செவ்வாய், 26 செப்டம்பர், 2017

ஏறுதழுவுதல் குரவை கூத்து ஆயர் தொல்காப்பியம் இலக்கியம்

ஏறு தழுவுதல்
 கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
  புல்லாளே ஆயமகள்.
சோழன் நல்லுருத்திரன். கலித்.103:  63 - 64

 கொல்லேற்றின் கொம்புக்கு அஞ்சுகின்றவனை மறுபிறப்பினும் தழுவ மாட்டாள் ஆயமகள். (ஏறுதழுவுதல்  முல்லை நிலத்தின் வீர விளையாட்டு; தொல்காப்பியத்தில் இடம் பெறாத ஒன்று.ஏறு தழுவிய பின்னர்க் குரவைக் கூத்து நிகழும்; தெய்வ வாழ்த்தும் இடம் பெறும். )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக