வெள்ளி, 22 செப்டம்பர், 2017

தமிழ்ச்சங்கம் தெலுங்கு பிராமணரால் திராவிட பாஷா சங்கம் என்று மாற்றப்பட்டது

திராவிடக் கழகம் என்கிற பெயர் வேண்டாம் தமிழர் கழகம் எனப் பெயரிடப்பட
வேண்டும் தமிழர்கள் தங்களது கோரிக்கையை முன்வைத்த போது...
ஈ.வெ.ரா.பெரியார் சொன்னது, ”தமிழர் கழகம் எனப் பெயர் வைத்தால் அங்கு
தமிழை தாய்மொழியாகக் கொண்ட பார்ப்பானும் வந்துவிடுவானே...”
இந்தப் பதில் அறிவார்ந்த பதில் போல் தோன்றும்.
ஆனால் திராவிடர் கழகம் என்கிற பெயரை ஈ.வெ.ரா. வைப்பதற்கு முன்பு ஒரு
வரலாற்று நிகழ்வு தமிழகத்தில் நடந்திருக்கிறது.
தமிழுக்கு பதிலாக ”திராவிட” என்பதை முதன்முதலாக முன்மொழிந்தவர் ஒரு
தெலுங்கு பிராமணர் என்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தும்.
ஆம்.
அன்றைய சென்ன உயர்நீதிமன்ற நீதிபதியாக விளங்கிய மதுரையைச் சேர்ந்த
தெலுங்குப் பார்ப்பனர் சர்.எஸ.சுப்பிரமணிய ஐயர் ”திராவிட” மொழிகளின்
வளர்ச்சியில்(?) பங்கு கொண்டிருந்தார்.
அப்பொழுது சென்னை கிறித்துவக் கல்லூரியில் ”தமிழ்மொழி முன்னேற்ற சங்கம்”
என்று தமிழ்மொழியின் மேன்மைக்காக மட்டும் ஒரு சங்கம் நிறவப்பட்டு சீரும்
சிறப்புமாக இயங்கிவந்தது.
இதனைப் புதுப்பிக்க வேண்டும் என்கிற தேவையற்ற காரணம் கொண்டு, மேற்கண்ட
சுப்பிரமணிய ஐயர் என்கிற பிராமணர் தலைமையில், மேற்படி ”தமிழ்மொழி
முன்னேற்றச் சங்கம்” என்கிற பெயர் மாற்றப்பட்டு ”திராவிட பாஷா சங்கம்”
நிறுவப்பட்டுது.
இந்த திராவிட பாஷா சங்கத்தின் முக்கிய குறிக்கோள், தமிழ், தெலுங்கு,
மலையாளம், கன்னடம், துளுவங்கள் ஆகிய அனைத்தையும் போற்றுவோம் என்பதாகும்
என பரிதிமாற் கலைஞர் தாம் இயற்றிய ”தமிழ் மொழி வரலாற்றில்” தெளிவுபட
பதிவு செய்துள்ளார்.
இப்பொழுது புரிகிறதா....?
புரிதல் உள்ளவர்களுக்குப் புரியும்.
(நன்றி: பரிதிமாற் கலைஞர், வி.சு.கோவிந்தன், சாகத்திய அகதாமி வெளியீடு)
4 மணிநேரம் · பொது

Aathimoola Perumal Prakash
ஐயா, தமிழன் என்றால் பார்ப்பான் உள்ளே வந்துவிடுவான் என்றால் பார்ப்பனர்
தமிழர் என்றுதானே ஆகிறது.
தமிழ் பூசகர்கள் பார்ப்பனர்கள்.
பிறமொழி பூசகர்கள் பிராமணர்கள்.
அப்புறம் அது என்ன தெலுங்கு பார்ப்பனர்?
பிராமணரையும் பார்ப்பனரையும் குழப்பவேண்டாம்.
திராவிடம் எதிர்த்தது பார்ப்பனரையே
பிராமணரை அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக