செவ்வாய், 26 செப்டம்பர், 2017

சான்றோர் அவை சங்ககால நீதிமன்றம் இலக்கியம்

சான்றோர் அவை
அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனைத்
தன் திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம்
நல் அவையுள் படக் கெட்டாங்கு
நல்லந்துவனார். கலித் . 144  : 70 –72
 அறனறிந்து நடக்கும் கண்ணோட்டம் உடையவனை – அத்திறமில்லாதோர்  உண்டாக்கிச் சொன்ன  தீய மொழிகள் எல்லாம் நன்மக்கள் இருக்கின்ற அவைக்குள்ளே ஆராய்ச்சி நிகழ – தீய மொழிகள் எல்லாம் மறைந்து போகும்.  ( நன்று தீது ஆராயும் அவை இருந்தமையும் – அந்த அவை மக்கள் தொடர்புடையவற்றை ஆராய்ந்தமையும் இப்பாடலால் புலனாகின்றன.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக