செவ்வாய், 26 செப்டம்பர், 2017

சிவன் இன் மகன் விழா இலக்கியம் முருகன்

சிவபெருமான் மகன் முருகன்
 ஆல் அமர் செல்வன் அணிசால் பெரு விறல்
 போல வரும் என் உயிர்
ஆலமர் செல்வனின் அழகிற் சிறந்த  முருகனைப் போல வரும் மகனாகிய என் உயிர்.
மருதன் இளநாகனார். கலித். 81 :  9 - 10
ஆல் அமர் செல்வன் அணிசால் மகன் விழாக்
 கால்கோள் என்று ஊக்கி ……………………….
மருதன் இளநாகனார். கலித். 83 : 14 - 15



மிக்க புகழை உடைய ஆலமர் செல்வனின் மகனாகிய குமரப் பெருமானின் விழா தொடங்கிற்று போலும் என்று எண்ணினர். ( ஆலமர் செல்வன் மகன் – என்பதற்கு இறைவனுடைய மகனாகிய பிள்ளையார் என்றார் உரையாசிரியர் நச்சினார்க்கினியர். சங்க காலத்தில் விநாயகர் வழிபாடு இல்லை என்று குறிக்கின்றார் பெருமழைப் புலவர். ஆனால் பிள்ளையார் என்று நச்சினார்க்கினியர் சுட்டியிருப்பது முருகவேளை என்று சான்று காட்டுவார் இ.வை. அனந்தராமையர். )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக