செவ்வாய், 26 செப்டம்பர், 2017

ஆடு கறி சோறு கள் விருந்து இலக்கியம் உணவு சேரன்

விருந்து – உணவு
 தொல் பசி உழந்த பழங்கண் வீழ
எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங்குறை
மையூன்  பெய்த வெண்ணெல் வெண்சோறு
 நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி
குமட்டூர்க் கண்ணனார். பதிற்.12 :  15 – 18
  சுற்றத்தார் நீண்ட நாட்களாகப் பசியால் வருந்திய துன்பம் உடையர்  - அவ்வருத்தம் தொலையுமாறு நின் ( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) அரண்மனையில் அரிவாளால் பிளந்து அறுத்த வெள்ளிய நிணத்தோடு கூடிய கொழுவிய துண்டாகிய ஆட்டின் இறைச்சி கலந்து சமைக்கப்பட்ட வெண்ணெல் அரிசியால் ஆன வெண் சோற்றினைப் பூக்களின் அரும்புகளினால் அமைந்த தெளிந்த கள்ளோடு சேர்த்து உண்டனர். ( நனையமை கள் என்றது  தென்னை – பனை – ஈந்து முதலியவற்றின் அரும்பு விரியாத செவ்விப் பாளையில் அமைக்கப்படும் கள்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக