செவ்வாய், 26 செப்டம்பர், 2017

கள் உண்ணலாம் கூடாது இருவேறு அறநூல் கருத்துக்கள் சங்ககால இலக்கியம்

கள் உண்ணல்
நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து
அறவினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
 திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது
  மருதன் இளநாகனார். கலித். 99 : 1- 3
கள்ளை உண்ணுதல் ஆகாது என்று நீக்கின தேவர்க்கும்  - அதனை உண்ணுதலை நீக்காத அசுரர்க்கும் நீக்குதலும் நீங்காமையும் ஆகிய அவ்விரண்டினையும் கைக் கொண்டு அறத்தொழிலாக இன்பமுறுத்துபவர் அந்தணராகிய வியாழ குருவும் வெள்ளி குருவும். இவ்விருவரும் வெவ்வேறு வகையினவாகச் செய்துள்ள அரசியலைக் கூறும் நீதிகள் கூறும் வழியைத் தப்பாமல் ஆட்சிபுரிபவன் நீ. ( அந்தணர் இருவர் என்றது தேவருக்குக் குருவாகிய வியாழனும் அசுரர்க்குக் குருவாகிய வெள்ளியும் ஆவர். வியாழன் இயற்றிய நூல் பாருகற்பத்தியம். வெள்ளி இயற்றிய நூல் சுக்கிர நீதி. வியாழன் கள் உண்ணக்கூடாது என்றும் ; வெள்ளி கள் உண்ணலாம் என்றும் தம் நூலுள் கூறியுள்ளனர்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக