்பட்டன. சான்றாக சோமஸ்கந்தர் செப்புத் திருமேனியை குறிப்பிட முடியும். இந்த சிற்பம் அதன் அமைப்பு, அணிகலன் , வாகு போன்ற பலவற்றை கொண்டு சோழர் காலத்திற்கு முற்பட்ட காலம் என்று அடையாளம் கொள்ளப்படுகிறது. அதன் அளவை முதலில் மனதில் கொள்ள வேண்டும். சோழர் கால சோமஸ்கந்தர் வடிவங்களில் பாதி உயரமே உள்ளது இந்த சிற்பம். அளவு மட்டும் அல்ல, அதில் அமர்ந்திருக்கும் திருக்கோலமும் சற்று வித்தியாசமாக உள்ளது. இவற்றைக் கொண்டே இது சோழர் காலத்துக்கு முந்தைய சிற்பம் என்று கருதப்படு்கிறது. முருகர் வடிவம் தொலைந்துபோய் விட்டது.



பாண்டியர் கால சிற்பங்களும் தமிழகச் சிற்பங்களின் கலைத்திறனுக்குச் சான்றாய் விளங்குகின்றன. தமிழகத்தில் சோழர்காலக் குடந்தை நாகேசுவரர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழீச்சுரம், தராசுரத்து ஐராவதேசுவரர் திருக்கோயில் ஆகியவற்றிலுள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவை சிற்பக் கலை வளர்ச்சியையும், அக்கலையில் தமிழகச் சிற்பிகள் பெற்றிருந்த பெருந்திறனையும் உலகுக்கு உணர்த்துவன.



வெண்கல வார்ப்புக் கலையில் முக்கியமாக பஞ்சலோகங்களை மிகப் பெரிய அளவில்

வைத்துக் கொண்டு கலவையினால் செய்து, கோட்பாடுகள், தத்துவங்கள், சிற்ப

சாஸ்திரங்கள் ஆகிவற்றிற்கு ஏற்ப முதலில் மெழுகில் தயாரித்துப் பிறகு, களிமண்

ஒட்டிப் பின்னர் மெழுகி உருக்கி எடுத்து இடைவெளியில் உருக்கப்பட்ட உலோகத்தை

அழகுபட வார்க்கின்ற கலையை இன்றும் உலகம் அனைத்தும் மெய்சிலிர்த்து வியக்கும்

அளவுக்குச் சோழர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.



சோழர் காலத்து உலோகத் திருமேனிகள் மிக்கவாறும் 'சிரே பெர்டு'(Cire Perdu) என்னும் முறையில் வார்க்கப்பட்டவையாகும். தஞ்சையிலுள்ள சில கல்வ்வெட்டுகள் திடமாகவும்(Solid), உள்ளீடுள்ளதாகவும்(hollow) உள்ள உலோகத் திருமேனிகள் வார்ப்பது பற்றிய செய்திகளைக் கொண்டுள்ளன. தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது காணப்படும் உலோகத் திருமேனிகள் பண்டைக் காலத்து வார்ப்புக் கலையின் சிறப்பினை எடுத்துக் காட்டுவனவாகத் திகழ்கின்றன



இரண்டாம் இராசராசனின் கலைப்படைப்பாய் எழுந்த ஐராவதேசுவரர் திருக்கோயில், சிற்பக்கலைச் சாதனைகளின் உச்சம் என்பர். அழகிலும் நுணுக்கத்திலும் ஆற்றலிலும் மிக உன்னத நிலையிலிருந்தே இச்சிற்பக் கலையின் எச்சமாக கம்போடியாவின் ‘அங்கோர் வாட்’ கோயில்களிலும் இந்திய நாட்டு ‘லெம்பா பந்தாய்’ பள்ளத்தாக்கிலும் சிதைவுற்றிருக்கும் சிற்பங்களே சீரிய எடுத்துக்காட்டுகள்.



இந்திய சிற்பக் கலையில் இந்து சிற்பக்கலை பற்றிய தகவல்களினை இதுகாறும் தொல் பொருட்கள் துணையுடன் அலசினோம் இனி இலக்கியம் வழி இனம்காண்போம்.

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ லலிதா நவரத்னம் என்னும் பெயரில் வெளிவந்த நூலொன்று பண்டைக் காலத்தில் ஏற்பட்ட சிற்ப நூல்களாக 32 நூல்களைப் பட்டியலிட்டிருக்கிறது.

இதில் கண்டவை

1) விசுவதர்மம்

2) விசுவேசம்

3) விசுவசாரம்

4) விருத்தம்

5) மிகுதாவட்டம்

6) நளம்

7) மனுமான்

8)பானு 9) கற்பாரியம்

10)சிருஷ்டம்

11) மானசாரம்

12) வித்தியாபதி

13) பாராசரியம்

14) ஆரிடகம்

15) சயித்தியகம்

16) மானபோதம்

17) மயிந்திரமால்

18) வஜ்ரம்

19) ஸௌம்யம்

20) விசுவகாசிபம்

21) கலந்திரம்

22) விசாலம்

23) சித்திரம்

24) காபிலம்

25) காலயூபம்

26) நாமசம்

27) சாத்விகம்

28) விசுவபோதம்

29) ஆதிசாரம்

30)மயமான போதம்

31) மயன்மதம்

32) மயநீதி



என்பனவாகும். இவற்றுள் பல இன்று இல்லை. இப் பட்டியலில் காணப்படும் இன்றும் புழக்கத்திலுள்ள நூல்களான மானசாரம், மயன்மதம் (மயமதம்) என்பவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டாலும், தென்னிந்திய நுல்களாகும்.



'சிற்பச் செந்நூல்' எனும் அரியதொரு நூலை உருவாக்கியிருக்கும் சிற்பக் கலைஞர் திரு.வை. கணபதி, நூலிற்கான முகவுரையில் தென்னாட்டுச் சிற்பக்கலை மரபைச் சேர்ந்த கலை நூல்களாக மானசாரம் என்ற கட்டடக்கலை நூல் குறிபபிடும் 32 நூல்களின் பட்டியலைத் தந்துள்ளார். மனுசாரம் என்னும் சிற்பக் கட்டடக்கலை நூல் குறிப்பிடும் 28 நூல்களில்,மானசாரம் குறிப்பிடாத 18 நூல்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார் .

இந்த ஐம்பது நூல்களுள் பெரும்பாலானவை இன்றில்லை என்று குறிப்பிடும் சிற்பி, 'இன்று நம்மிடையே கீழ்க்கண்ட நூல்களே தங்கிவருகின்றன' என்று கூறி மயமதம், விஸ்வகர்மீயம், மானசாரம், ஐந்திரமதம்,மனுசாரம், காஸ்யபம் எனும் ஆறின் பெயர்களை மட்டுமே தந்துள்ளார். 'இவை சிறபக்கலை பற்றியும் கட்டடக்கலை பற்றியும் ஒருமித்துப் பேசும் முழு நூல்களாகும். இவற்றிற்கு வாஸ்து சாஸ்திரம் என்று பெயர்' என்கிறார்.

மானசாரம் என்பது, ஒரு சிற்பநூல் ஆகும். பண்டைக்கால இந்தியாவின் நகர அமைப்பு, கட்டிடக்கலை, படிமவியல் ஆகியவை பற்றிய விடயங்கள் இந்நூலில் எடுத்தாளப்படுகின்றன. மேற்படி துறைகள் தொடர்பாகப் பல நூல்கள் இருந்த போதும், முழுமையான நூல்கள் என்று சொல்லத் தக்கவை மிகச் சிலவே. இம் மிகச்சில முழுமையான நூல்களுள் மானசாரமும் ஒன்றாகும். சிற்பநூல்களுள் மிகவும் நீளமானது என்று சொல்லத்தக்க வகையில் 5400 பாடல்களைக் கொண்டுள்ள இந்நூல், 70 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது ஆயினும், பெரும்பாலும் தென்னிந்திய மரபுகள் பற்றியே பேசுவதால், இது தென்னிந்தியாவிலேயே எழுதப்பட்டிருக்கவேண்டும் என்ற கருத்து நிலவுகின்றது.

மயமதம் என்பது மிகப் பழைய காலத்தில் மயன் என்பவரால் எழுதப்பட்ட சிற்பசாஸ்திர நூலாகும். இது தென்னிந்தியாவிலேயே ஆக்கப்பட்டதாகக் கருதப்படினும், இது எழுதப்பட்ட மொழி வட மொழியாகிய சமஸ்கிருதமாகும். இது மனிதனுக்கான வீடுகள் முதல் இறைவனுக்காக அமைக்கப்படும் பெரிய கோயில்கள் வரையிலான பலவித கட்டிடங்களின் அமைப்பு முறைகள் பற்றி விவரிப்பதுடன், ஊர்கள், நகரங்கள் ஆகியவற்றின் அமைப்புகள் பற்றிய விபரங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது. கட்டிடங்கள் கட்டுவதற்கான நிலத்தைத் தெரிவு செய்வது முதற் கொண்டு, கட்டிடங்கள் நோக்கவேண்டிய திசை, அதன் அளவுகள், பொருத்தமான கட்டிடப்பொருள்கள் என்பன பற்றியும் மயமதம் விரிவாக எடுத்துரைப்பதுடன், விக்கிரகக் கலையும் இதன் உள்ளடக்கத்துள் அடங்குகிறது.

வாசுத்து சூத்திர உபநிடதம் என்பது இந்திய மரபுவழிச் சிற்பக்கலை குறித்த ஒரு பழங்கால நூல் ஆகும். 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்நூல் சமஸ்க்கிருத மொழியில் எழுதப்பட்டது. இதை எழுதியவர் பிப்பிலாடர் என்பவர். பிப்பிலாடர் நான்கு மாணவர்களின் சிற்பநூல் பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பது போன்ற வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்நூல் இதன் காலத்துக்குச் சற்று முன்னும் பின்னும் எழுந்த சிற்பநூல்களிலிருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளது. மற்ற நூல்கள் சிற்பம் தொடர்பிலான செயல் முறைகளை விரிவாக விளக்குவனவாக அமைந்துள்ளன. ஆனால் வாசுத்து சூத்திர உபநிடதமோ சிற்பக்கலையைக் கோட்பாட்டு அடிப்படையில் விளக்குகின்றது.

சிற்ப சாத்திரம் அதர்வ வேதத்தின் ஒரு பகுதி என்னும் கருத்தைப் பல இடைக்காலச் சமசுக்கிருத நூல்கள் கூறுகின்றன. அதர்வ வேதத்தில், சிற்ப சாத்திரம்குறித்த தகவல்கள் அதிகம் இல்லை. அதர்வ வேதம் கிறித்துவுக்கு முந்திய காலப்பகுதியைச் சேர்ந்தது. முறையான சிற்ப நூல்களின் காலம் கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதே. எனவே இந்தப் பல நூற்றாண்டுக் கால இடைவெளியை நிரப்பும் வகையிலான சிற்ப நூல்கள் எதுவும் கிடைத்தில. வாசுத்து சூத்திர உபநிடதம் இத்தகைய ஒரு நூலாக இருக்கலாம் என்ற கருத்தை இந் நூலை முதன்முதலாகப் பதிப்பித்தவர்கள் கொண்டிருந்தனர். எனினும், இந்நூலின் உட்சான்றுகளும் வெளிச் சான்றுகளும் இந்தக் கருத்தை உறுதி செய்வதாக இல்லை எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

சைவாகமங்கள் இருபத்தெட்டு. இவற்றுள் தலையாயது காமிகாகமம் ஆகும். இது மிகப் பெரிய ஆகமங்களுள் ஒன்று. ஏனைய ஆகமங்களைப் போலவே இதுவும் சமஸ்கிருத மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழியில் இருந்தாலும், தமிழ் நாட்டில் மட்டும் வழங்கிவந்த கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளதால், வட இந்தியப் பகுதிகளில் இது அதிகம் அறியப்படவில்லை.

காமிகம் என்பது சமஸ்கிருதத்தில் விரும்பிய பொருள் எனப் பொருள்படும். காமிகாகமம், ஆன்மாக்கள் விரும்பிய பொருள்களை வழங்கி, அவை மலங்களில் இருந்து விடுதலை பெற உதவுவதால், இப்பெயர் பெற்றதாகக் கூறுகிறார்கள்.



இந் நூலின் 75 பிரிவுகளில் 60 பிரிவுகள் கட்டிடக்கலை, சிற்பம் ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ள கட்டிடம் மற்றும் சிற்பம் தொடர்பான அம்சங்கள், பிற்காலத்தில் உருவான தனித்துவமான சிற்பநூல்களான மயமதம், மானசாரம் போன்றவற்றுக்கு அடிப்படையாக அமைந்ததாகச் சில ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.



மயமதம் எனும் சிற்பநூலை சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த புரூனோ டாகென்ஸ் (Bruno Dagens), அந் நூலுக்காக எழுதிய அறிமுகப் பகுதியில்,

“காமிகாகமத்திலும் மயமதத்திலும், சொல்லுக்குச் சொல் சரியாக அமைந்த வசனங்களும், சில சமயங்களில் முழுமையான பத்திகளும் கூடப் பொதுவாக அமைந்துள்ளது. இரண்டில் ஏதாவதொன்று மற்ற நூலிலிருந்து விடயங்களைப் பிரதிபண்ணியிருக்கக்கூடும்”

எனக்கருதும் அவர், காமிகாகமத்தில் கட்டிடக்கலை தொடர்பான அம்சங்கள் ஒழுங்கின்றியும், ஒருங்கிணைவின்றியும் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, மயமதம் போன்ற ஒரு நூலிலிருந்து, காமிகாகமத்தில் பிற்காலத்தில் இடைச் செருகல்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் எனக் கருத்து வெளியிட்டுள்ளார். இது போன்றே காரணாகமும் சிற்பக்கலை பற்றிப் பலவிடங்களில் பகர்கின்றது.

இந்திய வரலாற்றின் பக்கங்களினை உலகமே உற்று நோக்குகின்ற தென்றால் அதற்கு இந்து மதம் ஆங்கே பிறந்து, இந்துக் கலைத்துவத்தை ஆத்ம ஞான தேடலாக, உள்ளக் கிளர்ச்சியை ஊட்டும் உன்னத படைப்பாக வெளிப்படுத்தியதோடு இன்றைய விஞ்ஞான உலகே வியக்கும் விந்தையினைக் கலைக்குள் புகுத்தியமையும் ஒரு காரணமென்று கூறிவிடலாம்.



"நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனத்தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங்களையும் சிற்பங்களையும் படைத்துள்ளனர். இவை பிரபஞ்ச நடனத்தின் பார்வை சித்திரங்களாகும். மேற்கத்திய நவீன உபகரணங்களை உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ நடனத்தின் புதிய பிரதியே. ஹிந்து சிற்பங்களில் உள்ள பிரம்மாண்டமும் அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அவை இரண்டையும் இணைத்துள்ளேன்."



என்கிறார் “காப்ரா” எனும் அணு விஞ்ஞானி.

இவரது கூற்றின் மூலம், இந்துக் கலை அன்றும், இன்றும், என்றும் மெஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடராய் விஞ்ஞானமாகி வியக்கும் விந்தையைத் தன்னகத்தே கொண்டுள்ள தெனலாம்.சிவசக்தி அந்தரசக்தி முகனூல்

ரஜினிகாந்த் கர்நாடகா ஆதரவு திரைத்துறை போராட்டம் எதிர்ப்பு மிரட்டும் தொனி பேட்டி காணொளி

aathi1956 aathi1956@gmail.com

சனி, 2 ஜூன், 2018, பிற்பகல் 5:57
பெறுநர்: நான்

ரஜினிகாந்த் திரைத்துறை போராட்டத்திற்கு எதிர்ப்பு

"40 லட்சம் கர்நாடகத் தமிழர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும்"
வேங்கமொவன் மிரட்டும் தொனியில் ஏற்கனவே (2002 ல்) பேசியது 

40 லட்சம் தமிழர்கள் உயிருக்கு நீங்க கேரண்டி குடுப்பீங்களா?
காவி உடை மொட்டைத்தலை 
#நான்தான்பாரஜினிகாந்த்

1800 வரை தெற்காசியா புத்தகங்கள் தமிழ் முதலிடம்

aathi1956 aathi1956@gmail.com

சனி, 2 ஜூன், 2018, பிற்பகல் 2:48
பெறுநர்: நான்

சீனி. மாணிக்கவாசகம்
An Interesting Data:
Number of books printed in oriental languages in South Asia before the year 1800 is in the following order:
Tamil 266
Sinhalese 139
Persian 100
Bengali 84
Hindi 20
Konkani 20
Gujarati 5
Malayalam 3
Marathi 2
Arabic 1
Sanskrit 1
Telugu 1
Source: The South Asia and Burma Retrospective Bibliography, Stage 1 : 1556 - 1800, compiled by Graham Shaw and published by the British Library in 1987
@Roja Muthiha Research Library
http://rmrl.in/
Source: Karthikeya Sivasenapathy

தமிழ்மொழி புத்தகம் நூல் அச்சு 

ஸ்டெர்லைட் தவிர பல வேலைவாய்ப்பு கல்வி விளையாட்டு தூத்துக்குடி யில்

aathi1956 aathi1956@gmail.com

சனி, 2 ஜூன், 2018, முற்பகல் 9:09
பெறுநர்: நான்
சீனி. மாணிக்கவாசகம்
# ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடிட்டாங்க, வேலைவாய்ப்பு போச்சு, தூத்துக்குடியின் பொருளாதாரமே அழிஞ்சு போச்சு ன்னு மகாபாரதம் ரேஞ்சுக்கு பக்தாள்ஸ் கதை விட்டுக்கிட்டு இருக்காங்க....
பக்தாள்ஸ், ஒரேயொரு தொழிற்சாலை மூடப்பட்டால் ஊரே ஒழிந்து விடுவதற்கு தூத்துக்குடி அகமதாபாத்-தும் இல்லை, தமிழ்நாடு குஜராத்-தும் இல்லை...
தமிழ்நாட்டில் "மனிதவள மேம்பாட்டில் (HDI - Human Development Index) ல் சென்னைக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நகரம் தூத்துக்குடி...
தூத்துக்குடியின் பொருளாதார காரணத்தால், 300 வருடங்களுக்கு முன்பே போர்சுக்கீசியரும், டச்சுக்காரர்களும், பிறகு ஆங்கிலேயர்களும் ஆட்சி செய்த ஊர் தூத்துக்குடி...
150 வருடங்களுக்கு முன்பே துறைமுகமும், ரயில் நிலையமும் அமைக்கப்பட்ட நகரம் தூத்துக்குடி...
இந்தியாவின் மூன்றாவது பெரிய துறைமுகமும், சரக்குப் பெட்டிகள் கையாளும் துறைமுகமும் இங்கே தான் இருக்கிறது...
தமிழ்நாட்டின் 90% உப்பு இங்கே தான் உற்பத்தி ஆகிறது... டெக்ஸ்டைல்ஸ், மீன்பிடி தொழில், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் என்று அனைத்து பொருளாதாரத்தையும் கையில் வைத்திருக்கும் நகரம் இது.....
ஆண்களுக்கு ஆறு கல்லூரிகள், பெண்களுக்கு நான்கு கல்லூரிகள், அரசு தொழில்நுட்ப கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி, மத்திய ஆராய்ச்சிக் கல்லூரிகள், 30 உயர்நிலை - மேல்நிலைப் பள்ளிகள் என்று அனைத்தையும் தூத்துக்குடி வைத்திருக்கிறது....
30 - 40 வருடங்களுக்கு முன்பே,
அகில இந்திய கால்பந்து போட்டி,
அகில இந்திய கைப்பந்து போட்டி,
அகில இந்திய கூடைப்பந்து போட்டி,
அகில இந்திய டென்னிஸ் போட்டி
என்று இந்தியாவின் தலைசிறந்த அணிகளை வரவழைத்து வருடாவருடம் போட்டிகள் நடத்திய ஊர் தூத்துக்குடி ...
அத்தனையும் எழுதினால், எழுதிமுடிக்க ஒரு வாரம் ஆகும்.
ஒரேயொரு #ஸ்டெர்லைட் மட்டுமே தூத்துக்குடியின் அடையாளமும் இல்லை, அது மட்டுமே தூத்துக்குடியின் பொருளாதாரமும் இல்லை...
அதனால, உங்க டேஷ்பக்தியை கொஞ்சம் மூடி வச்சிட்டு, ஆல் இண்டியா ரேடியோல தம்பூரா வாசிப்பாங்க... அதைக் கேட்டுக்கிட்டே தூங்குங்க....
10 மணி நேரம் · Facebook for Android ·


வேதாந்தா ஒரிசா மலை காடு அழித்து பாக்சைட் தோண்டுதல் போராட்டம்

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 1 ஜூன், 2018, முற்பகல் 9:41
பெறுநர்: நான்
சீனி. மாணிக்கவாசகம்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் செம்பு உருக்கும் வளாகத்தின் விரிவாக்கத்திற்கு எதிராக விரிவாக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், 2018 ஆம் ஆண்டு மே 22 –லிருந்து குறைந்தது 11 பேர் இறந்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் இந்த கட்டுமானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. வேதாந்தாவின் துணை நிறுவனமான செம்பு உருக்கு யூனிட் சுற்றுச்சூழல் சட்டங்களை மீறியுள்ளதாகவும், வாயு கசிவு காரணமாக பல சுகாதார பிரச்சினைகள் ஏற்படுத்தியுள்ள
தாகவும் குற்றஞ்சாட்டி எதிர்ப்பாளர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.
பிரிட்டனைச் சேர்ந்த வேதாந்தா மற்றும் அதன் குழும நிறுவனங்களுக்கு இது புதுசு அல்ல. ஆனால் சுற்றுச்சூழல் மீறல்களுக்காக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அவர்களுக்கெதிரா
ன வழக்குகளில் சமீபத்தியதுதான். இதனால், அது சட்டரீதியான தணிக்கையை சந்தித்ததோடு மட்டுமல்லாமல் பங்குதாரர்களால் முதலீடுகளை திரும்பப்பெறுதல் மற்றும் நல்லெண்ண இழப்பு ஆகியவற்றையும் சந்தித்துள்ளது. இது எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளுக்கும் ( காங்கிரஸ் மற்றும் பாஜக) அரசியல் நன்கொடைகள் வழங்கியது குறித்த சர்ச்சையின் மையமாக உள்ளது.
ஒரிஸாவிலிருந்து ஜாம்பியா வரை மற்றும் சத்தீஸ்கரிலிருந்து கோவா வரை வேதாந்தாவும் அதன் துணை நிறுவனங்களும் பல்வேறு சிக்கல்களை சந்தித்துள்ளன.
# நியாம்கிரி - # ஒதிஷா
ஒடிஷாவில் உள்ள நியாமகிரி மலையிலிருந்து பாக்சைட் வெட்டியெடுக்க ஒடிசா மைனிங் கார்ப்பொரேஷன் லிமிடெட் (OMCL) உடன் 2004 ஆம் ஆண்டில் வேதாந்தா நிறுவனம் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இது அருகிலுள்ள லஞ்ச்காரில் அமைந்துள்ள அவர்களுடைய அலுமினிய சுத்திகரிப்பு ஆலைக்கு பாக்சைட்டை வழங்கும். இப்பகுதியில் உள்ள கோந்த் பழங்குடி மக்கள் தொடக்கத்திலிருந்தே இத் திட்டத்தை எதிர்த்தனர், ஆனால், சுரங்கத்தை நடத்துவதற்கு இப்பகுதியில் உள்ள காடுகளை அழிக்க உச்ச நீதிமன்றம் 2008ல் அனுமதி வழங்கியது.
எனினும், இது சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் (MoEF) ஒப்புதல் பெற வேண்டியிருந்தது. இந்த அமைச்சகம் தனது முதல் கட்ட அனுமதியை அளித்தது. ஆனால் வனவியல் அனுமதி பெறவேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் அந்த அனுமதி வழங்கப்பட்டது.
# பிரச்சினைகள்
இதன் விளைவாக, நிபுணர் சாக்சேனா குழுவின் அறிக்கையின் அடிப்படையில், சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் (MoEF) இவ்வாறு கண்டறிந்தது:
வேதாந்தா மற்றும் ஓஎம்.சி.எல் ஆகியவற்றின் மூலம் வன உரிமைகள் சட்டத்தின் கீழ் பழங்குடியினரின் உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுளள்ன, மற்றும் அந்த சட்டத்தின் கீழ் தலித்துகளின் உரிமைகள்கூட பாதுகாக்கப்படவில்லை.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன்படி வேதாந்தா நிறுவனம் குறிப்பிடத்தக்க மீறல்களை செய்துள்ளது. சுத்திகரிப்பு ஆலையைப் பொறுத்தவரை, அது சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விரிவாக்கப்பட்டுள்ளது.
வேதாந்தா வேண்டுமென்றே இத்திட்டம் குறித்த தகவலை மறைத்து, 1980ம் ஆண்டின் வனப் பாதுகாப்புச் சட்டத்தை தொடர்ந்து மீறியிருக்கிறது.
இதன் விளைவாக, திட்டத்திற்காக தேவையான இரண்டாம் நிலை வனவியல் அனுமதிக்கு MoEF மறுத்துவிட்டது இதை எதிர்த்து அந்த நிறுவனங்களும், ஒடிஷா அரசாங்கமும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன. 2006ம் ஆண்டின் வன உரிமைகள் சட்டத்தின் கீழ் தோங்கிரியா கோந்த் பழங்குடியினரின் சமூக மற்றும் மத உரிமைகள் முறையாக மதிப்பீடு செய்யப்படவில்லை. இதை உள்ளூர் மக்களின் கிராம சபாக்கள் செய்ய வேண்டும். ஆனால் இங்கே நடக்கவில்லை என உச்ச நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு கூறியது.
இந்த விஷயத்தை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட கிராம சபை குழுக்கள், கோந்த் பழங்குடியினரின் சமுதாய உரிமைகள் மற்றும் நியாமகிரி மலைகள் பற்றி அவர்களின் மத உணர்வுகளைக் கருத்தில் கொண்டும், இத்திட்டத்தை 2013லேயே ஒருமனதாக நிராகரி்த்தது. இந்த முடிவுகளை ரத்து செய்ய OMCL முயன்றது, ஆனால் அவர்களின் மனு மே 2016 ல் தள்ளுபடி செய்யப்பட்டது.
Source: @Savukku Shankar A

கார்ப்பரேட் மண்ணழிப்பு ஒரிஸா நக்சலைட் மாவோயிஸ்ட்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலை திருமாவேலன் கட்டுரை

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 1 ஜூன், 2018, முற்பகல் 9:30
பெறுநர்: நான்

‘தேசபக்த’ மராட்டியர்களும் ‘தேசவிரோத’ தமிழர்களும்!
ப. திருமாவேலன்

எத்தனை கோயில்களுக்குப் போனாலும், எவ்வளவு பரிகாரம் செய்தாலும் தூத்துக்குடி பாவத்தை எடப்பாடி பழனிசாமியால் துடைக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, காவல்துறைத் தலைவர் டி.கே.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோருக்கும் தான் இது. மே 22-ம் நாள் தமிழ்நாட்டுக்குக் கண்ணீர் நாளாகவே இருந்து தொலையட்டும். ஆனால், உங்கள் வாழ்க்கையில் கறுப்புநாள். இந்தச் சாவுப்பூதம் இறுதிவரை உங்களை நிம்மதியாக இருக்க விடாது.

அப்பாவிகளைக் கொன்ற தீவிரவாதிகளை நீங்கள் கொல்லவில்லை. அப்பாவிகளையே கொன்றிருக்கிறீர்கள். ‘நாங்க நடந்து வரும்போது எந்த போலீஸ் கையிலயும் துப்பாக்கி இல்லை. சுடுவாங்கன்னு தெரியாது’ என வெள்ளந்தியாக வீறிடும் ஒரு பெண், இந்த அரசுமீது கள்ளங்கபடமின்றி வைத்த நம்பிக்கையைக் கொன்றிருக்கிறீர்கள். “அக்கா... வாங்கக்கா... சுடுறாங்க... ஓடிடுவோம்” என இன்பென்டாவிடம் (வயது 22) சொல்லி, அவரை இழுத்து ஓடுகிறாள் ஸ்நோலின் என்ற வெனிஸ்டா (வயது 17). இன்பென்டாவின் முதுகில் தடி இறங்குகிறது. ஸ்நோலின், குண்டு தாங்குகிறாள். பிளஸ் 2 தேர்வு எழுதியவள் ஸ்நோலின். “ஸ்டெர்லைட்டை மூடனும்னு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தோம்” என்கிறாள் இன்பென்டா. டிப்ளமோ முடித்துள்ள ரஞ்சித்குமார், ரத்த தானம் செய்வதில் ஆர்வமுள்ளவர். ‘சொட்டு ரத்தம் பத்தாது, மொத்த உடம்பையும் கொடு’ என்று அவரின் உயிரைப் பறித்துள்ளனர். ஈழத்தில் வாழ முடியாமல் வந்த கந்தையா, தென்னாட்டைக் காப்பாற்றும் மாவீரனாக மரணமடைந்துவிட்டார். தூத்துக்குடியில் முதல் குண்டு வாங்கியவர் அவர். ‘சாகுறதுக்கா இங்க வந்தோம்?’ என்று அவர் மனைவி செல்வமணியின் கேள்வி, கடலில் எதிரொலிக்கிறது.

மணிராஜை மட்டுமா கொன்றிருக்கிறீர்கள்? மூன்று மாதங்களுக்கு முன் அவரைக் கைப்பிடித்த அனுசுயாவின் கனவையும் சேர்த்து அல்லவா? மூன்று மாதக் கரு வயிற்றில் உள்ளது. பிறக்கப் போகும் குழந்தையின் எதிர்காலத்தையும் சேர்த்தல்லவா கொன்றிருக்கிறீர்கள்? எம்.பி.ஏ பட்டதாரியான சண்முகம், ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கப்போனவர். காளியப்பனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. அக்டோபரில் திருமணம். திரேஸ்புரம் ஜான்சி, தன் சகோதரி வீட்டுக்கு மீன் கொண்டு போய்க்கொண்டிருந்தார். அவரின் நான்கு பிள்ளைகளும் கண்ணீர்கூட கிடைக்காமல் நிற்கிறார்கள். மாலையில் திரேஸ்புரத்துக்குள் புகுந்தார்கள் காவலர்கள். வீடு வீடாகப் புகுந்து அடித்திருக்கிறார்கள். ‘ஏன்ம்பா... இப்படி அடிச்சு கொல்றீங்க!’ என்று தெருவில் நின்று கேட்டவர் வினிதா. (வயது 37). அடுத்த குண்டு அவருக்கு. செத்துப்போனார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேதான் அந்தோணி செல்வராஜ் வேலைபார்க்கும் நிறுவனம் உள்ளது. 28-ம் தேதி அவரின் மகளுக்குச் சடங்கு வைத்திருக்கிறார். அழைப்பிதழ் கொடுக்கப் போய்க்கொண்டிருந்த அந்தோணி செல்வராஜ் இப்போது இல்லை. யாரைக் கொன்றிருக்கிறீர்கள்... பயங்கரவாதிகளையா?

இவர்களையும் காப்பாற்றுவேன் என்று பதவிப்பிரமாணம் எடுத்தவர் முதலமைச்சர். இந்த மக்கள் தருகிற வரிப்பணத்தில்தான் ஐ.ஏ.எஸ்-களும், ஐ.பி.எஸ்-களும் சம்பளம் வாங்குகிறீர்கள். கொன்ற பாவம் தின்றால் போய்விடுமா?

ஒருநாள் அல்ல, 100 நாள்களாகத் தெருவில் வாழ்கிறார்கள் அவர்கள். பிரியாணிக்கும், குவாட்டருக்கும் கூட்டிவரப்பட்ட கூட்டம் அல்ல. ஸ்டெர்லைட் ‘விரிவாக்கம் செய்யப்பட்டால், வாழத் தகுதியில்லாத ஊராக இது மாறிப்போகும்’ என அவர்கள் அச்சப்படுகிறார்கள். 2013 மார்ச் 23-ம் நாள், விஷவாயு கசிந்து ஊரே ஓடியது. அதுவே நிரந்தரமாகி விடக்கூடாது என நினைக்கிறார்கள். அவர்கள் பயத்தைப் போக்கியிருக்க வேண்டியது அரசின், அதிகார வர்க்கத்தின் கடமை இல்லையா? சாமி பேர்ல அர்ச்சனை செய்யச் சொன்னால், எடப்பாடி பழனிசாமி மேல் அர்ச்சனை செய்யும் அளவுக்குச் சுபிட்ச சுக வாழ்வைத் தமிழ்நாட்டுக்குத் தந்துவிட்டோம் என நினைக்கிறார்களா? ‘ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிடுவோம்’ என இன்று சொல்லும் முதலமைச்சரும், மாவட்ட நிர்வாகமும் 100 நாள்கள் வனவாசம் போயிருந்தார்களா?

அரசாங்கக் கணக்கின்படியே அன்று கூடியவர்கள் 20 ஆயிரம் பேர். இத்தனை ஆயிரம் பேர் திரளும் நாளில், தனக்கு மனு கொடுக்கத் திரளும் நாளில் தூத்துக்குடியில் இல்லாமல் கோவில்பட்டியில் ஜமாபந்திக்கு வரவேண்டும் என மாவட்ட ஆட்சியரை அந்த ஊர்க்காரர்கள் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தார்களா? இவ்வளவு களேபரத்துக்குப் பிறகும், தூத்துக்குடிக்கு வராமல் ஓட்டப்பிடாரத்துக்கு அவர் போய்விட்டார். இத்தனை உயிர்கள் பலியான இடத்தில் எஸ்.பி ஏன் இல்லை? இத்தனை ஆயிரம் பேர் கூடப்போகும் இடத்தில், தென்மண்டல ஐ.ஜி காலையில் ஏன் இல்லை? இவ்வளவு நடந்த பிறகும், டி.ஜி.பி அன்றே ஏன் அங்கு செல்லவில்லை? சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி ஏன் செல்லவில்லை? எல்லோரையும் எங்கோ பதுங்கிக்கொள்ளச் சொன்ன சக்தி எது? ‘உங்களை மாதிரியே நான் டிவி பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்’ என ஒரு  மாநிலத்தின் முதலமைச்சர் சொல்கிறார் என்றால், அவருக்குத் தெரியாமல் சுடச் சொன்னது யார்? இந்த வெறியாட்டம், யாரிடம் வாங்கிய கூலிக்காக மாரடிக்கப்பட்டது?

தூத்துக்குடியில் 144 தடையுத்தரவு போடுங்கள் என்று கேட்டது கலெக்டரோ, எஸ்.பி-யோ, தாசில்தாரோ அல்ல. ஸ்டெர்லைட் நிறுவனப் பொதுமேலாளர் சத்யப்ரியா தான், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். 144 போட்டால் நான்கைந்து பேர் சேர்ந்து நிற்க முடியாது, கூடுவதற்கு முடியாது, ஊர்வலம் செல்ல முடியாது. இதை மக்களுக்கு முறைப்படி அறிவிக்கவேண்டும். அது தொடர்பான ஆட்சியரின் அறிக்கையில், ‘பேரணியாக வாள், கத்தி, கம்பி, கற்கள், அரசியல் - சமூகக் கொடிக்கம்புகள் மற்றும் இதர அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டுவரக்கூடாது’ என விஷமத்துடன் சொல்லப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கக் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள்... என அனைவரையும் அழைத்து வருபவர்கள் எதற்காக வாள், கத்தி எல்லாம் எடுத்து வரப்போகிறார்கள்? கூட்டமாக மக்கள் கூடிய இடத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இவர்களிடம் ஆயுதம் இருந்ததா? ஆயுதம் வைத்திருப்பவர்களை நடந்துவர விட்டிருப்பார்களா? அவர்கள் கூடிய இடத்துக்குச் சென்று, ‘ஸ்டெர்லைட் இனி இயங்காது’ என இப்போது சொல்வதை அப்போது சொல்லயிருந்தால் இது நடந்திருக்குமா? இத்தனை உயிர்கள் போயிருக்குமா?

அவர்களின் நோக்கம், பொதுமக்களுக்குப் பயத்தைக் காட்டுவது. இனி எவனும் போராட வரக்கூடாது என்று தடுப்பது. ‘இனிமேல் விவசாயிகளையும் சுடுவீர்களா?’ என்று அய்யாக்கண்ணு கேட்கிறார் அல்லவா? அந்த அச்சத்தை விதைப்பது. இதுதான் ஜல்லிகட்டு போராட்டத்திலும் நடந்தது. ‘ஒரு மணி நேரத்தில் கலைந்து விடுகிறோம்’ என்றவர்களை அடித்ததன் மூலமாக, சென்னை மெரினா கடற்கரையை நிரந்தரமாகப் பூட்டிவிடுவதுதான் நோக்கம். அதுபோலத்தான் நியூட்ரினோ, ஹைட்டோகார்பன் போராட்டங்களை ஒடுக்கத் தூத்துக்குடியைத் தொடக்கப்புள்ளியாக மாற்றி 13 உயிர்களை விழுங்கியுள்ளனர். ஒரு சிறுவனைப் பத்து போலீஸார் அடிக்கிறார்கள். வேட்டி அவிழ நடந்துவரும் ஒரு பெரியவரைப் பத்து போலீஸார் சுற்றி நின்று அடிக்கிறார்கள். எவ்வளவு வேண்டுமானாலும் அடிங்கடா என்று நிற்கும் ஒருவரை, இரக்கமில்லாமல் அடிக்கிறார்கள். ஒரு பெண் பிள்ளைக்கு முதுகெல்லாம் பிரம்படி. காளியப்பன் செத்துக்கிடக்கிறான். ‘நடிக்கிறான்டா’ என்கிறது ஒரு காக்கிக் குரல். நீ யாருக்கு எதிராய் லத்தி சுழற்றுகிறாய், துப்பாக்கி பிடித்திருக்கிறாய் என்பதையே உணராத ஜென்மங்களின் கையில், இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிவதைவிட விஷவாயு நல்லது!

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் செல்வசேகரை வயிற்றில் உதைத்துக் கொன்றுள்ளார்கள். செல்வசேகரின் அக்காள் கேட்கிறார், ‘‘10 லட்சம் தர்றியே.. என் தம்பி உயிரை மீண்டும் தருவியா?’’ என்று. இன்னொரு பெண் கேட்கிறார், “உங்க வீட்டுல யாரையாவது சுட்டுக்கொன்றால் 20 லட்சம் வாங்கித் தர்றேன். சாகக் கொடுப்பியா?” என்று. பணம் கொடுப்பது, ஆறுதல் சொல்வது, அரசாங்க வேலை தருவது... இவையெல்லாம் கொலைக்குப் பரிகாரமா? அது சரியென்றால், சட்டம் எதற்கு? நீதிமன்றம் எதற்கு? தனி மனிதன் செய்தால் கொலை... அரசாங்கம் செய்தால் கொலை அல்ல என்று எந்தச் சட்டத்தில் இருக்கிறது? ‘சிரம் அறுத்தல் வேந்தர்க்குப் பொழுதுபோக்கு; நமக்கோ உயிரின் வாதை’ என்றான் புரட்சிக்கவி. 13 பேர் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல. எதையும் நம்பராகவே பார்த்து நம்பராகவே மாறிப்போன நமத்துப்போன சமுதாயம் இது. அதனால்தான், இவர்களுக்கு 13 பேர் தானே, போலீஸைப் பார்த்துக் கல்வீசினால் சுடத்தானே செய்வான், ஸ்டெர்லைட் மூலமா நமக்கு வளர்ச்சிதானே, கம்பெனி வந்தா வேலை கிடைக்குதே... என்றெல்லாம் சொல்ல வைக்கிறது.

ஸ்டெர்லைட்டை விரட்டிய மராட்டியர்கள் தேசபக்தர்கள் என்றால், விரட்டும் தமிழர்கள் மட்டும் எப்படி தேசத்துரோகிகள் ஆவார்கள்? ஸ்டெர்லைட்டை வரவிடாத குஜராத்தியர்கள் தேசபக்தர்கள் என்றால், விரட்டும் தமிழர்கள் மட்டும் எப்படி தேசத்துரோகிகள் ஆவார்கள்? மூக்கைப் பொத்திக்கொண்டு 23.3.2013-ல் ஓடியவன் தூத்துக்குடிகாரன். அதனால்தான், துணிந்து வருகிறான். நாற்றம்பிடித்த நம் வீட்டுக் குப்பையை அடுத்த தெருவில் போட்டுவிட்டு, ‘இந்தக் குப்பைவாரி ஏன் சவ நாத்தம் நாறுது’ன்னு கமென்ட் அடிக்கும் ‘பரந்த உள்ளம்’ கொண்டவர்களுக்கு, தூத்துக்குடி மக்களின் வலி புரியாது. ஸ்டெர்லைட் ஆலையின் 2-வது, 3-வது, 4-வது, 5-வது யூனிட்டுகளை மெரினா தொடங்கி பெசன்ட்நகர் பீச் வரை வைத்தால்தான் பலருக்குப் புரியும்.

பறையர் சாதிவெறி வன்னியர் பதிலடி பாமக

aathi1956 aathi1956@gmail.com

வியா., 31 மே, 2018, முற்பகல் 10:18
பெறுநர்: நான்

காரைக்குறிச்சி ராஜா
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 'மணிகண்டன் மேல்பட்டாம்பாக்
கம்' என்ற தம்பி 'காடுவெட்டி குரு காலமானதைக் கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டது' என பட்டாசு கொளுத்தும் ஒரு வீடியோ பதிவு போட்டிருந்தார்.
நான் அவரது பதிவுக்குள்ளேயே சென்று இப்படிக் கேட்டேன்.
1.குடிதாங்கியில் பறையர் பிணத்தை வன்னியர் தெரு வழியே எடுத்துச் சென்று மருத்துவர் ராமதாஸ் அவர்கள் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார்.
2.ஆண்டிமடத்தில் காடுவெட்டி குரு ஆதி திராவிடர்களை ஊர்க் கோவிலுக்குள் அழைத்துச் சென்றார்.இரட்டைக் குவளை முறையை ஒழித்தார்.
3.மருத்துவர் அவர்கள் தம் சமுதாயத் தலைவரான ராமசாமிப் படையாட்சியாருக்குக் கூட சிலை திறக்காமல் ஊர்கள்தோறும் அம்பேத்கருக்கு சிலைகள் திறந்தார்.தைலாபுரம் தோட்டத்திலும் அம்பேத்கர் சிலை நிறுவி அஞ்சலி செலுத்திவருகிறார்.
4.எந்த ஜாதிக்கட்சியுமே தலித்களின் நீல நிறத்தை தன் கொடியில் வைக்காத நிலையில் தம் பா.ம.க கொடியில் வைத்து சிறப்பித்தார்.
5.தம் கட்சிக்குக் கிடைத்த மாநில மந்திரி பதவியல்ல; முதல் மத்திய அமைச்சர் பதவியை வன்னியர் யாருக்கும் தராமல் பறையர் சமூக 'தலித் எழில்மலை'க்குதான் தந்தார்.பிறகு அப்பதவியை பொன்னுசாமிக்கு வழங்கினார்.
6.தாம்பரம் சித்தமருத்துக் கல்லூரிக்கு ராமதாஸ் ஜாதி வெறியராக இருந்திருந்தால் தம்மின 'அர்த்தநாரீச வர்மா' பெயரை வைத்திருக்கலாம்
.ஆனால் பறையர் சமூக 'அயோத்திதாச பண்டிதர்' பெயரையே சூட்டி கவுரவப்படுத்தினார்.
7.பொறியியல் கல்விக்கு தமிழக அரசு பல ஆண்டுகளுக்கு முன் நுழைவுத் தேர்வு கொண்டு வந்தது.அதனால் முற்பட்ட ஜாதியினரே பொறியியல் படிப்பு படிக்கும் நிலை ஏற்பட்டது.+2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை வேண்டும் எனப்போராடி பெற்றுத் தந்தார்.அதனால் பயன் பெற்றது வன்னியர்கள் மட்டும்தானா?பறையர் சமூக இளைஞர்களும்தானே! இதர சமுதாயங்களின் ஏழைக் குடும்பங்களும்தானே!
8.அதற்கு முன் அரியலூர் மாவட்டத்துக்காரர்கள் ஆரம்பத்தில் திருச்சிராப்பள்ளி அதற்கடுத்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள்தான் செல்ல வேண்டி இருந்தது.அந்த நிலையை மாற்றி அரியலூரிலேயே அரசின் நலத்திட்டங்களை பெறும்படி அரியலூர் மாவட்டத்தைக் கருணாநிதியிடம் போராடி பெற்றுத் தந்தது பாமக-வும் குருவும்தான்!அத
னால் பயனடைந்தது வன்னியர்கள் மட்டும்தானா! பறையர்களும் மற்ற ஜாதியினரும் இல்லையா?
9.அதற்கு முன் விபத்தில் அடிபட்டுக் கிடந்தால் ஒருவர் கூட கிட்டே நெருங்கமாட்டார்கள்.செத்துப் போகவேண்டியதுதான! அதற்கு 108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டு வந்தது பாமக-வின் மத்திய அமைச்சர் அன்புமணிதான்! இதனால் உயிர் பிழைத்தது வன்னியர்கள் மட்டும்தானா?பறையர்கள் இல்லையா?
10.சேலத்தில் ரயில்வே கோட்டம், மத்திய அரசின் 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை' ஆகியவற்றைக் கொண்டு வந்தது பா.ம.க -தான்! இதனால் பறையர் வன்னியர்,இதரர் எல்லோரும்தானே பலனடைகிறார்கள்.
11.டாஸ்மாக் கடைகளில் சென்றுபார்த்தால் நிற்பவர்களில் 40% வன்னியர்,40% பறையர் மற்றெல்லா ஜாதியினரும் சேர்ந்து 20% தான்! குடியால் குடும்ப வருமானமும் இழந்து கல்லீரல் அழுகிப் போய் அல்ப ஆயுசிலேயே மனைவிகளை இளம் விதவைகளாக்கி குழந்தைகளை அநாதைகளாக்கி செத்துப் போகிறவர்கள் இந்த இரு சமுதாயத்தினரும்தான்.இதற்காக விசிக போராட முன்வராத நிலையிலும் தொடர்ந்து போராடி மதுக்கடைகளைக் குறைத்திருப்பது காடுவெட்டி குருவும் அவரது கட்சியும்தான்!
'குச்சுக் கொளுத்தி,குடிசைக் கொளுத்தி' என குருவையும் பாமக-வையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறீர்கள்.சாலை மறியல் போராட்டத்தின்போது பறையர் குடிசைகளை பழி வன்னியர்கள்மீது விழும்படியாக மறிக்கப்பட்ட திமுக-வினரும் போலீசாரும்தான் செய்தார்கள்.பறையர் வீடுகளைக் கொளுத்துவதால் வன்னியருக்கு எப்படி இட ஒதுக்கீடு கிடைக்கும்?
கடலூர் ஆலப்பாக்கத்தில் திருமாவளவன் தேர்தலில் நின்றபோது வன்னியர்களை ஓட்டுப்போட விடாமல் தடுத்ததால் தகறாறு ஏற்பட்டு இரு தரப்பும் மாறிமாறி குடிசைகளை கொளுத்திக்கொண்டன.அதில் பறையர் மட்டுமே பாதிக்கப்பட வில்லையே!ஆனையம்பேட்டை வன்னியர் வீடுகளைக் கொளுத்திய 'குச்சுக் கொளுத்திகள்' யார்?
மேலும் 1888-லேயே வன்னியர் சங்கம் உண்டாகிவிட்டது.1952-லேயே 'வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை' எனக்கூறி ஆதிதிராவிடர்களையும் இணைத்துக் கொண்டு எஸ்.எஸ்.ராமசாமிப் படையாட்சியார் பிள்ளைகள்,முதலியார்கள்,ரெட்டி,
நாயுடுகள் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டினார்.அந்தத் தேர்தலிலேயே அய்யாறு,முத்துசாமி,கட்டிமுத்து
,பழனிசாமி என 4 பறையர் சமுகத்தவரை எம்.எல்.ஏ-க்கள் ஆக்கினார்.
1888 முதல் திருமாவளவன் காலம்வரை 'வன்னியர் சங்கம்' இருந்தும் பறையர் வீடுகளைக் கொளுத்தியது உண்டா?
அதற்காக வன்னியர்கள் பறையர் வீடுகளைக் கொளுத்தி இருக்கவே மாட்டார்கள் என்று முழுதும் நான் மறுக்கவரவில்லை.'படையாட்சி பெண்டாட்டி பறையனுக்கு வைப்பாட்டி!' என கோஷமிட்டு,சுவரி
ல் எழுதி கேவலப்படுத்தினால் வன்னியனுக்கு கோபமே வராதா?இதையே நீங்கள் காவேரிக்குத் தெற்கே சென்று 'கள்ளன் பெண்டாட்டி பறையனுக்கு வைப்பாட்டி!' என்று சொல்லி ஊர் திரும்ப முடியுமா? தமிழ் சமுதாயம் கற்புக்கு முக்கியத்துவம் தரும், பெண்களை இழிவுபடுத்தினால் ஏற்காத சமுதாயம் என்பது தெரியாதா?அதனால் பறையர் வீடுகளைக் கொளுத்தியிருக்கலாம்.திடீரென கடலூர் மாவட்ட வன்னியர்களுக்கு பறையர்கள் வீடுகளைக் கொளுத்த அவர்களுக்கு ஒரே நாளில் 'சொல்லி வைத்தாற்போல்' பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன?
'ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு!' என்பதுதானே அறிவியல்.
அதற்காக வன்னியர்கள் 'பறையன் பெண்டாட்டி படையாட்சிக்கு வைப்பாட்டி!' என பதில் முழக்கமிட்டு,எழுதி இதுவரை வன்னியர்கள் கேவலப்படுத்தியத
ு உண்டா?
அ. திண்ணியத்தில் பறையரின் வாயில் கொங்குவேளாளர்கள் மலத்தைத் திணித்தார்கள்.அதுபோல வன்னியர்கள் பறையர்கள் வாயில் வடமாவட்டத்தில் எங்காவது மலத்தைத் திணித்து ஜாதிவெறியைக் காட்டியது உண்டா?
ஆ. கீழவளவில் தேவர்களின் வீட்டுக்குக்குள் நுழைந்தவரையல்ல, ஊராட்சிமன்றக் கட்டடத்தில் நுழைந்ததையே பொறுக்கமுடியாமல் பறையர் முருகேசனை முக்குலத்தோர் வெட்டிக்கொலை செய்தார்களே!அதே
போல் வட தமிழ்நாட்டில் வன்னியர்கள் ஜாதிவெறி முற்றிப்போய் எந்தப் பறையர் ஜாதி பஞ்சாயத்துத் தலைவரையாவது அலுவலகத்தால் பூந்து வெட்டிக் கொலை செய்தது உண்டா?குடிசை எரிந்து போனால் மீண்டும் 10 கீற்று வாங்கி ஒரு குடிசைக் கட்டிவிடலாம்.போன முருகேசன் உயிரைத் திரும்பக் கொண்டு வந்துவிட முடியுமா?
இ. 'வன்னியர்கள் வடக்கில் 4,5 மாவட்டத்தில்தான் இருக்கிறீர்கள்!
நாங்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறோம்!' என்று பெருமை பேசிய திருமாவளவன் கொடி கூட ஏற்ற முடியாமல் திரும்பிய நிலை கள்ளர்கள் வாழும் ஒரத்தநாடு வடசேரியில் 2015-இல் நிகழ்ந்தது.அங்க
ு அவர்மீது பெட்ரோல் குண்டும், கற்களும் வீசக் காத்திருந்த 12 இளைஞர்கள் கைதாயினர்.அவர் அங்கு போயிருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம்.இது போன்ற நிகழ்வுகள் வன்னியர் வாழும் வட தமிழ்நாட்டில் நடந்தது உண்டா?
விசிக-வும் மற்ற ஆதிக்க ஜாதி வெறியர்களும் ஊடகங்களும் தொடர்ந்து இழிவுபடுத்தியும
்,இருட்டடிப்பு செய்தும் வரும் நிலையிலேயே ஜாதிவெறியர் குரு,ராமதாஸ்,அன்புமணி ஆகியோரின் பா.ம.க பலமுறை எம்.எல்.ஏ-க்களைப் பெற்றுவிட்டதோடு அதிகபட்சமாய் 23 எம்.எல்.ஏ-க்களையும் பெற்றுவிட்டது.பலமுறை எம்.பி-க்களைப் பெற்று பல மத்தியமந்திரிகள
ையும் பெற்றுவிட்டது.கடந்த தேர்தலில் தனியாகவே நின்று பணம் தராமலேயே 5.5% வாக்குகளை வாங்கி அதிமுக,திமுக-வுக்கு அடுத்தபடியாக வாக்குகள் பெற்றுவிட்டது. நீங்கள் சொல்வது போல பாமக ஜாதி வெறிக்கட்சியாக மக்கள் நினைத்து இருந்தால் இவ்வளவு அதிசயங்கள் நிகழ்ந்திருக்கு
மா?
தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை உள்ள, 'தமிழ் இந்து' வின் இடதுசாரிகளின்,முற்போக்காளர்களி
ன் ஆதரவு பெற்ற 5 கட்சி கூட்டணியுடன் சென்ற விசிக-வால் 1.5% க்குமேல் வாக்கு பெறமுடியாமல் போனது ஏன்?திருமாவளவனால் 15 ஆண்டுகளாக கட்சி நடத்தியும் ஒரு மாநில மந்திரி,ஒரு மத்திய அமைச்சர் பதவியை இதுவரை வாங்க முடிந்ததா?அப்போது மக்கள் யாரை ஜாதிவெறிக்கட்சியாக நினைக்கிறார்கள் என்று எடை போட்டுப் பாருங்கள்!
வன்னியர்கள்போல பறையர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளும் ஜாதி இந்து/குடியான ஜாதி தமிழ்நாட்டில் சமுதாயம் வேறு எதுவும் இல்லை.வன்னியர்கள்போல் அரசியலில் பறையர்களுக்கு உதவிய சமுதாயமும் வேறில்லை.
அதனால் அப்படிப்பட்ட இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் இறப்பை வெடிவெடித்துக் கொண்டாடுவதும்,அவரைப் பன்றி போல் சித்தரித்துக் கேவலப்படுத்துவத
ும் விசிக தனக்குத்தானே வைத்துக் கொள்ளும் சூனியம்தான்!
விரோதத்தை வளர்க்கும் 'நாடகக் காதலை'க் கைவிட்டு, தலித்துகளுக்கு முழு இட ஒதுக்கீடு,நில ஒதுக்கீடு,மாநில ஆட்சி அதிகாரத்தை நாடார்,கொங்கு வேளாளர்,முக்குலத்தோர் ஆதிக்கவாதிகளிடமிருந்து கைப்பற்ற வன்னியர்களுடன் சேர்ந்தோ சேராமலோ போராடுவது இவைதான் ஆதிதிராவிட மக்களை பொருளாதாரத்தில் உயர்த்தி சமூகத்தில் உரிய மரியாதையை ஏற்படுத்தித்தரும் என நம்புகிறேன்.
இவற்றில் முற்பகுதிக் கருத்துகளை இட்டு பதில் கேட்டவுடன் மணிகண்டன் என்ன நினைத்தாரோ உடனே நீக்கிவிட்டார்.ஆனால் நியாமுள்ள பறையர் சமுதாய சகோதரர்களுக்கும் இதர நடுநிலையாளர்களுக்கும் சென்று சேரவே இப்பதிவு.
வடதமிழன் காவிரிச்செல்வன்