வெள்ளி, 13 ஏப்ரல், 2018

சேனைத்தலைவர் பரவல் மூப்பனார் பட்டம் சாதி குற்றப்பரம்பரை ஜி.கே.மூப்பனார் பற்றி உரையாடல் 2

aathi tamil <aathi1956@gmail.com>


aathi tamil <aathi1956@gmail.com> 11 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 4:57
பெறுநர்: aathi tamil <aathi1956@gmail.com>








Senthil Pandian Nadar கருப்பையா மூப்பனார் யார் பீட்டர் அல்போன்சு சேனைத்தலைவரா
1நிர்வகி


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1நா

Hide 21 Replies


Arutchelvan Thiru கருப்பையா மூப்பனார் முக்குலத்தோரில் ஒரு பிரிவு. பீட்டர்அல்போன்சு சேனைத்தலைவர்.
3நிர்வகி


விரும்பு · பதிலளி · 1நா

நெல்லைச்செல்வன் ச தனராச நத்தமான்நிர்வகி


விரும்பு · பதிலளி · 1நா

Murukesan எந்த கருப்பையா சகோ அருட்செல்வம்
1நிர்வகி


விரும்பு · பதிலளி · 1நா

தனராச நத்தமான் நெல்லைச்செல்வன் சகருப்பையா மூப்பனார்/சுருதிமான் என்பது பார்கவகுல உடையார்.
3நிர்வகி


விரும்பு · பதிலளி · 1நா

Murukesan இன்னும் எத்தனைபேரதான் முக்குலத்தோர்ன்னு சொல்லுவிங்களோ சொந்தமா யோசிங்கள் சகோ அருட்செல்வம்
1நிர்வகி


விரும்பு · பதிலளி · 1நா

Senthil Pandian Nadar குலசேகரன் பட்டின முருக பக்த செந்திக்கந்த மூப்பனார் இலைவியாபாரி அவர் என்ன சமூகம்நிர்வகி


விரும்பு · பதிலளி · 1நா

Arutchelvan Thiru Murukesan குமரி மைந்தன்,கருப்பையா மூப்பனார் கள்ளர் என்கிறாரே.நிர்வகி


விரும்பு · பதிலளி · 23h

Murukesan அருட்செல்வம் சகோ
அவர் ஒரு முட்டால் போல்பதிவு செய்கிறார் நாட்டுக்கே தெரியும் கருபபையா மூப்பனார் யார் என்று
1நிர்வகி


விரும்பு · பதிலளி · 23h

Arutchelvan Thiru Murukesan அவர் அகவை மிகுந்தவர்.எல்லாம்தெரிந்தவர் யாரும் கிடையாது.கருப்பையா மூப்பனார் எந்தச்சாதி என்பது ஒரு தகவல் அறிவு.எனக்கோ,அவருக்கோ சரியான தகவல் கிடைக்காமல் போயிருக்கலாம்.எனவே கடுஞ்சொற்களை தயவுசெய்து பயன்படுத்தவேண்டாம்.நிர்வகி


விரும்பு · பதிலளி · 22h

Murukesan எனக்கும் தெரியும் சகோ
ஒரு பொய்பொருந்த சொல்லவேண்டும்
கருப்பையாமூப்பனார் யார் என்றூ அனைவருக்கும் தெரியும் அப்படிஇருக்கையில் இவங்களுக்கு தெரியாதா
1நிர்வகி


விரும்பு · பதிலளி · 22h

மாவை உடையார் பேரவை ஒரு நதியின் கதை
"சோழ வளநாடு சோறுடைத்து' என்பார்கள். எங்கெங்கு காணினும் பச்சைப் பசேலென்ற வயல் பரப்பு. மரச்சோலைகளில் பச்சைக்கிளிகளும் குயில்களும் கிறீச்சிட்டும் கூவியும் இன்னோசை எழுப்புகின்றன. சலசலத்து ஓடும் காவிரி. அதன் இருபுறமும் பசுமையான மரங்கள்! சற்றே சில அடி தூரத்திலேயே அரசலாறு, திருமலைராஜன் ஆறு, குடமுருட்டி ஆறு என ஆறுகள் அடுத்தடுத்துப் பிரவாகமெடுத்தோடும் கபிஸ்தலம்தான், 1931ஆம் ஆண்டு ஆகஸ்டு 19ஆம் தேதி ஒரு 'தேசிய நதி'யைப் பிரசவித்தது. அந்த நதியைத் தோற்றுவித்தவர்கள் கோவிந்தசாமி மூப்பனாரும் சரஸ்வதி அம்மாளும்தான் என்ற போதிலும்கூட, அந்த நதிக்கு ஒரு நீண்ட பின்னணிகொண்ட மூலவரலாறு உண்டு!
கடந்த ஐந்து தலைமுறைகளாகக் கபிஸ்தலம், சுந்தரபெருமாள் கோவில், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளை மக்கள் 'மூப்பனார் தேசம்' என்றே அறிவார்களாம். அவ்வளவு பாரம்பரியம் மிக்க வரலாற்றுச் சிறப்பு கொண்டது மூப்பனாரின் குடும்பம்.
1770ஆம் ஆண்டு எல்லாக்கி முத்தையா மூப்பனார் நிறுவிய 'ஸ்ரீ வெங்கடாசலபதி அன்னச் சத்திரம் டிரஸ்ட்' அன்று தொடங்கி இன்றுவரை தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு, குறிப்பாக, ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் தேசாந்திரிகளுக்கும் மிகவும் வறுமையில் உள்ளவர்களுக்கும் அன்னதானம் செய்து வருகிறது. அவரது தலைமுறையில் வந்த ராமபத்ர மூப்பனாரும் 'கபிஸ்தலத்து ராஜா' என்றும், 'பெருங்கொடை வள்ளல்' எனவும் பெயர் பெற்றவர்.

அக்காலத்தில், தஞ்சை மண்டலத்திலிருந்த எண்ணற்ற சங்கீத வித்வான்களையும் புலவர்களையும் கலைஞர்களையும் அவர் போற்றிப் போஷித்து வந்தார். 'தமிழ்த் தாத்தா' என்றழைக்கப்படும் உ.வே.சாமிநாதய்யர், ராமபத்ர மூப்பனாரின் சிறப்புகள் குறித்துத் தமது பல்வேறு புத்தகங்களில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார். அவருக்குப் பின்வந்தவர்களான ரெங்கசாமி மூப்பனார், கோவிந்தசாமி மூப்பனார் போன்றோரும் தமது முன்னோர்களின் அடியொற்றியே சிறப்புற வாழ்ந்தனர்.
ரெங்கசாமி மூப்பனார் – செல்லதம்மாள் ஆகியோருக்குப் புதல்வராகப் பிறந்தவர் கோவிந்தசாமி மூப்பனார்.
கோவிந்தசாமி மூப்பனார் – சரஸ்வதியம்மாள் ஆகியோருக்கு மூத்த புதல்வராகப் பிறந்தவர் கருப்பையா மூப்பனார்.நிர்வகி


விரும்பு · பதிலளி · 22h

மாவை உடையார் பேரவை மூப்பனாரின் உடன்பிறந்தோர் 6 பேர். மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகள். ராமாநுஜத்தம்மாள், ரெங்கசாமி, சாந்தா, சுலோச்சனா, சம்பத், சந்துரு.

ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேர் விட்ட பெரிய குடும்பம்! ஒவ்வொருவருக்கும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று விரிந்தபோதிலும், பிரிந்துபோகாத கூட்டுக் குடும்பம்! அன்பு, மகிழ்ச்சி, கட்டுப்பாடு, பெரியோர்களுக்கு மரியாதை, செல்வத்திலும் பணிவு போன்ற நற்குணங்கள் அமையப் பெற்றுள்ளனர்.
கருப்பையா மூப்பனாரின் தந்தை கோவிந்தசாமி மூப்பனார் (ஆர்.ஜி.எம்) நல்ல பரோபகாரி! ஆனாலும் கண்டிப்பானவர்.

ஜி.கே.எம்.மின் இளவல் ஜி.ரெங்கசாமி மூப்பனார் கூறும்போது, "அப்பாவிடம் எங்கள் எல்லாருக்குமே ரொம்ப பயபக்தி இருந்தது. அவர் முன்னாடி நின்று பேசவே பயப்படுவோம். நாங்கள் ஒழுக்கமாக வளரவேண்டும் என்பதற்காகக் கறாராக இருப்பார். அனாவசியமாக ஊர்சுற்ற அனுமதிக்க மாட்டார். அதனால் அண்ணன் (ஜி.கே.எம்.) தமது நண்பனும் அத்தை மகனுமான சிவராஜ் மூப்பனாரோடு வீட்டிலேயே விளையாடுவார். மற்ற சில நண்பர்களும் வீட்டிற்கு வருவார்கள். சடுகுடு, ஃபுட்பால், பாட்மிட்டன் போன்ற விளையாட்டுகளை அபாரமாக விளையாடுவார். சைக்கிள் ஓட்டுவதில் சூரப்புலி! வீட்டு மாடிப்படிகளில் தடதடவெனச் சைக்கிளில் கீழே இறங்குவதைப் பார்ப்பதற்கே திகிலாக இருக்கும். குதிரைச் சவாரி செய்வதில் அலாதிப் பிரியம் அவருக்கு! அதுவே அவருக்குக் கால் ஒடிந்து, படிப்பு கெடும் நிலைக்குச் சென்றது. அதனால் ஆறாவது பாரம் வரையிலும்தான் படித்தார்.
இளம் பிராயத்தில், கும்பகோணத்தில் சாரணர் படையில் துடிப்புமிக்க தலைவராகவும் இருந்துள்ளார். காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது எதிர்நீச்சல் போடுவார். பாபநாசத்திலுள்ள விக்டோரியா போர்டு ஹைஸ் ஸ்கூலில்தான் படித்தார். தமிழில் நல்ல ஈடுபாடு உண்டு. ஆங்கிலத்திலும் அப்போதே சரளமாகப் பேச ஆரம்பித்துவிட்டார். கணக்கில் மட்டும்தான் கொஞ்சம் கஷ்டப்படுவார். (கணக்கின்றி அள்ளித் தரும் பரம்பரைக்குச் சொந்தக்காரர் அல்லவா!) சரஸ்வதி மஹால் லைப்ரரிக்குச் சென்று நிறைய படிப்பார். கல்கி, தேவன், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி போன்றவர்களின் படைப்புகளை விரும்பிப் படிப்பார். அந்தக் கதைகளில் வரும் நல்ல கேரக்டர்களைப் பற்றி சில நேரங்களில் சிலாகித்துச் சொல்லுவார்'' என்கிறார் ஜி.கே.எம்.மின் இளவல் ஜி.ரெங்கசாமி மூப்பனார் (ஜி.ஆர்.எம்.)
1நிர்வகி


விரும்பு · பதிலளி · 22h

மாவை உடையார் பேரவை அண்ணனுக்கும் உங்களுக்கும் உள்ள நெருக்கம் பற்றிச் சொல்லுங்களேன்?''
அண்ணனைப் பற்றிக் கேட்டவுடன் பேச ஆரம்பித்த ஜி.ஆர்.எம். கண்ணோரங்களில் லேசாக நீர் திரளுகிறது. "அண்ணன்தான் எங்களுக்குச் சகலமும்! அப்பாவிற்குப் பிறகு அப்பாவின்பால் எங்களுக்கிருந்த பயபக்தியும் மரியாதையும் அண்ணன் மீது தான்! அண்ணன் தம் வாழ்க்கையைத் தேசத்திற்காக ஒப்படைத்துவிட்டார். அதனால் அவருக்கு முடிந்தவரை குடும்பச் சுமைகளும் கவலைகளும் இல்லாமல் இருக்கவும், அவர் விரும்பியபடி ஒற்றுமையாக இருக்கவும் நாங்கள் ஆசைப்படுகிறோம்.
1955இல் அப்பா இறந்ததிலிருந்து இந்தக் குடும்பத்தின் முழுபாரத்தையும் இளம் வயதிலேயே தோளில் சுமந்தவர் அண்ணன். அண்ணன் சொன்னாரென்றால் அதற்கு மறுபேச்சு நாங்கள் பேசுவதில்லை. "டேக் இட் ஈஸி பாலிசி" அண்ணனுடையது. பெருந்தன்மையோடு அனைவரையும் அரவணைத்துச் செல்லுவார். எந்தச் சூழ்நிலையிலும் அவர் பதற்றமடைவதையோ, கலங்கி நின்றதையோ நாங்கள் கண்டதில்லை. வீட்டு நிர்வாகம், நிலபுலன்களைக் கவனிக்கும் நிர்வாகம், கட்சி நிர்வாகம் போன்ற எதிலுமே மிகச் சிறப்பான நிர்வாகத்திறன் கொண்டவர். இங்கே இளம் பிராயத்திலே அவர் நிர்வகித்த (1956 – 1972 ) சந்திரசேகரபுரம் கூட்டுறவுப் பண்டகசாலை இந்தியாவிலேயே மிகச் சிறந்த கூட்டுறவு ஸ்தாபனம் என்ற விருதைப் பெற்றது.'
்: இவ்வளவு நிர்வாகத்திறன் உள்ள அவர் பெரிய தொழிற்சாலைகள் போன்றவைகளை ஆரம்பித்துச் செல்வத்தைப் பெருக்கியிருக்கலாமே?''
"எவ்வளவோ பேர் இதுபோன்ற யோசனைகளை அவரிடம் சொல்லிப் பார்த்துவிட்டனர். 'செய்யலாம்தான். ஆனால், பிறகு நான் பொதுவாழ்க்கையிலிருந்து விலகி வந்துவிட வேண்டியதுதான்' என்பதுதான் அவரது பதில். பொதுவாழ்க்கையில் தமக்கு இருக்கும் செல்வாக்கைச் சொத்து, செல்வங்களைப் பெருக்கிக் கொள்ளப் பயன்படுத்தக் கூடாது என்பதில் அவர் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளார்'' என்றார் ஜி.ஆர்.எம்.
ஓர் இயல்பான விவசாயிக்கே உரிய எளிய தோற்றமுள்ளவரான 80 வயது நிரம்பிய மூப்பனாரின் தாய்மாமாவான சருக்கை எஸ். பழனிச்சாமி மூப்பனார் கூறியதாவது, "சின்ன வயதிலேயே துருதுருவென்று 'ஆக்டிவ்'வாக இருப்பார். இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தபோது அவருக்குப் பதினாறு வயது. எனக்கு இன்னும் பசுமையாக ஞாபகம் உள்ளது. ஆகஸ்டு 14ஆம் தேதி இரவு. நாங்கள் அனைவரும் தூங்காமல் இந்தியா சுதந்திரமடைந்த அறிவிப்பைக் கேட்டு ஆனந்தமாகப் பேசிக்கொண்டிருந்தோம். மூப்பனாரின் அப்பா கோவிந்தசாமி மூப்பனார் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராயிருந்தார். மறுநாள், நாங்கள் மக்கள் அனைவரையும் எங்கள் வீட்டிற்கு அழைத்தோம். ஆகஸ்டு 15, கோவிந்தசாமி மூப்பனார் வீட்டு வாசலில் தேசியக்கொடி ஏற்ற, நான் உணர்ச்சிப் பெருக்கோடு பேசி முடிக்கவும் கிராம மக்கள் 500 பேருக்கு விருந்து வழங்கப்பட்டது.நிர்வகி


விரும்பு · பதிலளி · 22h

மாவை உடையார் பேரவை மூப்பனாரின் கல்யாணத்தைப் பற்றி அவசியம் சொல்லியே ஆகவேண்டும். அது, இங்குள்ள மக்களின் கிராமத் திருவிழா போல நடந்தது எனலாம். பந்தக்கால் நட்டதிலிருந்து பார்த்தால் ஒரு மாசம் திருமண விழா நடந்தது. திருமண நாளில் ஒவ்வொரு வேளைக்கும் சுமார் 15,000 ஜனங்கள் உணவு அருந்துவார்கள். பெரிய பெரிய சங்கீத விற்பன்னர்கள், மேதைகளின் கச்சேரிகள் நடந்தது. அன்றைக்குப் பிரபலமாயிருந்த நாட்டியக் கலாமணிகள் லலிதா, பத்மினி நாட்டியமாடினார்கள். ஜூன் 1949ஆம் ஆண்டு, 18 வயதிலேயே அவருக்குத் திருமணம் நடந்தது. அவரது அத்தை மகள் கஸ்தூரியைத்தான் கைப்பிடித்தார். இவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் கோவிந்தவாசன், உஷாராணி. தந்தையின் அருங்குணங்களை இளம் வயதிலேயே ஒருங்கே பெற்றவராகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் கோவிந்தவாசன் (ஜி.கே.வாசன்).

தஞ்சைத் தரணியில் உள்ள பலதரப்பட்ட கோவில் திருவிழாக்களில் இந்தக் குடும்பத்தின் கைங்கரியம் எப்போதும் இருந்து வருகிறது. எங்கள் வீட்டிற்குப் பெருந்தலைவர் காமராஜர் பலமுறை வந்துள்ளார். தஞ்சை மாவட்டத்திறகு வரும்போதெல்லாம் இங்குத் தங்கிச் செல்வது பெருந்தலைவரின் வழக்கம். ஒருமுறை தந்தை பெரியார் கூட வந்திருந்தார். 'நீங்க காமராசரைத் தீவிரமாக ஆதரிப்பது குறித்து எனக்குச் சந்தோஷம். இப்படியே இருங்கள்' என மூப்பனாரை வாழ்த்தினார்.
[ மூப்பனார் ஒரு மென்மையான ஆன்மிக ஆர்வலர். அடிக்கடி திருப்பதி செல்வார். மண்டகப்படி, சுவாமிக்குக் கல்யாணம் செய்விப்பார். யாருக்குமே தெரியாது, பிரசாதம் தரும்போதுதான் தெரியும். ஆன்மிகப் பெரியவர்களைச் சந்திப்பார். ஆதீன மடாதிபதிகளைப் பார்ப்பார். காஞ்சிப் பெரியவரின்மீது மிகுந்த மரியாதை கொண்டவர். தமிழ்நாடு மட்டுமல்ல, கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை பரந்துபட்ட நட்புள்ளவர்'' என்கிறார் பழனிச்சாமி மூப்பனார்.

பழம்பெரும் காங்கிரஸ்காரரும் சுதந்திரப் போராட்டத் தியாகியுமான வெங்கடாச்சலம், "காங்கிரஸ் பேரியக்கத்திற்கென எந்த ஒரு காரியத்தைத் தந்தாலும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் இயல்பு அவரிடம் இளமையிலேயே இருந்தது. அதிகம் பேசாத, உண்மையான செயல்வீரர் என்றால் அது மூப்பனார்தான்.
1952ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது, சுழன்று சுழன்று பணியாற்றினார். கிருஷ்ணசாமி வாண்டையாருக்கு மூப்பனாரின்மீது எப்போதும் ஒரு வாஞ்சையுண்டு. கட்சிக்கு அன்றைய தினம் ஒரு செல்லப்பிள்ளைதான் மூப்பனார். ஒருநாள் வாண்டையார் என்னை அழைத்து, 'நீங்கள் கபிஸ்தலம் போய் கருப்பையா தம்பியைப் பார்த்து மெம்பர், தீவிர மெம்பர் மற்றும் மாநிலக் குழு உறுப்பினருக்கான விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்கி வாருங்கள்' என அனுப்பினார். அதன்படி அவரிடம் கையெழுத்து வாங்கி, 21 ரூபாயும் காலணாவும் பெற்று வந்தேன்.
1நிர்வகி


விரும்பு · பதிலளி · 22h

மாவை உடையார் பேரவை எல்லாரும் வற்புறுத்திய பின்புதான், 1965இல் தஞ்சை மாவட்டக் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடைய காலத்தில்தான் தஞ்சை மாவட்டத்தைக் காங்கிரஸின் வலுவான கோட்டையாக்கிக் காட்டினார். 1967 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியடைந்த நேரத்தில்கூட, தஞ்சை மாவட்டத்தில் பாதிக்குப்பாதி இடங்களில் வெற்றிபெற்று, தி.மு.க.விற்குக் கடுமையான போட்டியைத் தந்தது'' என்று கூறினார்.

82 வயதைக் கடந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கட்டாரம் ஏ.மாரிமுத்து, தஞ்சை மாவட்டக் காங்கிரஸ் தலைவராக மூப்பனார் இருந்தபோது துணைத் தலைவராகப் பணியாற்றியவர். அவர் கூறும்போது, "என்னைப் போன்ற சாதாரணமான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்களும் பொதுவாழ்க்கûயில் பலதரப்பட்ட பதவிகளை வகிக்கக் காரணமாய் இருந்துள்ளார். ஐயா வந்துவிட்டால் எப்போதும் உற்சாகம்தான்! பலதரப்பட்ட பிரச்சினைகள், சவால்கள் வரும்போது, நாங்களெல்லாம் கலங்கி நின்றபோது, அதையெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமாக அணுகி, தீர்த்து வைப்பார். ஐப்பசி மாதத்தில் அடைமழை பொழியும் நேரத்தில்கூட கூட்டங்கள் நடத்துவார். தஞ்சை மாவட்டத்தில் – அன்றைய மாவட்டம் என்பது இன்றுள்ள நான்கு மாவட்டங்களை ஒருங்கே கொண்டது. அவற்றில் அவர் கால்படாத கிராமங்களே இல்லை! அந்தக் காலகட்டத்தில், நடந்த பல்வேறு ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சித் தேர்தல்களில் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற அயராது பாடுபட்டவர். ஒருமுறை விவசாயிகள் போராட்டத்திற்கு ஐயாவின் தலைமையில் 19,000 பேர் சிறை சென்றோம்.
பெருந்தலைவருக்கு ஐயாவின்மேல் தனிப் பாசமே உண்டு. ஐயாவை 'அம்பி' என்று செல்லமாகப் பெயரிட்டுப் பெருந்தலைவர் அழைப்பார்.
'ஐயாவின் ஞாபக சக்தி அபாரமானது. குக்கிராமங்களில் உள்ள தொண்டர்களைக் கூடப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் பேசுவார். என்னைப் போன்ற ஏழை எளிய, பின்தங்கிய குடும்பத்துக் கட்சிக்காரர்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தவறாமல் வருவார்'' என்று கூறிமுடித்தார்.

"அந்தக் காலத்திலிருந்தே சிறுபான்மை சமூக மக்களின் இனிய நண்பராக ஐயா இருந்துள்ளார். கட்சிப் பாகுபாடில்லாமல் அன்பு செலுத்துவார். மாற்றுக் கட்சியிலுள்ள சாதாரணத் தொண்டனைக் கூடத் தெரிந்து வைத்திருப்பார். பாபநாசம், அய்யம்பேட்டை, பண்டாரவாடை போன்ற பகுதிகளிலுள்ள இஸ்லாமிய மக்கள் எப்போதுமே ஐயாமீது அபாரமான அன்பு கொண்டவர்கள். இஸ்லாமிய மக்களின் பல குடும்ப நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டுள்ளார்.
1நிர்வகி


விரும்பு · பதிலளி · 22h

மாவை உடையார் பேரவை பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார் காலத்தில், சொல்வது அவராக இருந்தபோதிலும் அதைச் செய்து முடிக்கும் செயல்வீரராக ஐயா விளங்கினார். ஒரு தொண்டனுக்குரிய அனைத்து இலக்கணங்களோடும் அந்தக் காலத்தில் அவர் பணியாற்றியதை அருகிலிருந்து நாங்கள் பார்த்துள்ளோம்'' என்கிறார் வல...மேலும் பார்க்கவும்
1நிர்வகி


விரும்பு · பதிலளி · 22h

மாவை உடையார் பேரவை #செந்தில்பாண்டியன்முழுவதும் படிங்கநிர்வகி


விரும்பு · பதிலளி · 22h

Senthil Pandian Nadar மூப்பனார் குறித்த உங்கள் தகவல்கள் சத்தியமூர்த்தி பவனில் நான் அறிந்த வைதான் அவர் எந்த பிரிவு என்பதில் தான் எனக்கு சிறு சந்தேகம் இருந்தது
1நிர்வகி


விரும்பு · பதிலளி · 21h

Murukesan சந்தேகபுத்தி கொண்டே இருக்கவேண்டும் பாண்டியன்நிர்வகி


விரும்பு · பதிலளி · 21h

Senthil Pandian Nadar என்ன சந்தேகம் தலைவா அவரையும் பீட்டர் அல்போன்ஸ் அவர்களையும் நன்கு அறிந்த அடிப்படையில் அவர்கள் குறித்த எனக்கான சந்தேகம் தெளிவு பெற கேட்டேன் இதில் நீங்கள் என்ன தவறு கண்டீர்கள் அவர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரி செல்லும் முன்பு வீட்டில் உட்கார்ந்து இருந்த போது என்னை அருகில் அழைத்து நல்வா இலுக்கீங்களா என கேட்டது இன்றும் என் நினைவில் நிற்கிறதுநிர்வகி


விரும்பு · பதிலளி · 21h

N.Durai Murugan ஐயா ஜீகே மூப்பனார் பார்க்கவ குலம்நிர்வகி


விரும்பு · பதிலளி · 10h


பதில் எழுதவும்...





Subash Vannian Ctr
Andez Raj A Fernando மேலே உள்ள மொத்த comments ஐ படிக்கவும்
1நிர்வகி


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1நா

நெல்லைச்செல்வன் ச Aathimoola Perumal Prakashநிர்வகி


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1நா

Aathimoola Perumal Prakash என் தாத்தா பெயர் ஆதிமூல மூப்பனார்.
1நிர்வகி


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1நா

தனராச நத்தமான் Aathimoola Perumal Prakashகாந்தளூர் சோலை களமறுத்தலிய கத்திக்கார மூப்பனார்?நிர்வகி


விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு · பதிலளி · 1நா

நெல்லைச்செல்வன் ச திருநெல்வேலியை பொருத்தவரை மூப்பனார் என்றால் தான் தெரியும் சேனைத்தலைவர் என்றால் அவ்வளவாக தெரியாது.... பேட்டை தச்சநல்லூர் பகுதிகளில் வசிக்கின்றனர்.... பெரும்பாலும் பந்தல் தொழில் செய்கின்றனர்
2நிர்வகி


விரும்பு · பதிலளி · 1நா

Arutchelvan Thiru வெற்றிலை பயிரிட்டு,வணிகம் செய்ததால் இலைவாணியர் என்றும் சொல்வார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக