செவ்வாய், 26 செப்டம்பர், 2017

நெல்லூர் சித்தூர் பிரகாசம் 70% தமிழர் ஆனால் பொதுஇடங்களில் அரசு வேலை தெலுங்கு ஓசூர் நிலை அவ்வாறே வந்தேறி ஆதிக்கம் மண்மீட்பு

ஆந்திராவில் சித்தூர், நெல்லூர், பிரகாசம் மாவட்டங்களில்
70%விழுக்காடுக்கு மேல் தமிழ் மக்கள் அதாவது தமிழ் சாதிகள் வாழ்ந்தாலும்,
அங்கே பொது இடங்களிலோ அரசு அலுவலகங்களிலோ தமிழ் எழுத்துக்களை பார்க்க
முடியாது அரசுப் பணியில் உள்ள அனைத்து மக்களும் தெலுங்கு சாதிக்காரர்கள்
(80%விழுக்காடுக்கு மேல் தெலுங்கு சாதிக்காரர்களே),
அப்படியே ஒசூர் பக்கம் வந்து பாருங்கள் 33%விழுக்காடு தெலுங்கு
சாதிக்காரர்கள், 28%விழுக்காடு கன்னட சாதிக்காரர்கள் பொது இடங்களில் ஏன்
அரசு அலுவலகங்களில் தெலுங்கு,
கன்னட பெயர் பலகை தான் கம்பீரமாக நம்மை பார்த்து சிரிக்கிறது,தளி தொகுதி
இன்னும் கேவலம் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதி அங்கேயும் இதே நிலை தான்
இந்த இடத்தில் அதிகாரத்திலும்,
அரசுப் பணியில் தமிழ் சாதிக்காரர்கள் இல்லை,அவர்கள் எவ்வளவு அழகாக தம்
தாய் மொழியை வளர்க்கிறார்கள்,தமிழர்கள் இறையாண்மை நுரையாண்மை னு
திராவிடர்கள் சொல்வதை கேட்டு கொண்டு நேர்மையாக செயல்படுகிறார்கள்.
# prakasam.

அப்துல் கலாம் சுந்தர் பிச்சை தமிழர் பெருமை கிடையாது

தமிழன்டா....!
சுந்தர் பிச்சையும், அப்துல் கலாமும் ஒண்ணுதான்! இவர்களால் தமிழர்களுக்கு
சல்லி பிரயோஜனமில்லை. ஜனாதிபதி பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் பதவிதான்
என்பதை, தன் பதவி காலம் முழுக்க நிரூபித்தவர் கலாம். அதுவும் தான் பிறந்த
மண்ணுக்கும் குலத்திற்கும் சம்பந்தமுள்ள ராமேஸ்வரம் மீனவர்களுக்கு கூட
துளி நன்மை செய்தவரல்ல. பிடிவாதமாக முயன்றிருந்தால் அன்றே இந்த
பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு கண்டிருக்க முடியும். குறைந்த பட்சம்
அவரது விஞ்ஞான மூளையை பயன்படுத்தி படகுகள், தானே எல்லை தாண்டாத அளவுக்கு
ஒரு நுட்பத்தை கண்டு பிடித்திருக்க முடியும்.
அவர் செய்த ஒரே நல்ல விஷயம் ராக்கெட், ஏவுகனைகள்தான். இவரில்லாவிட்டாலும்
அந்த காரியத்தை சுவாமிநாதன், மயில்சாமி அண்ணாதுரை மாதிரியான வேறு
விஞ்ஞானிகள் செய்திருப்பார்கள். செய்தே ஆக வேண்டிய நிலையிலிருந்தது
இந்தியா. பின் ஏன் இவருக்கு இவ்வளவு கொண்டாட்டம்? ஆர்ப்பாட்டம்? அன்பு?
(தமிழன் எப்பவும் இப்படிதான். எளிதில் உணர்ச்சிவசப்படுகிற இடியட்)
அப்புறம் சுந்தர்பிச்சை. வருஷத்துக்கு 100 கோடிக்கும் மேல் சம்பளம்
வாங்குகிற தமிழன். ஆனால் தமிழில் வெளிவரும் வெப்சைட்டுகளுக்கு விளம்பரம்
தராது இவர் தலைமையிலான கூகுள். அதுவே ஆங்கிலம் என்றால் அது பத்து பேர்
படிக்கிற வெப்சைட்டாக இருந்தாலும் முதல் நாளே வழங்கிவிடுவார்கள்.
இதற்கப்புறம் சுந்தர்பிச்சையை புகழவும் இகழவும் ஒரு எழவும் இல்லை.
அடச்சே... இப்படியெல்லாம் பேசுறீயே, நீயெல்லாம் ஒரு தமிழனா? என்று
சீறுகிற சின்னக்குஞ்சுகள் இவர்களால் தமிழன் பெற்ற நன்மைகளை ஆதாரத்துடன்
விளக்கினால் நான் உங்களுக்கு பின் வரிசையில் நின்று கடவுளாக நினைத்து
கன்னத்தில் போட்டுக் கொள்ள தயார்.

கம்யூனிஸ்ட் எழுச்சி கொலைகள் தமிழரசன் நக்சலைட் ஜேவிபி

சீனமும் அமெரிக்காவும் –அன்றும் இன்றும் – 2
நகசல்பாரி இயக்கம் என அழைக்கப்பட்ட இந்த இயக்கத்தில் மாணவர்களும்
இளைஞர்களும் பங்கேற்றனர். சராசரி உழைப்பாளர்கள், சிறுதொழில்
உடமையாளர்கள், சிறு வாணிகர்களைப் போன்ற உழைப்பு இன்றியே அவர்களை விட பல
மடங்கு ஈட்டும் அறிவுசீவிகள் எனப்படும் படித்து வேலைபார்க்கும் கூட்டம்
கோட்பாட்டளவில் இந்த இயக்கத்துக்கு உளவியல் ஊக்கம் கொடுத்தது. மேற்கு
வங்காளத்துக்கு இணையாக ஆந்திர மாநிலத்திலும் இந்த இயக்கம், குறிப்பாக
வரண்ட பகுதியான இராயலசீமா பகுதியில் நன்றாக வேரூன்றியது. இயக்கம்
வளர்ச்சியடைந்து அரை முதலாளியர், அரை நிலக்கிழார்கள் எனப்படும் சராசரி
மக்களைப் படுகொலை செய்தல் தொடங்கியது. இது ஓர் எல்லையைத் தாண்டிய போது
இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து பல்லாயிரவரைக் கொன்றது. அலுவலகக்
கணக்கு 20,000 என்று கூறப்பட்டாலும் ஆவணங்களை அழித்துவிடுமாறு
ஆணையிடப்பட்டுள்ளதால் சாவுகள் ஓரிலக்கத்துக்கு மேலிருக்கும் என்று
கருதப்படுகிறது.
அண்டையில் தொங்கிக்கொண்டிர
ுக்கும் இலங்கையில் “சனதா விமுக்தி பெரமுனா” என்ற பெயரில் இன்று தமிழர்
ஒழிப்பில் பெருமுனைப்புக் காட்டும் இயக்கம் மாவோயியம் எனப்படும்
மார்க்சிய – லெனினிய இயக்கமாகத்தான் தோன்றியது. காவல்துறையினர் அடக்க
முயன்ற போது அவர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும்
“அழித்தொழிக்க” “தோழர்கள்” முயன்றனர். அதன் எதிர்வினையாக
காவல்துறையினரையும் படைத்துறையையும் ஏவி விட்டது இலங்கை அரசு. நாட்டுப்
பொதுப் பாதுகாப்புக்கு இந்திய படைத்துறையை கமுக்கமாக வரவழைத்துக்கொண்டது.
படையினரும் காவல்துறையினரும் அரிவாள்களைக் கொண்டு இயக்கத்தினரை
சாலையோரங்களில் வெட்டிச்சாய்த்தனர். ஒன்றரை இலக்கம் பேர் இவ்வாறு
கொன்றொழிக்கப்பட
்டனர். இன்று இலங்கயின் ஆட்சியில் கிட்டத்தட்ட அனைத்து அரசுகளிலும்
பங்கேற்று தமிழர்களுக்கு எதிராக நஞ்சைக் கொட்டுவதே தொழிலாகக் கொண்டு
இயங்குகிறது அந்த இயக்கம்.
அதே போல் தென்னமெரிக்காவின் பெரு நாட்டில் ஒளிரும் பாதை (Shining Path)
என்ற பெயரில் இயங்கிய இயக்கதிலுள்ள பல இலக்கம் இளைஞர்கள் கொன்றொழிக்கப்பட
்டார்கள். இவ்வாறு மாவோவின் பெயரால் அமெரிக்கா மூன்றாம் நாடுகள் எனவும்
வளரும் நாடுகள் எனவும் ஏழை நாடுகள் எனவும் அழைக்கப்படும் நாடுகளிலுள்ள
இளமைத் துடிப்பும் பொது நல நாட்டமும் சிந்தனைத் திறனும் செயல் வீரமும்
கொண்ட, அந்த நாடுகளின் எதிர்கால கலங்கரை விளக்குகளாக வாய்ப்புள்ள பல கோடி
இளைஞர்களைத் தவறான கோட்பாடுகளைப் புகுத்தி நடுத்தெருவுக்கு இழுந்துவந்து
துள்ளத்துடிக்கக் கொன்றொழித்த கொடுமை 20ஆம் நூற்றாண்டில் நடந்தேறியது.
தமிழகத்திலும் வரண்ட, வேளாண்மை – தொழில்துறை வளர்ச்சியற்ற திருவண்ணாமலை
மாவட்ட திருப்பத்தூர், சேலம் – தருமபுரி மாவட்டங்களில் இவ்வியக்கம்
செல்வாக்கும் வளர்ச்சியும் பெற்றது. புலவர் கலியபெருமாள், தியாகு
போன்றோர் கொன்றொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்று பிடிபட்டு மரண
தண்டனை பெற்றிருந்த நிலையில் வல்லரசிய ஒற்றர்கள் எசு.வி.இராசதுரை,
அ.மார்க்சு போன்றோர் அவர்களைச் சிறைக்கோட்டத்தில் அணுகி மன்னுப்பு
வேண்டுகை பெற்று மரண தண்டனையைச் சிறைத்தண்டனையாக்கி பின்னர் விடுதலையும்
பெற்றனர். பின்னர் “தமிழ்த் தேசிய விடுதலை”’யை ஏற்றுக்கொண்டதாகவும்
அறிவித்தார்கள். புலவர் கலியபெருமாள் இறந்துபோக தியாகு கருணாநிதியின்
ஊதுகுழலாக மாறி இன்று இதழாழராக, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக
வாழ்கிறார். தமிழரசன் முனைப்பான தமிழக விடுதலை இயக்கத்தை முன்னெடுத்தார்.
ஆனால் மக்கள் நடுவில் இறங்கிச் செயற்பட முடியாத நிலையில் காவல்துறையின்
தேடுதல் வளையத்துக்குள் இருந்தார். அவர் இருப்பிடத்தை அறிந்து தமிழகக்
காவல்துறையினரே பொதுமக்களைப் போல் நடித்து அவரை ஓட ஓட விரட்டி
அடித்துக்கொன்றனர்.
எப்படியாவது கட்சியை வளர்த்து ஒரு முதலமைச்சராகிவிட வேண்டும் என்று
துடித்துக்கொண்டிருந்த பா.ம.க. தலைவர் மரு.இராமதாசை வளைத்து அவரை வைத்து
தமிழகத் தன்தீர்மானிப்புரிமை மாநாடு ஒன்றை வல்லரசிய ஒற்றர்களான
பேரா.கல்யாணி போன்றோர் அவருடன் தென்மொழி ஆசிரியர் பெருஞ்சித்திரனாரையும்
கலந்துகொள்ள வைத்தனர். தீர்மானம் நிறைவேற்றிய பின் காவல்துறை இவர்களைத்
தேட மரு.இராமதாசு அப்போதைய தமிழக பேரவைக் கட்சித் தலைவராக இருந்த
சம்பந்தியார் வாழப்பாடி இராமமூர்த்தி வீட்டில் அடைக்கலமாகித்
தப்பித்தார். பெருஞ்சித்திரனார் மட்டும் மாட்டிக்கொண்டு காவல்துறையினரின்
கடும் தாக்குதலுக்கு உள்ளாகி விடுதலை பெற்ற குறுகிய காலத்தில் இறந்தார்.
இன்றும் படித்து பெரும் சம்பளங்களுடன் பக்க வரவுகளையும் கூச்சமின்றி
பெறும் படித்த ஒரு கூட்டம் மூலதனம் இடுவதே சுரண்டலுக்கு இட்டுச் செல்லும்
என்று தேசிய வளர்ச்சிக்கு எதிரான கோட்பாட்டைப் பரப்பி மாநிலங்களின் மீது
இந்திய பனியாக்களின் நடுவரசு நடத்தும் தேசியப் பொருளியல் ஒடுக்குமுறையை
வரவேற்கும் மனநிலையை இளைஞர்களிடையிலும் படித்தவர்களிடையிலும் உருவாக்கி
வைத்துள்ளனர். பனியா – பார்சி – வல்லரசிய விசைகள் இங்கு நடத்தும்
பொருளியல் படையெடுப்பை கருத்தரங்குகள், ஆர்ப்பாட்டங்கள், இதழ்கள்,
கட்டுரைகள் மூலம் எதிர்ப்பதற்கு மேல் எதுவும் செய்யாமல்
அடங்கிப்போகிறார்கள் இவ,கள். இவர்களால் தங்கள் பொருளியல் நடவடிக்கைகளைக்
கட்டுப்படுத்த முடியாத அதே வேளையில் தாங்கள் உள்ளூர் பொருளியல் விசைகள்
மீது நடத்தும் பொருளியல் ஒடுக்குமுறையை எதிர்க்க மாட்டார்கள் என்ற
வகையில் தங்கள் நலனுக்கு இன்றியமையாதவர்கள் என்று மறைமுக ஊக்கமும்
வழங்கிவருகிறார்கள் வல்லரசியர்கள்.
சீனத்தில் பட்டினிச் சாவுகளும் பிழைப்பு தேடி மக்கள் உலகெலாம் ஓடுவதும்
மட்டுமீறின. கப்பல்களில் சரக்குப்பெட்டகங்களுக்கிடையில் பதுங்கி
வெளிநாடுகளுக்குத் தப்பியோடியோர் பெட்டகங்களுக்கி
டையில் சிக்கி நசுங்கிச் சாவதும் கள்ளத்தோணிகளில் தப்பியோடுவதும் தொடங்கி
உலகமெல்லாம் நாற்றமெடுத்த பின்னர் வல்லரசுகளின் சிறப்புப் பொருளியல்
மண்டலங்களை உருவாக்கினர். அமெரிக்காவில் பெருமளவுக்கு சீனர்களுக்கும்
இடம் கிடைத்தது. இன்று சீனத்தில் பிற நாடுகளில் போல் தொழிலாளர்கள்
நடத்தப்படவில்லை. அவர்களுக்கு கூலி எதுவும் கொடுக்கப்படுவதாகத்
தெரியவில்லை. தனிக்குடியிருப்
புகள் அமைத்து உணவு, உடை, குழந்தைகளுக்குக் கல்வி போன்ற வசதிகளுடன் ஒரு
கொத்தடிமை முறை அங்கு கடைப்பிடிக்கப்ப
டுகிறது. அதனால் மிக மலிவாக அவர்களால் பண்டங்களைப் படைத்து வெளிநாடுகளில்
விற்க முடிகிறது. இதில் சீனத்துக்கு மிகப்பெரும் சந்தை 125 கோடி மக்களைக்
கொண்ட இந்தியா.
தொடரும்…..

கம்யூனிஸ்ட் அரசியல் மாவோ நக்சலைட் வெள்ளாளர் பார்ப்பனர் தலைமை பிளவு

சீனமும் அமெரிக்காவும் –அன்றும் இன்றும் - 1
20 – 07 – 2017 தினமணியில் இந்து மக்கள் கட்சித் தலைவராம் அர்சுன்
சம்பத்து “சூழ்ந்து வரும் போர் மேகம்” என்ற தலைப்பில் கட்டுரை
எழுதியுள்ளார். திபேத்தை சீனா கைப்பற்ற அதன் ஆட்சியாளர் தலாய்லாமா
இந்தியாவில் தஞ்சமடைய, அதைக் காழ்ப்பாக வைத்து சீனம் இந்தியா மீது
படையெடுத்து 47,000 சதுர மைல்கள் – 1,20,320 ச.கிமீ. இந்தியப் பரப்பைக்
கைப்பற்றியதைக் குறிப்பிடுகிறார். அத்துடன் பொதுமைக் கட்சி சார்புடைய
கிட்ணமேனன் பாதுகாப்புத்துற
ை அமைச்சராக இருந்ததாலும் இந்தியப் படை சரியாக இயங்கவில்லை என்பது
கட்டுரை ஆசிரியரின் குற்றச்சாட்டு. பெண் பொறுக்கியான நேருவுக்கு
கிட்ணமேனன் பிடித்தமானவன் என்பதில் எந்த வியப்புமில்லை. அந்தக்
காலகட்டத்தில்தான் இந்தியப் படைத்துறையில் அதிகாரிகள் நிலையில்
மலையாளிகளின் ஆதிக்கமும் உருவானது. கயவாளி காந்தியின் தேர்வான நேருவே
இந்திய மக்களின் இன்றைய அனைத்துத் துயரங்களுக்கும் காரணம் என்பது
வரலாற்று உண்மை. பனியாக்களின் பின்னணியில் ஆட்சி நடத்திய எந்தத்
தலைமையமைச்சரும் அதே தடத்தில்தான் செல்கின்றனர் என்பதும் உண்மை. இந்தப்
போரின் விளைவாக இந்தியப் பொதுமைக் கட்சி இரண்டாக உடைந்தது என்ற
உண்மைக்குப் புறம்பான கருத்தை இவர் கட்டுரையில் முன்வைத்துள்ளார். உண்மை
என்னவென்றால் உருசிய முற்றதிகாரி தாலின் 1953இல் இறந்ததும் உலகப் பொதுமை
இயக்கத் தலைமை தனக்குத்தான் கிடைக்கும் என்று மனப்பால் குடித்திருந்த
மாவோவின் எதிர்பார்ப்புக்கு மாறாக குருச்சேவு அந்த இடத்தைப்
பிடித்துக்கொண்டார்.
1956இல் குருச்சேவு தாலின் காலத்து அத்துமீறல்களை வெளிப்படுத்தி அவரது
படிமத்தைச் சிதைக்கும் பணியைத் தொடங்கியதோடு லெனினுக்கு இணையாகப் பாடம்
செய்து பாதுகாக்கப்பட்ட தாலின் பூதவுடலையும் அகற்றி கல்லறையில்
புதைத்தார். இது உலகெலாம் உள்ள பொதுமைக் கட்சியினரின் மனங்களில்
மட்டுமல்ல பொதுவான பொதுமை நாடிகளின் மனதில் கூட தாக்கங்களை
ஏற்படுத்தியது. இந்தப் பின்னணியில் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இருந்த
பொதுமைக் கட்சிகளில் உருசியச் சார்பு – சீனச் சார்பு என்ற பிளவுகளை
உருவாக்கியது. இந்தியாவைப் பொறுத்த வரை 1964இல் இந்திய பொதுமைக்
கட்சி(மார்க்சியம்) – CPIM உருவானது.
தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுமைக் கட்சி தலைமை இடங்களில் பெரும்பாலும்
சிவனிய வெள்ளாளர்களின் பிடியிலிருந்தன. அதிலிருந்து விலகிப் பார்ப்பனர்
அவ்விடங்களைக் கைப்பற்றுவதாகவே மார்க்சியப் பிரிவினரின் அமைப்பு
உருவானது. பார்ப்பனரான இராமமூர்த்தி அதன் தலைவரானார்.
சீனத்தின் தலைமையிலிருந்த மாவோ அதிகார போதை தலைக்கேற காதல் செய்யுள்கள்
எழுதுவது ஆடல் பாடல்களில் இன்பமாகப் பொழுது போக்குவது என்று நமது சீவக
சிந்தாமணியின் அரசன் சச்சந்தன் போல் தன்னை மறந்து இருந்த வேளையில் அவரது
எதிரிகள் சுற்றிவளைக்கத் தொடங்கினர். அது மட்டுமல்ல மாபெரும் முன்
பாய்ச்சல்(The Great Leap Forward) என்ற பெயரில் வேளாண்மையைப்
புறக்கணித்து தொழில் வளர்ச்சி என்ற பெயரில் பெரும் முதலீட்டை இறக்கினர்.
அத்துடன் தனிமனிதர்களின் வேளாண் – தொழில் முனைவுகள் தடுக்கப்பட்டன. நாடு
முழுவதும் பட்டினிச்சாவுகளால் 5.5 கோடி மக்கள் செத்ததாக வரலாற்றறிஞர்கள்
கூறுகின்றனர். இந்தச் சூழலில்தான் எதிரிகள் அவரை வீழ்த்த முயன்றது. ஆனால்
சச்சந்தன் போலன்றி காலங்கடந்து போவதற்குச் சற்று முன்பாகவே சூழலை
உணர்ந்துகொண்டு தலைவர் தன் சொந்த மாநிலத்துக்குத் தப்பி ஓடிவிட்டார்.
அங்கு தன்னை நிலைப்படுத்திக்கொண்ட பிறகு 1966இல் அறிவிக்கப்பட்டதுதான்
“மாபெரும் பண்பாட்டுப் புரட்சி”. பொருளியல் பொதுவுடைமைப் புரட்சி
முடிந்துவிட்டது, இப்போது தேவை பண்பாட்டுப் புரட்சி என்று அறிவித்துத்
தன் சார்பானவர்களை ஒருங்கிணைத்து மீண்டும் பெய்சிங் வந்து
அமர்ந்துகொண்டார். இருந்த சூழலைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த அமெரிக்கா,
தன் அயலுறவுத்துறைச் செயலர் கிசிங்கரின் ஏற்பாட்டின் படி அமெரிக்க
குடியரசுத் தலைவர் நிக்சன் 1972இல் சீனம் சென்று மாவோவைச் சந்தித்தார்.
அதற்குள்ளாகவே அமெரிக்கா தன் அழிம்பு வேலையைத் தொடங்கிவிட்டது. ஏழை
நாடுகளில் அரை நிலக்கிழமை, அரை முதலாளியப் பொருளியல் நடைமுறையில்
இருப்பதாகவும் உழைக்கும் மக்களை இந்த அரை நிலக்கிழார்களும் அரை
முதலாளியரும்தாம் சுரண்டுகிறார்கள் என்றும் அவர்களைக் கொன்றொழிப்பதுன்
மூலமே உழைக்கும் மக்களை நல்வாழ்வு வாழ வைக்கும் பொதுமைக் குமுகத்தை
உருவாக்க முடியும் என்ற பரப்பல் அமெரிக்கப் பண உதவியுடன் ஏழை நாடுகள்
அனைத்திலும் முழுவீச்சில் நடைபெற்றது. இந்தப் பரப்பலை நெஞ்சில் தாங்கி
இந்தியாவில் செயற்பட்டவர் மேற்கு வங்க மாநிலம் நக்சல்பாரி என்ற ஊரில்
சாரு மசூம்தார் என்பவர்.
தொடரும்....

கடனாநதி வாலீஸ்வரன் கோயில் சோழர் படைத்தளம் அம்பாசமுத்திரம் திருநெல்வேலி கோவில்

திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரத்திற்கு அருகே கடனா நதியின்
தென்கரையில் அமைந்திருக்கும் திருவாலீஸ்வரத்தில் உள்ள பழமையான கோயில்
திருவாலீஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலின் சிற்பங்கள் அற்புதமான வடிவில்
அமைக்கப்பட்டுள்ளன. முழுவதும் கருங்கல்லினால் எழுப்பப்பட்ட விமானத்தில்
சோழர் கால செழுமையான சிற்பக் கலையை பறைசாற்றும் அற்புத சிற்பங்கள் பல
உண்டு.
இக்கோயிலின் சுற்றுச் சுவர்கள் அனைத்திலும் ஏராளமான கல்வெட்டுக்கள்
நிறைந்து காணப்படுகின்றன. பெரும்பாலான கல்வெட்டுக்கள் ராஜராஜன் காலத்து
அரசியல் நிகழ்வுகளின் ஆவணங்களாக அமைந்து அந்நாளைய நீர்மேலாண்மை, நில
மேலாண்மை, வரிவசூலிப்பு, தானங்கள் போன்ற தகவல்களை உள்ளடக்கிய தகவல்
பெட்டகமாக அமைந்திருக்கின்றன.
கி.பி 980 முதல் 1150 வரை கிழக்கு மேற்கு தெற்கு எனக் கடலால் சூழப்பட்ட
இந்தியத் தீபகற்பம் முழுவதும் சோழர்களின் ஆட்சியே நிலவியது எனலாம்.
இவர்களின் வடக்கு எல்லை துங்கபத்திரை, கோதாவரி நதிவரை பரவியிருந்தது.
இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் காலத்தில் சோழப்பேரரசு கடல் கடந்தும்
கடாரம் தாண்டியும் பரந்து விரிந்தது. கடல் கடந்த நாடுகளையும்
கைப்பற்றியவர்கள் சோழர்கள்.
எனவே சோழப்பேரரசில் ஆற்றல் மிக்க தரைப்படை, யானைப்படை,
குதிரைப்படைகளுடன், கப்பற்படையும் இருந்தன. படையின் ஒவ்வொரு பிரிவுக்கும்
தனித்தனிப் பெயர்கள் இருந்தன. காலாட்படையில் சிறப்பிடம் பெற்ற படை
கைக்கோளப்படை. இவர்கள் தவிர வில்லெறியும் வில்லாளிகள், வாள்படைவீரர்கள்
என்போரும் இருந்தனர்.
முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் 'மூன்றுகை
மகாசேனை' என்ற ஒரு சிறப்புப் படையும் இருந்தது. இதுவே பல உள்நாட்டு
வெளிநாட்டு வெற்றிகளை ஈட்டியது. இந்த மூன்றுகை மகாசேனையின் ஒருபிரிவின்
தளமாக இருந்த இடம் திருவாலீஸ்வரம் ஆகும். இங்குள்ள வாலீஸ்வரர் கோயிலே
அந்தப் படைத்தளமாக விளங்கியது. இன்று நாம் பார்த்தாலும் அந்தக் கோயில்
ஒரு கோட்டை கொத்தள சாயலுடன் இருப்பதை நாம் உணர முடியும்.
இந்தக் கோயிலில் இருந்து செயல்பட்டு வந்த மூன்றுகை மகாசேனை கிழக்கே
காடாரம் வரையிலும் தன் கண்காணிப்பில் வைத்திருந்ததாகத் தெரிய வருகிறது.
அது போல் மேற்கே ஆரியங்கா கணவாய் வழியே கொல்லம் திருவனந்தபுரம் வரையிலும்
கூட இந்த கண்காணிப்பு நீடித்ததாம். முதலாம் ராஜேந்திரன் காலத்தில்
இவ்வளவு முக்கியத்துவமான இந்த திருவாலீஸ்வரம் இன்று ஆரவாரமின்றி
கடனாநதிக்கரை ஓரமாக அமைதியாக இருந்து கொண்டிருக்கிறது.
.
.
திருவாலீஸ்வரம் கோயில் விமான சிற்பங்கள்ளை விளக்கும் ஓவிய ஆசான் சந்ரு
அவர்கள்.....உடன் நான்.....

தமிழர் 3 கதிரவன் புத்தாண்டு மற்றும் 3 நாட்காட்டி முறைகள் குமரிக்கண்டம் ஆடிப்பெருக்கு வானியல்

இரவு - பகல் என்று எந்த உயிரினமும் கணிக்கத்தவறாத கால அளவுகளுக்கு
அப்பால் நிலவின் வளர்ச்சி தேய்வுகளை மனிதன் கண்டான். இது இரவில்தான்
இயலும். காருவா ஆகிய அமாவாசைக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு நிலவ்வு
கதிரவனுக்கு மிக நெருக்கமாக இருப்பதாலும் அதன் ஒளிப்பகுதி மிக மிக
மெலிதாக இருப்பதாலும் மூன்றாம் நாள்தான் அது தெளிவாகக் கண்ணுக்குத்
தெரியும். அதனால் தமிழரகள் மூன்றாம் பிறையைக் கண்டதும் கன்னத்தில் போட்ட
நிகழ்வு 2 தலைமுறைகளுக்கு முன் வரை தொடர்ந்தது. அடுத்து தொடர்ந்த
கடற்செலவுகளால் நிலவின் இயக்கத்தைத் துல்லியமாகக் கணித்து முதல்
பிறை(பிரதமை)யிலிருந்து கணித்தனர். 12 சுற்றுகளுக்கு ஒருமுறை
முழுநிலவன்று அதன் பின்னணியிலிருக்கும் விண்மீன் கூட்டத்துக்கு
கிட்டத்தட்ட நேரே மீண்டும் வருவதால் அந்த கால அளவை மாதத்தை விட உயர்ந்த
ஆண்டு என்ற காலக்கணிப்பாக்கினர். அதனை அடுத்து பகல் வேளைகளில்
குறிப்பிட்ட கால இடைவெளியில் நிழல் வடக்கும் தெற்குமாக நகர்வதை வைத்து
கதிரவ ஆண்டுமுறையை வகுத்தனர். இது பெரும்பாலும் சுறவ(மகர)க் கோட்டில்
தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்திருக்கலாம். காலன், சிறு பொழுது
எனப்படும் யாமம் என்ற பெயரால் அறியப்படும் எமன் போன்றோரால் இது
வகுக்கப்பட்டிருக்கும். அப்போது ஆண்டுப்பிறப்பு திசம்பர் 21இல்
நிகழ்ந்தது. ஒவ்வொரு மாதத்துக்கும் உரிய விண்வெளிக்கூட்டத்தின் பெயர்களை
அதற்குச் சூட்டினார்கள். கொல்லம் ஆண்டுமுறையில் அப்பெயர்கள்தாம் இன்றும்
கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழர்களின் தலைநகர் தென் மதுரைக்கு வந்த போது
அங்கு கதிரவன் வரும் மார்ச்சு 21இல் வரும் மேழ மாதப் பிறப்பை ஆண்டுப்
பிறப்பாகக் கொண்டனர். மதுரை முழுகி கபாடபுரத்துக்குத் தலைநகர் வந்த போது
அந்நகர் மீது கதிரவன் வரும் ஏப்பிரல் 14 ஆண்டுப் பிறப்பாகக் கொண்டதுடன்
அம்மாததில் முழுநிலாவன்று கதிரவன் இருக்கும் ஓரையாகிய மேழத்துக்கு நேர்
எதிரில் நிலா இருக்கும் துலை ஓரையின் முதல் நாள்மீனான(நட்சத்திரம்)
சித்திரையை அம்மாதத்துக்கு வைத்தனர. ஒவ்வொரு ஓரையிலும் இரண்டேகால்
நாள்மீன்கள் அடக்ககம்.
இந்த மாற்றங்கள் மேம்பாடுகளை எல்லாம் அறியாத வடக்ககிலிருந்து வந்த
பார்ப்பனப் பூசகர்கள் பிறந்த நாளுக்கு நாள்மீனையும் இறந்த நாளுக்கு
திதிகளையும் வைத்துப் பிழைப்பு நடத்துகின்றனர். இதையெல்லாம் மீறி
மாமன்னன் கரிகாலன் நிறுவிய ஆடிப் பதினெட்டாம் பெருக்கு அறிவுக்கண்
உள்ளோருக்குக் கலங்கரை விளக்கமாக உள்ளது. விரிவுக்கு "குமரிமைந்தன்
படைப்புகள்" என்ற தலைப்பில் "தமிழன் கண்ட ஆண்டுமுறைகள்" என்ற
கட்டுரையையும் பிறவற்றையம் பார்க்க. http//: kumarimainthan.blogspot.com

தமிழர் நாட்காட்டி உருவாக்கியது எப்படி விரிவான பதிவு வானியல் எமன் பஞ்சாங்கம் 3 புத்தாண்டு

குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 3/31/2008 11:35:00 முற்பகல் தமிழன் கண்ட
ஆண்டுமுறைகள்
மனிதன் என்பவன் ஓரணுவுயிர் தன்னைத் தானே மேம்படுத்தி, தன்னையும் அறியும்
அளவுக்கு கட்டமைத்துக்கொண்ட இயற்கையின் ஒப்புயர்வற்ற வடிவம். அது ஒவ்வொரு
கட்டத்திலும் தன்னை மேம்படுத்துவதற்குத் தன்னைச் சுற்றிலுமுள்ள
இயற்கையின் பிற கூறுகளை அறிந்தும் தற்செயலாகவும் கொண்ட உறவுகள்
அடிப்படையானவை. அவ்வாறு தான் மனிதன் காலக் கணக்கீடும் அமைந்தது.
மனிதனும் சரி விலங்குகளும் சரி தாவரங்களாகிய நிலைத்திணைகளும் சரி
தவிர்க்கமுடியாமல் அறியவும் பட்டறியவும் படும் காலப்பாகுபாடு இரவு பகல்
என்பதாகும். இந்த இரு காலப் பாகுபாடுகளுக்கிடையில் பல்வேறு உயிர்களின்
உயிரியக்கத் தொடர் தவிர்க்க முடியாதபடி பிணைந்துள்ளது.
அதற்கு அடுத்தபடியாக மனிதனின் கவனத்தைக் கவர்ந்தது நிலவின் இயக்கம்.
கதிரவனின் ஒளியை இழந்த இரவின் இருளில் தனிக்காட்டு அரசனாக ஆட்சி செய்வது
நிலவு. எனவே அதனுடைய ஒவ்வொரு அசைவையும் மனிதனால் வெறுங்கண்களாலேயே
நோட்டமிட முடிந்தது. வளர்ச்சி தேய்வு என்ற இரு கோடி நிலைகளுக்குள் ஒரு
குறிப்பிட்ட கால இடைவெளியில் அது இயங்கி வந்தது. இரவு பகல் இணைந்த நாள்
என்ற காலப்பகுப்புக்கு அடுத்ததாக மனிதன் நிலவின் வளர்வு தேய்வு என்ற இரு
கலைகளுக்கும் இடைப்பட்ட காலத்தை, அளக்கும் அலகாகக் கொண்டான். அதையே
மனிதனின் வாழ்நாளை அளக்கும் அளவையாகவும் கொண்டான். அவ்வாறுதான் யூத மறை
நூலில் தாம் போன்றவர்களின் அகவை தொள்ளாயிரத்துக்கும் கூடுதலாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இன்றுள்ள ஆண்டுக் கணக்கில் அது 80க்கு
மேல் வராது.
இந்தக் காலப் பகுப்பும் மனிதனின் தேவைகளை நிறைவு செய்யவில்லை.
பருவகாலங்களின் பெயர்ச்சியைத் தடம்பிடித்தல் வேளாண்மை, கடல் செலவு
போன்றவற்றுக்கு இன்றியமையாததாக இருந்தது. எனவே நிலவுக்குப் பின்னால்
விளங்கும் விண்மீன்களை மனிதன் நோட்டமிட்டான். அவை கூட்டம் கூட்டமாகவும்
தனித்தனியாகவும் வான்வெளி எங்கும் பரந்து கிடந்ததைப் பார்த்தான். அது
மட்டுமல்ல, அவை இரவு வானில் நிலையான இடங்களைப் பிடித்திருக்கவில்லை
என்றும் அவற்றுக்கு ஒரு சுழற்சி இருக்கிறதென்றும் கண்டான்.
இந்த மீன் கூட்டங்களையும் நிலவையும் வைத்துப் பார்த்தபோது ஒருமுறை
நிறைமதியின் பின்னணியில் காணப்படும் மீன் தொகுதி அடுத்த முறை வேறிடத்தில்
இருப்பதும் நிலவின் பின்னணியில் வேறொரு மீன் கூட்டம் இருப்பதும் தெரிய
வந்தது. இவ்வாறு ஏறக்குறைய 12 நிறை நிலா முடியும்போது நிலவுக்குப் பின்
ஏறக்குறைய முதல் நிறை நிலாவுக்குப் பின்னணியில் இருந்த மீன்கூட்டம்
தோன்றுவதைப் பார்த்தான். எனவே 12 நிலாச் சுழற்சிகளைக் கொண்ட ஓர் ஆண்டை
முதன்முதலாக மனிதன் வடிவமைத்தான். அத்துடன் நிலவுக்குப் பின்னணியில்
வரும் மீன்கூட்டங்களுக்கு, தான் விரும்பும் அல்லது தன் கற்பனைக்கு ஏற்ப
அல்லது தான் வணங்கும் தெய்வத்தின் அடிப்படையில் ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு
வடிவம் கொடுத்து அவற்றுக்கு ஓரைகள் என்று பெயரும் கொடுத்தான். ஓரை
என்பதற்குத் தமிழில் கூட்டம், மகளிர் கூட்டம் என்பது பொருள். அது
காலத்தைக் குறிப்பதாக மாறி ஒரு மணி நேரத்தைக் குறிப்பதாக ஓரா என்று
கிரேக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
மனிதனின் காலப் பகுப்புச் சிக்கல் இத்துடன் முடிந்து விடவில்லை. ஒரு 12
மாதச் சுழற்சியில் நிலவின் பின்னணியில் தோன்றும் ஓரைகள் துல்லியமாக அதே
இடத்தில் அடுத்த சுழற்சியில் இருப்பதில்லை. ஓரிரு ஆண்டுகளில் ஓர்
ஓரையிலிருந்து அடுத்த ஓரைக்கு நிலவின் இடம் நகர்ந்துவிட்டது. இதைச்
சரிக்கட்ட வேண்டிய தேவையும் ஏற்பட்டது.
அதேவேளையில் தெற்கே மகரக்கோடு எனப்படும் சுறவக்கோட்டில் ஓர் வான்
அறிவியல் புரட்சி நிகழ்ந்தது. இங்கு தான் கதிரவனின் தென்-வடல் செலவில்
தென்கோடித் திருப்பம் உள்ளது. இந்தக் கோட்டிற்குத் தெற்கில் நிழல்கள்
வடக்கே சாய்வதில்லை. இந்த இடத்தில் உள்ளவர்கள் மட்டுமே நோட்டமிடத்தக்க
ஓர் இயற்பாடு இது. இந்த இடத்தில் கதிரவன் வரும் ஒரு நாளில் மட்டும் நிழல்
சரியாகக் காலடியில் விழும் பிற நாட்களில் தெற்கில் சாயத் தொடங்கும். இந்த
நாளை நோட்டமிட்டால் பருவகாலச் சுழற்சிகளைத் துல்லியமாகத் தடம்பிடிக்க
முடியும். இதைச் செய்தவன் பெயர் தக்கன் என்பது. இவனைத் தொன்மங்கள்
தட்சப்பிரசாபதி என்றும் பிரமனின் மானச புத்திரன் என்றும் அசுரன் என்றும்
ஒரே நேரத்தில் குறிப்பிடப்படுகின்றன. தக்கன் என்பது ஒரு தனி மனிதனின்
பெயராக இருக்க முடியாது. ஒரு பீடம் அல்லது தலைமையின் பெயராக இருக்க
வேண்டும். அதனால்தான் திசையை(தெற்கு) வைத்துப் பெயர் சுட்டப்படுகிறது.
இந்தத் தெற்கன்கள் கதிரவனைப் புவி சுற்றிவருவதால் புவியிலிருந்து
பார்க்கும்போது கதிரவன் தென்வடலாக நகர்வது போல் தோற்றமளிப்பதை மட்டும்
நோட்டமிடவில்லை; கதிரவனின் தன்சுழற்சியால் ஏறக்குறைய 27⅓ நாட்களுக்கு
ஒருமுறை கதிரவனின் கரும்புள்ளிகள் புவியை நோக்கி வருவதையும் அதனால்
புவியிலுள்ள காந்தப்புலங்கள் தடம் புரள்வதையும் அதனால் கடலில் செல்லும்
கலன்களிலுள்ள திசைமானிகள் தவறான திசை காட்டுவதையும் நோட்டமிட்டு
அதனடிப்படையில் வான்வெளியை 27 பகுதிகளாகப் பிரித்து அவற்றுக்கு
நாள்மீன்கள்(நாள் + சத்திரம் + இருக்குமிடம் = நட்சத்திரம்) என்ற பெயரும்
இட்டனர். அத்துடன் சந்திரனை நோட்டமிட்டுக் கிடைத்த வானின் 12 பகுப்புகளான
ஓரையைக் கதிரவனின் இயக்கத்துடன் இணைத்து சுறவம்(மகரம்), கும்பம், மீனம்
என்ற மாதங்களையும் வகுத்தனர். அம்மாதப் பெயர்கள் இன்றும் கொல்லம் ஆண்டு
முறையில் மாதப் பெயர்களாக மட்டும் நின்று நிலவுகின்றன.
அது மட்டுமல்ல, கதிரவன் தொடர்பான 27 பகுப்புகளை உடைய நாள் மீன்களை
நிலவின் சுழற்சியுடன் இணைத்தனர். இது தொன்மக் கதை வடிவில் உள்ளது. தக்கன்
தன் பெண்களில் 27 பேரை நிலவுக்கு (சந்திரனுக்கு) மணம் முடித்துக்
கொடுத்தான். அவர்களின் பெயர்கள் கார்த்திகை, ரோகிணி என்று வருபவையாகும்.
காலத்தைக் கணித்ததால் காலன் என்றும், சாமங்கள் எனப்படும் யாமங்களை
வகுத்ததால் இயமன் என்றும் அறியப்படுபவர்களும் இவர்களே. இயமன் தென்திசைக்
கடவுள். யாமதிசை என்பது தென்திசை. இயமன் கதிரவனின் மகன் என்றும்
கூறப்படுகிறான். ஆக, வானியல் தொடர்பான அடிப்படைகளை உருவாக்கியவர்கள்
வாழ்ந்த இடம் சுறவக் கோட்டுப் பகுதியே ஆகும். எனவே அவர்கள் வகுத்த
ஆண்டுப் பிறப்பும் கதிரவன் தென்கோடியில் இருக்கும் சுறவத்
திருப்பத்துக்கு வரும் நாளான திசம்பர் 21/22 அன்றாகவே இருந்திருக்கும்.
இராவணனது இலங்காபுரியும் இதே சுறவக்கோட்டில் தான் இருந்தது. தாமிரபரணி
எனும் நிலப்பரப்பில் நிழல் தெற்கில்தான் விழுந்தது என்று கிரேக்க
ஆசிரியர்கள் பதிந்துள்ளனர். அத்துடன் இராவணனைப் பற்றிய தொன்மச் செய்தி
அவன் கதிரவனைத் தன் நாட்டினுள் வரவிடாமல் தடுத்தவன் என்பதாகும். இது
இராவணனது தலைநகர் ஒன்றேல் சுறவத் திருப்பத்திற்குத் தெற்கே அல்லது கடகத்
திருப்பத்திற்கு வடக்கே இருந்திருக்க வேண்டும் என்பதாகும். ஆனால் தெற்கே
என்பதற்குத்தான் சான்றுகள் உள்ளமையால் அவன் சுறவத் திருப்பத்தில்
இருந்தான் என்பதோடு அவனது ஆண்டும் திசம்பர் 21/22 நாட்களில் தான்
பிறந்திருக்கும்.
சுறவக் கோட்டிலிருந்த நிலப்பரப்பு அழிந்ததாலோ அல்லது கடலினுள்
அமிழ்ந்ததாலோ அல்லது நிலநடுக்கோட்டில் வாழ்ந்த மக்கள் நாகரிக உயர்வு
எய்தியதாலோ, நிலநடுக்கோட்டில் தங்கள் தலைநகரை நிறுவி தங்கள் ஆண்டுப்
பிறப்பை மார்ச் 21/22 இல் வைத்துக் கொண்டனர். இதற்கான அடிப்படை வானியல்
அறிவை தெக்கர்கள் வகுத்துத் தந்திருந்தனர்.
இந்த நிகழ்வுகளுக்கு ஊடாக, ஏற்கனவே நிலவின் சுழற்சியின் அடிப்படையில்
மாதங்களை வைத்திருந்த மக்களின் இடையில் நிலா மாதங்களைக் கதிரவனின்
சுழற்சியில் அடிப்படையில் வகுக்கப்பட்ட புதிய ஆண்டு முறையுடன் இணைக்கும்
ஒன்றுக்கு மேற்பட்ட உத்திகள் புனையப்பட்டன. அவற்றுள் சிலவற்றைப்
பார்ப்போம்.
1. சுமார்த்த ஆண்டு. இது வளர்பிறை முதல் பக்கத்தில் தொடங்கி அடுத்த
காருவா (அமாவாசை) அன்று முடியும் 12 மாதங்களைக் கொண்ட ஆண்டில் 2½
ஆண்டுகளுக்கு ஒரு மாதத்தைச் சூனிய மாதம் என்று கழித்து விடுவது.
2. எட்டு ஆண்டுகளில் முதல் நான்கு ஆண்டு முடிவில் இரண்டு மாதங்களும்
அடுத்த நான்கு ஆண்டுகளின் முடிவில் ஒரு மாதமுமாக மூன்று மாதங்கள்
ஒலிம்பிக் ஆட்டங்களில் செலவு செய்து கழிப்பது. இதை சியார்சு தாம்சன் என்ற
இங்கிலாந்தைச் சேர்ந்த கிரேக்க மொழிப் பேராசிரியர் தன் நூலொன்றில்
(Aeschilles and Athens) கூறியுள்ளார்.
3. 19 ஆண்டுகளுள்ள ஓர் ஆண்டுச் சுழற்சி. இதில் 7 ஆண்டுகள் 13 நிலவு
மாதங்களைக் கொண்டிருக்கும். இந்த ஆண்டு முறை யூதர்கள், சீனர்கள்
இடையேயும் தென்கிழக்காசிய நாடுகளிலும் நடைமுறையிலுள்ளது. இந்த ஆண்டுப்
பிறப்பன்று நம் பஞ்சாங்கங்கள் எனப்படும் ஐந்திறங்களில் 'துவாபர யுகாதி'
என்ற குறிப்பு இருக்கும் எனவே இந்த ஆண்டு முறையை வகுத்தவர்களும் நம்
முன்னோர்களே என்பது தெளிவு.
வானியலில் எந்த ஒரு வான் பொருள் அல்லது வான்பொருள் தொகுதியின்
இயக்கத்தின் கால அளவை இன்னொரு அதைவிடச் சிறிய வான் பொருள் இயக்கத்தின்
முழு எண்ணாகப் பார்க்கவே முடியாது.
நம் மூதாதையர் கதிரவனின் கோள்களில் புவி தவிர்த்த ஐந்தையும் ஒரு
துணைக்கோளான நிலவையும் கதிரவனையும் சேர்த்து நாட்களுக்குப் பெயரிட்டனர்.
வெள்ளி, செவ்வாய், பொன்(வியாழன்) என்ற பெயர்கள் அக்கோள்களின்
நிறத்துக்குப் பொருந்தி வருவது அவர்களது வானியல் ஆய்வின் நுண்மைக்குச்
சான்றாகும்.
இந்த ஏழு நாட்களையும் அடிப்படையாகக் கொண்டு மாதத்துக்கு 4 வாரங்கள், எனவே
28 நாட்கள் என்று வைத்து ஏற்கனவே வகுக்கப்பட்ட 27 நாள் மீன்களுடன்
அபிசின் என்றொரு நாள் மீனைச் சேர்த்து 28 நாட்கள் உள்ள ஒரு மாதத்தையும்
28 x 12 = 336 நாட்கள் கொண்ட சாவனம் என்ற ஆண்டு முறையையும்
கடைப்பிடித்துக் கைவிட்டிருப்பதற்குத் தடயம் உள்ளது (பார்க்க - அபிதான
சிந்தாமணியில் சம்வச்சரம் என்ற சொல்லின் விளக்கம்)
அது போல் 30 நாட்களைக் கொண்ட 12 மாதங்கள் 360 நாட்களைத்தான் தரமுடியும்.
ஆனால் புவியின் ஒரு தென்வடல் திரும்பல் 365 'சொச்சம்' நாட்கள் ஆகும்.
இருப்பினும் வட்டத்தின் பாகைகள் 360 என்பது இந்த 365 'சொச்சத்'தின்
தோராயப்பாடு ஆகும்.
இந்த 365 'சொச்சம்' நாட்களை முறைப்படுத்த எத்தனையோ உத்திகளை நம்
முன்னோர்கள் கையாண்டுள்ளனர். அவற்றில் ஒன்று, சோதிக் ஆண்டு (sothic year)
எனப்படும் 365 நாட்களைக் கொண்ட 1460 ஆண்டுகளின் சுழற்சியாகும்.
கதிராஆண்டு 365 நாட்கள் 5 மணி 48 நிமையங்கள், 46 நொடிகள் தோராயமாகக்(!)
கொண்டது. 365 நாட்கள் போக 'சொச்சத்தைத் தோராயமாக கால் நாள் என்று
எடுத்துக்கொண்டால் அதைச் சரி செய்ய நான்கு ஆண்டுக்கு ஒரு 'தாண்டு ஆண்டு'
வகுத்துள்ளனர் ஐரோப்பியர். அப்போதும் கூடுதலாக்க கணக்கிடப்படும் 11 நிமைய
14 நொடி 'சொச்சத்'தைச் சரிக்கட்ட 400 ம் ண்டை 365 நாள் கொண்ட இயல்பு
ண்டாக வைத்துள்ளனர். அப்போதும் சிறிது 'சொச்சம்' விழும். அது சிக்கல்
தரும் அளவுக்கு வருவதற்குப் பலநூறு நூற்றாண்டுகள் ஆகும். அப்போது
பார்த்துக் கொள்ளலாம்.
நாம் மேலே குறிப்பிட்ட சோதிக் ஆண்டு எகிப்தியர்களால் கையாளப்பட்டதாக
CHAMBERS TWENTIETH CENTURY DICTIONRY 1972 கூறுகிறது (பார்க்க - sothic
year)
ஆண்டுக்கு 365 'சொச்சத்'தைக் கால் என்ற எடுத்துக் கொண்டால் 365 நாட்களைக்
கொண்ட 1460 ஆண்டுகளில் 1460 / 4 = 365 நாட்கள் கொண்ட ஒரு முழு ஆண்டு
குறைவுபடும். அப்போது ஒரு முழுச் சுழற்சியாக ஓரைகள் தம் பழைய நிலைக்கு
வந்திருக்கும். ஆனால் அதற்குள் பருவகாலங்களின் கணிப்பு பெரும் சிக்கலாகப்
போயிருக்கும். நிலவு மாதங்கள் 12ஐக் கொண்ட ஆண்டு முறையுடன் ஒப்பிடும்போது
இது அதிகச் சிக்கல் வாய்ந்ததாகும். இந்தச் சூழலில் உருவாக்கப்பட்டதுதான்
சிவவாக்கியர் பெயரில் நிலவும் வாக்கியப் பஞ்சாங்கம் என்று தோன்றுகிறது.
அறுபது ஆண்டுகள் சுழற்சியுடைய ஓர் ஆண்டு முறையாகும். ஆனால் இதுவும் ஒரு
தோராயப்பாடே. உண்மையில் 59 ஆண்டுகளில் முன்பு வந்த திதிகள் மீண்டு
வருகின்றன. அதுபோல் வியாழனின் சுழற்சியும் துல்லியமாக 12 ஆண்டுகள் அல்ல,
அதைவிடவும் சிறிது குறைவு.
எகிப்தியர்கள் இந்த சோதிக் ஆண்டு முறையை மேம்படுத்தியிருப்பார்கள்.
ஏனென்றால் அவர்களிடமிருந்து தான் சூலியர் சீசர் இன்றைய கிறித்தவ ஊழியின்
மூல வடிவத்தை உரோமுக்குக் கொண்டு சென்றார்.
நம் மூதாதையர்களில் ஒரு பகுதியினர் சென்று கலந்ததால் எகிப்து
மிசிரத்தானம் என்ற வழங்கப்படுவதாக கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதி
கூறுகிறது. மிசிரம் என்ற சொல்லுக்கு கலப்பு, சமம் என்ற பொருள்களையும் அது
தருகிறது.
துருக்கரால் மிசிரு என்ற வழங்கப்படுகிற ஒரு தேசம், தற்காலத்தில்
ஐரோப்பியர்களால் ஈசிப்ட் என்று வழங்கப்படுகிறது. யயாதியால் தன்
தேசத்தினின்றும் ஓட்டப்பட்ட அவன் புத்திரர் நால்வரும் இந்த மிலேச்ச
தேசத்திற் சென்று அத்தேசத்து அரசராகி அந்த தேசத்துச் சனங்களோடு
கலந்தமையால் இது மிசிரத்தானம் என்னும் பெயருடைத்தாயிற்று.
இந்தக் கருத்தை உறுதி செய்யும் சான்றுகள் உள்ளன. ஆனால் அது நாம்
எடுத்துக்கொண்ட பொருளிலிருந்து நம்மை நெடுந்தொலைவு கொண்டுசென்று விடும்
என்பதால் தவிர்க்கிறோம்.
நம் மூதாதையர்களிடமிருந்து ஒவ்வொரு காலகட்டமாக இடம் பெயர்ந்த
மக்களிடமிருந்து நம் ஆண்டு முறைகள் எகிப்து வழியாகவும் வேறு வகைகளிலும்
ஐரோப்பாவை எட்டியுள்ளன.
மீண்டும் இந்துமாக்கடல் பகுதிக்கு வருவோம். நிலநடுக்கோட்டில் தலைநகரமைத்த
நம் முன்னோர் அங்கு கதிரவன் நேர் மேலே வரும் நாளை ஆண்டுப் பிறப்பாகக்
கொண்டனர். அப்போது அமைந்ததுதான் மேழம்(மேடம்), விடை(இடபம்),
ஆடவை(மிதுனம்) என்ற மாதங்களைக் கொண்ட ஆண்டு முறை. இந்த ஆண்டு முறை 16 ம்
நூற்றாண்டுவரை ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் வழக்கில் இருந்துள்ளது.
12 ஓரைகளில் 4 ஓரைகளை சரராசிகள் என்று தமிழ்மொழி அகராதி கூறுகிறது. அவை
கடகம், துலாம், மகரம், மேழம் ஆகியவை. இந்த நான்கு ஓரைகளும் கதிரவன் தன்
தென்வடல் செலவில் முறையே வடகோடியிலும் நில நடுக்கோட்டிலும் அடுத்து
தென்கோடியிலும் மீண்டும் நிலநடுக்கோட்டிலும் வரும்போது நுழையும் முகமையான
புள்ளிகளில் இருப்பவை. இவற்றின் அடிப்படையில் ஆண்டுகளை சம்சத்சரம்,
பரிவத்சரம், இடவத்சரம் என்ற வரிசையில் 5 ஆண்டுகளாகப் பிரித்துள்ளனர்.
இவற்றில் சம்வத்சரம் என்பதற்கு சம்வச்சரம் என்ற சொல்லின் அடியில் ''அயன,
ருது, மாத, வார' அவயவங்களுடன் கூடிய அவயவி சம்வச்சரம் எனப்படும். அது
பன்னிரண்டு மாதங்களுடன் கூடியது. இவ்வருடம் சாந்தரமானம், செளரமானம்,
சாவனம் என மூவிதப்படும். இதில் சாந்த்ரமான வருடம் சித்திரை மாத சுக்ல
பிரதனம் முதல் பங்குனி மாதப் பெளரணைவரை கணிப்பதாம். செளரம் சித்திரை
முதல் பங்குனி கடைசி வரையில் கணிப்பது. சாவனம் முந்நூற்று முப்பத்தாறு
நாட்களைக் கொண்டது.'' என்கிறது அபிதான சிந்தாமணி.
தமிழகத்தில் ஆடி(கடகம்)ப் பிறப்பைக் கொண்டாடும் வழக்கம் உள்ளது. குமரி
மாவட்டத்தில் முன்பு ஆண்டுப் பிறப்பை மாதப் பிறப்பு என்றுதான் கூறுவர்.
கொல்லம் ஆண்டு ஆவணி மாதம் பிறப்பதால் அதை மாதப்பிறப்பு என்பவர்கள்
ஆடிமாதப் பிறப்பையும் மாதப்பிறப்பு என்றுதான் குறிப்பிட்டனர். அது
மட்டுமல்ல, ஆடிப் பிறப்பன்று மேளம் கொட்டுவோர் வீட்டுக்கு வீடு மத்தளம்
கொட்டி கை நட்டம் பெறுவர். தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இதை போணி
பண்ணுதல் என்று குறிப்பிடுவர். ஐப்பசி மாதப் பிறப்பை ஐப்பசி விசு என்று
கொண்டாடும் மரபும் உள்ளது. கதை, சித்திரை, ஆடி, ஐப்பசி ஆகிய நான்கு
மாதங்களில் ஆண்டுப் பிறப்புகளையுடைய ஆண்டு முறைகளுடன் கொல்லம் ஆண்டு
போன்று இந்த நான்கு ஆண்டு முறைகளிலும் சேராத ஆண்டு முறைகளையும்
சேர்த்துத்தான் சம்வத்சரம் தொடங்கி ஐந்து ஆண்டுமுறைகளாக நம் முன்னோர்
வகுத்துள்ளனர். இதைத் தவறாக உணர்ந்து 5 ஆண்டுகள் கொண்ட வேத யுகங்கள்
என்று தவறாகச் சில ஆய்வாளர்கள் முடிவு கட்டியுள்ளனர்.
இனி, நிலநடுக்கோட்டில் தலைநகரை வைத்திருந்த நம் முன்னோர் கடற்கோளுக்குப்
பின் வடக்கு நோக்கி நகர்ந்து கபாடபுரத்தில் தலைநகரை அமைத்தபின் அங்கு
நேர்மேலே கதிரவன் வரும் நாளில் ஆண்டு முறையை வைத்தனர். அது ஏறக்குறைய
23/24 நாட்கள் பின் சென்று விட்டது. இப்போது கதிரவன் இருக்கும் ஓரைக்கும்
மாதங்களுக்குமான ஒத்திசைவு முறிந்துவிட்டது. எனவே முழுநிலா நாளில் நிலவு
இருக்கும் ஓரையில் அடங்கிய நாள்மீன்களில் முதல் நாள்மீன் பெயரை அந்த
மாதத்துக்கு வைத்தனர். அவ்வாறுதான் சித்திரை, வைகாசி என்ற மாதப் பெயர்கள்
புழக்கத்துக்கு வந்தன. ஆனால் அதனோடு திசம்பர் 21/22 இல் வரவேண்டிய தைப்
பொங்கல் சனவரி 14/15 இல் இடம் பெறுகிறது.
கதிரவன் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு நேரே வரும் நாளைப் போற்றுவது நமது
மரபு. சில கோயில்களில் கதிரவன் அவ்வூருக்கு நேர் மேலே கதிரவன் வரும்
நாளில் தெய்வப்படிமத்தின் மீது கதிரவன் ஒளி படும் வகையில் துளைகள்
இட்டிருப்பதைக் காணலாம். அதை விடப் பெரும்பான்மையாக கதிரவன்
நிலநடுக்கோட்டில் வரும் நாளை ஒட்டி மார்ச் 19 - 22 நாட்களில் படிமத்தின்
மீது ஒளிபடும் வகையில் கூரையில் துளையிட்டிருப்பார்கள். இவை நம் மரபில்
ஊறியிருக்கும், ஆனால் அறிவறிந்து வெளிப்படாத நம் பண்டைய அறிவியல்
தொழில்நுட்ப மேன்மையைக் காட்டுகிறது. இதை அறிவறிந்த அறிவியலாக
பாதுகாக்கப்பட்ட. தொழில்நுட்பமாக வளர்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
கதிரவன் நேர் மேலே வரும் சித்திரை பத்தாம் நாள் உழவு, விதைப்பு, நடவு
செய்வது சிறப்பு என்று குமரி, நெல்லை மாவட்ட மக்கள் நம்புகின்றனர்.
காலத்தைக் காட்டும் நாழிகை வட்டிலில் உள்ள கோலின் நிழல் நேர் மேற்காக
விழும் நாளில், அதாவது கதிரவன் நேர் மேலே இருக்கும் நாளில் மதுரை
அரண்மனைக்குக் கால்கோள் செய்யப்பட்டதாக நெடுநல்வாடை கூறுகிறது. இந்த
அடிப்படையில்தான் கபாடபுரத்தில் ஆண்டுப் பிறப்பு
மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றப்பட்ட மாதப்பிறப்பு அப்படியே எகிப்து சென்று அங்கிருந்து
உரோமுக்குச் சென்று இன்று கிறித்துவ ஊழியாகி நிற்கிறது. 16 ஆம்
நூற்றாண்டில் போப் கிரிகோரி 10 நாட்களை முன்கூட்டி நாட்காட்டியைத்
திருத்தியதாலும் பின்னர் மூன்று தவணைகளாக ஒவ்வொரு நாளை முன்
கூட்டியதாலும் நம் தைத் தொடக்கத்தைவிட கிறித்துவ ஆண்டு 13 நாட்கள்
முந்திப் போய்விட்டது. உண்மையில் அதற்கு முன் சனவரியும் தைமாதமும் ஒரே
நாளில்தான் பிறந்தன. ஏப்ரலும் சித்திரையும் அவ்வாறே.
இந்தத் திருத்தத்திற்கு போப் கிரிகோரி கூறிய சாக்குப் போக்கு பொருளற்றது.
நட்சத்திரமான ஆண்டு எனப்படும் sidereal ஆண்டு முறைப்படி காலம் ஒதுக்காமல்
விட்டால் கிறித்துவப் பண்டிகையின் காலம் தப்பிவிட்டது என்ற காரணத்தை அவர்
சொன்னார். ஆனால் நமது வாக்கியப் பஞ்சாங்கத்தில் நட்சத்திரமான ஆண்டைக்
கணக்கில் எடுக்க வேண்டிய தேவையே இல்லை. கதிரவனின் கடகம் சுறவம் இடையிலான
செலவு ஒன்று நாண்மீன்கள் எனப்படும் கதிரவனின் தன் சுழற்சி, நிலவின்
கலைகளின் மாற்றம் மற்றும் இரண்டு தனித்தனி மாறுவான்களைக் கொண்டு
வான்பொருட்களின் வெவ்வேறு தொகுப்புகளின் இயக்கத்தை ஒன்றுக்கு ஒன்று
சார்பில்லாமல் தருகின்ற மிகத் துல்லியமான கணிப்புகளாக உள்ளது வாக்கியப்
பஞ்சாங்கம். அவற்றைப் பயன்படுத்தி கடலில் செல்வோரும் உழவரும் ஆயர்களும்
குயவர்களும் என்ற அனைத்துத் துறையினருக்கும் பயன்படும் வகையில்
வடிவமைக்கப்பட்டதாகும். வான்பொருட்களின் இயக்கத்தின் இடைவினைப்பாட்டால்
மனிதனின் உடல் உள்ளம் ஆகியவற்றுக்கும் அவனது குமுகவியல், புவியியல்,
வானியல் சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளை முன்கணிப்பதாக
வடிவமைக்கப்பட்டு இன்று திசைமாறி நிற்கும் சோதிடத்துக்கும் நம்
பஞ்சாங்கங்கள் தாம் அடிப்படையானவை.
போப் கிரிகோரியின் திருத்தங்களுக்கு முன்பு நமது ஆண்டு முறையும்
ஐரோப்பியர்களின் ஆண்டு முறையும் ஒத்திருந்தது என்பதைப் பார்த்தோம்.
'சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன' என்று ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு
முன் இளங்கோவடிகள் பாடியபோது இருந்ததைப் போன்றுதான் இன்றும் சித்திரை மாத
நிறைமதி சித்திரை நாள் மீனில் தான் வருகிறது என்பது நமது ஆண்டுமுறை
நட்சத்திரமான ஆண்டுக்கு ஈடுகொடுத்து நிற்கிறது என்பதற்கு அசைக்க முடியாத
சான்று.
மதம் அற்றவர்கள் (Pagans) என்று தங்களால் தூற்றப்படும் தமிழர்களுடைய
மாதப் பிறப்பும் தங்கள் மாதப்பிறப்பும் ஒன்றாக இருப்பது பிடிக்காமல் அவர்
செய்த அதிரடி நடவடிக்கையே இது. இத்துடன் அவரது அரசியல் நின்றுவிடவில்லை.
அதுவரை நாளின் தொடக்கம் இராவணனின் தென்னிலங்களையையும் பண்டை
அவந்திநாட்டின் தலைநகரான உச்சையினியையும் தொட்டு ஓடிய லங்கோச்சையினி
மைவரை(meridian)யிலிருந்து கணிக்கப்பட்டு வந்தது. ஒரு புதன்கிழமைக்கு
அடுத்து வெள்ளிக்கிழமை வரும் வகையில் வியாழக்கிழமையைக் கழித்து அவர் ஆணை
பிறப்பித்ததால் நாள் மேலைநாடுகளில் தொடங்குவதாக மாறிவிட்டது.
பஞ்சாங்கங்கள் சமயம் சார்ந்த அரசியலைக் கொண்டு இன்றும் விளங்குகின்றன.
தமிழ்நாட்டிலுள்ள பஞ்சாங்கங்கள் சிலவற்றில் காஞ்சி சங்காரச்சாரியின்
சான்றிதழ் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். ஆனால் இங்கிலாந்து நாட்டில்
வெளிவரும் வெட்டேகர் பஞ்சாங்கத்தில் ஊர்திகளை ஓட்டிச் செல்வோர் முன்
விளக்குகளை ஒவ்வொரு மாலையிலும் எப்போது எரியவிடத் தொடங்கி காலை எத்தனை
மணிக்கு அணைக்க வேண்டும் என்பது போன்ற செய்திகள் தரப்பட்டுள்ளன.
இன்று தமிழக அரசு யாரோ 'ஐந்நூறு தமிழறிஞர்கள்' வேண்டுகோளுக்கு இணங்க
தமிழ் ஆண்டுப் பிறப்பைத் தை முதல் நாளில் நிறுவி திடீரென ஆணை
பிறப்பித்துள்ளது. இது தேவையற்ற ஒன்று. தமிழ் ஆண்டு முறையில் மாற்றம்
வேண்டுமாயின் இடையில் நிகழ்ந்த கடற்கோள்கள் இடப் பெயர்ச்சிகளால்
திரிவுறும் முன்னர் தமிழர்கள் நிலநடுக்கோட்டில் இருந்தபோது கடைப்பிடித்த
மேழம், விடை, ஆடவை என்ற ஓரைப் பெயர்களைக் கொண்ட மாதத்தை அறிமுகம்
செய்யலாம்.
இந்தியா விடுதலை அடைந்த பின்னர் இந்திய அரசாங்கம் உருவாக்கிய அறிஞர் குழு
வடிவமைத்த சக ஆண்டு இதற்குப் பொருத்தமானது. மாதப் பெயர்களை நாள் மீன்
பெயர்களாயிருப்பதிலிருந்து ஓரைகளாக மாற்றினால் போதும்.
மார்ச் 21/22 உலகின் தென்முனையிலிருந்து வடமுனை வரை இரவும் பகலும் சமமாக
இருக்கும் நாள். அனைத்து உயிர்களுக்கும் கதிரவன் தன் கதிர்களைப் பரப்பி
அருள் வழங்கும் நாள். அது தான் ஆண்டுப் பிறப்பாக உலக முழுவதும் கடைப்
பிடிக்கத்தக்க நாள். கடகக் கோட்டுக்கு வடக்கில் இருந்து கொண்டு கதிரவன்
சுறவக் கோட்டின் அருகில் இருக்கும் ஒரு நாளை ஆண்டுப் பிறப்பாகக்
கொண்டாடும் ஐரோப்பியர்களுக்கும் இந்த உண்மையை எடுத்துரைத்து அவர்களும்
இந்த ஆண்டுமுறையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தும் தகுதி நமக்கு உண்டு.
ஏனென்றால் உலகில் தோன்றிய அனைத்து ஆண்டுமுறைகளையும் படைத்தவர்கள் நாம்.
உலகில் கதிரவனின் தென் வடல் செலவினை அடிப்படையாக வைத்து 365 சொச்சம்
நாட்களைக் கொண்ட ஆண்டு முறையை வகுத்து அதை இன்று வரை பாதுகாத்து
வருபவர்கள் உலகில் தமிழர்கள் மட்டுமே. 60 ஆண்டுச் சுழற்சியும் நமக்கே
உரியது. ஆண்டுப் பெயர்கள் சமற்கிருதத்தில் இருப்பதால் பெரும்பாலான
தமிழறிஞர்கள் அதனைத் தமிழர்களுக்குரியவையல்ல என்று நம்புகிறார்கள்.
முழுமையான வரலாற்று ஆய்வு இல்லாத சூழ்நிலையில் ஐரோப்பிய அரசியல்
பின்னணியில் உருவாகிய ஆரிய இனம் பற்றிய போலிக் கோட்பாடும் சமற்கிருதம்
அவர்களுடைய மொழி என்பதும் தமிழறிஞர்களுக்கு இத்தகைய மயக்கத்தை ஏற்படுத்தி
உள்ளன.
பஞ்சாங்கங்களில் நம் வானியல் அறிவுகள் அனைத்தும் இன்றைய மேலையர்
எய்தியவற்றைவிட எந்தவகையிலும் குறையாத வகையில் உள்ளன. அது போல பிற
அறிவுத்துறைகள் அனைத்தும் கோயில் ஆகமங்களில் அடங்கியுள்ளன. அவற்றை
ஆய்வோம். புதையல்களை வெளிப்படுத்துவோம்.
பஞ்சாங்கம் என்பது ஆங்கில காலங்காட்டியில் Tthirty days for September
April June and November என்பது போன்ற எளிய வாய்ப்பாடுகள், கைவிரல்களின்
மூட்டுகளைத் தொடுதல் ஆகிய எளிய முறைகளில் எளிய மக்கள் நினைவு வைத்துக்
கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும். பண்டை நாட்களைப் போல ஊர்ப்பெரிய
மனிதரிடம் அல்லது பூசாரியிடம் மக்கள் கைகட்டி நிற்கும் திக்கக் கருவியாக
அமைந்து விடக்கூடாது என்ற கண்ணோட்டத்தில் பஞ்சாங்கங்களை மாற்றியமைக்க
வேண்டும்.
வாக்குப்பெட்டி எனும் மாய்மாலப் பெட்டியைப் பற்றிக்கொண்டு அதிகாரத்துக்கு
வந்தவர்களும் அவர்களை அண்டி வாழ்கின்றவர்களும் செய்கிற அழிம்புகளை
உலககெங்கும் மனிதர்கள் திருத்துவார்கள். திருத்துவோம்.
(இக்கட்டுரை தமிழினி பிப்ருவரி-2008 இதழில் வெளிவந்துள்ளது.)