ஞாயிறு, 15 நவம்பர், 2020

ஹிந்தியா உளவுத்துறை ib வைகோ தொடர்பு ரா

 

aathi tamil aathi1956@gmail.com

வெள்., 12 ஜூலை, 2019, பிற்பகல் 3:40
பெறுநர்: எனக்கு
இந்திய உள்நாட்டு உளவு அமைப்பான IB தொடர்ந்து புலிகள் உள்ளிட்ட பல தேசிய இனங்களின் விடுதலை இயக்கங்களை பல பொய்களை சோடித்து அரசுக்கும், நீதிமன்றத்திற்கும் வழங்கி தடை செய்து வருகிறது. 

விடுதலை சிறுத்தைகளின் வெளிச்சம் தொலைக்காட்சி துவக்க விழாவில் பேசும் வைகோ இந்திய உளவு அமைப்பான ஐபியின் டைரக்டர்  ESL நரசிம்ஹன் எனக்கு நெருக்கமானவர் என்கிறார்.

நான் அவர் வீட்டுக்கு செல்வேன், அவர் எனது வீட்டில் விருந்துண்பார் என்கிறார்.

இந்த ESL நரசிம்ஹன் தற்போதைய இந்து தீவிரவாத அரசின் NSA தலைவர் அஜித் தோவலுக்கு பின்னர் ஐபியில் அப்பதவிக்கு வந்தவர்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் NSA தலைவர் MK நாராயணனின்  கைப்பட தேர்வு செய்யப்பட்டவர் இந்த ESL நரசிம்ஹன் என்கிற தெலுங்கு பிராமணர்.

ஈழ யுத்தத்திற்கு தயாரான காலத்தில், இலங்கைக்கு ரகசியமாக இந்திய உதவிகள் தயாரான காலத்தில் ஐபியின் டைரக்டராக இருந்தவர் ESL நரசிம்ஹன்.

கட்டுக்கடங்கா போராட்டம் வெடித்து விடாது, ஈழ யுத்தத்திற்கு முந்தைய தமிழகத்தை தயார்படுத்திய பெருமை ஐபியையே சாரும்.

தற்போதைய இந்து தீவிரவாத அரசின் NSA அஜித் தோவல், மிதவாத பிரமாண காங்கிரஸ் அரசின் NSA நாராயணன், இரண்டிலும் உயர் பதவியில் இருந்த நரசிம்ஹன் போன்றோர்..

அது காங்கிரஸோ, பாஜகவோ கட்சி மற்றும் ஆட்சி மாச்சரியம் இன்றி நெருக்கமாக இருந்து செயல்பட்டவர்கள்.

இவர்களின் முக்கோண காதல் கதைதான் இந்திய ஆளும் அரசியல் கட்சிகளுக்கு பின்னே இருந்து இயக்கும் பிராமண அதிகார வர்க்கத்தின் கதை.

ஈழத்தை வெற்றிகரமாக அழித்ததற்காக நாராயணன், நரசிம்ஹன் போன்றோர் பின்னர் கவர்னர் பதவி வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

வீடு வீடாக புகுந்து ஈழ ஆதரவு சுவரொட்டிகளை கூட பறித்து சென்ற, தமிழ் சினிமாவில் ஈழ ஆதரவு நிலைப்பாடு எடுக்கக் கூடிய அனைத்து நடிகர்களையும் வருமான வரித்துறை கொண்டு மிரட்டிய..

தமிழர் ஆதரவு பத்திரிக்கைகளை யெல்லாம்  சரிகட்டிய, ராஜீவ் கொலைக்கு பின்னர் ஒவ்வொரு ஐந்தாண்டும் இப்படியாக பொய்யையும், புனை சுருட்டையும் அரசுக்கும், நீதித்துறைக்கு வழங்கி..

புலிகளை தடை செய்து வரும் இந்திய உள்நாட்டு உளவுப்படையான ஜபிக்கு வைகோ எப்படி நெருக்கமானவராக இருக்க முடியும்?

தானே சுயதம்பட்டம் அடித்துக் கொள்வது போல எது எதெற்கோ டெல்லியில் தரகு வேலை செய்யும் வைகோவால்..

ஒவ்வொரு முறையும் புலிகள் தடைக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் வரும்போது கருப்பு அங்கியை மாட்டிக் கொண்டு வந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வைகோவால்..

தான் விருந்து உண்டு  மற்றும் தான் விருந்து கொடுக்கும் ஐபி அதிகாரிகளை சரி கட்டி புலிகள் உள்ளிட்ட மற்ற தமிழர் இயக்கங்களின் தடையை உடைக்க முடியாதா?

பிரபாகரனின் தனிப்பட்ட ஆயுத பயிற்சியை பெற்றேன் என்று பீத்தும் திராவிட சுப்பிரமணிய சாமியான வைகோ ஈழத்திற்கு புலிகளின் அழைப்பின் பேரில் சென்றாரா? 

அல்லது ஐபி/ராவின் அஜெண்டாவின் பேரில் சென்றாரா?

இந்த கோபாலசாமிக்கு வக்காலத்து வாங்கும் கொளத்தூர் மணி, 2009 மே 16, 17, 18 தேதிகளில் கோபாலசாமி போனை அணைத்து வைக்க காரணம்..

அவர் அமெரிக்க மற்றும் பிரித்தானிய அதிபர்களை நேரடியாக தொடர்பு எடுக்க முயன்று, அவர்கள் மீண்டும் அழைக்காததால் பெரும் துயரத்தில் அணைத்து வைத்து விட்டார் என்கிறார்.

ரஷ்ய அதிபருக்கும், அமெரிக்க அதிபருக்குமே கூட எந்த நொடியும் அழைத்து பேச 'ஹாட் லைன்' கனெக்சன் கிடையாது.

 பனிப்போர் முற்றி உலக அணு ஆயுத போர் வெடிக்கும் சூழல் போன்ற அசாத்திய கால கட்டங்களில் மட்டுமே அத்தைகைய வசதியை ஏற்படுத்துவார்கள். 

அல்லது, 
அந்த தேசங்களின் அதிபர்களை நேரடியாக அழைத்து பேசும் வல்லமை கொண்டிருக்க  கோபாலசாமி அவர்களின் இந்திய ஏஜெண்டா?

கருணாநிதி புலி தலைவர்களை எப்படியாவது கொன்று விடுங்கள் என்று மன்றாடியதாக சிவ ஷங்கர் மேனன் தெரிவிக்கிறார். 

அவரது திராவிட சிஷ்யன் கோபாலசாமி தமிழர்களையும், தமிழ் மறவர்களையும் காட்டிக்கொடுக்கும் ஆள்காட்டி வேலை செய்கிறார். 

தமிழின் எதிர்ச்சொல் திராவிடம்; தமிழியத்தின் எதிர்த்தத்துவம் திராவிடம்; தமிழர்களின் இன எதிரி திராவிடம்!

(PS: படத்தில் நாராயணனும், நரசிம்ஹனும்)
#krishna

புலிகள் 2009 

Aathimoola perumal prakash
search இந்திய உளவாளி வைகோ வேட்டொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக