செவ்வாய், 26 செப்டம்பர், 2017

திருமணம் நெருப்பு வலம் வருதல் பார்ப்பனர் கலித்தொகை சங்ககால இலக்கியம்

தீ வலம் வருதல்
 காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மட நோக்கின் மடந்தைதன் துணையாக
ஓதுடை அந்தணன் எரிவலம் செய்வான் ……
மருதன் இளநாகனார். கலித். 69 : 3 - 5
 காதல் கொள்கின்ற திருமண நாளிலே  - மேலாடைக்குள் ஒடுங்கி  நோக்குகின்ற – மருண்ட மான் போலும் நோக்கினை உடைய மடந்தை – தனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் துணையாக உடன் வந்து நிற்க -  வேதம் ஓதும் அந்தணன் எரி வலம் வருதலைச் செய்வான்.  ( சங்க இலக்கியங்களில் திருமணம் பற்றிய செய்திகள் அரிதாகவே காணப்படுகின்றன . காண்க . அகம். 86. 136. அகநானூற்றுப் பாடல்களிலும் தீவலம் வருதல் சுட்டப் பெறவில்லை.  கலித் தொகையில் இந்த ஒரு பாடலில் மட்டுமே தீ வலம் வருதல்  சுட்டப்படுகின்றது .) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக