வெள்ளி, 13 நவம்பர், 2020

திமுக கொன்ற கம்யூனிஸ்ட் லீலாவதி நிதி திரட்டி சிபிஎம் ஆதாயம் பார்த்தது

 

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 12 ஏப்., 2019, பிற்பகல் 3:47
பெறுநர்: எனக்கு
Bhagyalakshmii Dhananjeyan
மதுரை பாராளுமன்ற வாக்காளர்களாக உள்ள உறவுகளே,
உங்களின் கணிவான கவணத்திற்கு
தோழர்.லீலாவதியின் குடும்பத்தை காக்க தமிழக மக்கள் தந்த தொகை சுமார் அரை கோடி. அதில் ஒன்றரை லட்சம் மூன்று பெண்களின் திருமண வைப்பு நிதி எனவும் இரண்டு லட்சம் லீலாவதி கணவரது பெயரிலும் வங்கியில் போடப்பட்டது. சில மாதத்தில் சாட்சியை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் வருமானம் ஈட்டிய லீலாவதியின் கணவரை தங்களது அலுவலகத்தில் தங்க வைத்து கொண்டனர்.
வில்லாபுரத்தில் இருந்த இருநூறு ரூபாய் வாடகை வீட்டை விட்டு பெத்தானியாபுரம் மேட்டுத் தெருவில் ஆயிரத்தி ஐநாறு ரூபாய் வாடகை வீட்டுக்கு மாற்றுகின்றனர். குடும்பத் தலைவரற்ற அந்த மூன்று பெண் பிள்ளைகள் பெத்தானியாபுரத்
தில் செலவுகளுக்கு தவிக்க, அந்த வைப்பு நிதியை சேமிப்பு கணக்காக்கி அவரவர் கையில் கொடுத்துவிட்டு கைகழுவிய புண்ணியவாளர்கள் இவர்கள்.
வருமானம் ஏதுமற்ற ஒரு குடும்பமாக தகப்பனும் அருகில் இல்லாமல் இரண்டு படிக்கும் பிள்ளைகளும் மூத்த பிள்ளையும் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் பட்ட சிரமங்களை இவர்களில் எவர் குடும்பமும் அனுபவிக்க கூடாது. இவர்களது அரசியலுக்காக அந்த குடும்பத்தை சின்னாபின்னபடுத
்தியது சுயநலக் கூட்டம்.
வீடு கட்டித் தருவதாக சொல்லிய சிபிஎம் கட்சி வில்லாபுரத்தில் லீலாவதி குடும்ப நிதியில் கல்யாண மண்டபம் ஒன்று கட்டி சம்பாதிக்க, அருகிலுள்ள தெருவொன்றில் மூன்றாவது மகள் வாடகைக்கு குடியிருக்கிறார். இதுதான் இவர்கள் காப்பாற்றிய லட்சணம்.
அந்த தியாக குடும்பத்தை சிபிஎம் ஏமாற்றிய விபரங்களை வைத்து வேள்பாரியை விட அரிய நாவலே எழுதலாம்.
தியாகம் செய்து களப்போராளியாக இறந்தவரின் குடும்பத்தை காப்பாற்றாமல்
கொலையை செய்த குற்றவாளிகளுடன் அரசியல் கூட்டு வைத்து களத்திற்கு வர
தோழர்களுக்கு வெட்கமில்லை
மானமில்லை
மானத்திற்கும் ரோசத்திற்கு பெயர் போன எம் மக்களே சிந்தியுங்கள்
10 ஏப்ரல், பிற்பகல் 1:17 · பொது

கம்யூனிசம் பொதுவுடைமை கொலை பெண் cpm 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக