செவ்வாய், 26 செப்டம்பர், 2017

அனைவரும் அர்ச்சகர் சட்டதிருத்தம் திமுக கொண்டுவரவில்லை வெறும் வாக்குறுதி வாய்ச்சவடால் சு.சாமி

சீனி. மாணிக்கவாசகம் உடன் Nalla Durai .
அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்????
------------------------------------------------------------
------------------
தமிழர்களுக்கு மிகப்பெரிய
# சமூகநீதி வழங்கி விட்டதாக
# திராவிடம் தம்பட்டம் அடித்த சாதனை இது.... ஆனால், இன்றுவரை இந்த
சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர முடியவில்லை...
என்ன காரணம்?
முட்டாப்பய, பொறம்போக்கு, அப்பன்பேரு தெரியாதவன், ஆரியன், பாப்பான்,
பவுடர் டப்பா ன்று நாமெல்லோரும் வரிந்துகட்டிக் கொண்டு திட்டுகிற
# சுப்பிரமணிய_சாமி , புதியதலைமுறை தொலைக்காட்சியில் சமீபத்தில்
ஒளிபரப்பான அவரது பேட்டியில் எளிமையாக விளக்கி உண்மையை உடைத்தார்....
எத்தனை பேர் இதை கவனித்துப் பார்த்தீர்கள் என்று தெரியவில்லை....
"இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, வழிபாட்டுத் தளங்களில் இருக்கும்
நடைமுறைகளையும், நிர்வாகத்தையும் மாநில அரசு தன்னிச்சையாக மாற்ற
முடியாது. அதனால் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லாது என்று நான் வாதிட்டு
வெற்றி பெற்றேன்" என்று சொன்னார்.
நெறியாளர், "அனைவருக்கும் சம உரிமை வேண்டும், நீங்கள் தடுப்பது சரியா"
என்று கேட்டதற்கு,
"சட்டத்தின் அடிப்படையில் தான் அணுக முடியும். சட்டத்தை மாற்ற வேண்டும்
என்றால், முதலில் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 26ல் திருத்தம் கொண்டுவர
திமுக முயற்சி செய்திருக்க வேண்டும்" .....
இப்ப கேள்வி,
இந்த விசயம், சட்டம் இயற்றுவதற்கு முன்பே திமுக டலீவர் கருணாநிதிக்கு தெரியாதா?
திமுக சட்ட மேதைகள் எவருக்குமே தெரியாதா?
திராவிட நாட்டின் சட்ட மாமேதைகள் எவருக்குமே தெரியாதா?
"முன்கூட்டியே தெரியாது" என்று நம்பும் அளவிற்கு நாமெல்லாம் முட்டாள்கள்
இல்லை என்றே நம்புகிறேன்...
சரி, முன்கூட்டியே தெரியும் என்றால்,
இந்தியாவின் மூத்த அரசியல்வாதி,
இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளாலும் மதிக்கப்படுகிற அரசியல்வாதி,
இந்திய அரசியல் சாணக்கியன் போன்ற பல பெருமைகளுக்கு உரிய டலீவர்
கருணாநிதி, முதலிலேயே அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர
அனைத்து மாநில அரசாங்கங்களிடமும், அரசியல் கட்சிகளிடமும் ஏன் ஆதரவு
கேட்கவில்லை?
1999 முதல் 2014 வரை, திமுகவின் ஆதரவோடு தானே 15 வருடங்கள் இந்தியாவில் # பாஜக-வும்
# காங்கிரசும் ஆட்சி நடத்தினார்கள்?
ஏன் சட்டத் திருத்தம் கொண்டு வரவில்லை?
சட்டத் திருத்தம் கொண்டு வந்திருந்தால், எந்த மாநிலம் இதை எதிர்த்திருக்க கூடும்?
பிறகு ஏன் செய்யவில்லை?
அப்ப,
சட்டம் போட்டு விட்டோம் என்று தமிழர்கள் தலையில் திராவிடர்கள் மிளகாய்
அரைத்து இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக