செவ்வாய், 26 செப்டம்பர், 2017

தை நீராடல் விழா பண்டிகை கன்னி பெண் விரதம் ஐவகை தலையலங்காரம் கூந்தல் அலங்காரம்

தைந் நீராடல்
நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் திங்கள் தண்கயம் …
  ஓரம்போகியார். ஐங். 84 : 3 – 4
நறுமணம் கொண்ட மலர்களை அணிந்து ஐந்துவகையாகக் கோலம் செய்யத்தக்க கூந்தலை உடைய இளமகளிர் தைத் திங்களில் தவத்துக்குரிய நீராடுவதற்கு இடமான குளிர்ந்த குளம்…..
  ஐம்பால் என்பதற்குக் கூந்தல் எனப் பொருள் கூற இடமிருப்பினும் ஐந்து வகையாக ஒப்பனை செய்தல் என்னும் பொருள் சிறப்புடையது. ஐவகை ஒப்பனையாவன முடி. சுருள். பனிச்சை. குழல். கொண்டை ஆகியனவாம். தைத் திங்கள் பனி மிகுந்திருத்ததாலின் நீர் நிலைகள் தண்ணெனக் குளிர்ந்திருத்தல் இயல்பு. இத்திங்கள் கன்னிப் பெண்கள் நீராடி நோன்பு மேற்கொள்ளற்குரியதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக