செவ்வாய், 26 செப்டம்பர், 2017

அப்துல் கலாம் சுந்தர் பிச்சை தமிழர் பெருமை கிடையாது

தமிழன்டா....!
சுந்தர் பிச்சையும், அப்துல் கலாமும் ஒண்ணுதான்! இவர்களால் தமிழர்களுக்கு
சல்லி பிரயோஜனமில்லை. ஜனாதிபதி பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் பதவிதான்
என்பதை, தன் பதவி காலம் முழுக்க நிரூபித்தவர் கலாம். அதுவும் தான் பிறந்த
மண்ணுக்கும் குலத்திற்கும் சம்பந்தமுள்ள ராமேஸ்வரம் மீனவர்களுக்கு கூட
துளி நன்மை செய்தவரல்ல. பிடிவாதமாக முயன்றிருந்தால் அன்றே இந்த
பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு கண்டிருக்க முடியும். குறைந்த பட்சம்
அவரது விஞ்ஞான மூளையை பயன்படுத்தி படகுகள், தானே எல்லை தாண்டாத அளவுக்கு
ஒரு நுட்பத்தை கண்டு பிடித்திருக்க முடியும்.
அவர் செய்த ஒரே நல்ல விஷயம் ராக்கெட், ஏவுகனைகள்தான். இவரில்லாவிட்டாலும்
அந்த காரியத்தை சுவாமிநாதன், மயில்சாமி அண்ணாதுரை மாதிரியான வேறு
விஞ்ஞானிகள் செய்திருப்பார்கள். செய்தே ஆக வேண்டிய நிலையிலிருந்தது
இந்தியா. பின் ஏன் இவருக்கு இவ்வளவு கொண்டாட்டம்? ஆர்ப்பாட்டம்? அன்பு?
(தமிழன் எப்பவும் இப்படிதான். எளிதில் உணர்ச்சிவசப்படுகிற இடியட்)
அப்புறம் சுந்தர்பிச்சை. வருஷத்துக்கு 100 கோடிக்கும் மேல் சம்பளம்
வாங்குகிற தமிழன். ஆனால் தமிழில் வெளிவரும் வெப்சைட்டுகளுக்கு விளம்பரம்
தராது இவர் தலைமையிலான கூகுள். அதுவே ஆங்கிலம் என்றால் அது பத்து பேர்
படிக்கிற வெப்சைட்டாக இருந்தாலும் முதல் நாளே வழங்கிவிடுவார்கள்.
இதற்கப்புறம் சுந்தர்பிச்சையை புகழவும் இகழவும் ஒரு எழவும் இல்லை.
அடச்சே... இப்படியெல்லாம் பேசுறீயே, நீயெல்லாம் ஒரு தமிழனா? என்று
சீறுகிற சின்னக்குஞ்சுகள் இவர்களால் தமிழன் பெற்ற நன்மைகளை ஆதாரத்துடன்
விளக்கினால் நான் உங்களுக்கு பின் வரிசையில் நின்று கடவுளாக நினைத்து
கன்னத்தில் போட்டுக் கொள்ள தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக