செவ்வாய், 26 செப்டம்பர், 2017

கம்மாளர் ஆசாரி பெரும் பின்னடைவு

Ranga Rasu
நேற்று முன்தினம் திருப்பூரில் நடுவம் நடத்திய
"தமிழ்நாட்டு இடஒதுக்கீடு தமிழருக்கே" கருத்தரங்கில் பேசிய கம்மாளர்
ஒருங்கிணைப்பு குழு தலைவர்
திரு குரு ஜெயச்சந்திரன் அவர்கள் சொன்ன தகவல் கேட்டு உண்மையிலேயே தமிழனாக
மிகவும் வேதனையடைந்தேன்.
.....!!
அதாவது,
ஐந்து பெரும் பிரிவாகவுள்ள கம்மாளர்களில்,
இதுவரை IAS, IPS ஆக ஒருத்தர் கூட இல்லையாம்.....!!
அரசு வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு எந்த இடமும் இல்லையாம்.....!!
சரி,
கைவசம் இருக்கும் தொழிலாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என பார்த்தால்,
அனைத்து தொழில்களூம் நவீனமயமாக்கப்பட
்ட தொழிற்சாலைகளாக மாறிவிட்டதால்,
அங்கேயும் அவர்களுக்கு எந்த வேலையும் இல்லையாம்.....!!
இதையெல்லாம் விட பெரிய கொடுமையாக,
ஒருகாலத்தில் பித்தளை, செம்பு வேலையில் உலகப் புகழ் பெற்றவர்களாக
திகழ்ந்த தமிழ் கன்னார் பிரிவினரை ஆளையே காணலையாம்......??
அவர்கள் என்ன ஆனார்கள் என்று வலைவீசி தேடி வருகிறார்களாம்.....??
இந்த கொடுமையை எல்லாம் என்னவென்று சொல்வது என்றே எனக்கு தெரியல......
பல ஆயிரம் ஆண்டுகளாக இப் பூமிப்பந்தின் கிழக்கு மேற்காக எந்த நிலத்திலும்
தமிழர் என்ற அடையாளம் இருக்கிறது என்றால்,
அது தச்சர், கொல்லர் உள்ளிட்ட கம்மாளர்கள் தங்களது திறமையால் உருவாக்கிய
தமிழர் கட்டிடம், சிற்பம் உள்ளிட்ட அடையாளங்களே.....!!
அப்படி தமிழர் அடையாளங்களை உருவாக்கி தந்தவர்களே,
இன்று அடையாளமற்று கிடக்கின்றனர்......??
இதை விட கொடுமை ஒரு இத்திற்கு நடக்கலாமா.....??
தமிழினத்தின் தொழிநுட்ப அறிவுக்குடியினரான கம்மாளர்கள் நிலை இப்படி இருந்தால்,
பிறகு ஏன் தமிழினம் அடிமையாய் கிடக்காது......??
கேட்பதற்கு நாதியற்ற இனமாகிவிட்டதா என் தமிழினம்......??
தமிழ் மொழி கவிதை பாடுவதையெல்லாம் தமிழ்த்தேசிய அரசியல் என நம்பிக்கொண்டிருந்தால்,
அண்டிப்பிழைக்கும் ஒரு சில நபர்களை தவிர,
அனைத்து சாதியினரும் இப்படி அழிந்துப்போக வேண்டியது தான்.....
நிகழ்வின் கடைசியாக பேசிய நான்,
பெரும் சிக்கலில் தவிக்கும் கம்மாளர்களுக்கு மட்டுமல்ல,
தமிழினத்தின் அனைத்து சாதியினரின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் எமது
நடுவம் துணையாக இருக்கும் என்றதோடு,
அதற்காகவே நாம் தமிழ்நாட்டில் தமிழரை தவிர வேறு யாருக்கும் எந்த
சலுகையும் வழங்க கூடாது என்ற கோரிக்கையை வலுப்படுத்தி வருகிறோம்
என்றேன்.......!!
வருகிறவன் போகிறவன் எல்லாம் தமிழ்நாட்டை ஆள துடிக்கிறான்...,
எம் மண்ணின் மைந்தர்களோ சொந்த நாட்டிலேயே வாழவே வழியற்று வேதனையில்
துடிக்கிறான்.......
இதனை இங்கே இருக்கும் தமிழர் தலைமைகள் இன்னும் எத்தனை காலத்திற்கு தான்
இதையெல்லாம் வேடிக்கை பார்க்க போகிறார்களோ.......??
யார் வேடிக்கை பார்த்தாலும்,
நடுவமும், நானும் நீண்ட நாட்களுக்கு வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்ட
ு இருக்கக்கூடாது என்ற தீர்க்கமான முடிவில் இருக்கிறோம்.....!!
"தமிழ்நாடு தமிழருக்கே"
இதனை நோக்கிய எமது போராட்டங்கள் இனி தீவிரமாகும்
செல்வா பாண்டியர்,
தலைவர்,
தமிழர் நடுவம்.

சாதி தொழில் தங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக