வெள்ளி, 22 செப்டம்பர், 2017

நீலகிரி தடுப்பணை புதுமுயற்சி யோசனை

நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம். .நான் உங்களிடம் ஒரு முக்கியமான
தகவல்களை பகிர உள்ளேன். அது என்னவென்றால். ..நான் கடந்த  ஏழு ஆண்டுகளாக
காவல் துறையில் பணியாற்றி வருகிறேன்.அவ்வாறு என் வேலை பணி காரணமாக நான்
சென்ற ஊர்..நீலகிரி மாவட்டத்தில் உள்ள  தேவாலா மற்றும் பந்தலூர் மற்றும்
சேரம்பாடி மற்றும்  கூடலூர்.மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்கள். .இந்த
ஊர்களை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ...இந்த இடங்கள்
தமிழ்நாட்டிலேயே  மிக மிக அதிகமாக மழை பெய்ய கூடிய இடங்கள் ஆகு‌ம். .
..ஆனால் இது சந்தோசமான செய்தியாக   இருந்தாலும். ....வருத்தமான செய்தி
என்னவென்றால். .இங்கு பெய்யும்  அனைத்து மழை நீரும் கேரளாவுக்கு
செல்கின்றன.இதனால் நமக்கு எந்த ஒரு பயனும் இல்லை. ...இங்கு பெய்யும் மழை
நீரை சேகரித்து வைத்தாலே நமது தமிழ்நாட்டிற்கு மட்டும் இல்லாமல் அண்டை
மாநிலத்திற்கும் தண்ணீர் அளிக்கலாம். .அதற்கு முக்கிய தேவை அரசின் உதவி.
..இங்கு பெய்யும் மழை நீரை தடுத்து நிறுத்த ஒரு தடுப்பணை கூட இங்கு
இல்லை. ..அரசு இங்கு தடுப்பணை கட்டி உதவி செய்தால் தமிழகத்தின் அனைத்து
பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்கலாம்.அரசின் உதவிக்கு மக்களின் பங்களிப்பு
மிக மிக முக்கியம் ..முடிந்தவரை இந்த தகவலை மற்றவர்களுக்கு பகிருங்கள்.
....செய்திகளுக்காக  காவல்துறை. நண்பன் செல்வா ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக