திங்கள், 16 நவம்பர், 2020

சீனா தமிழர் தொடர்பு கிமு முதல் 1900 கள் வரை விரிவான கட்டுரை ஆங்கிலம்



aathi tamil <aathi1956@gmail.com>

திங்., 5 ஆக., 2019, முற்பகல் 11:43





பெறுநர்: எனக்கு




https://indianexpress.com/article/opinion/tamils-and-tamizhakam-in-chinese-eyes-5871413/


Tamils and Tamizhakam in Chinese eyes
The Chinese and Tamil communities have celebrated thousands of years of friendship. And this rich bilateral exchange has been recorded by several monks and traders.
Written by Zhou Xin |Published: August 2, 2019 11:36:38 am








Kaiyuan Temple and the Hindu God sculpture on the pillar.

The history of Tamil-Chinese interactions dates back two thousand years ago. From the renowned Buddhist monk XuanZang to nameless explorers, numerous Chinese travellers and historians have left notes on Tamil people and the Tamil land. The earliest historical document that recorded the mutual contact was Hanshu (The History of Han Dynasty) in 111CE. Till the last feudal dynasty the Qing Dynasty (1636- 1912), records of Tamil-Chinese exchanges can be traced abundantly in both official and folk historical documents.

India-China interactions
Advertising

The Tamils recorded by China’s historians in ancient times are almost exclusively geographically from Southern India. So, we have to look briefly into the early and medieval India-China interactions first, especially two essential elements in the contact: Buddhism and trade.

From AD 1600, transmission of Buddhism from India to China paralleled an active trade between the two countries. Buddhism was the main factor promoting mutual interactions. According to Chinese scholar Liu Xinru, India was considered by many as a holy land due to religious reasons. Buddhism ritual and religious activities promoted the production and distribution of commercial goods.

Then during AD 600–1400 we see a realignment of India–China relations. Despite the decline of Buddhism, non-Buddhist merchandise between the two countries began to thrive, especially after AD 1000. At the same time, due to political instability in Central Asia maritime routes became a more viable way for transporting commodities.

Tamizhakam as a tributary and home of Bodhidharma

the earliest available Chinese literature about the land of the Tamils dates back to the Han Dynasty (206BCE-23CE). The geographical record of Hanshu, part of The History of Han Dynasty, mentioned “Huang Zhi Guo”, which was disputably considered as nowadays Kanchipuram.

“Sail from GuangZhou (a southeast coastal city in China) for over 2 months, there is Huang Zhi Guo. It has vast land, big population, and novelties.” Another chapter written pays a rhino as tribute to the Chinese emperor.

The following historical literature found was about the Buddhist monk from Kanchipuram: Bodhidharma. Being popular among the Tamil audience due to Surya’s film ‘7Aam Arivu’, Bodhidharma was widely known in China as the founder of Shaolin Temple. However, almost everything about his timeline is contentious.

The earliest text mentioning Bodhidharma is The Record of the Buddhist Monasteries of Luoyang which was compiled in 547. It has mentioned Bodhidharma’s longevity of 150 years. He has left loads of other mystic legendaries. Several Chinese proverbs come from his stories, such as “Yiweidujiang”, meaning to cross the river on a reed. Legends also say he gazed at the wall for nine years and meditated on the top of the hill next to ShaoLin Temple which gave rise to the thorough understanding of Zen BuddhismI

in Tanlin’s (506–574) brief biography of the “Dharma Master”, a text traditionally attributed to Bodhidharma and the first text to identify him as South Indian, it says he came to Chine in Nan-liang Dynasty (520-526), sailed to China from as a “South Indian Brahmin”. Afterwards historical work regards Bodhidharma to be the third son of a Pallava king from Kanchipuram.

Despite these contentious and unreliable folks, Bhodidharma’s name is well-known to many Chinese, usually with a fantastic colour. However, very few Chinese have the knowledge that the apotheosis of our national pride kung fu was a Tamil.

Tamizhakam in Xuan Zang’s records

If I can say the most famous Tamil in China is a monk, then the best known Chinese in India might be another monk: Xuan Zang. This Chinese monk’s Great Tang Records on the Western Regions (646CE), which record his 18 years (627-645) Indian travel and knowledge, was irrefutable the key historical data for both countries.

In his trip, Xuan Zang reached Kanchipuram. In the Biography of SanZang (Xuan Zang) in CiEn Temple (688CE), it was recorded that Xuan Zang planned to visit SengJaluo Guo(Sri Lanka) to learn Theravada Sudra.

“From Kanchipuram it takes three days by boat. ”

However, due to internal disorder, the monks fled from Lanka to Kanchipuram. XuanZang dropped his plan to cross the strait and learnt Buddhism sudra from them right in Kanchipuram and stopped southward trip.

Therefore Kanchipuram was considered by many Chinese historians as the southern tip of XuanZang’s Indian trip. In his Great Tang Records on the Western Regions, he described Kanchipuram as follows:

“The land is fertile and crops flourish, is a land of treasure teem with flowers and fruits. Climate is warm. People are brave and staunch with moral integrity. They are deep in righteousness, well learned and noble-minded. Their language is different from middle India…”

XuanZang went to India during the Tang Dynasty, which is considered as the peak of Buddhism in China and also the gold age of China’s cosmopolitan culture and economy. In the following dynasty, called Song Dynasty, the frequent trade between China and Tamil land is also mentioned.

A country of Pearl

In a later historical document Taiping Yulan, meaning Taiping Imperial Encyclopedia (977-983), it recorded Kanchipuram or “Huang Zhi Guo” as: “Its customs is similar to ZhuYa (Hainan, China’s tropical island). It was abounds in pearls, blue-coloured glaze, and rare stones. Big pearl’s diameter reaches 2 Cun (around 6.6cm). With a perfect round shape, it spins all day without stop.”

China’s sources on the Cholas

The early medieval period saw an economic structure dominated by the rise of powerful Tamil empires under the Pallava and Chola dynasties. Middle East commodities transferred to China via Cholas. Chinese sources have recorded Chola envoys’ multiple visits to Song court with tribute missions as acknowledging the power of China and its important position in Asia.

Cholan empire celebrated its golden age in the 11th and 12th centuries. As mentioned, marine time route trade gradually boomed after the 7th century. Despite the rising of Sri Vijaya has to some extent brought pressure on china-Cholan trade.

China’s sources of China-Tamil interactions also was abundant. Most of the material has been sorted and translated by two principal experts on the Cholas and Indian-China interaction history: Tansen Sen, and Noboru Karashima.

Other Chinese texts on the Chola Kingdom as Zhu-nian include Songhuiyao Important Documents of the Song Dynasty; Songshi History of the Song [Dynasty]; Zhufan zhi Records of the Barbarous People; Lingwai daida Information of what is Beyond the Passes; and Wenxian tongkao Comprehensive Examination of Literature.

It is interesting to see how the Chinese view the Cholas. In the fifth section of the foreign biography in Songshi, the History of the Song, written by court historians, the depiction of the layout of cities in Chola empire read: “In the kingdom there is a city which is enclosed by seven-fold walls that are seven-feet high…Within each wall are planted various flowering plants and fruit trees.”

“At banquets, the king and the four ministers prostrate themselves at the foot of the steps. Then, they sit together and watch music, song and dance.

“They don’t drink alcohol, but eat meat. They are accustomed to wearing cotton and linen clothes and eating ear shaped dumplings. They employ ladies as attendants for table and personal service.”

On the engagement, the wrote: “When arranging a marriage, initially the man’s family sends the matchmaker to the woman’s house with gold and silver rings. After two days, the woman’s family meets with the man’s family, and make an engagement with gifts including the quantity of fields, domestic animals, and arrack. The woman’s family also presents to the prospective bridegroom gold and silver rings, a Western Region fine cloth and the brocaded cloth to be worn by the bride.

“If the man regrets about this engagement, he should not take the things offered, and if the woman regrets, she has to return to him twice of what was received.”

In the eyes of historiographers from the Song court, it seems Tamils were good at city planning and afforestation. Also, the Song historians seemed surprised to know Cholan King and ministers didn’t drink alcohol, and thus specifically recorded this information. During the fun-loving Song period, an atmosphere of drinking had flourished.

Tamil inscriptions found in China

After the Song dynasty, sources from the Yuan period (1271-1368) write of active Tamil merchants and guilds.

The 13th century bilingual inscription (1281 AD) found in China’s Southeast port city of Quanzhou — usually considered the starting point of Maritime Silk Road in China — contains content in both Tamil and Chinese. The Tamil words praise lord Shiva while the Chinese content has a Buddhist meaning. The bilingual inscription indicates the establishment of Tamil trading diaspora and guilds early in Song-Yuan (960—1368) China.Bilingual Tamil-Chinese inscrpiton from Qunzhou, 1281, Xiamen University Museum.

I have been asked by many Tamil friends what the Chinese means. A tentative translation of the line, which seems Buddhist in nature, by Professor Tansen Sen is as follows: “Luhezhiri, [who was] versed [in Chinese language] (alternatively, “[after] gaining access[to China]”), compiled the Sutra of Torching the Mountain Without Assistance (i.e.,self-enlightenment?).”

It is not my purpose in this article to probe into fragmental Brahimincal sculpture segments found in China. But the Yuan dynasty was considered built by Tamil merchant guilds and proves an unencumbered trade opportunity then. Envoys were sent to each other by the two courts and Yuan dynasty was considered at the peak of south Indian trade in the port.

Marco Polo states that Indian traders continued to be active in Quanzhou in the late 1280s and early 1290s. The renowned Kai Yuan Temple, a Shiva Hindu temple located in now Quanzhou, is also built in the Yuan Dynasty.

Zhenghe’s donation stele in Sri Lanka

After the Yuan Dynasty, a famous Chinese navigator Zhenghe in Ming dynasty (1368-1644) greatly promoted commercial intercourse between China and south India. Zhenghe, the Chinese admiral, was known for commanding seven great voyages through the South China Sea and the Indian Ocean between 1405 and 1433.

He had not travelled to the east coast of India but been to Malabar, where it is said he passed away on a voyage back to China.

His connection to the Tamil people was brought to focus in the year 1911, when a 1409 trilingual inscription was discovered by provincial engineer Mr H F Tomalin in Galle, Sri Lanka. The Donation Stele was written in Chinese, Tamil and Persian. It recorded the donation from Chinese Ming court to Sri Lanka. On his third voyage (some say second), Zheng sailed from China in 1409, and carried with him the trilingual tablet which he planned to erect in Sri Lanka. The discovery of the Donation Stele of Ceylan Buddha is historic evidence of the friendship between China and Sri Lanka.

It is also a rare cultural relic for the study of China-Tamil interactions.

The Chinese portion of the tablet says the emperor of Ming Dynasty despatched the Zhenghe, Wang Jinghong and others to set forth his utterances before Lord Buddha.

The list of alms bestowed as offerings at the shrine of the Buddhist temple in the mountain of Ceylon included “1,000 pieces of gold; 5,000 pieces of silver; 50 rolls of embroidered silk in many colours; 50 rolls of silk taffeta, in many colours; four pairs of jewelled banners, gold embroidered and of variegated silk, two pairs of the same picked in red, one pair of the same in yellow, one pair in black; five antique brass incense burners; five pairs of antique brass flower vases picked in gold on lacquer, with gold stands; five yellow brass lamps picked in gold on lacquer with gold stands; five incense vessels in vermilion red, gold picked on lacquer, with gold stands; six pairs of golden lotus flowers; 2,500 catties of scented oil; 10 pairs of wax candles; 10 sticks of fragrant incense.”

The same information was also recorded in Tamil and Arabic. The Tamil inscription offered similar praise to the god Tenavarai-Nayanar, perhaps a local form of Shiva, and the Arabic portion gave praise to Allah.

‘Madalasa (Madras)’ in later maritime explorers’ notes

After Zhenghe, Ming emperors gradually launched a strict ban on maritime trade. The following dynasty, Qing (1644-1911), was the last feudal dynasty in China. It continued and even reinforced the restricted intercourse with foreign countries in order to limit the rampant smuggling and piracy at sea, especially the British’s opium peddling.

In 1857, Guangzhou remained the only area for foreign trade, beginning decades of isolation for the Qing China.

The Qing Dynasty also witnessed China’s power recession and semi-colonisation by the British. This is the reason less literature has been found and translated on China-Tamil interactions during Qing.

Records that have been recovered, however, are merely geographical records of south India rather than interactions.

In Yinghuan Zhilue (The World Geography), written in 1849, the references to “Madras” and “Pondicherry” in Qing China are very similar to Tamil.

“Madalasa (Madras, according to Chinese pinyin), or Madelasida… the British set a headquarter here to rule the southern part of India… In the third year of JiaQing Emperor (1799), the kingdom to the northwest of it revolted and was frustrated by the British.

“… To its south is Bendi zhili (Pondicherry), occupied by France…”

This was recorded during the years of Dao Guang Emperor (1782—1850). Towards the end of his reign, the 1840 opium war broke out. Afterwards, China was involved in a number of wars with western powers and hardly any literature on Tamil was found.

During my visit to Tamil Nadu this January, I had expected to see coins collections from the Song Dynasty, which witnessed high trade at a time when both economies peaked. But to my surprise, in both Tanjavur Sarasvathi Royal Library and Chennai St George’s Fort Museums, what I found in China’s coins collections, instead, was “DaoGuang TongBao” coins used in DaoGuang years. This means despite the isolation policy and war, trade between Tamil and Chinese was not totally stopped in the late 19th century.

Research has shown that India, under the rule of East India Company, continued trade with China especially in tea and silk. Chinese guild was displayed in the Madras Exhibition of the Raw Products of Southern India in 1859. I believe there were more commercial exchanges during the colonial period which may need further detailed study.

The 1911 democracy revolution ended Qing Empire and China’s 2000 years feudal era.



Zhou Xin is a lecturer in the Tamil department of Beijing Foreign Studies University.


1 Comment(s)


China
tamil
வணிகம் சோழர் பாண்டியர் வரதட்சணை மது புலால் கல்வெட்டு தமிழி பிராமி எழுத்துரு பழமை சீனா பௌத்தம் போதிதர்மர் காஞ்சிபுரம் யுவான் சுவாங்

ஞாயிறு, 15 நவம்பர், 2020

ஈழம் ஆனைக்கோட்டை 2600 ஆண்டுகள் பழமை தமிழி முத்திரை புகைப்படம் படங்கள்

 

aathi tamil aathi1956@gmail.com

இணைப்புகள்5 ஆக., 2019, முற்பகல் 11:09
பெறுநர்: எனக்கு
தமிழ் கிரியேடர்ஸ் ▶ வரலாற்று பிரியர்கள்
ஆனைக்கோட்டை முத்திரை
ஆனைக்கோட்டை முத்திரையில் உள்ள எழுத்துப்பொறிப்பு இருவரிசையில் கிடைத்துள்ளது. அதன் முதல் வரிசையில் பெருங்கற்படைக்கால குறியீடுகளும் (சிந்துவெளிக்கு
றியீடுகள்), இரண்டாவது வரிசையில் அதற்கு இணையான தமிழி எழுத்துப் பொறிப்புகளும் உள்ளன். தமிழி எழுத்துப் பொறிப்புகளை டாக்டர் இந்திரபாலா அவர்கள் ‘கோவேந்தா’ என படித்துள்ளார். நடன காசிநாதன் அவர்கள் இது மிக மிக பண்டைய தமிழி எழுத்துப்பொறிப்பு என்பதால், இதன் காலம் கி.மு. 6ம் நூற்றாண்டு என்கிறார். இதன் இன்னொரு சிறப்பு, இதன் மேல்வரிசைக் குறியீடும் ‘கோவேதா’ என்ற கருத்தைக் கொண்டது என்பதுதான். எனவே தமிழி உருவாவதற்கு முன் இந்த பெருங்கற்படைக்கால குறியீடுகள் ஒலிவடிவம் அல்லது கருத்துவடிவம் கொண்ட ஒரு எழுத்தாக பயன்படுத்தப் பட்டுள்ளது எனலாம். (ஆதாரம்: இலங்கையில் தமிழர் – கா. இந்திரபாலா, பக்:105,328&329 & TAMILS HERITAGE- NATANA. KASINATHAN, PAGE: 33)
ஆனைக்கோட்டை முத்திரை (Anaicoddai Seal) என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளஆனைக்கோட்டை என்னும் இடத்தில், 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இடம் பெற்ற அகழ்வாய்வு ஒன்றின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முத்திரை ஆகும். கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த ஒரு அடக்கக் குழி ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்ட இம் முத்திரை ஒரு மோதிரத்தின் முன் பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்த முத்திரை எதனால் செய்யப்பட்டது என்பது தொடர்பாக ஆய்வாளர்கள் மத்தியில் முரண்பட்ட கருத்துக்களே இருந்து வருகின்றன. பேராசிரியர் கா. இந்திரபாலா இந்த முத்திரையானது உலோக முத்திரை எனத் தமிழக இந்து பத்திரிகையில் 1981 இல் எழுதிய கட்டுரையில் கூறியிருந்தார். ஆனால், அவர் எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என்பதைக் குறிப்பாகக் குறிப்பிடவில்லை. பொ. இரகுபதி (1987) இந்த முத்திரையானது வெண்கலத்தினால் (Bronze) செய்யப்பட்டது என்றுள்ளார். ஐராவதம் மகாதேவனும் (2003), பேராசிரியர் சி. பத்மநாதனும் (2006), அது உலோகத்தால் ஆனது என்றுள்ளபோதும், அது எந்த உலோகத்தினால், அல்லது உலோகக் கலவையால் ஆனது என்பதைக் குறிப்பாகக் கூறவில்லை. எதுவிதத்திலும் க. இந்திரபாலா 2006ஆம் ஆண்டில் எழுதியிருந்த நூலில், அது Steatite (Soapstone) ஆல் ஆனது என்றுள்ளார். முத்திரையின் கீழ் வரிசையில் மூன்று பிராமி எழுத்துக்களும், மேல் வரிசையில் மூன்று அடையாளங்களும் காணப்படுகின்றன. மேல் வரிசையிலுள்ள மூன்று அடையாளங்களுள் ஒன்று ரோம எழுத்தான C போன்ற அடையாளத்தின் வளைவு உச்சிப்புள்ளியில் ஒரு குற்றும் காணப்படுகிறது. மறறைய இரண்டு அடையாளங்களும், ஒரேமாதிரியாகத் தோற்றமளிக்கின்ற
ன.
இந்திரபாலாவின் வாசிப்பு
இதனை வாசித்த பேராசிரியர் கா. இந்திரபாலா இம் முத்திரையில் கீழ் வரியில் அடங்கியுள்ள மூன்று எழுத்துக்களையும் இடப்பக்கத்தில் காணப்படும் எழுத்துக்கு மேலுள்ள புள்ளியையும் பிராமிப் பகுதியாகக் கொண்டுள்ளார். இதில் இடப்பக்கமிருந்து பார்க்கும்போது முதலாவது எழுத்து "கோ", இரண்டாவது "வே", மூன்றாவது "த". இது முத்திரையிடப் பயன்படுத்தும் அச்சு ஆதலால் இடப்படும் முத்திரையில் இடம் வலமாக மாறிவிடும் ஆதலால் எழுத்து வரிசை "கோ" "வே" "த" என்று அமையும். "த" வின் மேலுள்ள புள்ளியை அனுஸ்வரமாகக் கொண்டால் இச் சொல்லை "கோவேந்த" அல்லது "கோவேதன்" என இருவிதமாக வாசிக்கமுடியும் என இந்திரபாலா கூறுகிறார். இரண்டுமே திராவிடப் பெயராகவும், ஒரே பொருள் தருவனவாகவும் உள்ளன. "கோவேந்த" என்பதை "கோ" + "வேந்த" என இரண்டாகப் பிரிக்கலாம். இரண்டு பகுதிகளுமே தமிழிலும் வேறு சில திராவிட மொழிகளிலும் மன்னன், அரசன் என்னும் பொருள்படுவனவே. சொல்லைக் கோவேதன் என்று எடுத்துக்கொண்டாலும் கூட இது போலவே அமையும். மேல் வரிசையில் சூல வடிவக் குறியீடு அடுத்தடுத்து இருமுறை இடம் பெற்றுள்ளது. இக் குறியீடுகள் ஒலிப்பையன்றிப் பொருளையே சுட்டுவனவாதலால் "கோ" என்பதைக் குறித்த சூல வடிவமே, அதே பொருள் கொண்ட "வேந்த" அல்லது "வேதன்" என்னும் சொல்லையும் குறித்தது.
இரகுபதியின் வாசிப்பு
பொ. இரகுபதி இதனைச் சற்று வேறுவிதமாக வாசித்துள்ளார். இவர், இந்திரபாலாவால் அனுஸ்வரமாகக் கொள்ளப்பட்டு பிராமியுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட புள்ளியை முதல் வரியின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளார். இவர், கீழ் வரி "கோ" "வே" "த" என்பது "கோ" + "வேத்" + "அ" எனப் பிரிந்து "கோவேதனுடைய" என்னும் பொருள் கொடுக்கும் என்றும் இதற்கு இணையாக இரண்டு சூலக் குறியீடுகள் "கோ" "வேத்" என்பவற்றைக் குறிக்க, புள்ளி "உடைய" என்னும் பொருள்கொண்ட "அ" என்னும் உருபைக் குறித்தது என்கிறார்.
மதிவாணனின் வாசிப்பு
முனைவர் ஆர். மதிவாணன் அந்த முத்திரையில் காணப்பட்டவாறே இடமிருந்து வலமாக "தி" "வு" "கோ" என வாசித்து, அது தீவின் அரசன் என்னும் பொருள் தரும் என்றார்.
-------------
A seal found during excavations in Anaicoddai in Eelam contained both Indus Valley letters and Tamili script
Annaicoddai Seal is a steatite seal that was found in Annaicoddai, Sri Lanka during archeological excavations of a megalithic burial site by a team of researchers from the Jaffna University. The seal contains some of the oldest inscriptions in Tamili mixed with Megalithic Graffiti symbols found on the island. Although many pottery fragments have been found in excavations throughout Sri Lanka and Southern India that had both varieties of Tamili and Megalithic Graffiti Symbols side by side, Annaicoddai seal is distinguished by having each written in a manner that indicates that the Megalithic Graffiti Symbols may be a translation of the Tamilii characters. Read from right to left, the legend is read as ‘Koveta’ (Ko-vet-a). Linguists read it as in South Dravidian or early Tamil indicating a chieftain or king. Similar inscriptions have been found throughout ancient Tamilakam, in modern day South India. Investigators disagree on whether Megalithic Graffiti Symbols found in South India and Sri Lanka constitute an ancient writing system that preceded the introduction and widespread acceptance of Tamili variant scripts or non lithic symbols. The purpose of usage remains unclear.
25.11.2004/tamilbrami_2.htm

கோவேந்தன் அகழ்வாராய்ச்சி உலோகம் எழுத்துரு விவாதம் பிராமி சின்னம் கல்வெட்டு













தமிழ்மொழி பழமை கிமு 2000 தமிழி படங்கள் பட்டியல் பொதிகை யாழ்ப்பாணம் கீழ்வாலை பொருந்தல் புகைப்படம்

 

aathi tamil aathi1956@gmail.com

இணைப்புகள்திங்., 5 ஆக., 2019, முற்பகல் 10:57
பெறுநர்: எனக்கு
Poorna Chandra Jeeva
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
எழுதாக் கற்பின் நின்சொல் லுள்ளும் ...
சமஸ்கிருதமா முந்தியது ?
தமிழா சமஸ்கிருதமா எது தொன்மையானது என்று கருத்துப்போர் நடக்கிறது . நண்பர்கள் உணர்ச்சிப் பெருக்கில் தகிக்கிறார்கள் . எல்லா மொழிகளுமே தொன்மையானவைதாம் .அது அல்ல ஒரு மொழியின் தொன்மையை உணர்த்தும் கருவி . பண்பாடும் நல்ல இலக்கிய வளங்களைப் பெற்றிருப்பதோடு பிற இன - மொழி மக்கள் தொகுதியால் அடையாளப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் . எ- டு : கி மு 999 இல் வாழ்ந்த செமிட்டிக் பொனீசிய மன்னன் சாலமன் ஏடுகளில் அரிசி தோகை கருவாப்பட்டை மணப்பொருள்களின் தமிழ்ப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன . அரிசி சமஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது என்றனர். ஆனால் ரிக் வேதத்தில் அரிசி என்னும் பெயரோ குறிப்போ இல்லை . தோகை என்பது தோகைமயிலைக் குளிப்பது. அரிசி மிகப்பிற்கால வேதத்தில் குறிப்பிடப்பெறுகிறது . இவற்றால் கி மு 1000 அளவிலேயே தமிழகம் அரிசியைப் பயிரிடும் தொழில்நுட்பம் கொண்டிருந்தது தெரிந்தது. வடக்கேயும் ஆரியர் கைபர் கணவாய் வழியே இந்தியா வந்து முதலில் பஞ்சாப்பில் தங்கியபோது ஆரியர் பருவகாலங்களைப்பற்றிய அறிவு வேளாண்மை வணிகம் ஆகியவற்றைத் தமிழரிடம் இருந்து கற்றனரென்று ரிக் வேதம் கூறுகிறது . பருவமறிந்து ஆண்டில் இருமுறை பயிர்ச் சாகுபடி செய்வதை தேவர்கள் அங்கிருந்த திராவிடத் தமிழ் மக்களிடமே கற்றறிந்ததாக ரிக் வேதம் கூறுகிறது . அவ்வேதத்தில் காணப்படும் தமிழ்ச் சொற்கள் தமிழ்ச் சமுதாயத்திடமிரு
ந்தே ஆரியர் நாகரிக வாழ்வைக் கற்றதை உணர்த்துகின்றன . ரிக்கில் காணும் இச்சொற்கள் வாழ்விற்கு அடிப்படையானவை.
மயூர = மயில் , காக = காகம், மீன = மீன் , உலுகல = உலக்கை , கடுகு , குண்ட, கல = கலை , கள = களம், பல, தண்ட , பிண்ட , கய்தா = கைதை - தாழை , ரத்தம் = அரத்தம், வர்ணம் = வருணம், லங்கலா = உழுங்கலம் ( அ) அலங்கலம் = ஏர்க்கலப்பை , மேலும் பலநூறு சொற்களும் உள்ளன . அவர்கள் அங்கு வந்தபோது சிந்து நாகரிகம் அழிந்து மக்கள் எளிய நாகரிகர்களாக வாழ்ந்தனர் . பாழடைந்த இடிந்த பெரிய கட்டடங்களில் வாழ்ந்தனர் . இத்தகைய இடங்கள் வைலஸ்தான் என்று ரிக் வேதம் கூறுகிறது . அங்கு வாழ்ந்த பெண்களை வைலஸ்தானில் வாழும் சூனியக்காரிகள் என்கிறது . வைலஸ்தான் என்பது வேளஸ்தான் - வேளகம் ஆகும் . சிந்தவன் (சிந்து நாட்டவன்) சமஸ்கிருதத்தில் சைந்தவன் ( சிந்து நாட்டு அரசன் மகாபாரதம்) என்று ஆவது போல வேளகம் வைலஸ்தான் ஆனது . ஸ்தான் - இடம் , அகம் . வேளிர் வாழ்ந்ததால் வேளகம். இங்கு வாழ்ந்த பெண்கள் வீரம் நிறைந்தவர்கள் . அரசர்கள் சிந்து நகரங்களில் பெண்கள் போர்ப்படைப் பிரிவை வைத்திருந்தனர் .எனவே இந்திரனால் அவர்களை எளிதாக வெல்ல முடியவில்லை என்று ரிக் வேதம் கூறுகிறது. அப்படைகளை அழிக்க இந்திரன் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது . எனவே மக்கள் மிகுந்த நாகரிகமும் அறிவும் பெற்றிருந்தது தெரிகிறது .
ஆனால் ஆரியர்கள் இங்கு வந்தபோது அவர்களிடம் கல்வியறிவோ எழுத்தறிவோ கிடையாது . வெறும் வாய்மொழி நாடோடி வழிபாட்டுப் பாடல்கள் தான். அவையே பின்னர் ரிக் வேதம் எனப்பட்டது . பிற்கால வேதங்களின் விளக்க நூலான சதபதபிரமாணம் ஒரு நிகழ்வைக் குறிக்கிறது . ஆரியர்கள் ஒரு ஊரைக் கைப்பற்றுகின்றனர் . ஆண்கள் கொல்லப்பட்டார்கள் . பெண்களும் குழந்தைகளும் வயதானோருமே சிறைப்பட்டனர் . ஊர்ப்பொது மன்றத்தில் வைத்து சிறைப்பட்ட மக்களின் வாக் voc என்னும் வாக்கை நெருப்பிலிட்டு அழிக்கின்றனர். வாக்கு என்றால் பேச்சு , பேச்சை எப்படி நெருப்பிலிட முடியும் ? அப்போது ஆரியர்கள் மொழியில் எழுத்து என்ற சொல் இல்லை . அம் மக்களின் மொழியில் எழுதப்பட்ட ஓலை சீலைகளை அழிப்பதையே அவ்வாறு கூறினர் . மக்கள் அவ்வாறு தங்கள் நூல்கள் தீயிடப்படுவதைக் கண்டு தங்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஐயய்யோ ஐயய்யோ என்று ( ஹல்லாயோ ஹல்லாயோ ) அழுததாக சதபதபிரமாணம் கூறுகிறது .எழுத்து மொழியற்ற ஆரியர் தங்கள் பேச்சு மொழியில் கூட எழுத்து நூல் போன்ற சொற்களை அறியாதிருந்தனர் . இன்று ...
சிந்து வெளியை விடுங்கள் தமிழக மக்களும் கி மு 2000 ஆண்டுகளுக்கு முன்பே கல்வியறிவும் எழுத்திலும் பெற்றுத் திகழ்ந்தமைக்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே தமிழ்நாடு கல்வியறிவு பெற்று எழுத்து முறையைக் கொண்டிருந்தது . தமிழ்நாட்டு மக்களும் அவர்களது தமிழ்மொழியைச் சிந்து எழுத்து வடிவங்களாலேயே ( Indus script ) எழுதியமைக்குச் சான்றுகள் உள்ளன . தமிழ்நாட்டில் அவ்வாறு சிந்து எழுந்தால் எழுதப்பட்ட பொறிப்புகள் (Inscriptions ) பல கிடைத்துள்ளன . கீறல் வரி வடிவங்களென ஆய்வாளர்கள் அவற்றை ஒதுக்கிவிட்டார். அவற்றின் பொருளை மட்டுமல்ல சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் மட்டுமே கிடைத்து இந்தியாவின் வேறு எப்பகுதியிலும் கிடைக்காத சிந்து எழுத்து வடிவங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே கிடைப்பது எவ்வாறு என்றுகூட ஆராயவில்லை . பெருங்கற்காலத்த
ில்கூட ( Megalithic age ) அவை பேரளவில் மட்பாண்ட எழுத்துகளாகவும் (Graffiti signs ) எழுத்துப் பொறிப்புகளாகவும் தமிழகத்தில் கிடைக்கின்றன . அவற்றைச் சுருக்கமாகச் காணலாம் .
(1) செம்பியன்கண்டியூர் நாகை மாவட்டம் . இங்கு புதியகற்காலக் கருவியில் தூய சிந்து எழுத்தாகப் பொழியப்பட்டுள்ளது . எழுத்து ஓரளவு தெளிவாக உள்ளது . நான் அதனை
வர ஆய்யன்
என்று படித்துள்ளேன் . இடமிருந்து நான்கு வடிவங்கள் வர ஆ ய் ய என்றும் விகுதியை நிறைவு செய்ய தொல்காப்பிய விதிப்படி ( ளகர ஒற்றே ஆடூஉ அறிசொல் ) இறுதியில் ன் சேர்த்து வர ஆய்யன் என்று படித்துள்ளேன் . இது கி மு 2000 அளவுக்குரியதாக மதிப்பிடலாம் .
(2) பொதிகை மலைக்குகை
தமிழுடன் தொடர்புடைய அகத்தியர் வாழ்ந்த மலை . இக்குகையில் மிகப்பெரிய துறவி வாழ்ந்துள்ளார் . அவரை அப்பொறிப்பு தவம் வளர்ப்பவர் என்கிறது . தவ நந்தன் . இக்குகை மக்களால் எழுத்துப் புடை எழுத்துகளுள்ள பக்கங்களைக் கொண்டது என்று அழைக்கப்படுகிறத
ு .
மூய தவணண்தன் இன் தவ
மூய தவ நந்தன் இன் தவ
நந்தன் என்பது இயற்பெயராகவும் இருக்கலாம் . மேலும் பல மறைபொருட் குறியீடுகளும் இங்கு கீறப்பட்டுளுளது . ஒரு வரிசையாகக் கீறாமல் பாறைச்சுவர்களில் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப இடம் விட்டுக் கீறப்பட்டுள்ளது .
(3) கீழ்வாலைப் பாறைத் தீற்றல்
இதுவும் தவசியர் வாழ்விடமே . தூய சிந்து எழுத்தும் படங்களும் தீட்டப்பட்டுள்ளன. இப்பொறிப்பில் வரும் இரு பொறிப்புகளும் படங்களும் செங்காவி நிறத்தில் தீற்றப்பட்டுள்ளன .
தவச சதவரவ் தவசய்ய சரத்
தவச சதவரவ்வன் தவசய்ய சரய்
சதவர் என்பது இயற்பெயர் . அவ்வன் - அவ்வய் என்பதன் ஆண்பால் . சரய் - கிழத்தன்மை . ஊர்வலம் என்பதும் . இணைப்புப் படம் நண்பர் அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தியின் பதிவு . தமிழக அரசின் காப்பில் உள்ள இடம் .
(4) சாணூர் பானைக் கீறல் .
செங்கற்பட்டருகே உள்ள பெருங்கற்கால வாழிடம் . மத்திய அரசு அகழ்வாய்வைத் தொடரவில்லை .
ஆயவர் ( ஆயர் )
தெளிவான சிந்து வடிவங்கள் . பெருங்கற் காலத்திலும் சிந்து எழுத்துத் தொடர்ந்துள்ளது . இவ்விடம் முழுமையாக அகழப்பட்டால் 1500 ஆண்டு தமிழக வரலாறு வெளிச்சம் பெறும் .
(5) பெருமுக்கல் பாறைக் கீறல் .
மரக்காணம் அருகே சிறு குன்றின் மீதுள்ளது . சுற்றிலும் அரசன் யானை மீது வருவது , அவன் வருவதால் மழை பொழிந்து நாடு செழிக்கிறது என்னும் கருத்துரு ஓவியமாகக் கீறப்பட்டுள்ளது .
அ ர ச ர்
என்ற ஒற்றைச் சொல் உள்ளது . முதல் எழுத்து அ சிந்து எழுத்து வடிவமாகவும் பிற சிந்து தமிழிக்குப் பொதுவாகவும் உள்ளது . இந்த எழுத்துக்குப் பிறகே தமிழ்நாட்டில் சிந்து எழுத்து மாறுகிறது .
(6) யாழ்ப்பாணம் முத்திரை
தமிழகத்துடனான இன மொழி பண்பாட்டுத் தொடர்பால் இங்கு இணை க்கப்படுகிறது. குயவன் தொழிலக முத்திரை . மேல் வரிசை சிந்து எழுத்து கீழே முழுமையடைந்த தமிழி எழுந்துள்ளது. Dr . இந்திரபாலா அகழந்தது .
மயன ( சிந்து)
கோவேத்து ( தமிழி)
தமிழி முழுமையாகி உ எ ஒ உயிர்மெய்யாக்கம் பெறுகிறது.
(7) பொருத்தல் பானைக்கீறல்
பழனியருகே வயிரம் என்பானது பெருங்கற்கால புதைகுழியில் கிடைத்தது .
வயிர ( வயர் - வைரம் )
இந்திய மொழிகளிலேயே தொன்மையான எழுத்து . கி மு 490 .
இவற்றுடன் குஜராத் மாநில பேட் துவாரகை கடலடியில் கிடைத்த வழிபாட்டுப் பாத்திர எழுத்து மேற்காணும் எழுத்துகளின் கால நிர்ணயத்துக்கு முக்கியம் . இதன் காலம் கி மு 1500 . இதன்படி வடிவ மாற்றமில்லா பொதிகை கீழ்வாலை பொறிப்புகள் சிந்து நாகரிக காலத்தை ஒட்டியவை என்றும் பிற யாவும் கி மு 1500 அளவுக்குப் பிற்பட்டவையாகும். பேட் துவாரகை எழுத்தில்
மண்ய்வரணணாவ்வோர்
மணிய் வரணன் ஆவோர்
என்பது மணிவண்ணனாகிய கிருஷ்ணரைக் குறித்தது . இம்முத்திரைகள் சிந்து வெளி நாகரிகக் காலம் முதல் சிந்து எழுத்துச் சாயல் உள்ள பொருத்தல் எழுத்துக் காலம் வரை தமிழகத்தில் தமிழை எழுத சிந்து எழுத்தே பயன்படுத்தப்பட்டது என்று இதனால் அறியலாம் .
சமஸ்கிருதம் பேச்சு வழக்கிலிருந்து எழுத்து முறைக்கு கி பி 151 ஆம் ஆண்டு சத்ரபகுல மன்னன் ருத்ரதாமன் வெட்டிய கிர்நார் கல்வெட்டின் காலத்திலேயே எழுத்து வடிவம் பெற்றது . சங்க காலத்தில் தமிழை எழுத எழுத்து முறை இருந்தது போல சமஸ்கிருதத்தை எழுத எழுத்து முறை இல்லை . இதனைச் சங்கத்தமிழ் மக்களும் அணிந்திருந்தனர் என்பதை சங்க இலக்கியம் கூறுகிறது. குறுந்தொகை ,156 . பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் பாடல் காட்டுகிறது .
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்து
படிவ வுண்டி பார்ப்பன மகனே
எழுதாக் கற்பின் நின்சொ லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும்
மருந்து முன்போ மயலோ இதுவே
என்பது பாடல் . இவர் பாண்டிய மன்னரின் வில் படைத் தலைவர். தலைவி பார்ப்பன மகனிடம் எழுதும் முறை இல்லாததால் எழுத்தில்லாமல் கற்பிக்கப்படும் உன் வேத மொழியில் ( சமஸ்கிருதம்) பிரிந்தோரைச் சேர்த்து வைக்க மருந்து ஏதேனும் சொல்லப்பட்டுள்ளதா ? எனறு கேட்கிறாள். எனவே இப்புலவர் காலத்திலும் சமஸ்கிருதத்திற்கு எழுத்துமுறை இல்லை , ஆனால் தமிழுக்கு இருந்தது என்று தெரிகிறது .எனவே இப் பாடல் கி பி 150 ஆண்டுக்கு முன்பு பாடப்பட்டிருக்க வேண்டும் . தமிழுக்குத் தொலபழங்காலத்தில் இருந்து எழுத்தும் இலக்கியமும் இருந்தது ஆகவே சமஸ்கிருத மொழியை விட தமிழே மிக்க நாகரிகமும் எழுத்து மொழியறிவு பெற்றதென்று அறியலாம். சமஸ்கிருதம் கி பி 2 ஆம் நூற்றாண்டில் எழுத்து பெற்று குப்தர்கள் காலத்தில்தான் இலக்கியம் உருவானது . அவர்கள் பலரது நூல்களையெல்லாம் மொழிபெயர்த்துத் தனதாக்கிக் கொண்டனர் . நூறு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு காட்டிய கோயில்களுக்கே பெருமை சேர்க்க புராண இதிகாசக் கற்பனைகளை அவிழ்த்துவிடும் பார்ப்பார்கள் தாங்கள் உரிமை கொண்டாடும் நூல்களுக்கு எவ்வளவு கற்பனையான கதைகளை அதற்குச் சேர்த்திருப்பார்கள் என்று சொல்லாமலே விளங்கும் .
சொல்லுங்கள் சமஸ்கிருதமா முந்தியது ?
12 மணி நேரம் · Facebook for Android ·

பானைக்கீறல், பானையோடு, பானை ஓடு, கீறல், பிராமி, சான்று ஆரியர் சிந்துசமவெளி எழுத்துரு புகைப்படம் ரிக் வேதம்

















கிறித்துவம் தழுவிய பார்ப்பனர் இருவர்

 

aathi tamil aathi1956@gmail.com

திங்., 29 ஜூலை, 2019, முற்பகல் 11:51
பெறுநர்: எனக்கு
அழகு மகிழ்நன்
கிறிஸ்தவ மதம் மாறிய பிராமணர்கள் இருக்கிறார்களா, செய்தி இருந்தால் பதிவிடுங்கள் ஆய்வாளரே.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
மேலும் · நேற்று அன்று பிற்பகல் 5:53 மணிக்கு

பாண்டியராசன் வழக்கறிஞர் சட்டத்தரணி
அழகு மகிழ்நன்
சினிமா நடிகர் ஏவிஎம் ராஜன் கிறித்தவ மத போதகராக மாறிய பார்ப்பனர் தான்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
மேலும் · நேற்று அன்று பிற்பகல் 5:55 மணிக்கு

நலங்கிள்ளி
அழகு மகிழ்நன் நிறைய இருக்கிறார்கள்
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
மேலும் · நேற்று அன்று பிற்பகல் 5:56 மணிக்கு


விசுவநாதன் கரிகாலன்
அழகு மகிழ்நன் , ஐயா,
W.H.Drew, என்ற பாதிரியார், தமிழ் நாட்டில் , நாகர்கோவிலில் பணி புரிந்த செய்தியை கூறும் பொழுது, ஒரு பார்ப்பனர் தொடர்ச்சியாக தேவாலயத்திற்கு வந்து சுறுசுறுப்பாக இயங்கியதை கண்டு அவருக்கு 'ஞானஸ்தானம்' செய்து, அவரது பெயரை 'தேவதாசன்' என்று மாற்றி, அந்த பகுதியில் பிரபலமான கிருத்துவ போதகராக மாறினார்". என்ற செய்தியை, The evangelical magazine and missionary church, என்ற புத்தகத்தில் உள்ளது.
கேரளாவில், கிருத்துவத்தில் பல பிரிவுகள் FC என்ற தொகுப்பில் உள்ளது.

மதமாற்றம் கிறித்துவர் கிறிஸ்துவர் 

இசுலாம் தழுவிய பார்ப்பனர் பட்டியல்

 

aathi tamil aathi1956@gmail.com

திங்., 29 ஜூலை, 2019, முற்பகல் 11:47
பெறுநர்: எனக்கு
காளிங்கன், பாண்டியராசன் வழக்கறிஞர் சட்டத்தரணி மற்றும் 4 பேருடன் இருக்கிறார்.
.
சென்ற ஆண்டின் மீள்பதிவு
பார்ப்பன அவுலியாக்கள்
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பார்ப்பன சாதியைச் சேர்ந்த சிலர் இஸ்லாமிய இறையடியார்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர்.அவர்களின் நினைவாகவும் தமிழகத்தில் சில இடங்களில் தர்ஹாக்கள் உள்ளன.
கி.பி . 15 ஆம் நூற்றாண்டில் மதுரையில் வாழ்ந்தவர் மீனாட்சி சுந்தரம் அய்யர். இசையிலும், தமிழிலும் புலமை பெற்றவர். இஸ்லாம் சமயத்தைத் தழுவி மீனா நூர்தீன் என்ற பெயர் பெற்றார். அவுலியா நிலைக்கு உயர்ந்த இவரது அடக்க ஸ்தலம் மதுரை தெற்கு வெளி வீதியில் மீனா நூர்தீன் வலி தர்ஹா என்ற பெயரில் உள்ளது. இவர் வழி வந்த பார்ப்பனர்கள் பலர் இந்த தர்ஹா விழாவில் இன்றளவும் பங்கேற்கின்றனர்.
பாபாசேக் அலாவுதீன் என்பவருக்கும், தஸ்தகீர் என்ற அவரது சீடருக்கும், பார்ப்பன சாதியிலிருந்து இஸ்லாத்தை ஏற்று ஹபீஸ் அம்மா என்று பெயர் சூட்டியவருக்கும் சேர்த்து நாகபட்டினத்திற்கும் வேளாங்கண்ணிக்கும் செல்லும் வழியில் ஒரு தர்ஹா உள்ளது. இதற்கு பாப்பா கோயில் தர்ஹா என்று பெயர். இந்துக்களும் இஸ்லாமியர்களும் இங்கு திரளாக வருவது இன்றளவிலுமான நடைமுறை.
தர்மபுரிக்கும் சேலத்திற்கும் இடையில் தொப்பூர் என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் உள்ள தர்ஹாவிற்கு ஹாவாலிக் தர்ஹா எனப் பெயர். இந்த தர்ஹாவில் பார்ப்பன பெண் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இஸ்லாத்தை அந்தப் பெண் தழுவினாலும் புலால் உண்ணும் பழக்கம் அற்றவராக இருந்ததால் இந்த தர்ஹாவில் இன்றும் புலால் உணவுப்பொருட்கள் படைப்பதில்லை. இங்கு நேர்த்திக்கடன் செய்ய வருவோரும் அசைவ உணவை விலக்கி விரதமிருந்தே வருகின்றனர். இந்துக்களுக்கு முதலில் உணவு பரிமாறிய பிறகே இஸ்லாமியர்களுக்
கு இங்கு உணவு பரிமாறப்படுகிறத
ு.
தஞ்சை நகரின் கிழக்குப்பகுதியில் பழைய மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தர்ஹாவிற்கு பாப்பாத்தியம்மன் தர்ஹா என்று பெயர். இங்கு இஸ்லாமிய சமயத்தை தழுவிய பார்ப்பனியப் பெண் ஒருவரும், அவருக்கு இஸ்லாத்தை சொல்லிக் கொடுத்த அவுலியா ஒருவரும் அடுத்தடுத்து அடக்கம் செய்யப்பட்டுள்ள
னர். இங்கும் இந்துக்கள் சந்தனக்கூடு விழாவில் திரளாகப் பங்கேற்கின்றனர்.
இந்தப் பதிவுகளின் நோக்கம் யாதெனில் தமிழகத்தில் மதவெறியர்கள் எவ்வளவுதான் முட்டி மோதினாலும் பெரிய அளவிற்கு எடுபடாததன் காரணம் மக்களின் வாழ்வியலில் இத்தகைய பண்பாட்டுக் கூறுகள் மெல்லியதாய் கலந்துள்ளது.
பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட முறை என்றாலும் அதற்குள்ளும் மனிதாபிமான நரம்பு மண்டலங்கள் பின்னிப் பிணைந்துள்ளது.
தர்ஹா வழிபாட்டை ஊக்குவிக்கும் பதிவுகள் அல்ல. மதநல்லிணக்கத்தை உணர்த்தும் பதிவுகளே.
நன்றி: பதிவர் MAP

மதமாற்றம் இசுலாமியர் தர்கா 

பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம் வரைபடம்



தமிழகம்

தமிழகம் பண்டுதொட்டே சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என்னும் முப்பிரிவுகளாக இருந்துவந்தது. இம் மூன்று நாடுகளையும் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூன்று மரபரசர் நெடுங்காலமாக ஆண்டு வந்தனர். இவர் அனைவரையும் ‘தமிழை வளர்த்தவர்’, எனக் கூறுதல் பொருந்து மாயினும், பெரிய சங்கங்களை வைத்துத் தமிழைப் போற்றி நூல்களைப் பெருக்கி வளர்த்த பெருமை பாண்டியர்க்கே உரியதாயிற்று. பாண்டியர் நடத்திய சங்கங்களில் இறுதியாயது ‘கடைச் சங்கம்’ எனப்பட்டது. அது கி.மு. நான்காம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை நடந்ததாகும் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. அச்சங்கத்தில் தோன்றியனவாகக் கருதப்படும் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு முதலிய நூல்களை நன்கு ஆராயின், அக் காலத் தமிழகம்-பல்லவர் ஆட்சிதோன்றிய கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதமிழகம் இன்னவாறு இருந்தது என்பதை ஒருவாறு அறியலாம்.

பாண்டிய நாடு

பாண்டிய நாடு என்பது மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலிக் கோட்டங்களும், கீழ்க்கோடிக் கரையும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இதன் கோநகரம் மதுரை, காயல், கொற்கை என்பன இதன் துறைமுகங்கள். கொற்கை முத்து எடுப்பதற்குப் பெயர் பெற்றது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் சந்திரகுப்தன் அமைச்சனாக இருந்த சாணக்கியன் தனது பொருள் நூலில் கொற்கையைக் குறிப்பிட்டுள்ளான். கடைச் சங்க காலப் பாண்டியருள் சிறந்தவர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், சிலப்பதிகாரத்து ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவரே ஆவர்.

பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம் (கி.மு. 60 - கி.பி.200)



சோழ நாடு

சோழ நாடு என்பது தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளிக் கோட்டங்களும், கீழ்க் கடற்கரை வெளியும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இந்த நாட்டைச் சோழர் என்பவர் நெடுங்காலமாக ஆண்டு வந்தார். இவர் தலைநகரம் உறையூர், காவிரிப்பூம்பட்டினம் என்பன. கி.மு. முதல் இரண்டு நூற்றாண்டுகளிலும் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளிலும் காவிரிப் பூம்பட்டினம் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது என்பதற்குச் சான்றுகள் பல உண்டு. இந் நாட்டிலிருந்து பலவகைப் பொருள்கள் அயல் நாடுகட்கு அனுப்பப்பட்டன. கரிகாற் சோழன் காலத்தில் இத் துறைமுகம் உயர்ந்த நிலையில் இருந்தது. அயல்நாட்டு வாணிபர் புகார் நகரிற் குடியேறி இருந்தனர். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங்கள் இயற்றப்பட்ட கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இப் பெருநகரம் சிறந்த வாணிபத்தலமாக விளக்கம் பெற்று இருந்தது. கடைச்சங்ககாலச் சோழ மன்னருள் பீடுமிக்கவன் கரிகாலனே ஆவன். சோழவனநாடு உணவு வகையிற் சிறப்புற்று இருந்தமையின், சோழ வளநாடு சோறுடைத்து, என்று புகழப்பட்டது.

சேர நாடு

சேர நாடு என்பது கொச்சி, திருவாங்கூர் நாடுகளும் மேல் கடற்கரை வெளியும் மலையாளக் கோட்டங்களும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இதன் தலைநகரம் வஞ்சிமாநகரம் என்பது முசிறி. தொண்டி என்பன சிறந்த துறைமுகப் பட்டினங்கள். இந்நாட்டிலிருந்து மிளகு, யானைமருப்பு, தேக்கு, அகில், சந்தனம் முதலிய மரங்கள் வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த நாட்டை ‘வானவர்’ எனப்பட்ட சேரர் நெடுங்காலமாக ஆண்டு வந்தனர். அவருட் சிறந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பவன். அவன் மகனான செங்குட்டுவனே கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் பெயர் பெற்றபேரரசனாகத் தமிழகத்தில் இருந்தவன்.

தொண்டை மண்டலம்

ஆதொண்ட சக்கரவர்த்தி: இனி, நம் பல்லவர் தொடர்பான தொண்டை நாட்டைப் பற்றிய செய்திகளைக் காண்போம். “நெடுங்காலத்திற்கு முன்தொண்டைநாடு ‘குறும்பர் நிலம்’, என்று பெயர் பெற்றிருந்தது. குறும்பர் தம் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு அங்குக் காலம் கழித்தனர்; அவர்களே தங்கள் நாட்டை 24 கோட்டங்களாக வகுத்தனர்; காவிரிப் பூம்பட்டினத்து வணிகருடன் கடல் வாணிபம் நடத்தினர். பிற்காலத்தில் ஆதொண்ட சக்கரவர்த்தி என்பவன் இக் குறும்பரை வென்று குறும்பர் நாட்டைக் கவர்ந்து, அதற்குத் தொண்டை மண்டலம் எனப் பெயரிட்டனன்”, என்று செவிவழிச் செய்தி கூறுகின்றது.[1]

கரிகாலன்: ஆனால், தமிழ்நூல்கள், கரிகாற்சோழன் அந்நாட்டைக் கைப்பற்றினான் என்றும், பின்னர்த் தொண்டைக்கொடியால் சுற்றப்பட்டுக் கடல் வழி வந்த நாகர் மகள் மகனான இளந்திரையன் ஆண்டதால் ‘தொண்டை மண்டலம்,’ எனப் பெயர்பெற்றது என்றும் கூறுகின்றன. இரண்டாம் குலோத்துங்கச் சோழனிடம் உயர் அலுவலாளராக இருந்த தொண்டைமண்டல அறிஞரான சேக்கிழார் பெருமான், வல்லார்வாய்க் கேட்டணர்ந்த செய்தி ஒன்றைக் கூறியுள்ளார். அஃதாவது: ‘கரிகாலன் இமயம் செல்லும் பொழுது வேடன் ஒருவன் எதிர்ப்பட்டுக்காஞ்சிநகரத்தின் வளமையைக் கூற, அப் பேரரசன் அந்நகரத்தைத் தனதாக்கிக் குன்றுபோன்ற மதிலை எழுப்பிப் பலரைக்குடியிருத்தினன்,’ என்பது[2] முதற்குலோத்துங்கன் காலத்து நூலாகிய சமயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணியும் ஏறக்குறைய இங்ஙனமே கூறுகின்றது. இங்ஙனம் வரும்செய்திகளில் ஒரளவு உண்மையேனும் இருத்தல் வேண்டும் அன்றோ? சோழ மன்னருள் கரிகாலன் ஒருவனே ஈடும் எடுப்பும் அற்ற பெருவீரனாக இருந்தான் என்பது இலக்கியமும் பட்டயங்களும் கண்ட உண்மை, பிற்காலத்தெலுங்க நாட்டுச்சோழரும் தம்மைக் ‘கரிகாலன் மரபினர்’, என்று கூறிக்கொண்டனர்[3] என்பதிலிருந்து, கரிகாலன் ஆட்சி ஆந்திரநாடுவரை பரவி இருந்தது தெளிவன்றோ? அந்தச் சோழ மரபினர் ‘எங்கள் முன்னவனான கரிகாலன், தான் வென்ற அரசரைக்கொண்டு காவிரிக்குக் கரை இடுவித்தவன்,'[4] என்று பட்டயத்திற் கூறி மகிழ்வராயின், கரிகாலன் போர் வன்மையை என்னென்பது கரிகாலன் இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், வழியில் இருந்த அரசரிடம் பரிசு பெற்று மீண்டவன்,’ என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது.

எனவே, இதுகாறும் கூறிய செய்திகளால், கரிகாற் சோழன் காலத்திற்குள் தொண்டைமண்டலம் சோழர்ஆட்சிக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும் என்று கொள்ளுத்ல் தவறாகாது. கரிகாலன் காலம் முதல் பல்லவர் கைப்பற்றும் வரை தொண்டைமண்டலம் சோழர் ஆட்சியிற்றான் இருந்த தென்பதை இதுகாறும் எந்த ஆராய்ச்சியாளரும் மறுத்திலர். ஆதலின், கரிகாலன் காலத்தைக் கண்டறிவோமாயின், அக்காலமுதல் எத்துணை நூற்றாண்டுகள் தொண்டை மண்டலம் சோழர் ஆட்சியில் இருந்தது, என்னென்ன நலன்களைப் பெற்றது என்பன அறிய இடமுண்டாகும்.

வடநாடு சென்ற தமிழர் பலராவர். அவருள் ஒருவன் கரிகாலன்; ஒருவன் செங்குட்டுவன். இவ்விருவர் காலங்களும் கடைச் சங்கத்தையும், தொண்டைமண்டலத்தையும் பொதுவாககத் தமிழக நிலையையும் பல்லவர்க்கு முற்பட்ட இந்திய நாட்டு வரலாற்று நிலையையும் அறியப் பேருதவி புரிவன ஆதலின், முதற்கண் செங்குட்டுவன் காலத்தைக் கண்டறிய முயல்வோம்.

செங்குட்டுவன்காலம்

கரிகாலன் காலத்தை ஆராயப் புகுந்த திரு. ஆராவமுதன் என்பார் தமது நூலில், “தமிழ் வேந்தர் வடநாடு நோக்கிப் படையெடுத்த காலம் (1) அசோகனுக்குப் பிறபட்ட மோரியர் (கி.மு.232 - கி.மு. 184) காலமாகவோ, (2) புஷ்யமித்ர சுங்காவுக்குப் பிற்பட்ட (கி.மு. 148 - கி.மு. 27) காலமாகவோ, (3) ஆந்திரர் ஆட்சி குன்றிய கி.பி. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கமாகவோ இருத்தல் வேண்டும்” என முடிவு கூறினார்.

இவர் கூறிய மூன்று காலங்களில் முதல் இரண்டு காலங்களும் பொருத்தமானவையே ஆகும். ஆயின், மூன்றாம் காலம் கி.பி. 163-300[5] வரை அஃதாவது, குப்தர் பேரரசு ஏற்படும் வரை எனக் கொள்ளலே முறை. என்ன? கி.பி. 163இல் இறந்த (கவுதமிபுத்திர சதகர்ணியின் மகனான) புலுமாயிகுப் பின்வந்த ஆந்திர அரசர் வலியற்றவர்[6] எனப்படுதலின் என்க. எனவே,தமிழரசர் வடஇந்தியாமீது படையெடுக்க வசதியாக இருந்த மூன்று காலங்களாவன:- (1)கி.மு. 232-கி.மு.184, (2) கி.மு.148-கி.மு.27. (3) கி.பி.163-300. இனி இவற்றுள் செங்குட்டுவன் காலம் யாதென ஆராய்வோம்.

செங்குட்டுவன் பத்தினிக்கு விழா எடுத்தபோது வந்திருந்த அரசருள் ‘கடல்சூழ் இலங்கைக் கயவாகு ஒருவன்’ எனச்சிலப்பதிகாரம் செப்புகிறது. இலங்கையில் இருந்த பத்தினிச் சிலை ஒன்று இப்போது பிரிட்டிஷ் காட்சிச் சாலையில் இருப்பதைக் கொண்டும், சிலப்பதிகாரக் கூற்றைக் கொண்டும் - கயவாகு இலங்கையில் பத்தினிக்கொரு கோயில் எடுப்பித்திருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது. இக்கயவாகுவின் காலம் கி.பி.171-193 என இலங்கைப் பட்டயம் இயம்புகின்றது.[7] (இரண்டாம் கயவாகுவின் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு என்பதை ஈண்டு நினைவு கொள்ளல் நலமாகும்). இதுவே செங்குட்டுவன் வாழ்ந்த காலமாகும். இக்காலம் மேற்கூறிய மூன்று காலங்களில் இறுதிக் காலத்துடன் ஒன்றுபடுகிறது. இக்காலத்தே, கி.பி.166-196 வரை தமிழகத்துக்கு வடக்கே கங்கையாறு வரை சிறப்புற்றிருந்த ஆந்திர சதகர்ணி அரசன் யக்ஞஸ்ரீ[8] என்பவன். இச் ‘சதகர்ணி’ என்பதன் மொழிபெயர்ப்பே ‘நூற்றுவர் கன்னர்’ எனச் சிலப்பதிகாரம் செப்புகிறது. இந்நூற்றுவர் கன்னர் செங்குட்டுவனுக்கு நண்பர்; கங்கையாற்றைக்கடக்க உதவியவர். கயவாகுவின் காலமும் யக்ளுழநீயின் காலமும் ஒன்றுபடுதலால் இவ்விருவரும் செங்குட்டுவன் காலத்தவர் என்பதும் நூற்றுவர் கன்னர் என்று சிலப்பதிகாரம் குறித்தது யக்ஞரு சதகர்ணியையே (அவன் ஆணைபெற்ற உயர்அலுவலாளரையே) என்பதும் நன்குபுலனாகும். இக்கருத்தையே அறிஞர் பலர் உறுதிப்படுத்துகின்றனர்.[9]கயவாகுவின் காலம் - கி.பி. 171-193யக்ஸ்ரீயின் காலம் கி.பி. 166-196

எனவே, கி.பி. 166-193க்கு உட்பட்ட காலத்தேதான் செங்குட்டுவன் வடநாடு சென்று மீண்டிருத்தல் வேண்டும். இக்காலம் முற்கூறிய படையெடுப்புக்கு உகந்த மூன்றாம் காலத்தோடு (கி.பி.163-300) ஒத்துவருதலும் காண்க.

கரிகாலன் காலம்

வடநாட்டுப் படையெடுப்புக்குரிய மூன்று காலங்களில் ஈற்றுக்காலத்தைச் செங்குட்டுவதற்கு உரிமை ஆக்கினமையின், பிற இரண்டு காலங்களில் ஒன்றே கரிகாலனுடையதாகும். கரிகாலன் இலங்கைத் தீவை வென்று ஆயிரக்கணக்கான அடிமைகளைக் கொணர்ந்தான் என்பது கவனித்தற்குரியது. இலங்கை வரலாறு கூறும் மகாவம்சம் “(1) கி.மு. 170 கி.மு.100 வரை இலங்கையைத்தமிழரசர் ஆண்டனர்; (2) கி.மு. 44-கி.மு.17க்கு இடைப்பட்ட காலத்தில் 15 ஆண்டுகள் தமிழர் இலங்கையை ஆண்டனர்; (3) கி.பி. 660-1065க்கு உட்பட்ட இடைக்காலத்தில் தமிழர் இலங்கைமீது படைஎடுத்தனர்.” என்று கூறுகின்றது. இவற்றுள் முதல் இரண்டு காலங்களில் ஒன்று கரிகாலன் தொடர்பு பெற்றதாகல் வேண்டும். இவ்விரண்டும் வடநாட்டுப்படையெடுப்புக்கு ஏற்ற காலங்களோடு பொருந்துகின்றனவா என்பதைக் காண்போம்.

(1) வடநாட்டுப் படையெடுப்புக்கேற்ற முதற்காலம் கி.மு.232 - கி.மு. 184.

இலங்கையைத் தமிழர் ஆண்ட முதற்காலம் கி.மு. 170-கி.மு.10[10]

(2) வடநாட்டுப் படையெடுப்புக்கேற்ற இரண்டாம் காலம் கி.மு.148-கி.மு.27

இலங்கையைத் தமிழர் ஆண்ட காலம் கி.மு.44 கி.மு.17க்கு உட்பட்ட 15 ஆண்டுகள்.

இவற்றுள் முன்னதைவிட இரண்டாம் காலமே மிகவும் பொருந்துவதாகும். இக்காலமே கரிகாலன் காலம் என்பதை இலக்கியம் கொண்டும் நிறுவலாம். இக்காலத்தில் கடல் வாணிபம் உயர்நிலையில் இருந்தது. கி.மு.39 முதல் கி.மு.14 வரை ரோமப் பேரரசனாக இருந்த அகஸ்டஸ் என்பானிடம் பாண்டிய மன்னன் தூதுக் குழு ஒன்றை அனுப்பினான் என்பதும் நோக்கத்தக்கது. கரிகாலன் காலத்தில் புகார் சிறந்த துறைமுகப்பட்டினம் என்பதைப் பட்டினப்பாலையால் உணரலாம். இச்சிறப்புடைக் கடல் வாணிபம் கி.பி.215 வரை, அஃதாவது அலெக்சாண்ட்ரியப் படுகொலை வரை சிறப்புற நடந்து வந்தது.[11]

புதிய சான்று

சோழ மன்னருள் இமயம்வரை சென்று மீண்டவன் கரிகாலன் ஒருவனே என்பது வெளிப்படை அவன் சென்று மீண்டது உண்மையே என்பதற்குப் புதியசான்று ஒன்று கிடைத்துள்ளது. “சிக்கிம் நாட்டுக்குக் கிழக்கே அதற்கும் திபேத்துக்கும் உள்ள எல்லையே வரையறுத்து நிற்கும் மலைத் தொடர்புக்குச் சோழ(ர்) மலைத்தொடர் (Sola Range) என்றும், அதனை அடுத்துள்ள பெருங் கணவாய்க்குச் சோழ(ர்) கணவாய் (Sola Pass) என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. ‘சோல’ (ழ) என்பதுசிக்கிம்,திபெத் மொழிகளில் உள்ள சொற்களுக்குப் பொருந்தவில்லை”[12] என இராவ்சாகிப் மு. இராசுவையங்கார் அவர்கள் புதிதாகக் கண்டறிந்து வெளியிட்டுள்ள செய்திக்குத் தமிழகம் நன்றிபாராட்டக் கடமைப்பட்டுள்ளது.

இதுகாறும் கூறியவற்றால், கரிகாற் சோழன் வடநாடு சென்று. சிலப்பதிகாரம் கூறுவதுபோல,


“பகைவிலக்கியதிப் பயங்கெழு மலையென
இமையவர் உறையும் சிமயப் பீடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையிற்”

பெயர்ந்தமை உண்மை என்பதும், அக்காலம் கி.மு. முதல் நூற்றாண்டின் இடைப்பட்ட காலமே ஆதல் வேண்டும் என்பதும் நன்கு விளங்கும் செய்திகளாம்.

வடநாட்டு நிலைமை

கரிகாலன் ஆட்சிக் காலம் எனக்கொண்ட கி.மு.60 கி.மு.20க்கு உட்பட்ட காலத்தில் மகதப் பேரரசு சுங்கர் கையினின்றும் கண்வ மரபினர் கைக்குமாறிவிட்டது. கி.பி.73இல் ‘வாசுதேவ கண்வா’, மகத நாட்டு அரசன் ஆனான். அவனுக்குப் பின் மூவர் கி.மு.28 வரை ஆண்டனர். அவருக்குப் பிறகு மகதநாடு ஆந்திரா வசப்பட்டது. எனவே கரிகாலன் படையெடுத்த காலத்தில் கண்வ மரபினரே மகத நாட்டை ஆண்டவராவர். அவர்கள் வலியற்ற அரசர்களே[13] அவர்கள் காலத்தில் கெளசாம்பியைக் கோ நகரமாகக் கொண்ட வச்சிர நாடும், உச்சையினியைத் தலைநகராகக் கொண்ட அவந்தி நாடும் தம்மாட்சி பெற்றிருத்தல் வேண்டும். இல்லையேல், கரிகாலன் இமயம் சென்று மீண்டபோது மகதநாட்டரசன் பட்டி மண்டபமும், வச்சிரநாட்டு வேந்தன் கொற்றப் பந்தரும், அவந்தி வேந்தன் தோரண வாயிலும் கொடுத்தனர் எனச்சிலப்பதிகாரம் செப்புவதில் பொருள் இராதன்றோ? இந்நாட்டரசர் சந்திரகுப்த மெளரியன் காலத்திலிருந்து சிற்றரசராகவும் அடிமைப்பட்டும் ஹர்ஷனுக்குப் பின்னும் இருந்து வந்தனர் என்பதற்கு வரலாறே சான்றாகும்.[14]

கோச்செங்கட் சோழன்

இதுகாறும் கூறிவந்த சான்றுகளால் (1) கரிகாற் சோழன் காலம் ஏறக்குறைய கி.மு.60 கி.மு.20 எனவும், (2) செங்குட்டுவன் வடநாடு சென்ற காலம் ஏறக்குறைய கி.பி. 166-193 எனவும் கூறலாம். செங்குட்டுவன் 50 ஆண்டுகள் அரசாண்டவன் எனச்சிலப்பதிகாரம் கூறலால், அவன் காலம் ஏறத்தாழக் கி.பி. 150-200 எனக் கோடலே பொருத்தமுடையதாகும். இச் சேரன் செங்குட்டுவனால் முறியடிக்கப்பட்ட சோழன் ஒன்பதின்மருள் ஒருவனான சுபதேவன் சிதம்பரத்தில் தலைமறைவாக வாழ்த்து வந்தான். அவனுக்குச் சிவபிரான் அருளாற் பிறந்தவனே சிறந்த சிவபக்தனான கோச்செங்கட் சோழன் என்பவன்.[15] இவன் சோணாட்டைப் பேரரசனாக இருந்து ஆண்டான் சேரனைப் புறங்காட்டச் செய்து கனவழி பாடப் பெற்றான். எனவே, இவன் காலம் ஏறக்குறைய கி.பி. 200-225 எனக் கூறலாம். இவனைப் பாடிய பொய்கையாரே முதல் ஆழ்வார் மூவருள் ஒருவராகிய பொய்கை ஆழ்வார்.[16] இக்கோச் செங்கட்சோழன் மணிமேகலையில் கூறப்பட்ட பெருங்கிள்ளிக்குப் பின் சோழ மன்னனாக இருந்திருத்தல் வேண்டும். இவன் சிவபிரான் அருளால் தோன்றியவன் ஆதலின், தான் பிறந்த சிதம்பரத்தைச் சிறந்த சிவப்பதியாக்கினான்; தில்லைவாழ் அந்தணரைக் கொண்டு முடிசூட்டிக் கொண்டான். அன்று முதல் சோழர்க்கு முடிசூட்டும் பொறுப்புத் தில்லைவாழ் அந்தணரிடம் விடப்பட்டது. இவன் பொய்கை ஆழ்வாரால் பாடப்பட்டமையின், சைவ-வைணவ சமயங்களில் பொது நோக்குடையவனாக இருந்தான் என்பதும், கி.பி.8ஆம் நூற்றாண்டில் திருமங்கை ஆழ்வார் இவனைப் பாடி 70 கோயில்களைக் கட்டியவன்[17] எனப் பாராட்டலால், இவன்திருமால் கோயில்களையும் கட்டியவன் என்பதும் நன்குஉணரலாம். கி.பி. 7ஆம் நூற்றாண்டிலேயே இவனைப் பற்றிய புராணக் கதைகள் பலவாறு கிளம்பின என்பதிலிருந்து இவன் அப்பர் - சம்பந்தர் காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டவன் என்பது நன்கு விளங்குமன்றோ?[18] சுருங்கக் கூறின், நாயன்மார் காலச் சைவ சமய வளர்ச்சிக்கு அடிப்படை இட்ட சிறந்த சைவன் இப்பேரரசன் என்றே கூறுதல் வேண்டும். கோச்செங்கட் சோழற்குப் பிறகும் களப்பிரர் புகுவுக்கு முன்பும் (கி.பி.225-250) சோணாட்டை ஆண்ட பேரரசர் புகழ்ச்சோழ நாயனார் என்பவராதல் வேண்டும். என்னை? இவர் பேரரசர்; பல நாடுகளை வென்றவர் எனச் சேக்கிழார் கூறலாலும், சோணாடு களப்பிரர் கைக்குப் போன கி.பி.3ஆம் நூற்றாண்டின் இடைக்கால முதல் விசயாலயச் சோழன் தோன்றிய கி.பி. 580 வரை சோழர் சிற்றரசராக இருந்தனர் என்பது வரலாறு கூறும் உண்மை ஆதலாலும் என்க.[19]

இனிக் கரிகாலன் காலம் முதல் புகழ்ச்சோழர் காலம் வரை (கி.மு.60-கி.மு.250) சோணாட்டின் வடபகுதியாக இருந்த தொண்டை மண்டலம் எங்ஙனம் இருந்தது என்பதை நூல்களைக் கொண்டு காண்போம்.

காஞ்சியின் பழைமை

வடமொழிப் புராணங்களின் கூற்றுப்படி காஞ்சிமா நகரம் இந்தியாவில் உள்ள புண்ணியப் பதிகள் ஏழனுள் ஒன்றாகும். இயூன்-சங் கூற்றுப்படி, புத்தர் கி.மு.5ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வந்துசமய உண்மைகளை உரைத்தார்; அசோகன் பல தூபிகளை நாட்டிப் பெளத்த சமயக் கொள்கைகளைப் பரவச் செய்தான். நாலந்தாப் பல்கலைக் கழகத்தில் சிறந்த பேராசிரியராக இருந்த தர்மபாலர் காஞ்சிபுரத்தினர் என்று கூறப்பட்டுள்ளனர். அசோகன் கட்டிய தூபிகளில் ஒன்று இயூன்-சுங் காலத்தில் 100 அடி உயரத்தில் காஞ்சியில் இருந்ததாகத்தெரிகிறது. [20]

கி.மு. 150 இல் இருந்த பதஞ்சலி தமது மாபாடியத்தில் காஞ்சிபுரத்தைக் குறிப்பிட்டுள்ளார். எனவே கி.மு.2ஆம் நூற்றாண்டிலேயே காஞ்சிமாநகர் சிறந்த கலைப்பீடமாக இருந்ததெனலாம். [21]

கி.மு. முதல் நூற்றாண்டில் சோணாட்டை ஆண்ட கரிகாலன் காலத்தில் சோழ நாட்டிற்கு வடக்கே தொண்டை மண்டலம் காவல் இடமாக இருந்தது. காஞ்சியைக்கரிகாலன் அழகு செய்தான்; மதில்கள் எழுப்பினான். வடவேங்கடம் வரை நாட்டை விரிவாக்கினான்: வேளாண் குடிகளைக் கொணர்ந்து நாட்டைச் செழிப்பாக்கினான். அவன் காலத்துத் தொண்டைமான் இளந்திரையன் சோழர் சார்பாக நின்று தொண்டை நாட்டை ஆண்டு வந்தான். அவன் காலத்தில் தொண்டைநாடு வளமுற்று இருந்தது.”[22]

மாமல்லபுரம்

இது சிறந்த கடற்கரைப் பட்டினமாக விளக்கமுற்று இருந்தது. வடக்கேயிருந்து குதிரைகளைக் கொண்டு வந்த நாவாய்கள் சூழந்திருந்தன. பரதர் மலிந்த தெருக்களும் காவலர் காத்த பண்டசாலைகளும் இருந்தன. அங்கிருந்த மாடங்களில் பெண்கள் பந்தை அடித்து விளையாடி மணற் பரப்பில் கறங்காடினார்கள். கடற்கரையில் வானளாவிய மாடங்களில் வைத்தவிளக்குகள் கடலிற் சென்ற நாவாய்களில் இருந்தவர்க்குத் துறையை அறிவித்தன.[23] தொண்டைமான் காலத்தில், ஏன்? சங்ககாலத்திலேயே காஞ்சிபுரம் கச்சி என்ற பெயர் பெற்று இருந்தது. அந்நகரம் சிறந்த உலக நகரங்களுள் ஒன்று தேரோடும் தெருக்களையும் பழங்குடிகளையும் மதிலையும் உடையது. இளந்திரையன் பாண்டவரைப் போலப் பகைவரை வென்றவன்: தொண்டையர்குடியிற் பிறந்தவன்: பகைவர் அரண்களை அழித்தவன்: யானைகள் கொணர்ந்த விறகால் வேள்வி செய்தமுனிவர்கள் வாழ்ந்த மலைகட்கு உரியவன்; நான்கு குதிரைகள் பூட்டியதேரை உடையவன்.[24]

ஆனால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலும் கடைப் பகுதியிலும் அஃதாவது, சிலப்பதிகார மணிமேகலைக் காலத்தில் காஞ்சிபுரம் இளங்கிள்ளி என்பவன் ஆட்சியில் இருந்ததாகத்தெரிகிறது. அவன் புத்தர் கோயில் ஒன்றைக் கட்டியிருந்தான். அங்குச் சென்ற மணிமேகலை புத்த பீடிகையை அமைத்தாள்: தீவதிலகையையும் மணிமேகலா தெயவத்தையும் வழிபடக்கோட்டங்கள் அமைத்தாள்; பின்னர் அறவண அடிகளிடம் தவத்திறம் பூண்டு தருமம் கேட்டாள்; ‘பவத்திறம் அறுக, என்று அங்குத்தானே தவம் கிடந்தாள்.[25]

வலியற்ற வட எல்லை

இளங்கிள்ளிகாலத்தில் தொண்டைநாடு நெல்லூர்க் கோட்டத்தில் உள்ள பாவித்திரி (ரெட்டிபாளையம்) வரை பரவியிருந்தது. அங்குக கிடைக்கும் பட்டயங்கள் அப்பகுதியைக் ‘கடல் கொண்ட காகந்திநாடு என்று கூறுகின்றன. நகரி மலைகளைச் சார்ந்த குறிஞ்சிப் பகுதி தொண்டை மண்டலத்தின் வட எல்லையாகும். அந்தப் பகுதியில், வடக்கே இருந்த சாதவாகனர் (ஆந்திரர்) க்கும் தொண்டை மண்டலத்தை ஆண்ட சோழர்க்கும் எப்பொழுதும் எல்லைப் பூசல்கள் நடந்து வந்தன. எனவே, இப் பகுதி வன்மை குன்றிய பகுதியாகும். அப்பகுதியில் இளங்கிள்ளி காலத்தில் சேரனும் பாண்டியனும் பெரும்படையோடு வந்து போரிட்டனர். காரியாறு (காலேரு தெலுங்கில்) என்னும் ஆற்றங்கரையில் இளங்கிள்ளி அவர்களை முறியடித்தான். இந்தப் பலம் குன்றிய வட எல்லையே சாதவாகனர் பேரரசில் தென்கிழக்கு மாகாணத் தலைவராக இருந்த பல்லவர் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றப் பேருதவி செய்ததாகும்.[26] இந்த இளங்கிள்ளியின் ஆட்சி ஏறக்குறையக் கி.பி. 200 வரை இருந்தது என்னலாம்.

மணிமேகலை என்னும் காவியத்திலிருந்து, பெருங்கிள்ளி காலத்தில் புகார் கடல் கொண்டதென்பதை அறியலாம். அங்கிருந்த அறவண அடிகள் முதலிய பெளத்தரும் சான்றோரும் பிறநாடு புக்கனர் என்பதால் சோழர் தலைநகரமும் உறையூருக்கு மாறியிருத்தல் வேண்டும் என்று கருத இடமுண்டு. இந்நிலையில் இளங்கிள்ளிக்குப்பின் தொண்டை நாட்டையாண்ட சோழ அரசியல் தலைவன் வன்மையற்றவனாக இருந்திருக்கலாம். மேலும், வடவர் படையெடுத்தபொழுது, தலைநகரை இழந்த வருத்த நிலையில் இருந்த சோழ வேந்தன் உடனே தக்க படைகளை உதவிக்கு அனுப்ப முடியாமல் இருந்திருக்கலாம்; அல்லது உறையூரிலிருந்து படைகள் அனுப்ப முடியாது தவித்திருக்கலாம். இன்ன பிற காரணங்களால் ஏறக்குறைய 300 ஆண்டுகள் (கி.மு.60-கி.பி.250) வரை சோழப் பேரரசுக்கு இருந்த தொண்டை மண்டலம், கி.பி. 3ஆம் நூற்றாண்டின் இடையில் பல்லவர் ஆட்சிக்கு மாறிவிட்டது. மணி மேகலையை நன்கு ஊன்றிப் படிப்பவர். கி.பி.2ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழர் வலிகுன்றத் தொடங்கிய உணரலாம்.


R.Gopalan’s Pallava of Kanchi, pp.26.27
திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், செ.85
K.A.N.Sastry’s Cholas Vol.pp.121, 122.
bid.p.44
Vide his ‘Sangam Agé’, pp.56,57
C.S. Srinivasacnhari “History of India’ P49
Archaeological Survey of Cylon, xiil 1896, pp.47,48.
W.A.Smith’s “Early Histoy of India’, p.22, 34th ed.
K.G. Sesha Iyer in the “Christian College Magazine’, Sep. Oct. 1917. Dr. S.K. Aiyankar’s “Manimekalai in its Historical Setting’ pp. 105,106
A short History ofceylon’ pp. 722-725 by Dr. W.Gelgerin “Buddhistic Studies’ edited by Dr. B.C.Law.
V.A. Smith’s “Early History of India,” p.471
கலைமகள் (1932) தொகுதி 1, பக். 62, 63
V.A. Smith’s “Early History of India,’ pp.215,216.
V.A. Smith’s Early History of India’, p.369
Dr. S.K.Alyangar’s Ancient India, pp.95-6
Dr. S.K. Aiyangar’s “Early History of Vaihaavism in S.India’ pp.72-75
திருவானைக்கா, திருஅம்பர், நன்னிலம், வைகல், காடக்கோயில் முதலியன இவனால் கட்டப்பட்டன.
R.Gapalan’s “Pallavas of Kanchi’, p.31.
C.V.N. Iyer’s “Origin and Development of Saivism in S.India,’ p.183
Beal Rec. II. p.230
D.Sircar’s “Seccessors of the Satavahanas,p. 140
உலகநாதபிள்ளை, ‘கரிகாற் சோழன், பக். 40
பெரும்பாணாற்றுப்படை, அடி 320-325
Ibid II. 410-500
Ibid II. 28-30
Dr. S.K. Aiyangar’s “Manimekali-in Historical Setting,’ pp.49-50பல்லவர் வரலாறு ஆசிரியர் டாக்டர். மா. இராசமாணிக்கனார்
புத்தகம் வடக்கெல்லை காஞ்சி கரிகாலன் செங்குட்டுவன்