செவ்வாய், 26 செப்டம்பர், 2017

பெரும்பொருள் கொடுத்தாலும் காதலி யை பிரியமாட்டான் காதல் இலக்கியம்

பட்டினம் பெறினும் வாரேன்
பொன்படு கொண்கான நன்னன் நல்நாட்டு
ஏழிற் குன்றம் பெறினும் பொருள்வயின்
யாரே பிரிகிற்பவரே…..
பாலை பாடிய பெருங்கடுங்கோ. நற். 391 : 6 -8
 தலைவி அழாதே ! தலைவன் நின்னைப் பிரியான். கொண்கானத்தில் உள்ள நன்னனது ஏழில் மலையைத் தாம் பெறுவதாயினும் நின்னை விட்டுப் பிரிபவர் யாரோ?
ஒப்பு நோக்குக:-
 முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே…..
கடியலூர் உருத்திரங் கண்ணனார். பட்டினப் பாலை : 218 - 220

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக