செவ்வாய், 26 செப்டம்பர், 2017

வெள்ளி செவ்வாய் நகர்வு மூலம் மழை கணிப்பு கோள் வானியல் அறிவியல்

மழைக் கோள்
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசி இகந்து ஒரீஇ
பூத்தன்று பெரும நீ காத்த நாடே
 குமட்டூர்க் கண்ணனார். பதிற்.13  :  25 – 28
செவ்வாய்க் கோள் சென்ற வழியில் சுக்கிரன் கோள் செல்லாமல் – மழை தேவையான இடங்களிலெல்லாம் நின் நாட்டில் மழை பெய்கிறது. நோயும் பசியும் நின் குடிகளுக்கு இல்லாமல் நீ காத்து வரும் நாடுகள் பொலிவு பெற்று விளங்குகின்றன.( மழைக் கோளாகிய வெள்ளி – செவ்வாயுடன் சேர்ந்தால் மழை இலதாகும் என்பது வானியல்  அறிவியலா – ஆய்க.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக