வெள்ளி, 20 ஏப்ரல், 2018

ஆண்டாள் பாசுரம் காமம் ஆபாசம் பாலியல் வைணவம்


aathi tamil <aathi1956@gmail.com>

ஜன. 20




பெறுநர்: எனக்கு




Jose Thanga Thamilan
19 மணி நேரம் ·



“முத்தன்ன வெண்முறுவல் செவ்வாயும் முலையும் அழகழிந்தேன் நான்புணர்வதோர் ஆசையினால் – என்கொங்கை கிளர்ந்து குமைத்துகுதூகலத்து ஆவியை ஆகுலம் செய்யும் அங்குயிலே!''

நாச்சியார் தன்னுடைய காதலனாகிய கண்ணனிடம் கொண்ட காமம் அவள் எண்ணப்படி நிறைவேறாமல் தாம் பட்ட உள்ளுணர்வோடு கூடிய துன்பத்தின் மிகுதியைக் குயிலிடம் கூறுவதாகப் பாட்டடிகள் அமைந்துள்ளன.

“நான் முத்துக்கள் போன்ற பற்களைப் பெற்றிருந்தேன். சிவந்த வாயையும், மார்புகளையும் பெற்றிருந்தேன். கண்ணனாகிய காதலன் வந்து என்னை புணராமையால் இவைகளின் அழகையெல்லாம் இழந்தேன்.
கண்ணனைப் புணர வேண்டுமென்ற ஆசை மிகுதியால் என்னுடைய மார்புகள் மகிழ்ச்சியால் உந்தப் பெற்று, பெருத்து, உணர்ச்சி வசப்பட்டு என்னுடைய உயிரைத் துன்பப்படும்படிச் செய்கின்றது. இவைகளை அழகிய குயிலே கூறுவாயாக!

மேலும் நாச்சியார் பாடுகின்றார்..

கண்ணீர்கள் முலைக்குவட்டில்
துளிசோராச் சோர்வேனைக்
காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்டு
இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு
இங்கிலக்காய் நானிருப்பேனே
என்னாகத்து இளங்கொங்கை
விருப்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகம் புங்குதற்கு எனப்
பரிவுடைமை செப்புமினே!

கண்ணனின் பிரிவுக்கு ஆற்றாமல் வருத்தம் மிகுந்து கண்களிலிருந்து கண்ணீர் கொட்டுகிறது. அக்கண்ணீர் மார்பின் முலைகளில் படிந்து முலைகளின் முனைகள் வழியாகத் துளித்துளியாக வழியும்படி வருத்தம் அடைகின்ற நான் காம நெருப்பால் சுடப்பட்டுத் தென்றலுக்கு ஆட்பட்டு துன்பமடைந்து இங்கிருப்பேன். என் மார்பின் இளைய முலைகளை கண்ணன் விரும்பி நாள்-தோறும் என்னைக் கூடும்படி விருப்பங் கொண்டு நான் இங்கு இருப்பேன் என்று அவனிடம் சொல்லுங்கள் என்று பாடுகின்றார்.

சாக்கடையைச் சந்தனம் என்பதும், மலக்காட்டை மலர்க்காடு என்பதும் முடை நாற்றத்தை முல்லை மணவாசம் என்பதும் தான் பக்தியும் பார்ப்பனீயமும் அதன் ஒழுக்கமும் போலும்!
கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை
தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பி
வெறிந்து என்னழலைத் தீர்வேனே!
என்றும் பாடுகிறார் ஆண்டாள்

*** ஆண்டாள் திருப்பாவை ***

Warning: Contains sexual content!

ஆண்டாள் பாடல் - ஒரு சாம்பிள்.. இந்த பக்தி பாடலை, இங்குள்ள யாராவது தங்களது குடும்பத்தினர் மத்தியில், பிள்ளைகளுக்கு, குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு விளக்கம் சொல்லி கற்றுகொடுக்க முடியுமா என்று நீங்களே படித்து பாருங்கள். இந்த ஒரு பாடல் மட்டும் கிடையாது, ஆண்டாள் பாடிய பெரும்பாலான பாடல்கள் இப்படித்தான் உள்ளன.. சந்தேகமிருந்தால் தேடி படித்துக்கொள்ளுங்கள.

"அவரை பிராயம் தொடங்கி
ஆதரித்தெழுந்த என் தடமுலைகள்
துவரை பிரானனுக்கே சங்கற்பித்து கொடுத்தேன் "

சின்ன வயசுல இருந்து வளர்த்து வந்த என் பருத்த முலைகளை கண்ணனுக்கே கொடுத்துடுறேன்.

"பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் கொங்கை கிளர்ந்து
குமைத்து குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்ய
என் அகத்து இளங் கொங்கை
விரும்பித்தம் நாள்தோறும்
பொன்னாகப் புல்குவதற்க்கு
என்புரிவுடமை செய்யுமினோ "

பாற்கடல் கொண்ட பெருமாளோடு செக்ஸ் வச்சுக்குறதுக்கு ஆண்டாளின் மார்புகள் கிளர்ந்து குதூகலிக்கிறதாம். அவரின் மார்புகள் தினமும் பெருமாளை நினைத்து விரைப்பதால் தினமும் தன்னை புணரச் சொல்றாங்க ஆண்டாள்.

"முத்தன்ன வெண்முறுவல்
செவ்வாயும் முலையும்
அழகழிந்தேன் நான்
புணர்வதோர் ஆசையினால்"

பெருமாளோடு செக்ஸ் பண்றத நினைச்சு ஆண்டாளின் உதடும் மார்புகளும் துடிக்கிறதாம்.

இவை எல்லாம் கடவுள் கண்ணனை நினைத்து பக்தை ஆண்டாள் பாடுவது திருப்பாவை. இன்னும் நிறைய இருக்கு

அதிலே 19 வது பாடல் ஒன்று உள்ளது. அதை எழுத ரொம்ப சங்கடமாயிருக்கு. அதனால மேட்டர மட்டும் சொல்றேன். வேற ஒண்ணுமில்ல,

அதிலே கண்ணன் தன் மனைவியை புணர்ந்து விட்டு அவள் மார்பில் படுத்து உறங்குகிறாராம். அதை பார்த்து ஆண்டாளுக்கு காம உணர்வு பொங்குகிறதாம்...

இப்பாடல்களை ஆண்டாள் எனும் கற்பனைக் கதாபாத்திரப் பெயரில் பெரியாழ்வாரே எழுதி இருக்க வேண்டும், ராஜாஜியின் கூற்றுப்படி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக