செவ்வாய், 26 செப்டம்பர், 2017

தை நீராடல் கன்னி பெண் விரதம் இலக்கியம்

தையில் நீராடிய தவம் தலைப்படுவாயோ
 கபிலர். கலித். 59 : 13

தலைவன் : தலைவி…. நீ தைத் திங்களில் நீராடிய தவத்தின் பயனைப் பெறுவாயோ ?
( தைந் நீராடல் இளம்பெண்களால் நிகழ்த்தப் பெறும் ஒரு நிகழ்ச்சி . சங்க இலக்கியங்களில் சுட்டப்பெறும் இது – பண்டைத் தமிழர் தம் பண்பாட்டுத் தொடர்புடையது – மணமாகாத பெண்கள் மார்கழி முழுமதி நாள் தொடங்கித் தை முழுமதி நாள் வரை நாட்காலையில் நீராடி நோன்பிருப்பர். திருப்பாவை. திருவெம்பாவை இலக்கியங்கள் தோன்றுவதற்கும் தைந்நீராடல் அடிப்படையாய் அமைந்தது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக