செவ்வாய், 26 செப்டம்பர், 2017

வைப்பாட்டி திருமணம் பெருமணம் இலக்கியம் பெண் ஐ குதிரை என்று குறிப்பிடுதல்

பெருமணம் – (மருதத் திணை)
 மிகநன்று இனி அறிந்தேன் இன்று நீ ஊர்ந்த குதிரை
பெருமணம் பண்ணி அறத்தினில் கொண்ட
 பருமக் குதிரையோ அன்று பெரும ……..
 மருதன் இளநாகனார். கலித். 96 : 32- 34


 மிகவும் நன்று – நீ ஏறிய குதிரையை நான் அறிந்துகொண்டேன் ; அதுதான் அறநூல் கூறிய வழியால் நீ பெருமணம் செய்து கொண்ட  காமக்கிழத்தியாகிய குதிரையும் அன்று – பெருமானே. என்றாள் தலைவி. ( தலைவன் – தலைவியை மணப்பது ஐந்திணைப் பாற்பட்ட மணம். காமக்கிழத்தியையும் தலைவன் மணந்து கொண்டது இப்பாடலுள் இடம் பெற்றுள்ளது. இப்பெருமணம் அறநூல் வழிப்பட்டது என்று கூறுகின்றார். மேலும் காண்க : -  முல்லைத் திணைப் பெருமணம்-114 .)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக