செவ்வாய், 26 செப்டம்பர், 2017

தாய்ப்பால் ஆறு வயது வரை இலக்கியம் இல்லறம்

தாய்ப்பால்
 பாலோடு அலர்ந்த முலை மறந்து முற்றத்துக்
 கால் வன் தேர் கையின் இயக்கி நடை பயிற்ற
 மருதன் இளநாகனார். கலித். 81 : 8 - 9
பாலோடு விம்மின முலையிலே பால் பருகவும் மறந்து ; முற்றத்திலே தேரை உருட்டி விளையாடுகின்ற கையாலே தள்ளியவாறு நடை பயின்றனன்.
எம் முலை பாலொடு வீங்க – 82
தீம்பால் பெருகும் – 83
மென்முலை பால் பழுதாக – 84
மேற்சுட்டியுள்ள கலித்தொகைப் பாடல்களில் தாய்ப்பால் பருகும் புதல்வன் - மழலைப் பருவத்தினன் என்று எண்ணி விடக்கூடாது. புதல்வன் புத்தேளிர் கோட்டம் வலம் செய்தும் – விளையாடியும் – கடவுட் கடிநகர் வலம் கொண்டுவரும் வயதினன் என்பதை அறிதல் வேண்டும்.  அக்காலத்தே ஆண் குழந்தைகள் நான்கு / ஐந்து வயது வரை தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக