வெள்ளி, 20 ஏப்ரல், 2018

90கள் வாழ்க்கை ஈழம் வானொலி தொலைக்காட்சி ஒற்றுமை

aathi1956 aathi1956@gmail.com

ஜன. 27
பெறுநர்: எனக்கு
(முன் குறிப்பு: 1980-1989களில் பிறந்தவர்களுக்கான ஒரு சிறிய நினைவூட்டல் பதிவு)

எளிய நடுத்தர குடும்பத்தில் பிறப்பெடுத்து வளர்ந்து மேலெழுந்து நிற்பது தான் தற்போதைய சூழலில் மிகப்பெரிய சவாலான விசயம். இந்த 80களில் பிறந்தவர்களும் கூட இது போன்றதொரு மிகப்பெரிய சவால்களை சமாளிப்பவர்கள் தான். ஏனெனில் 1980 முதல் 1989 வரையிலான இடைப்பட்ட பத்து வருடங்களில் பிறந்தவர்கள் அனைவருமே குழப்பமான சூழலில் வளர பழக்கப்பட்டவர்கள். அந்த இடைப்பட்ட வருடத்தில் பிறந்தவன் என்ற முறையில் என்னையே பலவற்றிற்குள் சோதனைக்குட்படுத்தி பார்த்திருக்கிறேன். அவற்றுள் சிலவற்றை மட்டும் கீழே வகைப்படுத்திருக்கிறேன்.

SW/MW அலைவரிசை எங்கள் அபிமான அப்துல் அமீது போன்றோரின் இனிய குரல்களில் இலங்கை வானொலிகளையும், தென்கச்சியாரின் இன்றொரு தகவலை தினந்தோறும் கேட்டு ரசித்தோம். திரைச்சித்திரம் என முழு படத்தையும் ஒலிவடிவிலேயே கேட்டிருக்கிறோம். அதைத்தொடர்ந்து ஒனிடா - பானசோனிக் - சாலிடர் என்ற ப்ளாக் அண்ட் ஒயிட் தொலைக்காட்சிகள் வாயிலாக ஞாயிறுக்கிழமைகளை கொண்டாடி இருக்கிறோம்.

சிக்கல் பக்கம் ஆண்டனாவை திருப்பி தூர்தர்ஷனுக்காக தவமிருந்திருக்கிறோம். ஸ்ரீகிருஷ்ணா, மகாபாரதம், ஜங்கிள் புக், மாதவன் இருவேடங்களில் நடித்த ராஜ் கஹானி என்ற அரச கதை, சக்திமான், என பல டப்பிங் தொடர்களின் அதிதீவிர ரசிகர்களாக இருந்திருக்கிறோம். ஒலியும் ஒளியுமென்ற வாரந்திர வெள்ளிக்கிழமை புதுப்பாடல்களுக்காக காத்திருந்திருக்கிறோம். DD1, DD5 என காத்திருந்த வேளையில் ஈழம் பக்கம் ஆண்டனாவை திருப்பி சக்தி டிவி, ரூபவாகினி, சிரிச போன்ற அங்குள்ள தமிழ்/சிங்கள சேனல்களை பார்த்து குதூகலித்திருக்கிறோம். உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக 'வானத்தை போல' படத்தை வெளிவந்த ஓரிரு மாதங்களிலேயே சிரச சேனலில் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம்.

அதே காலத்தில் வானொலிகளெல்லாம் FM என்ற வடிவில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட அலைவரிசையில் அணிவகுத்தது. நாகப்பட்டினத்தை சேர்ந்த எங்கள் பகுதிக்கு காரைக்கல் பண்பலை தான் விடிவெள்ளியாக திகழ்ந்திருக்க, பாதி நேரம் ஹிந்தியே ஆக்கிரமித்திருந்த நேரத்தில் இலங்கையிலிருந்து சக்தி எஃப்பெமும், சூரியன் எஃப்பெமும் 24x7 தமிழில் பாடல்களை ஒலிபரப்புவதை கேட்பவதற்காக வில்லேஜ் விஞ்ஞானி போல வடி தட்டை வைத்தே புதுப்புது ஆண்டனாக்களை உருவாக்கி கேட்டு ஈழத்தமிழோடு ரசித்திருக்கிறோம். அப்போது தான் தமிழகத்தில் தனியார் அலைவரிசையாக ரேடியோ மிர்ச்சியும் வந்தது; பனிக்காலங்களில் அதையும் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்.

ஊருக்கொரு டிவி என்றிருந்த நிலையில் அடுத்து தெருக்கொரு டிவி என்ற நிலையில் வளர்ச்சி வந்த நிலையிலேயே, கலர் டிவியும் அதிகமாக அடியெடுத்து வைத்தது. VCR வந்தது வாடகைக்கு கிடைக்கும் அதை வாடகைக்கு எடுக்க கடும்போட்டி இருக்கும் கேசட் வாடகை எடுத்த தலைமுறையும் நாம்தான், சைக்கிள் வாடகைக்கு.எடுத்து கற்றுக்கொண்ட நம் நினைவுகள் பசுமையானவை.

முக்கால் சைக்கிள்,ஒயர்பிரேக் சைக்கிள் ரேஞ்சர் சைக்கிள்  டி.வி.எஸ் 50, பஜாஜ் எம் 80 என்ற வரிசையாக புதுப்புது வாகன படையெடுப்புகளில் பயணித்திருந்தோம். புது மாப்பிள்ளைக்கான சீதன பைக்காகி போன டி.வி.எஸ் விக்டர், ஹிரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் போன்றவற்றின் வருகையும், பல்சர், அவஞ்சர் தொடங்கி இப்போது TVS Apache RTR 200, Suzuki Gixxer,
Yamaha FZ-FI, Honda Hornet என அனைத்தோடும் பயணித்து கொண்டிருக்கிறோம்.

ரஜினி - கமலை கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் இடையே புது என்ட்ரி கொடுத்த விஜயை எங்களின் அடுத்த உச்ச நட்சத்திரமாக பார்த்தோம். மனதை தொட்டு சொல்லச்சொன்னால், இன்றைய அஜித் ரசிகர்களாக இருக்கும் 80களின் ஆட்களெல்லாம் ஆரம்பத்தில் விஜய் ரசிகனாகத்தான் இருந்திருப்பார்கள். கேலிக்கிண்டலுக்காகவே தனக்கு விஜயை பிடிக்குமென சொல்லத் தயங்கியவர்களே இங்கு அதிகம்; அது பெரிய கதை. இப்போது சிம்பு - தனுஷ், சிவக்கார்த்திக்கேயன் - விஜய் சேதுபதி - அசோக் செல்வன் எனவும், குஷ்பூ- மீனா- சிம்ரன்-நக்மா- ரம்பா என ரசித்து கொண்டிருந்த காலம் மறந்து கீர்த்தி சுரேஷ் - ஸ்ரீதிவ்யா - லெஷ்மி மேனன் - நயன்தாரா எனவும் நீளும் பட்டியலிலுள்ள பல இளநடிகர்களையும் ரசித்து கொண்டிருக்கிறோம்.

இசையுலகில் இளையராஜாவையும், கூடவே ரஹ்மானையும் ஒருசேர ரசித்தோம். அதோடு நிற்காமல் இன்று ஜி.வி. பிரகாஷ், அனிருத், சந்தோஷ் நாராயணனோடும் லயித்து நிற்கிறோம். கே.எஸ்.ரவிக்குமார் - வாசு - மணிரத்னத்தோடு ஷங்கர் - கெளதம் - வினோத் - நலன் குமாரசாமி - கார்த்திக் சுப்புராஜையும் கொண்டாடுகிறோம். டூரிங் டாக்கீஸ்லிருந்து மல்டி ஃப்ளெக்ஸ் சினிமாவையும் அதே உற்சாகத்தோடு தான் கண்டு கொண்டிருக்கிறோம்.

இப்படியாக உணவு - உடை - இசை - ரசனை என எல்லாவற்றிலும் 70களின் சாயலும் 90களின் சாயலும் கலந்து, எங்களுக்கென அடையாளமின்றி தனித்து நிற்கிறோம். 70களின் கடைசி தலைமுறையாகவும், 90களின் முதல் தலைமுறையாகவும் 80களில் பிறந்தவர்களான நாங்கள் கலப்படமான குழப்பம் நிறைந்த வரையறையோடு தான் இன்றளவும் இருக்கிறோம். இயற்கையோடு இயங்கிருந்ததோடு மட்டுமில்லாமல், அறிவியல் தொழிட்நுட்பத்தின் அபிரிவிதமான வளர்ச்சியையும் அதன் போக்கிலேயே அனுபவித்து கொண்டிருப்பவர்கள் என்ற சுயபெருமையும் எமக்குண்டு. என்றுமே மாறாத மாற்றம் என்ற ஒன்றில் சிக்கியும் தப்பி பிழைத்த எம்மைப்போன்ற 80களில் பிறந்தவர்கள் அதிர்ஷ்ட சாலிகள்.

#thegreat80's

Saravanan thangappa
27/01/18

சிலோன் ரேடியோ 

தமிழ் தெய்வம் போல் போற்றும் இலக்கியம் கம்பர் மாணிக்கவாசகர் தமிழ்த்தாய் தமிழ்மொழி தமிழ்த்தெய்வம்

aathi1956 aathi1956@gmail.com

ஜன. 27
பெறுநர்: எனக்கு

*ஆண்டாளை அவமதித்ததற்காகப் போராடியவர்கள் ஆண்டாளின் தாயான தமிழன்னையே அவமதிக்கப்படும்போது அமைதிகாப்பது ஏன்?. -சீமான் சீற்றம்!*

பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நடத்திய ‘தமிழ் - சமஸ்கிருதம் அகராதி’ வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டபோது காஞ்சி சங்கரமடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நின்று மரியாதை செலுத்தாது அமர்ந்திருந்தது கடும் கண்டனத்திற்குரியது. ஒட்டுமொத்தத் தமிழர்களின் உணர்வையும் இந்த அவமரியாதை பெரிதும் காயப்படுத்தியிருக்கிறது. இதனை ஒருபோதும் ஏற்றுக்க்கொள்ள முடியாது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என்று சிறுபிள்ளைத்தனமாகக் கூறும் காரணங்களை ஏற்க முடியாது. தமிழன்னையைத் தொழுகிற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படுகிறபோது அதற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது தமிழர் நிலத்தில் தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்படும் மரபு. நாட்டுப்பண் ஒலித்தபோது எழுந்து நின்று மரியாதை செலுத்த தெரிந்த விஜயேந்திரருக்கு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது எழுந்து நிற்க வேண்டும் என்ற மாண்பு தெரியாதா? உருவாகி சில ஆண்டுகளேயான இந்திய தேசியகீதத்திற்கு மேலான மதிப்புப் பல்லாயிரமாண்டுகளுக்கு முன் தோன்றிய மொழியைத் தொழும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உண்டென்று தெரியாதா?

தமிழ் என்பது தமிழர்களுக்கு மொழியல்ல! அது உயிர்! தமிழர்களின் உயிரே மொழியில்தான் பொதிந்துக்கிடக்கிறது. புரட்சி பாவலன் பாரதிதாசன் பாடியதற்கிணங்க தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று மொழியை உயிருக்கு நேர் நிறுத்தி வாழும் கூட்டம் தமிழர் கூட்டம். தங்கள் பெயரோடு மொழியை இணைத்து பெயரிட்டு தாய்மொழியே தங்கள் அடையாளம் என்று வாழும் மக்கள் தமிழ் மக்கள். அம்மொழியைக் காக்க இரத்தம் சொரிந்து நிலத்தில் விதையாய் விழுந்தவர்கள் எங்கள் முன்னோர்கள். துறவறம் பூண்டு அறப்பற்று, புறப்பற்று என எல்லாவற்றையும் இழந்து பற்றற்று இருந்தபோதும் எங்கள் மொழி மீதான பற்றை எம் முன்னோர்கள் ஒருபோதும் இழந்ததில்லை. அதனை வரலாறு நெடுகிலும் காணப்படும் பல்வேறு நிகழ்வுகள் காட்டுகிறது.

*‘நிழற்பொழி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண் தழற்புரை சுடர்க்கடவுள் தந்தமிழ்’* என்று பெரும்பாட்டன் கம்பர் தமிழின் தொன்மையைக் கூறுகிறார்.

*‘உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந் தமிழின் துறைவாய் நுழைந்தனையோ'* என்று மாணிக்கவாசகர் தொழுகிறார்.

*‘இறையனாரும் எம்பெருமான் முருகவேளும் அகத்தியரும் கட்டிக் காத்த தமிழ்'* என நக்கீரர் மெய்சிலிர்த்துப் பாடுகிறார். எங்கள் முன்னோர்கள் எங்கள் தாய்த்தமிழினை இறையாகவே எண்ணித் தொழுது போற்றியிருக்கிறார்கள்.

எங்கள் தாய்த்தமிழானது அது மனிதர்களின் மொழியல்ல! அது ஓர் இறைமொழி! மொழிகளின் தாய்! உலகின் உன்னதத் திருமொழி! பல்வேறு பெருமைகளையும், சிறப்புகளையும் தாங்கி தனித்தே இயங்க வல்ல ஆற்றல் கொண்ட உலகின் தலைச்சிறந்த தொன்மை மொழி. அதுவே மாந்தர்களின் ஆதிமொழி என எங்கள் ஐயா பாவணர் அறியத்தந்து நிறுவியிருக்கிறார்.

அத்தகைய தன்னிலடங்கா பெருமைகளை வாய்க்கப்பெற்ற தாய்த்தமிழைப் போற்றுகிற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது எழுந்து நிற்காத ஜெயேந்திரரின் செயலானது பெருங்குற்றமாகும். தமிழர் நிலத்தில் சமஸ்கிருதத்தில் மந்திரங்களை ஓதித் தமிழையும், தமிழர்களையும் அவமதிக்கும் போக்கின் நீட்சியாக இதைப் பார்க்கிறோம். எங்கள் குல மூதாதை ஆண்டாளுக்காகத் தாங்கள் இறங்கி போராட்டம் நடத்திய பெருமக்கள் அந்த ஆண்டாளின் தாயான தமிழே அவமதிக்கப்பட்டிருக்கிறபோது கள்ளமௌனம் சாதிப்பது விந்தையாக இருக்கிறது. தன் தவறை உணர்ந்து மன்னிப்புகேட்பதென்பது மனித மாண்பு அது மகான்களுக்கு இல்லையா?. எங்கள் தாய்த்தமிழை அவமதித்த இந்நிகழ்விற்காக விஜயேந்திரர் மனம்வருந்தி உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மொழிப்பற்று தமிழ்ப்பற்று தமிழ்மொழி இலக்கியம் மதம் வழிபாடு 

காஞ்சி மடம் ஆதிசங்கரர் தொடங்கியது இல்லை சான்று நூல் புத்தகம்

aathi1956 aathi1956@gmail.com

ஜன. 26
பெறுநர்: எனக்கு

முகநூலில் சுற்றுச்சூழலியலாளர் நக்கீரன் : சங்கர மடமும் தமிழும்

வடக்கே பத்ரிநாத், மேற்கே துவாரகா, கிழக்கே பூரி, தெற்கே சிருங்கேரி இவை நான்கு மட்டுமே சங்கரர் ஏற்படுத்திய அத்வைத மடங்கள் என்பர். இந்நான்கு சங்கராச்சாரிகளும் காஞ்சியிலுள்ள மடத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மேற்கண்ட நான்கு மடங்களும் ஆதிசங்கரரால் நிறுவபட்டதாக 1972இல் ஒரு தீர்ப்பில் உச்சநீதி மன்றமும் உறுதி செய்துள்ளது. இத்தீர்ப்பில் காஞ்சி மடம் பற்றி ஏதும் கூறப்படவில்லை.

உண்மையில் சிருங்கேரி மடத்துனான முரண்பாட்டில் உருவானதே காஞ்சிமடம். சிருங்கேரியில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற பார்ப்பனர்களை சிருங்கேரி சங்கராச்சாரியை தரிசிக்க அனுமதிக்கவில்லை. இவர்களுடைய கோத்ர அனுஷ்டானங்களின்படியும் பின்பற்றும் சாஸ்த்திர சம்பிரதாயங்களின்படியும் இவர்கள் தோஷமுடையவர்களாக இருப்பதாகவும் அம்மடத்தின் வைதீக எல்லைக்கு வெளியில் இருப்பதாகவும் கூறி அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் கோபமுற்ற இவர்கள் சங்கமேஸ்வரம் என்ற இடத்தில் ஒரு புதிய மடத்தை உருவாக்குகிறார்கள். பிறகு இதற்கொரு கிளையை காஞ்சியில் உருவாக்குகிறார்கள். இதற்கிடையில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களின் ஆதரவு கிடைத்ததால் கும்பகோணத்தில் மடத்தை அமைக்கிறார்கள்.

சென்னை முதன்மையான நகராக உருவெடுத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் பூரி சங்கராச்சாரியாரின் செல்வாக்கு சென்னையில் உயரத் தொடங்கியது. இதனால் தம் எல்லைக்குள் அவருடைய செல்வாக்கு வளர்வதை விரும்பாது அதன் அருகேயுள்ள காஞ்சிபுரத்துக்கு மடம் மாற்றப்பட்டது. ஆனாலும் இன்றளவிலும் காஞ்சி மடத்தை மற்ற சங்கராச்சாரிகள் ஒப்புக்கொள்வதில்லை. இப்போதே அப்படி என்றால் அக்காலத்தில் எப்படி இருந்திருக்கும்? எனவே காஞ்சி மடம் ஆதிசங்கரர் ஏற்படுத்திய மடம்தான் என்பதை நிறுவுவதற்கு துணிந்தனர். பல மோசடியான சான்றுகளை உருவாக்கினர். இம்மோசடிப் பற்றி 1977இல் வெளிவந்த ‘அனைத்திந்திய பகவத்பாத சிஷ்யர்கள் சபை’-மதுரை வெளியிட்ட ‘தஷிணாம் நாய பீடம் சிருங்கேரியா? காஞ்சியா?’ என்ற நூல் விரிவாக பேசுகிறது. உருவாக்கப்பட்ட செப்பேட்டு ஆதாரங்கள், 1586இல் இறந்துபோனவர் 1719இல் எழுதிய ஸ்ரீமத் ராமாயண கிருஷ்ண தர்மாசுரம் என்கிற வியாக்கியான நூல் பற்றிய மோசடிகளை எல்லாம் விரிவாக பேசி இந்நூல் அச்சான்றுகளை அம்பலப்படுத்துகிறது. நாம் அதற்குள் போக வேண்டாம்.

செய்தி என்னவென்றால் மற்ற நான்கு மடங்களுக்கும் ஆதிசங்கரர் சொல்லிய சமஸ்கிருத சுலோகங்கள் சான்றுகளாக இருக்கின்றன. ஆனால் இந்த தேவமொழி காஞ்சி மடத்தை கைவிட்டுவிட்டது. இவ்விடத்தில் தீட்டு மொழியான தமிழ்தான் உதவி செய்தது. இறுதியில் இவர்கள் சான்றுகளாக காட்ட கிடைத்தது என்னவோ வெறும் மூன்று தமிழ் பாடல்கள்தான். இம்மூன்று பாசுரங்களும் ‘பக்த மான்மியம்’ என்ற நூலில் இருந்து பெறப்பட்டது. இதில் ‘ஆச்சார்யாள் ஜம்புகேசுவரத்தில் தாடங்க பிரதிஷ்டை பண்ணியதையும், காஞ்சிபுரம் வந்து ஏகாம்பநாதரை தரிசனம் செய்து காமாட்சி ஆலயத்தில் தரிசனம், காமகோடி யந்திர ஸ்தாபனம் செய்து’ என்று விளக்குகிறது. (இதையும் மற்ற மடத்துக்காரர்கள் ஏற்கவில்லை என்பது தனிச்செய்தி).

ஆக தமிழ் தந்த சான்றில்தான் இன்று வரை இவர்கள் பிழைப்பு ஓடுகிறது. இதற்கு மட்டும் இவர்களுக்கு தமிழ் தேவையாம். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து தேவையில்லையாம்.

உதவிய நூல்கள்:
1) (காஞ்சி) சங்கராச்சாரியார் யார்? – ஓர் ஆய்வு – கி. வீரமணி
2) இந்துமதம் எங்கேப் போகிறது? – அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர்

search 
வாரணாசி சர்மா kanchi a myth fbtamildata

ஈவேரா தமிழ்த்தாய் வாழ்த்து விமர்சனம் தமிழ்மொழி இலக்கியம் குப்பை

aathi1956 aathi1956@gmail.com

ஜன. 26
பெறுநர்: எனக்கு
கதிர் நிலவன்

‘தமிழ்த்தாய்' மூவாயிரம் ஆண்டுகளாக யாரைப் படிக்க வைத்தாள்?

"இவ்வுயர் நிலைப் பள்ளியின் இலக்கிய மன்றவிழாவில் நான் பங்கேற்றுக் கொள்ள வாய்ப்புக் கொடுத்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 
முதலில் நான் யார், எனது கொள்கை என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
 நான் பொதுத் தொண்டு செய்கிறவன். 
நாட்டில் பலர் பொதுத் தொண்டு செய்கிறார்கள் என்றாலும், நான் மேற்கொண்டிருக்கிற தொண்டு மனிதத் தொண்டு – மக்கள் தொண்டாகும். 
நம் நாட்டைப் பொருத்தவரை, மனிதன் பகுத்தறிவு இருக்கும் மனிதனாக வேண்டும் என்று பாடுபடுகிறேன். 
மனிதன் மனிதனாக இல்லை.

பகுத்தறிவுள்ள மனித சமுதாயத்தில் ஒருவன் பறையன், ஒருவன் கவுண்டன், ஒருவன் செட்டி, ஒருவன் தென்னை மரம் உயரமுள்ள உயர்ந்த சாதி, இன்னொருவன் சாக்கடையைப் போல மிகக் கீழான இழிசாதிக்காரன் என்கின்ற பேதங்கள் இருக்கின்றன என்பதோடு, இந்த நாட்டில் பெண்கள் அடிமைகளாக, சமுதாயத்திற்குப் பயன்படாதவர்களாக இருக்கிறார்கள். 
பெண்கள், ஆண்களுக்கு அடிமையாகி ஆண்கள் வசதிப்படி குழந்தைப் பெற வேண்டியவர்களாக இருக்கிறார்களே ஒழிய, சம உரிமை உடையவர்களாக இல்லை.

இவர்கள் இந்த இழிவில் இருந்து தலை தூக்கா வண்ணம் கடவுள் என்ற பாறாங்கல்லும், அதன் மேல் மதம் என்ற பாழுங்கல்லும், அதன் மேல் சாஸ்திரங்கள் என்னும் கருங்கல்லையும் போட்டு அழுத்தி வைத்து இருக்கின்றார்கள். 
இவற்றிலிருந்து மனித சமுதாயம் தலைதூக்க வேண்டும் என்று எவனும் பாடுபட முன்வரவில்லை. 
எனக்கு மட்டும் இத்துணிவு எப்படி வந்தது என்றால் – கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர், மொழி, இலக்கியம், நாடு என்கின்ற எந்தப் பற்றும் எனக்கு இல்லை.

இலக்கியம் என்றால் அறிவு என்று தான் பொருள். 
ஆனால், நம் இலக்கியங்கள் அதற்கு மாறானதாகும். 
இங்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது கடவுள் வாழ்த்து என்று ஒன்றும், தமிழ்த்தாய் வாழ்த்து என்று ஒன்றும் பாடினார்கள். 
கடவுள் இங்கு எதற்கு? கடவுள் உங்களை வாழ்த்த வேண்டும் என்று நினைக்கின்றீர்களா அல்லது கடவுளை நீங்கள் வாழ்த்தி வாழ வைக்கின்றீர்களா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
 கடவுள் வாழ்த்து எதற்கு? அதன் பொருள் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏதோ சம்பிரதாயம், வழக்கம், மூடநம்பிக்கை என்பதைத் தவிர, வேறு அதனால் எந்தப் பலன் ஏற்படும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொன்னார்கள். 
என்ன தமிழ்த்தாய் வாழ்த்து? 
தமிழ்த்தாய் இந்நாட்டில் நமக்குத் தெரிய 3000 ஆண்டுகளுக்கு மேலிருக்கிறாள். 
அவள் இவ்வளவு நாளாக இருந்து உங்களுக்குச் செய்தது என்ன? 
ஆசிரியர் சொல்லிக் கொடுக்காமல் "அ' வருமா என்று கேட்கிறேன்.
திராவிட இயக்கம் தோன்றுகிறவரை, தமிழ்த்தாய் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இருந்தும், நீங்கள் 100க்கு 5 பேர்தான் படித்திருந்தீர்கள். 
தமிழ்த்தாயால் உங்களைப் படித்தவர்களாக்க முடியவில்லையே! திராவிட இயக்கம் தோன்றிய பின் தானே இந்நாட்டில் கல்வி வளர்ச்சியடைந்தது? 
அறிவோடு நீங்கள் நன்றி காட்ட வேண்டுமானால், உங்களுக்குக் கல்வி கொடுத்தவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
 நம் மதம் சொல்வது என்ன என்றால், கீழ்ச்சாதிக்காரன் (சூத்திரன்) படிக்கக் கூடாது என்று சொல்கிறது. 
யார் இந்து என்று தங்களை ஒப்புக் கொள்கின்றார்களோ, அவர்கள் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள்தானே! 
தாய்மார்கள் அத்தனை பேரும் வைப்பாட்டிகள் (சூத்தரச்சிகள்) தானே?
 இந்த நிலையைப் போக்கத் தமிழ்த்தாய் செய்தது என்ன?

நம் இலக்கியங்கள் என்பவற்றில் ஒன்றுகூட மனித அறிவை வளர்க்கக் கூடியதாக, மனித சமுதாயத்தை வளர்ச்சியடையச் செய்யக் கூடியதாக இல்லை என்பதோடு, மக்களின் மூடநம்பிக்கையை – முட்டாள்தனத்தை வளர்க்கக் கூடியதாக இருக்கின்றன. 
இன்றைக்கு உலகில் காட்டுமிராண்டிகளாக, அறிவற்றவர்களாக, இழிமக்களாக இருப்வர்கள் நாம்தான் ஆவோம்.

முதலில் ஆசிரியர்கள் திருந்த வேண்டும். ஆசிரியர்கள் மூடநம்பிக்கைக்காரர்களாக இருப்பதாலேயே, அவர்களிடம் படிக்கிற மாணவர்கள் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆகின்றனர். ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதில் முதன்மையாகப் பார்க்க வேண்டியது, அவர்கள் பகுத்தறிவுவாதியா என்பதுதான்.

நமது இலக்கியங்கள் அத்தனையும் குப்பைகளேயாகும். 
அந்தக் காலத்திற்கு அவை உயர்ந்தவையாக இருந்திருக்கலாமே ஒழிய, இன்றைக்குள்ள அறிவிற்கு அவை ஏற்புடையவை அல்ல. இலக்கியங்கள் என்றால், அவை எதிர்காலத்தைப் பற்றிய வளர்ச்சியினைக் குறிப்பிடக் கூடியதாக இருக்க வேண்டும்.
 அப்படிப்பட்ட இலக்கியங்கள் ஏதும் நம்மிடம் இல்லை. 
மாணவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். மற்றவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவியினைச் செய்ய வேண்டும். எந்தக் காரியத்தை முன்னிட்டும் பிறருக்குத் தொந்தரவு செய்யாமல் நடந்து கொள்ள வேண்டும். மற்றவன் உனக்கு எதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ, அதனை நீ மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும்.

ஈ.வே.ரா 27.8.1971ம் தேதி மணப்பாறையில் ஆற்றிய உரை

(நன்றி : தலித் முரசு ஏப்ரல் 2009)

மெரினா குடியரசுதினம் குஜராத்தி கலைகள் இடம்பெறும் ஹிந்தியா




aathi1956 <aathi1956@gmail.com>

ஜன. 25





பெறுநர்: எனக்கு








Junior Vikatan
சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால், 'எப்போதுமே இல்லாத நடைமுறை தற்போது நடக்கிறது' எனக் கொதிக்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள். # RepublicDay # BanwarilalPurohit
குடியரசு அணிவகுப்பில் குஜராத் பாரம்பர்யம்! - ஆளுநர் பன்வாரிலாலை மையமிடும் அடுத்த சர்ச்சை vikatan.com





Posted Date : 13:00 (25/01/2018)
Last updated : 13:32 (25/01/2018)



குடியரசு அணிவகுப்பில் குஜராத் பாரம்பர்யம்! - ஆளுநர் பன்வாரிலாலை மையமிடும் அடுத்த சர்ச்சை

ஆ.விஜயானந்த்







இந்திய குடியரசு தினத்தின் 69-ம் ஆண்டுவிழா, நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளில் மாநில அரசுகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. 'சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. ஆனால், இந்தமுறை பாரம்பர்ய நடன அணிவகுப்பில் குஜராத்தையும் இணைத்துவிட்டனர். எப்போதுமே இல்லாத நடைமுறை இது' எனக் கொதிக்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள்.

Advertisement



இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
"அலோ... உங்க லோன் ஓ.கே ஆயிருச்சுன்னு இந்த 4 நம்பர்ல இருந்து கால் வந்தா எடுக்காதீங்க மக்களே!


யோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம்

மழைவேண்டி மகாமாரியம்மனுக்கு ஒரு லட்சத்து எட்டு வெற்றிலைகளால் அலங்காரம்!


தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்ட நாளில் இருந்தே அடுத்தடுத்த சர்ச்சைகள் அணிவகுத்துக் கொண்டிருக்கின்றன. மாவட்டங்களில் நடக்கும் அரசுப் பணிகளை ஆய்வுசெய்தது; ஆளும்கட்சி நிர்வாகிகளுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிப்பது போன்றவை அரசியல் களத்தில் அதிர்வை ஏற்படுத்தின. 'ஆளுநர் ஆய்வு செய்ததில் எந்தவித விதிமீறலும் இல்லை' என பா.ஜ.க நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர். அரசியல் கட்சிகளின் தொடர் கண்டனத்தை அடுத்து ஆளுநர் மாளிகையும் விரிவான விளக்கத்தை அளித்தது. இந்த நிலையில், குடியரசு தின விழா கொண்டாட்டத்திலும் ஆளுநரை மையப்படுத்தி புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.


Advertisement




தலைமைச் செயலக அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றப் பிறகு முதன்முறையாக ஆளுநர் பன்வாரிலால் குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் கொடியேற்றுகிறார். கடந்த ஆண்டு குடியரசு தினவிழாவில் கொடியேற்றினார் ஓ.பன்னீர்செல்வம். இதற்கான அனுமதியை அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் அளித்தார். பன்னீர்செல்வமும் குடும்ப சகிதமாக கொடியேற்று விழாவில் பங்கேற்று சிறப்பித்தார். இந்த ஆண்டு நடக்கும் விழாவில் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டு தேசியக் கொடியை ஏற்றுகிறார் ஆளுநர். ஆனால், பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் சிறப்புகளும் தமிழக நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளதுதான் வேதனையளிக்கிறது" என விவரித்தவர், ``ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் நாட்டின் ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் பாரம்பர்ய நடனம், இசை ஆகியவை இடம் பெறுவது வழக்கம். இந்த ஆண்டு நடக்கும் குழு நடனங்களில் தமிழக அரசுப் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 200 பேர் வரை கலந்துகொள்கின்றனர். இவர்களுக்கு பாம்பூ நடனம், கரகம் உள்ளிட்டவற்றில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. உயர்கல்வித் துறை சார்பில் வீர விளையாட்டுக்களான மான் கொம்பு, கத்திச் சண்டை ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற மாணவர்கள் திறமைகளை வெளிக்காட்ட உள்ளனர். இதுதவிர, அரசுத் துறைகளின் கண்காட்சி வாகனங்களும் இடம் பெறுகின்றன. விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக மூன்று முறை ரிகர்சல் நடப்பது வழக்கம்.

முதல் இரண்டு ரிகர்சல் நடக்கும்போது தமிழகம் தொடர்பான நிகழ்ச்சிகளே இடம் பெற்றிருந்தன. மூன்றாவது ரிசர்சலின்போது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றிருந்தனர். எங்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அதிகாரிகளிடம் கேட்டபோது, 'குஜராத்தின் பாரம்பர்ய நடனம், கலாசாரம் போன்றவையும் இடம் பெற உள்ளது. இவர்கள் நேரடியாக உள்ளே வந்தால் சர்ச்சை ஏற்படும் என்பதால், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலமாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். நிகழ்ச்சிக்கான இரண்டு ரிசர்சலையும் தஞ்சாவூரிலேயே முடித்துவிட்டனர். மேலும், குஜராத்தின் சிறப்புகள் தமிழக குடியரசு விழாவில் இடம் பெற்றால் கேள்வி எழும் என்பதற்காக பஞ்சாப், மிசோரம் மாநிலத்தையும் இணைத்துவிட்டார்கள். இதற்காக, பெரும் எண்ணிக்கையில் அந்தந்த மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். நாளைய விழாவில் குஜராத்தும் இடம் பெறுகிறது' எனத் தெரிவித்தார். இந்த நடைமுறை தமிழகச் சூழலுக்கு முற்றிலும் புதிது. நாட்டின் ஒருமைப்பாட்டை விளக்குவதுதான் நோக்கம் என்றால், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் கலாசார நடனங்களையும் இணைத்திருக்க வேண்டும். 'தமிழகத்தை ஆளும் அரசியல் கட்சி கேள்வி எழுப்பாது' என்ற காரணத்துக்காகதான், மத்திய அரசு இப்படியொரு புதிய நடைமுறையைப் புகுத்தியிருக்கிறது" என்றார் ஆதங்கத்தோடு.

இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ``நாட்டின் கலாசாரத்தையும் ஒருமைப்பாட்டையும் விளக்கும் வகையில்தான் குழு நடனம், வீர விளையாட்டுகள் போன்றவை இடம்பெறுகின்றன. இதில், மாநிலங்களைப் பிரித்துப் பார்ப்பதில் நியாயம் இல்லை. ஆளுநரின் விருப்பத்துக்காகதான் குஜராத், பஞ்சாப், மிசோரம் மாநிலங்களின் குழு நடனங்கள் இடம்பெறுகின்றன. இதில் எந்தவிதத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. வழக்கம்போல, சிலர் இதனையும் அரசியல் ஆக்குகின்றனர்" என்றார்


சாகர்மாலா எதிராக கையெழுத்து இணையம் மனு

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்ஜன. 25
பெறுநர்: எனக்கு

Central Government of India's Ministry of Petroleum and Natural Resources Should Stop the Pipeline Projects in Tamilnadu
The corporation is planning to lay a 1,167 km pipeline to reach LNG imported at Ennore to Nagapattinam, Tuticorin, Madurai and Bengaluru. This is designed to transport 450,000 barrels of crude oil per day along this route. Although this project is dangerously close to becoming a reality, many residents are unaware of the plan's existence. Many towns and cities will be impacted including Chennai, Madurai, Pondicherry, Trichy, Nagappatinam, Tuticorin and Ramanathapuram.
This increase in size and pressure along with the expansion of compressor and metering stations may put our environment at risk as well as the health and safety of our citizens. The most alarming part is the explosion accidents. The gas in the pipelines will come from fracking. Large amounts of methane are released during the processing, storage and distribution of natural gas. Methane is a greenhouse gas far more effective at trapping heat in the atmosphere than carbon dioxide. Enviornmentalists and citizens are concerned that this investment in gas infrastructure will ultimately subvert the needed expansion of the green energy economy. This project would run through many residential neighborhoods causing safety, health, water contamination, and property rights problems.
We're worried that it could leak and pollute our river, poison our people. We wanted people to hear us so we had to show them and bring the Pipeline issue to light to protect Mother Land. We saw thousands of faces who would be impacted by the construction of this pipeline.
The fight against the Pipeline can only be successful if we have your voice. Please sign and Let them know that we do not need oil to live, but we do need water, and water is a human right and not a privilege.
Tamils, We believe that the pipeline has great potential to leak into the land, River and cause harm to the great people of this nation whose water and livelihood depends on the land and river. We're willing to go to any extent to make sure that our voices are heard in opposition to the pipeline. Sign to stand with us and demand a stop to the Pipeline Project In Tamilnadu. A lot of lives who will be effected if this pipeline were to be installed.
This is an unwanted and unwarranted project. We demand that our elected representatives and our activists to step up for us and put people before profit and cancel this proposed project.
Please Sign my petition and forward it to your friends .
We need justice and the immediate action on all cases .
Looking forward for your support
Thanking you,
With Warm Regards,
Tamil Research Institute
WEBSITE http://www.tamilri.com
EMAIL trinstitution@gmail.com
FACEBOOK https://www.facebook.com/TeamTamilRI
YOUTUBE https://www.youtube.com/c/TamilResearchInstitutionTRI
Updates
Reasons for signing
Karthi Ganesh · 57 minutes ago
This project destroys my agricultural soil and will make me to beg for food products from such called corporates. I'm fullfilling my agricultural needs by... Read more
Anand Murthy · 1 hour ago
it will ruin the farm lands and it matters to all the living beings in and around the Area of the pipe line !
Report a policy violation Tamil Research Institution TRI
Denmark
மீத்தேன் ஹைட்ரோகார்பன் சாகர் மாலா திட்டம் மண்ணழிப்பு கார்ப்பரேட் 

மொழிப்போர் ஈகி பட்டியல் 12பேர்

aathi1956 aathi1956@gmail.com

ஜன. 24
பெறுநர்: எனக்கு
1938, 1965ஆம் ஆண்டு ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து தமிழ்மொழி காக்கும் போரில் உயிர் நீத்த ஈகிகள் பட்டியல்:

1. நடராசன், இறப்பு: 15.1.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

2. தாலமுத்து, இறப்பு: 12.3.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

3. கீழப்பழுவூர் சின்னச்சாமி, பிறப்பு: 30.7.1937, இறப்பு: 25.1.1964, காலை 4.30 மணிக்கு திருச்சியில் தீக்குளித்தார்.

4. கோடம்பாக்கம் சிவலிங்கம், இறப்பு: 26.1.1965, சென்னையில் தீக்குளித்தார்.

5. விருகம் பாக்கம் ஏ.அரங்கநாதன், பிறப்பு: 27.12.1931, இறப்பு: 27.1.1965, கோடம்பாக்கம் தொடர்வண்டி திடலில் தீக்குளித்தார்.

6. சிவகங்கை இராசேந்திரன், மாணவர். பிறப்பு: 16.7.1945,  இறப்பு: 27.1.1965, சிதம்பரம் அண்ணாமலை நகரில் காவலரால் சுடப்பட்டு இறந்தார்.

7. கீரனூர் முத்து, பிறப்பு: 15.1.1943, இறப்பு: 27.1.1965, கீரனூரில் நஞ்சுண்டு மாண்டார்.

8. சத்தியமங்கலம் முத்து, பிறந்த ஆண்டு: 1943, இறப்பு: 11.2.1965, சத்தியமங்கலத்தில் தீக்குளித்தார்.

9. ஆசிரியர் வீரப்பன், பிறப்பு: 1.4.1938, இறப்பு: 11.2.1965, அய்யம்பாளையத்தில் தீக்குளித்தார்.

10. விராலிமலை சண்முகம், பிறப்பு: 11.8.1943, இறப்பு: 25.2.1965, விராலிமலையில் நஞ்சுண்டு இறந்தார்.

11. கோவை பீளமேடு தண்டபாணி, பி.ஈ.படித்தவர், பிறந்த ஆண்டு: 1944, இறப்பு: 2.3.1965, பீளமேட்டில் நஞ்சுண்டு இறந்தார்.

12. மாயவரம் சாரங்கபாணி, பி.காம்.மாணவர், பிறந்த ஆண்டு: 1945, இறப்பு 15.3.1965, மயிலாடுதுறையில் தீக்குளித்தார்.

சனவரி:25 மொழிப்போர் ஈகியர் நாளில், உயிர் நீத்த ஈகியரை நெஞ்சிலேந்துவோம்!

https://tamilthesiyan.wordpress.com/2017/01/24/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2/

தீக்குளிப்பு தமிழ்மொழி இந்தியெதிர்ப்பு ஹிந்தி தியாகி ஈகியர் 

ஆதிசங்கரர் வைணவம் போற்றல் சைவம்

aathi1956 aathi1956@gmail.com

ஜன. 24
பெறுநர்: எனக்கு

April 23, 2008
மெளலி (மதுரையம்பதி) at 4:52 PM
1 comment: ஆதிசங்கரரும் அடியார்க்கு அடியார்தான்...
நம்மில் பலரும் ஆதிசங்கரர் என்றாலே அவர் சைவ/வைதிக மதத்திற்கு மட்டுமே ஆச்சார்யார் என்று நினைக்கிறோம். ஆனால் ஆதிசங்கரருக்கு 'ஷண்மத ஸ்தாபனாச்சார்யர்' என்று ஒரு பட்டம் உண்டு. அதென்ன ஷண்மத ஸ்தாபனம்?. ஏன் அவருக்கு முன் மதங்கள் இல்லையா?. இருந்தது. அவர் காலத்தில் ஹிந்து மதப் பிரிவுகளில் ஏகப்பட்ட வேற்றுமைகள் மற்றும் வேதத்தின் அடிப்படை ப்ரமாணத்தை ஏற்காத பெளத்த/சமண சமயங்களால் மேலும் வேற்றுமைகள் பெருகியது. இந்த நிலையில் ஹிந்து மதம் நீர்த்துப் போகாது இருக்க வேண்டுமானால் இந்த வேற்றுமைகளினிடயே இருக்கும் பல ஒற்றுமைகளை நிலைநாட்டி அதன் மூலம் இந்துமத பிரிவுகளிடையே சண்டை-சச்சரவுகளை குறைக்க முயன்றார். அவர் காலத்தில், இந்து மதத்தில் மட்டும் 72 பிரிவுகள் இருந்தனவாம். இந்த 72 பிரிவுகளையும் ஆராய்ந்து, பலவற்றை இணைத்தும், சிலவற்றை தள்ளியும் முடிவாக "சைவம், வைஷ்ணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம்' என்று வகைப்படுத்தினாராம். இவ்வாறு வகைப்படுத்தப்பட்டபின் இந்த 6 பிரிவுகளும் சொல்லும் பல பெயர்களும் பரப்பிரம்மத்தையே சாரும் என்கிறார். சரி, இதுக்கும் தொண்டரடிக்கும் என்ன தொடர்பு?, பார்க்கலாம்.
ஆதி சங்கரர் ஷண்மதங்களை ஸ்தாபித்தாலும், அவர் வைஷ்ணவத்தை உணர்ந்து, மஹா விஷ்ணுவை பல இடங்களில் பலவாறு கொண்டாடுகிறார். விஷ்ணு சஹஸ்ர நாமத்திற்கு பாஷ்யம் செய்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அவரது பாஷ்ய க்ரந்தங்களில் எல்லாம் நாராயணனையே பரம்பொருளாக கொண்டாடுகிறார். நாரயணீயத்தில் ஆதி சங்கரர் பற்றிக் குறிப்பிடும் போது பட்டத்ரி இது பற்றி வியக்கிறார். ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடங்களில் இன்றும் 'நாராயண ஸ்மிருதி' என்றே கையொப்பமிடப்படுகிறது. ஆதி சங்கரர் சமாஸ்சரணம்/ உடம்பில் சூடு போட்டு முத்திரை (சங்கு-சக்கரம்) குத்திக் கொள்வதை எதிர்த்தார், ஆகையால் அவர் வைஷ்ணவ எதிரி என்பதாக கூறப்படுகிறது. அவர் காலத்தில் வைணவத்தில் மட்டுமல்ல, சைவத்திலும் போன்றவற்றிலும் உடலில் முத்திரை குத்தி கொள்ளும் முறை இருந்துள்ளது. சைவர்கள் ரிஷப, சூல முத்திரைகளை கொண்டு இருந்திருக்கிறார்கள். சங்கரர் இவை இரண்டையுமே கண்டித்திருக்கிறார். அவர் அதனை கண்டிக்க காரணமும் சொல்லியிருக்கிறார். அதாவது மனித உடலின் பல பாகங்களிலும் தேவர்களும், பித்ருக்களும் வாசம் செய்கின்றனர். இவ்வாறு சூடு வைத்துக் கொள்வது அவர்களுக்கு ப்ரிதியாகாது என்பதாகச் சொல்கிறார். அவரது இந்த கண்டிப்பு சைவ/வைஷ்ணவ மரபுகள் இரண்டிற்குமே தான்.
சங்கரரின் தாயார் ஆர்யாம்பாளின் இறுதிக்காலம் நெருங்கும் சமயத்தில், ஆதிசங்கரர் தான் முன்னர் வாக்கு கொடுத்ததுபடி தாயருகில் இருக்கிறார். தனது தாயின் வேண்டுகோளுக்கிணங்க, சிவனைத் துதித்து தனது தாயின் அந்திம காலம் சிரமமின்றி இருக்க வேண்டுகிறார். இவரது துதியினை கேட்டு ஈசன் சிவகணங்களை அனுப்பினாராம். அந்த சிவகணங்களின் உருவம் கண்டு அஞ்சிய ஆர்யாம்பாள், சங்கரரிடம், தனக்கு பயமாக இருக்கிறதென்றும் இந்த கணங்களுடன் தான் கைலாசம் போக மாட்டேன் என்றும் சொல்கிறார். உடனே ஆச்சார்யார் விஷ்ணுவைத் துதிக்கிறார். அந்த துதியில் நாராயணனை பாதாதி-கேசம் வர்ணிப்பதாக அமைத்து 15 பாடல்கள் பாடுகிறார். அந்த சமயத்தில் வைகுந்த வாசனின் தூதர்கள் வந்து ஆர்யாம்பாளின் ஜீவனை கூட்டிச் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த 15 பாடல்கள் விஷ்ணு பாதாதி-கேச ஸ்துதி என்று கூறப்படுகிறது. இதன் முடிவில் "என்னாலே சொல்லப்பட்ட இந்த ஸ்துதியால் யார்-யார் மஹா விஷ்ணுவின் அழகை அனுபவிக்கிறார்களோ அப்படிப்பட்ட விஷ்ணு பக்தர்களின் நிர்மலமான திருவடிகளை எப்போதும் நான் நமஸ்காரம் செய்கிறேன்" என்ற் சொல்லி முடிக்கிறார். இப்போது சொல்லுங்க ஆதிசங்கரரும் அடியார்க்கு அடியார் தானே?

மதம் ஒற்றுமை சகிப்புத்தன்மை 

வெளிமாநிலத்தில் 3வது முறையாக தமிழக மாணவர் கொலை சரத்பிரபு சாவு ஹிந்தியா மருத்துவம்

aathi1956 aathi1956@gmail.com

ஜன. 24
பெறுநர்: எனக்கு
முன்பு சரவணன் தற்போது சரத் பிரபு; தொடரும் மருத்துவ மாணவர்கள் மரணம்: அன்புமணி சந்தேகம்
சென்னை
எய்ம்ஸ் மாணவர் சரவணன், நேற்று மர்ம மரணமடைந்த சரத் பிரபு, அன்புமணி ராமதாஸ் - கோப்புப் படம்
Published :  17 Jan 2018  16:05IST Updated :  17 Jan 2018  16:05IST
முன்னர் மருத்துவ மாணவர் சரவணன் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டார், தற்போது மருத்துவ மாணவர் சரத்பிரபு மர்ம மரணம், இதுவும் கொலையாக இருக்குமோ என அன்புமணி ராமதாஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''டெலியில் உள்ள டெல்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் (UCMS) மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும், துயரத்தையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தைச் சேர்ந்த சரத்பிரபு கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்து, யு.சி.எம்.எஸ் மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்பு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்த சரத் பிரபு இன்று காலை விடுதியின் கழிப்பறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நண்பர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் சரத்பிரபுவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சரத்பிரபு நன்றாக படிக்கும் மாணவர் என்றும், அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்துள்ளனர். இத்தகைய சூழலில் அவர் எவ்வாறு இறந்தார் என்பது தெரியவில்லை.
அதேநேரத்தில் இதுகுறித்த விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்பாகவே, சரத் பிரபு அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்தை செலுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக யு.சி.எம்.எஸ் நிர்வாகம் கூறியிருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
மருத்துவ மாணவர் சரத்பிரபு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அதை திசை திருப்பி குற்றவாளிகளைக் காப்பாற்ற இப்படி கூறப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதற்கு முன் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ஆம் தேதி, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் விஷ ஊசி செலுத்தி படுகொலை செய்யப்பட்டார்.
அவர் படுகொலை செய்யப்பட்டால் காலியாகும் மருத்துவ மேற்படிப்பு இடத்தில் சேர வாய்ப்புள்ள சிலர் தான் சரவணனை கொலை செய்திருக்கக்கூடும் என்று குற்றச்சாட்டு எழுந்திருந்த நிலையில், அதை தற்கொலை என்று கூறி வழக்கை மூடி மறைக்க மருத்துவமனை நிர்வாகம் முயன்றது.
இதுதொடர்பாக எய்ம்ஸ் மாணவர்கள் சிலர் என்னைச் சந்தித்து முறையிட்டதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி காவல்துறை ஆணையர், எய்ம்ஸ் இயக்குனர் உள்ளிட்டோரை சந்தித்து இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
அதைத் தொடர்ந்து தான் அவரது உடற்கூறு ஆய்வுகள் முறையாக நடத்தப்பட்டு மருத்துவர் சரவணன் தற்கொலை செய்து கொள்ளவில்லை; கொல்லப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. அதேபோல், மருத்துவர் சரத்பிரபு மரணத்தில் உள்ள மர்மமும் விலக்கப்பட வேண்டும்.
அதேபோல் குஜராத்தின் அகமதாபாத் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வரும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாரிராஜ் என்ற மாணவர் சாதி அடிப்படையில் பேராசிரியர்கள் அளித்த தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயன்றார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மருத்துவ மாணவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. அவர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. ஆனால், தமிழகத்தை ஆளும் அரசு இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் கொண்டாட்டங்களை நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.
விரைவில் டெல்லி செல்லவிருக்கும் நான் மத்திய அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகளை சந்தித்து மாணவர் சரத்பிரபு மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவேன். தமிழக அரசும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுடன், வெளிமாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்''.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் சரவணன்
விஷ ஊசி போட்டு கொலை
டில்லி மருத்துவ பல்கலை கழக மாணவர்
மர்ம மரணம்
கொலையாக இருக்கலாம்
அன்புமணி ராமதாஸ் சந்தேகம்
------------
வெளி மாநிலங்களில் தமிழக மாணவர்களின் மரணங்கள் ஏன் நின்றபாடில்லை?
டெல்லியில் மர்மமான முறையில் தமிழக மருத்துவ மாணவர் சரத்பிரபு மரணம் அடைந்தார். சமீப காலத்தில், மர்மமான முறையில் இறந்த 3-ஆவது தமிழக மாணவர் இவர்.
"சில மாநிலங்களில் தமிழக மாணவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகக் கூறப்படுவதை இது உறுதிப்படுத்துகிறதா? புதிய சூழ்நிலைகள், அழுத்தங்களை எதிர்கொள்ளும் மன உறுதி தமிழக மாணவர்களுக்கு இல்லையா?" என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் சமூக வலைத்தள நேயர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
தமிழக மருத்துவ மாணவர் டெல்லியில் மர்ம மரணம்
"கொலையோ தற்கொலையோ உயர் கல்வி கற்கும் மாணவர்களின் (குறிப்பாக தமிழ்) எதிர்காலத்துக்கு நல்லதல்ல. அரசு உரிய நடவடிக்கை வேண்டும், தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ் மாணவர்கள் பாரபட்சமாக நடத்தப் படுகிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகத் தெரிகிறது. இது வரை நடந்த மரணங்களே இதற்கு சாட்சி. தொடரும் மரணங்கள் மரணிக்கவில்லை," என்கிறார் சரோஜா பாலசுப்பிரமணியன்.
"சமீபகாலங்களிலா அல்லது இந்த ஆட்சியிலா? என்ற கேள்வியேழுகிறது. மேலும் சில மாநிலங்களில் அல்ல எங்கள் தமிழகத்திலே பாரபட்சமாக நடந்த நீட் தேர்வே போதும் மத்திய அரசு தமிழர்களை எப்படி நடத்தும் என்பதற்கு. பல கஷ்டங்களை கடந்தாலும் படித்து பட்டம் பெறவேணடும் என்ற எண்ணத்தில் செல்லும் மாணவ மாணவர்களின் மனதை மிக மிக நொந்துபொகவைப்பாதாலே இந்நிலை ஏற்படுகிறது," என்கிறார் ரமேஷ் நாராயண்.
சக்தி சரவணன் இவாறு கூறியுள்ளார் ,"யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் தமிழரின் கருத்தியல் சிந்தனை வளர்ச்சியை ஏனைய மொழி மாநிலத்தவரிடம் எதிர்பார்ப்பது மிகவும் அரிதானது."
"சொந்த மாநிலத்திலேயே தமிழர்களுக்கு உயர் கல்வி பயில வாய்ப்பு தர மறுக்கிறது மத்திய அரசு. வேலைவாய்ப்புகளை அண்டை மாநிலத்தவர்க்கே வழங்குகிறது . மெக்கலே கல்வி முறை இந்தியாவை எப்படி சீரழித்து உள்ளது என்பதற்கு இதுவே எடுத்துகாட்டு," என்று கூறியுள்ளார் முத்துச்செல்வம்.
வேலாயுதம் கந்தசாமி எனும் நேயர் மரணமடைந்தவர் தவிர பிறரால் அந்த காரணங்களை எவ்வாறு அறிய முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-----------------
டெல்லியில் தொடரும் தமிழக மாணவர்களின் திடீர் மரணங்களுக்கு தீர்வு என்ன?
தலைநகர் டெல்லிக்கு மருத்துவ மேல் படிப்புகளுக்காக வந்த தமிழக மாணவர் சரவணன் கடந்த 2016-ஆம் ஆண்டிலும், சரத் பிரபு சமீபத்திலும் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இரு குடும்பத்தாரும்
முறையிட்டுள்ள நிலையில், அந்த சம்பவங்களுக்கான மூல காரணத்தை ஆராய வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதேபோல, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. மாணவரான முத்துகிருஷ்ணன் (எ) ரஜினி கிருஷ் கடந்த ஆண்டு மார்ச் மாதம், தூக்கிட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். சேலத்தைச் சேர்ந்த இவர் ஒரு தலித் மாணவர்,
தற்கொலை தொடர்பான எந்தக் குறிப்பையும் அவர் எழுதிவைத்திருக்கவில்லை. ரஜினி கிருஷ் என்ற பெயரில் உள்ள அவரது முகநூல் பக்கத்தில், "எதிலும் சமத்துவம் இல்லை. எம்.ஃபில், பி.எச்டி நுழைவுச்சேர்க்கையில் சமத்துவம் இல்லை. நேர்காணலில் சமத்துவம் இல்லை. ஒடுக்கப்பட்டவர்களின் கல்வி மறுக்கப்படுகிறது. சமத்துவம் மறுக்கப்பட்டால் எல்லாமே மறுக்கப்படுகிறது" என்று முத்துகிருஷ்ணன் பதிவிட்டிருந்தார்.
முற்றுப் பெறாத வழக்குகள்
தமிழக மருத்துவ மாணவர் சரத் பிரபு விவகாரத்தில், அவர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எட்டும் அளவுக்கு கோழை அல்ல என்று அவரது உறவினர்கள் கூறுகிறார்கள். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர் நல்ல நிலையிலேயே இருந்தார் என்று அவரது உறவினர் ஜெயகாந்தன் கூறுகிறார்.
இதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் சரவணன் கடந்த ஆண்டு உயிரிழந்தார். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர அவரும் டெல்லி வந்தவர்.
ஹோஸ் காஸ் கிராமம் என்ற பகுதியில் தங்கியிருந்த அவர், தனது வலது கையில் ஊசி செலுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது ரத்தத்தில் பொட்டாசியம் குளோரைட் கலந்திருந்தது பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது.
ஆனால், வலது கை பழக்கம் உள்ள ஒருவரால், இடது கை மூலம் வலது கையில் உள்ள நரம்பில் ஓர் ஊசியை சரியாக அழுத்திச் செலுத்த முடியாது என்று அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
தமிழக மருத்துவ மாணவர் டெல்லியில் மர்ம மரணம்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் தமிழக மாணவர் தற்கொலை
மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு
இதற்கிடையே, தனது மகன் சரவணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அதை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவரது தந்தை கணேசன் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட அவரது வழக்கை ஆறு மாதங்களுக்குப் பிறகு கொலை வழக்காக காவல்துறை மாற்றி தற்போது விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.
சரவணன் - சரத் பிரபு வழக்குகளின் வேறுபாடு
சரவணன் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, அந்த காவல்துறை சரகத்தில் கூடுதல் துணை ஆணையராக நுபுர் பிரசாத் இருந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று துணை ஆணையராக ஷாதரா காவல் சரகத்தில் அவர் பணியாற்றி வருகிறார். அவரது காவல் சரக எல்லையில்தான் சரத் பிரபு உயிரிழந்த பகுதியும் வருகிறது.
இது குறித்து நுபுர் பிரசாத்திடம் பிபிசி கேட்டதற்கு, துரதிருஷ்டவசமாக இரு தமிழக மாணவர்கள் உயிரிழந்த சம்பவங்களும் நான் தலைமை ஏற்றுள்ள காவல் சரகத்தில் நடந்துள்ளன என்றார்.
ஆனால், சரவணன் வழக்கில் சில முற்றுப்பெறாத குழப்பங்கள் நிலவின. அவர் ஊசி செலுத்துவதற்கான வாய்ப்பு இல்லை எனத் தெரிய வந்ததால், அவருக்கு யாராவது ஒருவர் அந்த ஊசியை செலுத்தியிருக்க வேண்டும் என்பது விசாரணையின் புதிய கோணத்தை ஆராயத் தூண்டியது என்கிறார் நுபுர் பிரசாத்.
அதேசமயம், "சரத் பிரபு விவகாரத்தில், அவர் உயிரிழந்த இடத்தில் ஊசியும், மருந்தும் இருந்துள்ளன. தற்கொலை செய்து கொண்டதற்கான குறிப்பு உள்ளதா அல்லது வேறு யாரிடமாவது அந்த எண்ணம் குறித்து அவர் பேசினாரா போன்றவை குறித்து விசாரித்து வருகிறோம்" என்று நுபுர் பிரசாத் தெரிவித்தார்.
"மன அழுத்தங்களுடன் பணி செய்கிறோம்''
இதற்கிடையே, சரத் பிரபு விவகாரத்தில், அவர் பயிற்சி எடுத்து வந்த குரு தேக் பகதூர் மருத்துவமனையில் கூடுதல் பணிச்சுமையால் சக மருத்துவர்கள், மிகுந்த மன அழுத்தங்களுக்கு ஆளாவதாக பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் அந்த மருத்துவமனையின் உள்ளுறை மருத்துவர்கள் சங்கத்தினரும் பல முறை முறையிட்டுள்ளனர் என்று அந்த மருத்துவர்கள் கூறினர்.
தமிழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள், தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவங்களில், அத்தகைய எண்ணம் குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் மாணவர்களுக்கு எதனால் ஏற்படுகின்றன என்று டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் உளவியல் நிபுணர் டாக்டர் மோனிகாவிடம் கேட்டோம்.
தொடர்புடைய செய்திகள்
வெளி மாநிலங்களில் தமிழக மாணவர்களின் மரணங்கள் ஏன் நின்றபாடில்லை?
பிற மாநிலங்களில் தமிழக மாணவர்கள் பாகுபாட்டுக்கு ஆளாகின்றனரா?
மற்ற பகுதிகளைப் போல டெல்லி ஒன்றும் நட்புறவுக்கு வலு சேர்க்கும் இடமில்லை என்பது உண்மைதான் என்று அவர் கூறினார். எனவேதான் குறிப்பாக தென் மாநிலங்களில் இருந்து டெல்லி போன்ற வட மாநிலங்களுக்கு வரும் மாணவர்கள், இளைஞர்கள், தங்களை வெளிநபர்கள் போலவே உணர்கிறார்கள். அதற்கு அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை, குடும்பப் பின்னணி போன்றவை ஓர் காரணம் என்கிறார் மோனிகா.
குறிப்பாக, பெற்றோர், நண்பர்களுடன் மிகவும் மகிழ்ச்சியான சூழலில் வாழ்ந்தவர்களுக்கு டெல்லியில் காணப்போடும் வர்த்தகமய வாழ்க்கை முறை, அவர்களின் பணியில் மிகுந்த அழுத்தத்தை உணர இடம் கொடுக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
பணி முடிந்த பிறகு விடுமுறை நாட்களிலும் புத்துணர்வுக்கோ, மகிழ்ச்சிகரமாக பொழுதை கழிக்கவோ அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதனால் தங்களின் அழுத்தங்களின் சுமையை குறைக்க வடிகாலின்றி மாணவர்கள் தவிக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
உளவியல் நிபுணரின் யோசனைகள்
இதற்கு ஒரே தீர்வாக அந்தந்த மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகங்கள், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கான பிரத்யேக கவுன்சிலிங் மையங்களை நிறுவ வேண்டும் என்பது மோனிகாவின் யோசனை.
மருத்துவம் மட்டுமின்றி, உயர் மருத்துவ படிப்புகளை பயிலும் மாணவர்களுக்கும் இந்த ஆலோசனைகளும் கலந்தாய்வுகளும் தேவை. குறிப்பாக, வெளிமாநிலங்களில் இருந்து வரும் மாணவ சமூகங்களை அவர்களின் வட்டாரத் தொடர்புகளுடன் ஒருங்கிணைக்க ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்கிறார் மோனிகா.
அனைத்து மருத்துவமனைகளிலும் ஒரு மூத்த மருத்துவரிடம் மனம் விட்டுப் பேசும் சூழ்நிலையையும் வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்புப் படைகள், தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பது போன்ற பட்டீ எனப்படும் நட்பு வட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மோனிகா கூறினார்.
"மருத்துவமனைகளில் பெயரளவுக்கு கவுன்சிலிங் மையங்கள் செயல்படாமல், இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒரு நட்பான சூழலை உருவாக்கும் முகமையாக அவை இருக்க வேண்டும். நோயாளிகளுக்கு ஆறுதல் கூறும் இடத்தில் இருக்கும் மருத்துவர்களுக்கும் இயல்பாகவே அழுத்தங்களும் வலிகளும் இருக்கும் என்பதை பலரும் உணரத் தவறுகிறார்கள்" என்று மற்றொரு உளவியலாளர் ராஜசேகரன் குறிப்பிட்டார்.
இளம் தலைமுறை தற்கொலை அதிகம்
உலகில் 15 வயது முதல் 21 வயது வரையிலான இளம் தலைமுறையினரின் தற்கொலை விகிதம் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று லேன்செட் மருத்துவ சஞ்சிகையின் 2012-ஆம் ஆண்டு ஆய்வறிக்கை கூறுகிறது.
இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டில் மாணவர்களாக இருந்த 8,934 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 2015-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் 39,775 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 8,934 பேரின் தற்கொலை சம்பவங்களில் மகராஷ்டிரத்தில் 1,230 பேரும், தமிழகத்தில் 955 பேரும் அடங்குவர்.
கல்வி, இளைஞர் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் மகாராஷ்டிரமும் தமிழகமும் முன்னேறி காணப்படுகின்றன. இந்த இரண்டிலும் அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்கள், பொருளாரத வளர்ச்சி மற்றும் இளைய தலைமுறையின் வாழ்க்கைத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
எய்ம்ஸ் மருத்துவ மாணவர் மரணத்தில் சந்தேகம்- நீதிமன்றத்தில் வழக்கு
டெல்லியில் தமிழ் மாணவனின் மரணம் கொலை வழக்காக மாற்றம்
முத்துகிருஷ்ணன் மரணம்: சி.பி.ஐ. விசாரணை கோரும் அரசியல் கட்சிகள்
இந்தியாவிலேயே அதிக தற்கொலை சம்பவங்கள் பதிவான மாநிலமாக சிக்கிம் உள்ளது என்று லேன்செட் கூறியுள்ளது. தனிபர் வருமானம், கல்வியறிவு போன்றவற்றில் இந்தியாவிலேயே ஏழாவதாகவும் தனிபர் வருமான விகிதத்தில் டெல்லி, சண்டிகருக்குப் பிறகு பணப்புழக்கம் அதிகம் மிக்க மாநிலமாகவும் சிக்கிம் உள்ளது.
தற்கொலைக்கு முக்கிய காரணங்கள்
பொதுவாக வேலைவாய்ப்பின்மை, வறுமை, கடன் சுமையின் அச்சம் போன்ற காரணங்களால் 21 வயது முதல் 30 வரையிலான இளம் தலைமுறையினரில் ஒரு பிரிவினர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தங்களின் வாழ்க்கை தொடக்கத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள முடியாமல், அதற்கான வாய்ப்புகளை அணுக முடியாமல் இந்த வயதினர் விரைவாக வாழ்வை முடித்துக் கொள்கின்றனர் என்று லேன்செட் ஆய்வு கூறுகிறது.
சென்னையிலிருந்து பெங்களூருக்கு 20 நிமிடத்தில் செல்ல உதவும் தொழில்நுட்பம்
நீதிபதிகள் நியமனம் ஒரு நடுநிலையான குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: சந்துரு கருத்து
தேர்வில் தோல்வி, பணி அழுத்தம் என வரும்போது தற்கொலை எண்ணத்தால் தூண்டப்பட்டவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கவும், ஆறுதல் கூறி தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் குடும்பத்தில் உள்ளவர்களோ சுற்றுவட்டாரமோ முன்வராதது, ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மன நலன் மேம்பாட்டுக்காக ஆளும் அரசுகள் வெறும் 0.06 சதவீதம் அளவுக்கு மட்டுமே நிதி செலவிடுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஓர் அறிக்கை கூறுகிறது. ஆனால், வளர்ந்த நாடுகளில் பெரும்பாலானவை 4 சதவீதத்துக்கும் அதிகமான நிதியை மன நலன் மேம்பாட்டுக்காக ஒதுக்குகின்றன.
உளவியல் நிபுணர்களுக்கு பற்றாக்குறை
2015-ஆம் ஆண்டில் மத்திய சுகாதார அமைச்சகம் அளித்த நாடாளுமன்ற கேள்விகளுக்கான பதிலில், இந்தியாவில் மன நல மருத்துவ வல்லுநர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. 3,800 உளவியலாளர்கள், 898 மருத்துவ உளவியலாளர்கள், 850 உளவில் சமூக ஊழியர்கள், 1,500 மன நல செவிலியர்கள் மட்டுமே தேசிய அளவில் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு பத்து லட்சம் பேருக்கு மூன்று உளவியல் நிபுணர்கள் அல்லது அதை விடக் குறைவானவர்களே உள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
மற்ற காமன்வெல்த் நாடுகளில் லட்சம் பேருக்கு, இது 5.6 ஆக உள்ளது. இந்த மதிப்பீட்டின்படி பார்த்தால், இந்தியாவில் 66,200 உளவியலாளர்கள் தேவைப்படுகின்றனர்.
அந்த வகையில், தொலைதூரத்தில் இருந்து டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு படிக்கவோ வேலைக்காகவோ வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, அவர்களுக்கான அழுத்தங்களையும் வலிகளையும் குறைக்கக் கூடிய கட்டமைப்புகளை ஏற்படுத்த அவசியம் அதிகரித்து வருகிறது என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் டெல்லியில் தொடர்ச்சியாக உயிரிழந்திருப்பதை, ஒரு சம்பவமாகப் பார்க்காமல் சமூக வளர்ச்சித் தடைக்கான ஓர் எச்சரிக்கையாக பார்க்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
-----------------
தமிழக மாணவர்கள் மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோரும் மு.க.ஸ்டாலின்
 Web Team அரசியல் 18 Jan, 2018 07:55 AM
வெளி மாநிலங்களில் தொடரும் தமிழக மாணவர்களின் மரணங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் யு.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில், மருத்துவ மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் திருப்பூர் மாணவர் சரவணன் உயிரிழந்ததும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் மாரிராஜ் சித்திரவதைக்குள்ளாகி தற்கொலை செய்ய முயன்றதையும் குறிப்பிட்டுள்ளார்.
சரவணன் மரணம், மாரிராஜ் மீதான தாக்குதல் போன்றவற்றில் மாநில அரசு உறுதியான நடவடிக்கையை எடுத்து, உரிய முறையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால், தற்போது டெல்லியில் இன்னொரு தமிழக மாணவர் சரத் பிரபுவின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார். டெல்லியில் தமிழக மாணவர்களின் தொடர் மரணங்களை தடுக்கும் வகையில், சரவணன் மரணம், சரத் பிரபுவின் மரணம் ஆகியவை குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
-------------------

ஹிந்தியா ஹிந்தியர் கொலை மர்மமான ஹிந்தியர்