வெள்ளி, 22 செப்டம்பர், 2017

நெய்வேலி நிலக்கரி சுரங்கம் நிலத்தடிநீர் அதளபாதளம் நீர்வேளாண்மை சுரண்டல்

என் அப்பா காலத்தில் இந்த நிலங்களில் புகையிலை, பருத்தி, வரகு அதிகம்
பயிரிடப்பட்டது, முந்திரித்தோப்புகள் தனியாக குறைந்தளவில் அதாவது செம்மண்
நிலங்கள் இருந்தது.
என் காலத்திலும் அதைப்போலவே ் கம்பு, கேழ்வரகு, சோளம், வேர்க்கடலை,
உளுந்து, கொள்ளு,கோடை காலத்தில் பச்சை மிளகாய் அதன்ஊடே கத்திரிக்காய்,
முள்ளங்கி போன்றவை பயி்ரிட்டோம்.
இப்போது என் மகன். காலத்தில் நெய்வேலி் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின்
பெருஞ்சுரங்கங்க
ளால் நிலத்தடி நீர் 700 அடிக்கும் கீழே போய்விட்டதாலும், மழை
குறைந்ததாலும் இரண்டு போகம் மானாவாரி பயிரும், கோடையில் முந்தி்ரியுமாக
இருந்த எங்கள் ஊரில் இப்போது முழுவதும் முந்திரித்தோப்பாக மாறிவிட்டது.
அதிகரித்து வரும் விரிப்பணர்வால் ஏரி குளங்கள் தூர்வாரப்படுவதா
லும், இளைஞர்களின் மரம் வள்ப்பு போன்ற மாற்றத்தால் நிலத்தடி நீர் உயர்ந்தால்...
இந்தச் சுழற்சி மாறிக்கொண்டே வரும் அது எதுவரை என்றால் அந்த நிலம் நிலமாக
இருக்கும்வரை.
ஆனால்
இந்த நிலங்களும், நிலத்தடி நீரும் கதிராமங்கலம் போல் நஞ்சாக மாறினால்...
அனைத்தும் நாசமாக போய்விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக