செவ்வாய், 26 செப்டம்பர், 2017

கரையான் புற்று பாம்பு புகும் கரடி கைவிட்டு உண்ணும் விலங்கு இலக்கியம்

கறையான் புற்று
கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை
இரைதேர் வேட்கையின் இரவில் பொகி
நீடுசெயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த
அரவாழ் புற்றம் ஒழிய ஒய்யென
முரவாய் வள் உகிர் இடப்ப வாங்கும்
மதுரைக் காருலவியங் கூத்தனார். நற். 325 : 1 – 5
 சுரவழியில் – கறையான்களின் தொகுதி முயன்று புற்றுகள் சமைத்திருக்கும் . அப்புற்றுகளில் பாம்புகள் வாழும்; கவிந்த தலையையும் பருத்த மயிரையும் உடைய ஆண் கரடி தான் இரைதேடி உண்ணும் விருப்பத்தில் இரவின்கண்  அங்கு வாழும் கறையான்கள் முழுவதும் ஒழியுமாறு அப்புற்றுகளைத் தன் வளைந்த முனையை உடைய பெரிய நகங்களால் பறித்து புற்றின் உள்ளமைந்த புற்றாஞ்சோற்றை உறிஞ்சி இழுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக