புதன், 30 செப்டம்பர், 2020

இடவொதுக்கீடு ஆங்கிலேயர் கொணர்ந்து சுப்பராயன் செயல்படுத்தியது அந்த சட்டதிருத்தம் முதலாவது இல்லை நான்காவது

 

aathi1956 aathi1956@gmail.com

புத., 13 பிப்., 2019, பிற்பகல் 3:14
பெறுநர்: எனக்கு
› Home
View web version Tuesday, February 12, 2019
தமிழ்த் தேசியன் | நேரம் : 4:10 PM இட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா? - பெ. மணியரசன் கட்டுரை!
இட ஒதுக்கீட்டுக்குப்
பெரியார்தான் காரணமா?
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கட்டுரை!
வெற்றி பெற்றவர்கள் வரலாற்றை
எழுதுகிறார்கள் என்பது ஒரு மரபுத்
தொடர். அவர்கள் சமூகத்தின் பன்முக
வரலாற்றை எழுதாமல் தங்களை
மட்டும் முதன்மைப்படுத்தி எழுதிக்
கொள்வார்கள் என்பது இதன் பொருள்.
இலட்சியத்தில் வெற்றி
பெறாதவர்களும் இலட்சியத்தைப்
பாதியில் கைவிட்டவர்களும்
வரலாற்றைத் திரிபுபடுத்தி எழுதிக்
கொள்ளலாம் என்பதற்கு பெரியாரியத்
திராவிடவாதிகளே சான்று!
பெரும்பான்மை மக்கள் எழுதப் படிக்கத்
தெரியாமல் இருந்த காலத்தில் -
படித்தவர்களில் - கட்டுக்கோப்பான
சிறுபான்மையினர் வரைந்ததே
வரலாறு என்று இருந்தது. இன்று 90
விழுக்காட்டினர் கற்றவர்களாக உள்ள
காலத்தில் - மேடைப்பேச்சையும் -
பிறர் எழுதிய தையும் மட்டுமே
சான்றாக வைத்துக் கொண்டு,
திரிபாக வரலாற்றைப் பேசுவோர்
நிறைந்த நாடாகத் தமிழ்நாடு
இருக்கிறது.
பெரியாரியத் திராவிடவாதிகள் - “பெரியார் இல்லையென்றால்
தமிழர்கள் மாடு மேய்த்துக்
கொண்டுதான் இருந்திருப்பார்கள்”
என்கிறார்கள். தமிழர்கள் படித்திருக்க
மாட்டார்கள், உயர் பதவிகளுக்குப் போய்
இருக்க மாட்டார்கள் என்ற
பரப்புரையைக் கோயபல்சு இருந்தால்
கூச்சப்படும் அளவிற்குக் கூறி
வருகிறார்கள்.
பெரிய புராணத்தை எதிர்த்தவர்கள்
பெரியார் புராணத்தை
எழுதினார்கள்.
பெரியார் புராணத்தில்
கூறப்பட்டுள்ள இரண்டே இரண்டு
கருத்துகளை மட்டும் இங்கு
விவாதத்திற்கு எடுத்துக்
கொள்கிறோம். ஒன்று தமிழ்நாட்டில்
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட
ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்குப்
பெரியார்தாம் முதல்
பெருங்காரணமாவார் என்பது.
இன்னொன்று இந்திய அரசமைப்புச்
சட்டத்தில் செய்யப் பட்ட முதல் திருத்தம்
இடஒதுக்கீட்டிற்கு வழி
வகுத்திடத்தான்; அந்த முதல்
திருத்தமும் பெரியாரால் தான்
வந்தது என்பது!
இட ஒதுக்கீட்டின் மூலவர்கள்
ஆங்கிலேய அதிகாரிகள்தாம் முதல்
முதலாக - இட ஒதுக்கீட்டுக்கான
மூலக்கருத்தை விதைத்தார்கள்.
பிராமணரல்லாத இந்துக்கள் மற்றும்
முசுலிம்களில் கல்வி கற்றோர் தங்கள்
வகுப்பு களுக்கான இட ஒதுக்கீட்டுக்
கோரிக்கையை பல வடிவங்களில்
வெளிப்படுத்தினார்கள்.
வெள்ளையராட்சி 19ஆம்
நூற்றாண்டில் அனைவருக்குமான
பொதுக் கல்வி முறையை
உருவாக்கிக் கல்வி நிலையங்களைத்
திறந்தது. 1835இல் வந்த மெக்காலே
கல்வித் திட்டம் கல்வியை மேலும்
முறைப்படுத்தி விரிவுபடுத்தியது.
இக்கல்வி முறையில் பயின்று
ஆங்கிலேய ஆட்சியில் அலுவலர்கள்
ஆனவர்களில் 100க்கு 90 பேர்
பிராமணர்கள். இந்தியாவெங்கும்
இதுதான் நிலைமை.
பிராமணரல்லாதார் தங்களுக்குரிய
விகிதத்தில் வேலை வழங்க வேண்டும்
என்று கோரிக்கை எழுப்பினர்.
பிராமணரல்லாத மண்ணின் மக்களின்
கோரிக்கையை வெள்ளை
அதிகாரிகள் பரிவுடன் பார்த்தனர்.
ஆங்கிலேய அரசின் வருவாய் வாரியம் (Revenue Board) 1854ஆம் ஆண்டு மாவட்ட
ஆட்சியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை
அனுப்பியது. அது வருமாறு :
நிலை ஆணை எண் 128 / 2
“மாவட்ட அளவிலான அலுவலர்கள்
பணியமர்த்தத்தில் செல்வாக்குள்ள சில
குடும்பங்களுக்கு மட்டும் பணிகள்
ஏகபோக உரிமை ஆகிவிடாமல் மாவட்ட
ஆட்சியாளர்கள் எச்சரிக்கையாக இருக்க
வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும்
முதன்மையாக உள்ள (பெரும்பான்மையாக உள்ள)
சாதிகளுக்கு வேலைகள்
பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.” - இதுவே
அந்த ஆணை!
மேற்கண்டவாறு ஆணை
பிறப்பிக்கப்பட்டும் அது சரிவர செயல்
படுத்தப்படவில்லை. ஆனால் இட
ஒதுக்கீட்டிற்கான - ஆட்சி யாளர்களின்
தொடக்க நிலை ஒப்புதல் என்று இந்த
முன்னெடுப்பைக் கருதலாம்.
1854ஆம் ஆண்டு இவ்வாறு தொடங்கிய
அரசின் இட ஒதுக்கீட்டு ஆணை - 1871இல்
மேலும் வலுப்பட்டது. 1871ஆம் ஆண்டு
மக்கள் தொகைக் கணக்கு
எடுக்கப்பட்டது. சாதியும்
கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டது. மக்கள்
தொகைக் கணக்கெடுப்பின்
கண்காணிப் பாளர் டபுள்யு. ஆர்.
கார்னீஷ்!
1871-க்கு முந்தைய 15 ஆண்டுகளில்
மெட்ரிகுலேசன் கல்வி கற்றவர்களில் 55 விழுக்காட்டினர் பிராமணர்கள் என்ற
கணக்கும் வந்தது. அப்போது கார்னீஷ்
கூறியது கவனிக்கத்தக்கது. கார்னீஷ்
அவர்களின் கூற்றை திராவிடர் கழகத்
தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது
நூலில் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டின் முன்னேற்றம் தொடர்பான
எந்தச் செய்தியையும் பார்ப்பனக்
கண்ணாடி போட்டுக் கொண்டு
பார்க்கக் கூடாது. அரசின்
உண்மையான கொள்கை - அரசு
அலுவலர்கள் எண்ணிக்கையில்
பார்ப்பனர்களுக்கு வரம்பு
கட்டுவதாகவும், பார்ப்பனரல்லாத
இந்துக்கள் மற்றும் முசுலிம்கள் அரசு
அலுவலகங்களுக்குள் நுழைவதை
ஊக்கப்படுத்துவதாகவும் இருக்க
வேண்டும். எந்த ஒரு சாதிக்கும் தனி
முக்கியத்துவம் கொடுப்பதாக
இருக்கக் கூடாது.”
- Report on the Census of Madras Presidency 1871, Vol - 1, page 197 (தமிழில் : கி. வீரமணி, ‘வகுப்புரிமை வரலாறு’, மூன்றாம்
பதிப்பு - 2000).
வகுப்புரிமைக் கோரிக்கை
தமிழ்நாட்டில் 1850களில்
எழுப்பப்பட்டுள்ளது. அப்போது
பெரியார் பிறக்கவில்லை. 1871 மக்கள்
தொகைக் கணக்கெடுப்புக்
கண்காணிப்பாளர் கார்னீஷ், நாட்டின்
முன்னேற்றத்தைப் பிராமணக்
கண்ணாடி போட்டுக் கொண்டு
பார்க்காதீர்கள்.
பிராமணரல்லாதவர்க்கு
வேலைவாய்ப்பு உரியவாறு
கொடுங்கள் என்று கூறியபோதும்
பெரியார் பிறக்கவில்லை.
1850களில் - 60களில் மெட்ரிகுலேசன்
படித்தவர்களில் 55 விழுக்காடு
பிராமணர்கள், 45 விழுக்காடு
பிராமணரல்லாதார் என்ற கணக்கைக்
கொடுத்தவர் கார்னீஷ். பெரியார்
அப்போது பிறந்திருக்கவில்லை!
தமிழனும் தமிழச்சியும்
படித்திருக்கவே மாட்டார்கள் என்று
கூறும் பெரியார் பக்தர்களுக்குக்
கார்னீஷ் கணக்கெடுப்பு காணிக்கை
யாகட்டும்!
1881 மற்றும் 1891 ஆம் ஆண்டுகளில்
மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள்
நடந்தபோது பிராமணரல்லாதார்க்கு
இட ஒதுக்கீடு கேட்டு பெரிய அளவில்
மக்கள் கோரிக்கை எழுப்பினர்.
இட ஒதுக்கீடு இந்தியத் துணைக்
கண்டத்தில் முதல் முதலாகச்
செயல்படுத்தப்பட்ட இடம் மராட்டிய
மாநிலம் - கோலாப்பூர் குறுநிலம் (சமஸ்தானம்). செயல்படுத்தியவர் -
கோலாப்பூர் மன்னர் சாகு மகாராசா!
அவர் 1902ஆம் ஆண்டு கல்வியில் 50
விழுக்காடு இட ஒதுக்கீடு -
பிராமணரல்லாத பின்தங்கிய
வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்தார்.
பள்ளிகளில் படிப்போர்க்கு இலவச
உணவு - உறைவிட விடுதிகளைத்
திறந்தார். தீண்டாமையைக்
குற்றமாக்கினார்.
அப்பொழுதெல்லாம் பெரியார்
சமூகப்பணிக்கு வரவில்லை.
பெரியார் பிறந்த ஆண்டு 1879
செப்டம்பர் 17.
நீதிக்கட்சியின் தோற்றம்
மருத்துவர் நடேச முதலியார்
சென்னை திருவல்லிக்கேணி பெரிய
தெருவில் வசித்து வந்தார். அவர்
பிராமணரல்லாதார்க்கு இட ஒதுக்கீடு
கோரிக்கை வைத்தது 1910 வாக்கில்!
பிராமணரல்லாத மாணவர்கள் கல்வி
கற்க ஊக்கப்படுத்தும் செயல்களில்
ஈடுபட்டார். பிராமணரல்லாத அரசு
ஊழியர்கள், மாணவர்கள், மற்றவர்களின்
உரிமைகளுக்காக அவர் 1912இல் “மெட்ராஸ் யுனைடெட் லீக்” என்ற
அமைப்பை உருவாக்கினார். இந்த லீக் -
பிராமணரல்லாதார்க்கான இட
ஒதுக்கீட்டுக் கோரிக்கையை எழுப்பி
வந்தது.
இந்த மெட்ராஸ் யுனைடெட் லீக் என்ற
அமைப்பின் பெயரை 1913இல்
திராவிடர் சங்கம் (Dravidian Association)
என்று மாற்றினார்.
அக்காலத்தில் பிட்டி. தியாகராய
செட்டியும், தாரவாத் மாதவன்
நாயரும் காங்கிரசுக் கட்சிப்
பிரமுகர்கள். இருவரும் சென்னை
மாநகராட்சி உறுப்பினர்கள். ஆனால்
ஒருவருக்கொருவர் ஆகாது.
இருவரும் எதிரும் புதிருமாகச்
செயல்பட்டனர். பிராமணரல்லாதார்
உரிமைகளை மீட்பதற்காக
இவ்விருவரிடமும் பேசி
இருவரையும் ஒன்றாக இணைத்தவர்
நடேச முதலியார்.
இம்மூவர் முன்முயற்சியில் மற்றும் பல
முக்கியக் கல்விமான்கள் - பிரமுகர்கள்
ஆகியோரைக் கொண்டு 1916
இறுதியில் உருவாக்கப் பட்டதுதான்
நீதிக்கட்சி! (அதன் அசல் பெயர் -
தென்னிந்திய நல உரிமைச் சங்கம்).
நீதிக்கட்சி அமைப்பதற்கான முதல்
கூட்டம் 20.11.1916 அன்று
சென்னையில் நடந்தது. அப்போது
பெரியார்க்கு 38ஆம் அகவை
தொடங்கி இருந்தது. அந்தக்
கூட்டத்தில் கலந்து கொண்ட 26
பிரமுகர்கள் பெயர்கள் பதிவு
செய்யப்பட்டுள்ளன. அப் பட்டியலில்
ஈ.வெ. இராமசாமி பெயர் இல்லை.
ஆனால் எஸ். முத்தையா முதலியார்
பெயர் அப்பட்டியலில் உள்ளது. (அவர்தான் 1928இல் வகுப்புவாரி இட
ஒதுக்கீட்டை அமைச்சராக இருந்து
முதலில் செயல்படுத்தியவர்).
1916 டிசம்பர் 20ஆம் நாள் - பிட்டி.
தியாகராயர் கையொப்பத்துடன்
வெளியான நீதிக்கட்சியின்
பிராமணரல்லாதார் அறிக்கையில் (Non Brahmin Manifesto) வகுப்புவாரி இட
ஒதுக்கீட்டு முறை கோரப்
பட்டிருந்தது. கல்வி - வேலை
வாய்ப்பில் மட்டுமின்றி, அரசியலிலும்
பிராமணரல்லாதார் உரிய இடம் பெற
வேண்டும் என்று கூறப் பட்டிருந்தது.
பெரியார் 1919இல் அரசியலுக்கு
வந்தார். அவர் நீதிக்கட்சியில்
சேரவில்லை. காங்கிரசுக் கட்சியில்
சேர்ந்தார். அதுவும் இராச
கோபாலாச்சாரியாரின் அழைப்பை
ஏற்றுக் காங்கிரசுக் கட்சியில்
சேர்ந்தார். திராவிடத்தின் தாய்க்கட்சி
நீதிக்கட்சி என்று சொல்லிக்
கொள்கிறார்கள். ஆனால், “திராவிடத்தின் தந்தை” அந்தத் தாய்க்
கட்சியில் சேராமல் - அவரது
மொழியில் “பார்ப்பன - பனியா
கட்சியான” காங்கிரசில் சேர்ந்தார்.
நம்மைப் பொறுத்தவரை, பெரியார்
தமது தொடக்க காலத்தில் காங்கிரசில்
சேர்ந்ததைத் தவறாகக் கருதவில்லை.
சிந்தனை வளர்ச்சிக்கேற்ப அரசியல்
நிலைபாடுகள் மாறலாம்.
நீதிக்கட்சி சென்னை மாகாண
ஆட்சியை 1920 தேர்தலில் பிடித்தது. 1922இல் அவ்வாட்சி வேலை வாய்ப்பில்
வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு ஆணை
பிறப்பித்தது.
இந்த ஆணையையும் நீதிக்கட்சி ஆட்சி
செயல்படுத்தவில்லை. 1926 சட்டமன்றத்
தேர்தலில் நீதிக்கட்சி தோற்றுவிட்டது.
ஆட்சி அமைத்திடப் பெரும்பான்மை
கிடைக்கவில்லை. பெரும்பான்மை
பெற்ற காங்கிரசு சுயராஜ்ஜியக்
கட்சியார் ஆட்சி அமைக்க மறுத்து
விட்டனர்.
நீதிக்கட்சி அல்ல, சுப்பராயன்
ஆட்சியே
இட ஒதுக்கீட்டைச்
செயல்படுத்தியது
கட்சி சார்பற்ற சுயேச்சையான
சுப்பராயன் அவர்களை ஆட்சி
அமைக்கும்படி ஆளுநர் கேட்டுக்
கொண்டார். காங்கிரசுக் கட்சியைச்
சேர்ந்த எஸ். முத்தையா முதலியார்
அக்கட்சியின் பிராமண ஆதரவுப்
போக்கைக் கண்டித்து,
அக்கட்சியிலிருந்து விலகி,
சுப்பராயன் அமைச்சரவையில்
சேர்ந்தார். அவர்தாம் முதல் முதலாக -
புதிய வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுச்
சட்டத்தை 04.11.1927 அன்று சென்னை
மாகாண சட்டசபையில் அறிமுகம்
செய்தார். சுப்பராயன் அமைச்சரவை 1927இல் வகுப்புவாரி இட
ஒதுக்கீட்டிற்குப் புதிய ஆணை
பிறப்பித்தது (G.O. M.S. No 1021).
எஸ். முத்தையா முதலியார் -
பிராமண ஆதிக்க எதிர்ப்பையும்,
பிராமணரல்லாதார் இட ஒதுக்கீட்டுக்
கோட்பாட்டையும்
பெரியாரிடமிருந்து கற்றுக்
கொள்ளவில்லை! பெரியாருக்கு
முன்பே - அவர் இக்கோட்பாடுகளைப்
புரிந்து கொண்டவர்; ஏற்றுக்
கொண்டவர்.
அதனால்தான், 1916இல் நீதிக்கட்சி
அமைப்பதற்கு முன்னோட்டமாக
அமைந்த பிராமணரல்லாதார்
கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்
முத்தையா முதலியார். அதில்
பங்கேற்காதவர் பெரியார்.
நீதிக்கட்சியில் ஆந்திரர் ஆதிக்கமே
மேலோங்கி இருந்தது. அது
தோற்றதால் தமிழரான சுப்பராயன்
முதலமைச்சர் ஆனார் (1926 - 1930).
சுப்பராயன் இடஒதுக்கீட்டுக்
கோட்பாட்டில் ஆர்வமாய் இருந்தார்.
முதலமைச்சர் சுப்பராயனும், அமைச்சர்
முத்தையா முதலியாரும்தாம் முதன்
முதலாக 1928இல் வகுப்புவாரி இட
ஒதுக்கீட்டை செயல்படுத்திக்
காட்டினர். நீதிக்கட்சி வகுப்புவாரி
இட ஒதுக்கீட்டைச் செயல் படுத்தவில்லை.
பெரியார் காங்கிரசில் சேர்ந்து மிகத்
தீவிரமாகச் செயல்பட்டார்.
காந்தியராகவும் இருந்தார். கதர்த்
துணிகளை சுமந்து விற்றார்.
கள்ளுக்கடை மூடலுக்காகத் தம்
துணைவியார் நாகம்மையார் வீட்டுத்
தென்னை மரங்களை வெட்டி
வீழ்த்தினார்.
இவற்றையெல்லாம் நாம் குறையாகக்
கூறவில்லை. இவ்வளவு தீவிரக்
காங்கிரசுக்காரராக இருந்த
பெரியாரின் தாய்க்கட்சி நீதிக் கட்சி
என்று கூறுவதை நாம்
மறுக்கிறோம். பின்னர், நீதிக்கட்சியின்
வகுப்புவாரி இடஒதுக்கீட்டுக்
கோரிக்கையை ஏற்றார். காங்கிரசும்,
நீதிக்கட்சி போல் வகுப்புவாரி இட
ஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன்
வைக்க வேண்டும் என்றார். இது
தொடர்பாக 1925இல் காஞ்சிபுரம்
காங்கிரசு மாநாட்டில் பெரியார்
கொண்டு வந்த தீர்மானம்
நிறைவேற்றப்படாததால் அவர்
காங்கிரசை விட்டு வெளியேறினார்.
பின்னர் தனி அமைப்பு
தொடங்கினார். காங்கிரசை விட்டு
வெளியேறிய பிறகு, பெரியார்
தொடர்ந்து இட ஒதுக்கீட்டுக்
கோரிக்கைக்குக் குரல் கொடுத்தார்.
மாநாடுகள் நடத்தினார். பெரியாரின்
இந்த முயற்சிகளை நாம்
பாராட்டுகிறோம். ஆனால்,
தமிழ்நாட்டில் வகுப்புவாரி இட
ஒதுக்கீட்டுக் கொள்கையைக்
கொண்டு வந்தவரே பெரியார்தாம் -
நீதிக்கட்சிதான் பெரியாரின்
தாய்க்கட்சி என்று சொல்கின்ற கட்டுக்
கதைகளைத்தான் நாம் மறுக்கிறோம்.
ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி, இட
ஒதுக்கீட்டு ஆணை போட்டதே தவிர,
அதைச் செயல்படுத்தவில்லை.
விடுதலைக்கு முந்தைய காங்கிரசு
ஆட்சிகளும், அன்றைய சென்னை
மாகாணத்தில் கல்வி, வேலை
வாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்
கொள்கையை செயல்படுத்தின. 1937இல் முதலமைச்சரான
இராசாசியும் வகுப்புவாரி இட
ஒதுக்கீட்டைச் செயல்படுத்தியதுடன்
மாவட்ட நீதிபதி தேர்வுக்கும் அதை
விரிவுபடுத்தினார் என்கிறார்
பேராசிரியர் க. அன்பழகன் (நூல் :
வகுப்புரிமைப் போராட்டம், கம்யூனல்
ஜி.ஓ. - பேராசிரியர் க. அன்பழகன்,
திராவிடர் கழக (இயக்க) வெளியீடு).
இட ஒதுக்கீட்டுக்குத் தடை
விடுதலைக்குப் பின் 1950 சனவரி 26இல் இந்திய அரசமைப்புச் சட்டம்
செயல்பாட்டுக்கு வந்தது. அதன்பின்
இட ஒதுக்கீடு கேள்விக்குள்ளானது. “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற
அரசமைப்புச் சட்ட உறுப்புகளுக்கு இட
ஒதுக்கீடு எதிரானதாகும் என்ற
கருத்துகள் பேசப்பட்டன.
இட ஒதுக்கீட்டு அடிப்படையில்
மருத்துவக் கல்லூரி மாணவர்
சேர்க்கை நடந்தததால் - தகுதியுள்ள
பிராமணராகிய தனக்கு இடம்
கிடைக்க வாய்ப்பில்லை எனவே
வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை இரத்து
செய்ய வேண்டும் என்று செம்பகம்
துரைராஜ் என்பவர் சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்.
புதிய அரசமைப்புச் சட்ட உறுப்பு 15-
க்கு எதிரானது இட ஒதுக்கீடு என்று
உயர் நீதிமன்றம் இட ஒதுக்கீட்டை இரத்து
செய்தது. உச்ச நீதிமன்றமும்
அத்தடையை உறுதி செய்தது.
சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச
நீதிமன்றமும் செல்லாது என்று
தீர்ப்பளித்த ஆணை சுப்பராயன் - எஸ்.
முத்தையா ஆகியோர் 1927இல்
கொண்டு வந்து 1928இல்
செயல்படுத்திய G.O. M.S. No. 1021
ஆணைதான். நீதிக்கட்சி 1922இல் போட்ட
ஆணை அன்று! அது எப்போதும் உயிர்
பெறவில்லை.
இட ஒதுக்கீடு விவரம்
முதல்வர் சுப்பராயன் - அமைச்சர்
முத்தையா முதலியார் ஆகியோர்
முயற்சியில் கொண்டு வரப்பட்ட 1927ஆம் ஆண்டின் வகுப்புவாரி இட
ஒதுக்கீடுச் சட்டம் - பின்வருமாறு
ஒதுக்கீடு வழங்கியது.
வேலை வாய்ப்பில் 12 இடங்கள்
இருப்பதாகக் கணக்கிட்டு, அதைப்
பின்வருமாறு பிரித்தார்கள்.
பிராமணர் அல்லாத இந்துக்களுக்கு
- 5 இடம்
பிராமணர்களுக்கு
- 2
இடம்
முகமதியர்களுக்கு
- 2
இடம்
கிறித்துவர்களுக்கு
- 2
இடம்
(ஆங்கிலோ இந்தியர் உட்பட)
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
- 1 இடம்
மொத்தம்
- 12 இடம்
இந்த விகிதத்தில் வேலை
வாய்ப்புகளைப் பகிர்ந்து அளிப்பது
என்பதே வகுப்புவாரி இட ஒதுக்கீடு!
அதாவது நூறு விழுக்காடும்
வகுப்பு அடிப்படையில்
பிரிக்கப்பட்டது. இது 1928ஆம் ஆண்டு
தான் செயல்படுத்தப்பட்டது.
பின்னர் 1947இல் காங்கிரசு
முதலமைச்சர் ஆன ஓமந்தூர்
இராமசாமி ரெட்டியார் 1948இல்
பின்தங்கிய வகுப்பார்க்கு (தனி இட
ஒதுக்கீடு) இரண்டு இடம் வழங்கி, இட
ஒதுக்கீட்டின் மொத்த எண்ணிக்கையை 14 ஆக்கினார். அதுவும் சுப்பராயன் -
எஸ். முத்தையா வெளியிட்ட 1927ஆம்
ஆண்டு ஆணையில் செய்யப்பட்ட
கூடுதல் சேர்க்கையே!
தடையை நீக்கிட போராட்டம்
இவை அனைத்தும் செல்லாது என்று
ஆக்கியது சென்னை உயர் நீதிமன்றம்.
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை
எதிர்த்துத் தமிழ் நாட்டில்
போராட்டங்கள் நடந்தன. அதுபற்றி
பேராசிரியர் க. அன்பழகன் மேற்படி
நூலில் பின்வருமாறு
குறிப்பிடுகிறார்.
“மாணவர் கூட்டமே தமிழர்
பெரும்படையின் முன்னணியாகத்
திகழ்ந்தது. சென்னை பச்சையப்பன்
கல்லூரிக் காளைகள் ஊதிய அபாயச்
சங்கொலி கேட்டு குமரிமுனை வரை
உள்ள கல்லூரிகளிலும், உயர் நிலைப்
பள்ளிகளிலும் எதிரொலி
கிளம்பிற்று..
“வகுப்புரிமைத் தந்தை அறிஞர் எஸ்.
முத்தையா அவர்களும், திராவிடர்
கழகத் தலைவர் பெரியார் இராமசாமி
அவர்களும், திராவிட முன்னேற்றக்
கழகப் பொதுச் செயலாளர் அறிஞர்
அண்ணாதுரை அவர்களும் மற்றும் பல
திராவிட இயக்கத் தலைவர்களும்
வகுப்புரிமைச் சட்டத்தின்
அவசியத்தை விளக்கி வெளியிட்ட
அறிக்கைகளும் நிகழ்த்திய
விரிவுரைகளும் மக்கள்
விழிப்பிற்கும் உரிமை எழுச்சிக்கும்
காரணமாயின”.
சென்னை மாகாணக் காங்கிரசு
ஆட்சியும் இந்திய அரசியல் சட்டத்தைத்
திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்
அதற்கான முயற்சிகளை எடுத்துக்
கொள்வோம் என்று அமைச்சரவையில்
முடிவு செய்து, உறுதி கூறியது.
கல்வி அமைச்சர் மாதவ மேனன் ஆணித்
தரமாக உறுதி கூறினார் என்கிறார்
அன்பழகன்.
மேலும் க. அன்பழகன் கூறுகிறார் :
“இந்த உறுதிமொழிகள் கிடைக்கக்
காங்கிரசு இயக்கத்தவரிலும் பலர்
காரணமாயினர். காங்கிரசு சட்டசபை
உறுப்பினர்களான தோழர்கள்
கோசல்ராம், பட்டாபிராமன், கக்கன்,
கன்னியப்பன், சேலம் சுப்பிரமணியன்
ஆகியோர் கம்யூனல் ஜி.ஓ.வை
நிலைநிறுத்த எல்லா முயற்சிகளும்
எடுத்துக் கொண்டனர்.
காங்கிரசுத் தலைவர் காமராசரும்
மற்றும் பலரும் கூட கம்யூனல்
ஜி.ஓ.வை ஆதரித்துப் பேசினர்.
காங்கிரசு ஏடுகளான “தினசரி”, “காண்டீபம்”, “பிரசண்ட விகடன்”
போன்றவைகளும் கம்யூனல்
ஜி.ஓ.வை ஆதரித்து எழுதின.
- பேராசிரியர் க. அன்பழகன் நூல், பக்கம் 95, 96, 97.
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பைத்
தள்ளுபடி செய்து கம்யூனல்
ஜி.ஓ.வுக்கு உயிர் கொடுக்கக் கோரி
சென்னை மாகாணக் காங்கிரசு
ஆட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்
முறையீடு செய்தது. அங்கு ஏழு பேர்
கொண்ட அரசமைப்புச் சட்ட ஆயம் -
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை
உறுதி செய்து - கம்யூனல் ஜீ.ஓ.வைத்
தள்ளுபடி செய்தது.
பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட
மக்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு -
இல்லாமல் போனது. ஒட்டு மொத்தத்
தமிழ்நாடும் கவலையில் உறைந்தது.
பெரியார் கம்யூனல் ஜி.ஓ. மாநாடு
ஒன்றைத் திருச்சியில் போட்டார்.
அண்ணா - கம்யூனல் ஜி.ஓ. கேட்டும்,
நீதிமன்றத் தீர்ப்புகளைச் சாடியும்
கட்டுரைகள் எழுதினார். (அக்கட்டுரைகள் பின்னர் “பொன்விலங்கு” என்ற தலைப்பில் 1953இல் நூலாக வந்தது.)
மாணவர்கள் போராடினர். அரசமைப்புச்
சட்டத்தைத் திருத்த வேண்டும் அல்லது
அரசமைப்புச் சட்டம் ஒழிய வேண்டும்
என்று தமிழ்நாட்டில் பரவலாகப்
பேசப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரசின்
செல்வாக்குமிக்கத் தலைவராக
விளங்கிய காமராசர் தலைமை
அமைச்சர் பண்டித நேருவுடன்
பேசினார். அரசமைப்புச்
சட்டத்திருத்தம் தேவை என்றார்.
இதுபற்றி காங்கிரசுத் தலைவர்களில்
ஒருவரான ஆ. கோபண்ணா “தமிழ்
இந்து” நாளேட்டில் “ முதல்
திருத்தத்தின் மூலவர் காமராஜர் ”
என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று
எழுதியுள்ளார் (15.07.2014).
பெரியாரின் தனி போராட்டமா?
கல்வி, வேலை வாய்ப்பில் இட
ஒதுக்கீட்டை மீட்கும் போராட்டத்தில்
பெரியாரின் பங்களிப்புப்
பாராட்டத்தக்கது. அதே வேளை அவர்
மட்டுமே போராடவில்லை -
கருத்துகள் கூற வில்லை.
பெரியாரியத் திராவிடவாதிகள் -
இதில் அண்ணாவின் பங்களிப்பை,
தி.மு.க.வின் போராட்டங்களைக் கூடக்
கணக்கில் எடுப்பதில்லை. பிறகு
எங்கே, காங்கிரசுக்காரரான
எஸ்.முத்தையா அவர்கள் பங்களிப்பை,
காங்கிரசுத் தலைவர் காமராசர்
பங்களிப்பை கவனிக்கப் போகிறார்கள்!
பெரியார் 1950 - 51 காலத்தில்
கடுமையான காங்கிரசு
எதிர்ப்பாளராக இருந்தார். 1947 ஆகத்து 15 வரை வெள்ளை யராட்சியை
ஆதரித்து, காங்கிரசை எதிர்த்து
வந்தார். அதன் போக்கில் இந்திய
விடுதலை நாளை - 1947 ஆகத்து 15ஐ
துக்க நாளாகக் கடைபிடித்தார். 1949இல் தி.க.விலிருந்து தி.மு.க.
பிரிந்தது முதல் தி.மு.க. ஒழிப்பு
வேலைத் திட்டத்தை முதன்மைப்
படுத்தினார் பெரியார்.
1952 முதல் பொதுத் தேர்தலில்
பெரியார் கம்யூனிஸ்ட்டுக் கட்சியை
ஆதரித்துப் பரப்புரை செய்தார்.
காங்கிரசை எதிர்த்தார். இந்தப்
பின்னணியில் - வகுப்புவாரி இட
ஒதுக்கீட்டுப் போராட்டத்தை
முன்னெடுத்தார் பெரியார்.
1954இல் இருந்து காமராசரையும்
காங்கிரசையும் நிபந்தனையற்று
ஆதரித்தார் பெரியார். அவ்வாறான
சூழலில் 1954க்குப் பின் இட
ஒதுக்கீட்டை நீதிமன்றங்கள் தள்ளுபடி
செய்திருந்தால், இட ஒதுக்கீட்டிற்கு
ஆதரவாகவும், பார்ப்பன பனியா
காங்கிரசு அரசுக்கு எதிராகவும், 1950இல் பரப்புரை செய்ததுபோல்
பெரியார் செய்திருப்பாரா என்ற
ஐயமும் எழுகிறது. ஏன் இந்த ஐயம்?
1938இல் இந்தித் திணிப்பை எதிர்த்துப்
போராடிய பெரியார், 1965இல் இந்தித்
திணிப்பை எதிர்த்து நடந்த வரலாறு
காணாத மாணவர் - மக்கள்
போராட்டத்தை எதிர்த்தார். “காவல்துறையின் கையில் உள்ள
துப்பாக்கிகள் பூப்பறிக்க
இருக்கிறதா? நாலு காலிகளை
சுட்டுத் தள்ளினால் போராட்டம்
ஒடுங்கும்” என்று அறிக்கை விட்டார்.
அவ்வாறு பெரியார் அறிக்கை
விட்டதற்குக் காரணம், தி.மு.க.
ஒழிப்பை முதன்மைப்படுத்தி, 1954
முதல் 1967இல் தி.மு.க. ஆட்சிக்கு
வரும்வரை காங்கிரசை அவர்
ஆதரித்ததுதான்!
அது ஒருபக்கம் இருக்கட்டும். இட
ஒதுக்கீட்டை மீட்க, 1950 - 51இல்
பெரியார் நடத்திய தீவிரப்
பரப்புரைகளையும் அவரது
செயல்பாடுகளையும்
பாராட்டுவோம்; நன்றி
தெரிவிப்போம்!
அதேவேளை பெரியார் புராணம்
எழுதுவோர் தி.மு.க., காங்கிரசு,
முத்தையா முதலியார், அண்ணா,
காமராசர் உள்ளிட்ட பலரின்
பங்களிப்பை மறைப்பதைத் தவறு
என்போம்.
அடுத்து, அரசமைப்புச் சட்டத்தின்
முதல் திருத்தம் இட ஒதுக்கீட்டிற்காக
மட்டும் வந்ததா என்பதைப் பார்ப்போம்.
முதல் திருத்தம் எப்படி ஏற்பட்டது?
1950 சனவரி 26 இல் புதிதாக
செயலுக்கு வந்த இந்திய அரசமைப்புச்
சட்டம் நடைமுறையில் சில முட்டுச்
சந்துகளில் மாட்டிக் கொண்டது.
அவற்றில் முதன்மையானதும், இந்திய
ஆட்சியாளர்களுக்குத் தலைவலியாக
இருந்ததும் குடிமக்களுக்குக்
கருத்துரிமை, பேச்சுரிமை
ஆகியவற்றை வழங்கிய உறுப்பு 19(1)(a).
புதிதாக இந்த உரிமையைப் பெற்ற
நிலையில் ஏடுகளும், பிரமுகர்களும்
ஆட்சியாளர்களைப் பற்றி - குறிப்பாகத்
தலைமை அமைச்சர் நேருவைப் பற்றிக்
கடுமையாக விமர்சித்தனர்.
மும்பையில் இருந்து வெளிவந்து
கொண்டிருந்த “கிராஸ் ரோட்” (CROSS ROAD) என்ற இடதுசாரி ஆங்கில வார
இதழ் நேருவின் கொள்கைகளைக்
கடுமையாகத் தாக்கி எழுதியது.
அவ்விதழைச் சென்னை மாகாண
அரசு 1950 இல் தடை செய்தது.
அவ்விதழின் வெளியீட்டாளர்
ரொமேசு தாப்பர் தடையை நீக்கிட
வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில்
வழக்குத் தொடுத்தார். உச்ச நீதிமன்றம்
கருத்துரிமை உறுப்பு 19(1)(ணீ)ஐக்
காரணம் காட்டி இதழ் மீதான தடையை
நீக்கி 26.05.1950இல் தீர்ப்பளித்தது.
நீதிமன்றச் சுத்தியல் நேரு அரசின்
தலையில் அடித்தது போல்
ஆட்சியாளர்களுக்கு சுரீர் என்று
வலித்தது. அரசமைப்பின் அடிப்படை
உரிமைகள் உறுப்பு 19(1)(a)க்கு
திருத்தம் கொண்டு வர இந்திய
ஆட்சியாளர்கள் சிந்தித்தார்கள்.
இந்திய ஆட்சியாளர்கள் அரசமைப்புச்
சட்டத்தின் அடுத்த முட்டுக்கட்டையாகப்
பார்த்த உறுப்பு 19(1)(g). இவ்வுறுப்பு,
இந்தியக் குடிமக்கள் தாங்கள்
விரும்பும் வேலை, தொழில்,
உடைமை ஆகியவற்றை மேற்கொள்ள
முழு உரிமை பெற்றவர்கள்
என்பதாகும். மக்கள் நலனுக்காக, சில
தொழில்களை அரசுடைமை
ஆக்குவதற்கு இந்தப்பிரிவு
இடையூறாக இருந்தது.
எனவே மேற்கண்ட 19(1)(a) மற்றும் 19(1)(g) ஆகியவற்றிற்கு “ஞாயமான
கட்டுப்பாடுகளை” (Reasonable Restrictions)
விதிக்க நேரு அரசு விரும்பியது.
மூன்றாவதாக நிலச்சீர்திருத்தம்
செய்திட, உச்ச வரம்புச் சட்டம்
கொண்டுவர, ஜமீன்தாரி முறையை
நீக்கிடத் தடையாக இருந்த உறுப்பு 31 (4), (6) ஆகியவற்றைக் கடக்கப் புதிய
பிரிவுகள் தேவைப்பட்டன. இப்புதிய
திருத்தம் பற்றியும் நேரு அரசு
சிந்தித்துக் கொண்டிருந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான்
நான்காவது சிக்கலாக சென்னை
மாகாண அரசின் வகுப்புவாரி இட
ஒதுக்கீடு செல்லாது என்ற உச்ச
நீதிமன்றத் தீர்ப்பு வந்தது.
எதிர்க்கட்சிகளும், மாணவர்களும்,
சென்னை மாகாண அரசும், சென்னை
மாகாண ஆளுங்கட்சியும் இட
ஒதுக்கீட்டை நிலைநிறுத்த
அரசமைப்புச் சட்டத்தில் 15, 16
உறுப்புகளில் திருத்தம் கோரினர்.
இந்த நான்கு சிக்கல்கள் மட்டுமின்றி,
நாடாளுமன்றம், சட்டமன்றங்கள்
ஆகியவற்றின் செயல்பாடுகள்,
அதிகாரங்கள் தொடர்பான
சிக்கல்கள், தேவையான பழைய
சட்டங்களைத் தொடர்வதற்கான
திருத்தம் என மொத்தம் 14 திருத்தங்கள்
அரசமைப்புச் சட்டத்தில் ஒரே ஒரு
முன்மொழிவின் மூலம் - முதல்
திருத்தம் (First Amendment of the Constitution) என்ற பெயரில்
செய்யப்பட்டது. அந்த முதல்
திருத்தத்தைத் தலைமை அமைச்சர்
பண்டித நேரு 10.05.1951 அன்று
நாடாளுமன்றத்தில் முன் வைத்தார். 18.05.1951 அன்று நாடாளுமன்றம்
மிகப்பெரும் பெரும் பான்மையுடன்
நிறைவேற்றி அதனைச்
சட்டமாக்கியது.
அரசின் முன்னுரிமை வரிசைப்படி
நாலாவது இடத்தில் இட ஒதுக்கீட்டுத்
திருத்தம் இருந்தது. ஆனால்
அரசமைப்புச் சட்ட உறுப்புகளின்
வரிசையில் பார்த்தால் இட
ஒதுக்கீட்டுக்கான திருத்தம் உறுப்பு 15இல் வருகிறது.
இந்த முதல் திருத்தத்தின்
நோக்கங்களும் காரணங்களும் (Statement of Objects and Reasons) என்ற
முன்னுரையில் இந்திய அரசு
கூறியுள்ள பகுதி கவனிக்கத்தக்கது.
“கடந்த 15 மாதங்களாக அரசமைப்புச்
சட்டம் செயல்பட்டதில் சில சங்கடங்களைத்
தங்கள் தீர்ப்புகளின், அறிவிப்புகளின்
வழியாக நீதிமன்றங்கள் வெளிக்
கொண்டு வந்தன. குறிப்பாக
அடிப்படை உரிமைகள்
தொடர்பானவை!”.
இவ்வாறு கூறிவிட்டு முதல்
நோக்கமாக “அரசமைப்புச் சட்ட
உறுப்பு 19இல் கருத்துரிமைக்கு
ஞாயமான கட்டுப்பாடுகள் (Reasonable Restriction) விதிக்க வேண்டி உள்ளது”
என்று அந்நோக்க உரை கூறுகிறது.
உறுப்பு 15இல் செய்ய வேண்டிய
திருத்தம் முதன்மையானது என
அந்நோக்க உரை கூறவில்லை.
கருத்துரிமைக்குக் கட்டுப்பாடு
விதிப்பதை முதல் நோக்கமாகக்
கொண்டதேன்? நேருவை விமர்சித்த
ரொமேஷ் தாப்பரின் “கிராஸ் ரோட்ஸ்”
இதழுக்கு சென்னை மாகாண அரசு
விதித்த தடை செல்லாது என்று உச்ச
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நாள் 26.05.1950. அதாவது அரசமைப்புச் சட்டம்
செயலுக்கு வந்த ஐந்து மாதத்தில்
முதல் சிக்கலாக இத்தீர்ப்பு வந்தது.
அதுவும் செல்வாக்கு மிக்க ஆட்சித்
தலைவர் பண்டித நேருவை
இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி
செய்யப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம்
நீக்கிவிட்டது; நேருவை “இழிவுபடுத்தியது” கருத்துரிமை
என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது
என்று காங்கிரசார் பதறினார்கள்.
எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காமல்
இருப்பதற்காக உறுப்பு 19இல்
உட்பிரிவு 2 (கருத்துரிமைக்கு
ஞாயமான கட்டுப்பாடுகள் - விதிகள்
பிரிவு) புதிதாக சேர்க்கப்பட்டது.
அடுத்து தொழில், வணிகம்
ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும்
வகையில் அதே 19இல் பிரிவுகள் (6), i, ii ஆகியவை சேர்க்கப்பட்டன. நிலம்
கையகப்படுத்திட 31இல் புதிதாக, A
மற்றும் B பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இட
ஒதுக்கீட்டிற்கு வாய்ப்பளிக்கும்
வகையில் உறுப்பு 15இல் உட்பிரிவு 4
சேர்க்கப்பட்டது.
நாடாளுமன்றம் தொடர்பாக உறுப்பு 85 மற்றும் 87, சட்டப்பேரவை தொடர்பாக
உறுப்பு 174 மற்றும் 176, தேவையான
பழைய சட்டங்களைத் தொடர்வது
தொடர்பாக உறுப்பு 372 ஆகியவை
திருத்தப்பட்டன. இவ்வாறாக 14
திருத்தங்கள் செய்யப்பட்டன.
“கிராஸ் ரோடு” இதழ் தடை நீக்கம்
“கிராஸ் ரோடு” இதழ் தடை நீக்கம் 26.05.1950 அன்று உச்ச நீதிமன்றத்
தீர்ப்பில் வந்தது. சென்னை மாகாண
இட ஒதுக்கீடு நீக்கத் தீர்ப்பு 09.04.1951
அன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது.
சென்னை உயர் நீதிமன்றம் இட
ஒதுக்கீட்டைத் தடை செய்த தீர்ப்பு 27.07.1950 அன்று வந்தது. “கிராஸ்
ரோடு” இதழ்த் தடை நீக்கம்தான்
முதலில் வந்தது. அது முதல் நிகழ்வு
என்பது மட்டுமின்றி, நடுவண் அரசு
தொடர்பானது என்ற அடிப்படையில்
அரசமைப்பு திருத்தத்தில் உறுப்பு 19(2)-க்கு முன்னுரிமை தரப்பட்டது.
பெரியார் புராணம் பாடும்
பகுத்தறிவுப் பாகவதர்கள் இந்திய
அரசமைப்புச் சட்டத்தையே முதல்
முதலில் திருத்தியவர் ஐயாதான்
என்பார்கள். ஆனால் அவர்களுக்குச்
செவி கொடுக்கும் இளையோருக்கு
வரலாற்று உண்மைகள் தெரிய
வேண்டும் என்பதற்காக
இவற்றையெல்லாம் எழுத நேர்ந்தது.
பெரியாரியத் திராவிடவாதிகள்
அண்ணாவின் பங்களிப்பைக் கூட
உரியவாறு பேசுவதில்லை. அண்ணா
தமிழர்களின் வரலாற்றுப்
பெருமைகளை, தமிழ் மொழியின்
ஆற்றல்களை, சங்கத்தமிழ் நூல்களின்
சிறப்புகளை - திருக்குறள்,
சிலப்பதிகாரச் செழுமைகளைப்
பாராட்டி எழுதியும் பேசியும்
வந்தார், இது பெரியாரியர்களுக்குப்
பிடிக்க வில்லையோ என்னவோ!
மற்றபடி இட ஒதுக்கீட்டு சமூக
நீதிக்காக பெரியார் தொடர்ந்து குரல்
கொடுத்ததையும் பரப்புரை
செய்ததையும் ஆட்சியாளர்களை
வலியுறுத்தியதையும் நாம்
மதிக்கிறோம்; பாராட்டுகிறோம்.
அதே வேளை, மற்றவர்கள் பங்களிப்பை
மறைத்து ‘ஐயாவே அனைத்திற்கும்
ஆதிமூலம்’ என்று கூறுவதையும்,
அவரன்றி தமிழ்நாட்டில் எதுவும்
அசையவில்லை என்று
பேசுவதையும் நாம் மறுக்கிறோம்!
வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை முதல்
முதலில் செயல்படுத்தியது ஆந்திரர்
தலைமையிலான நீதிக்கட்சி அல்ல;
தமிழ்நாட்டுத் தமிழரான சுப்பராயன்
தலைமையிலான ஆட்சியே
என்பதையும் எடுத்துக்
காட்டியுள்ளோம்.
நம் முன்னோர்களின் உண்மை
வரலாற்றைப் படிப்பது
நிகழ்காலத்தையும்,
எதிர்காலத்தையும் சீரமைக்கத்
தேவையான பாடம்!
(தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள், “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” – 2019 பிப்ரவரி 1 - 15 இதழில் எழுதியுள்ள கட்டுரை இது).
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============

ஈவேரா இடவோதுக்கீடு ஜஸ்டிஸ் 

செய்குதம்பி பாவலர் பற்றி

 


aathi1956 aathi1956@gmail.com

புத., 13 பிப்., 2019, பிற்பகல் 2:54
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
சதாவதானி செய்குத்தம்பி பாவலர் - நினைவு நாள் இன்று (ஜூலை 31, 1874 - பெப்ரவரி 13, 1950)
தமிழ்ப் பெரும் புலவர். சீறாப்புராணத்திற்குச் சிறந்ததோர் உரையெழுதியவர். கோட்டாற்றுப்பிள
்ளைத்தமிழ், அழகப்பாக் கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும், சில நாடக நூல்களையும் எழுதியவர். கூர்த்தமதி படைத்து விளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் சதாவதானம் என்னு கலையில் சிறந்து விளங்கியவர்.
நாஞ்சில் நாட்டு கோட்டாறு பகுதியில் இடலாக்குடியில் அமீனா அம்மையாருக்கும் பக்கீர் மீரான் சாகிபுக்கும்மூன்றாவது மகவாக 1874 ஜூலை 31இல் பிறந்தார்.
அக்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாஞ்சில் நாட்டில் மலையாளப் பள்ளிகளே நடந்து வந்தன. பிற்காலத்தில் மிகச் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய செய்குதம்பி இம்மலையாள மொழிப் பள்ளியில் படித்துத் தேர்ந்தது வியப்புக்குரியது.
இவர் சிந்தனை தமிழ்மேலேயே இருந்தது. இடலாக்குடியை அடுத்த பட்டாரியார் வீதியில் சங்கரநாராயண அண்ணாவி என்பவரிடம் முறையாகத்தமிழ் கற்றார். இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சியுற்றார். காளமேகப் புலவர், மாம்பழக்கவிச்சிங்க நாவலர் போல அந்தாதியாகவும் சிலேடையாகவும், யமகம், திரிபுகளாகவும் கவிபுனையும் கலை கைவரப் பெற்றார்.
உரை எழுதுதல், பாட்டெழுதுதல், பதிப்பித்தல் மட்டுமின்றி திருக்குறள், கம்பராமாயணம், சீறாப்புராணம் பற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார்.
தமிழ் இலக்கண இலக்கியங்களில் சிறந்த ஞானம் பெற்ற செய்குத்தம்பி பாவலர் அவர்கள் 1907-ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி சென்னையில் தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் சதாவதான நிகழ்ச்சிகள் செய்து பாராட்டுப் பெற்று சதாவதானி செய்குத்தம்பி பாவலர் என போற்றப் பெற்றவர். சிறந்த தமிழறிஞராகிய பாவலர் அவர்கள் நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, திருக்கோப்பற்றுப் பதிஞ்சம், பத்தந்தாதி, திருமதினந்தந்தாதி, கோப்பந்துக் கலம்பகம், கோப்பந்துப் பிள்ளைத் தமிழ், கவ்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை, நீதி வெண்பா, ஷம்சுத்தாசின் சேவை போன்ற கவிதை நூல்களையும், தேவலோக பழிக்குள்ள வழக்கு, வேதாந்த விபசார பழிக்குள்ள வழக்கு போன்ற வசன நடை காவியங்களையும் எழுதியவர்.
ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்திலும் கலந்துகொண்டார். 1920 நாஞ்சில் நாட்டில் காங்கிரஸ் இயக்கம் தொடங்கியபோது அவர் கதருடைக்கு மாறினார். அந்நாளில் நடந்த பெரும்பாலான கூட்டங்கள் பாவலர் தலைமையில் நடந்தன.
"1937ஆம் ஆண்டில் பாவலர் நாகர்கோவில் நகராண்மைக் கழகத் திடலில், காங்கிரஸ் பிரச்சாரம் செய்தார். நல்ல தமிழில் விடுதலையின் மேன்மையைக் குறிப்பிட்டுக் மகாத்மா காந்தியின் பெருமையை விளக்கினார். அவர் அன்று செய்த வீர முழக்கத்தால் எழுச்சியுற்ற சிறுவர்களில் நானும் ஒருவன்"என்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த டாக்டர். வி.ஐ.சுப்பிரமணியன் பாவலர்மலரில் எழுதியுள்ளார்.
பாவலர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் சிலர் வெறுப்பும் கொண்டனர். நாகர்கோயில் பகுதியில் பேருந்து அதிபராக இருந்த ஒருவரின் பேருந்துகளில் பாவலர் எங்கும் எப்பொழுதும் இலவசமாக ஏறிச் செல்லும் உரிமைதந்து சிறப்பிக்கப்பட்
டிருந்தார். அவரது விடுதலைப் போராட்டத்தின் காரணமாகத் தமது வண்டியில் போவதற்குத் தடை விதித்தார் அவர்.
1950 பிப்ரவரி 13-இல் பாவலர் காலமானார். அறிஞர் பலரும் கலந்து கொண்ட அந்த இரங்கற் கூட்டத்துக்கு கவிமணிதேசிக விநாயகம் பிள்ளை தலைமை தாங்கினார். அவரது இரங்கல் பாட்டு:
"ஒருமவ தானம் ஒருநூறும் செய்திந்தப் பாரில் புகழ்படைத்த பண்டிதனை-சீரிய செந்தமிழ்ச் செல்வனைச் செய்குதம்பி பாவலனை எந்நாள் காண்போம் இனி"
என்று வருந்திப் பாடினார்.
# எமது புகழ் வணக்கம்... #நாம்_தமிழர்
1 மணி நேரம் ·

‘மெய்ஞ்ஞான நாதா - மெய்ஞ்ஞான நா தா’
‘சதாவதானி’ செய்குத்தம்பி பாவலர் நினைவு நாள்

( நக்கீரன் )

1907, மார்ச் 10-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு ஆட்பட்டிருந்த அந்நாளைய சென்னையில் இருந்த விக்டோரியா பொது அரங்கத்தில் ஒரு பெருமகனார் கம்பீரமாக நிற்கிறார்; அவரின் இடையில் ஒரு வெள்ளாடை; அதுவும் முழங்கால் அளவேயுள்ள சிற்றாடை. இடைக்கு மேலே திறந்த மேனியுடன் அவர் மேடை ஏறியதுமே, அம்மனிதரின் திருவாய், ‘மெய்ஞ்ஞான நாதா!’ ‘மெய்ஞ்ஞான நா தா!’ என்று சிலேடைப் பொருள் கொண்ட ஒரு சொற்றொடரை உச்சரித்தது. ‘மெய்ஞ்ஞான நாதனாகிய இறைவனே, எனக்கு மெய்ஞ்ஞான நாவைத் தா’ என்பதுதான் அதன் பொருள்.’
இதை உணராத ஒருவர், மற்றவரைப் பார்த்து ‘கூறுவது கூறல் குற்றமல்லவா? என வினவ, அதை அவதானித்த மற்றொருவர், “கூறியது கூறல் குற்றம் இல்லை; அது வேறொரு பொருளை விளக்குமாயின்” என்று பதில் கூறினார்.
மேடையில் நடுவர்களாக, காஞ்சி மகா வித்துவான் இராமசாமி நாயுடு, திருவெட்டீஸ்வரன் பேட்டை வடிவேலு செட்டியார், அந்நாளில் சட்டக் கல்லூரி மாணவராக இருந்த டி.கே. சிதம்பரநாத முதலியார், வித்துவான் வசிஷ்ட பாரதி, தஞ்சை மேதை சுப்பிரமணிய ஐயர், பச்சையப்பன் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் திருவேங்கட சாமி நாயுடு, புலவர் கா. நமச்சிவாய முதலியார், ‘அட்டாவதானி’ பூவை கலியாண சுந்தர முதலியார், ஹிந்து-சுதேசமித்திரன் ஏடுகளின் ஆசிரியராகப் பணியாற்றிய ஜி.சுப்பிரமணிய ஐயர் ஆகிய தமிழறிஞர்கள் வீற்றிருந்தனர். இப்படிப்பட்டவர்களுள், சென்னை உயர்நீதி மன்றத்தின் அந்நாளைய ஆங்கிலேய நீதிபதியும் ஒருவர். தமிழை அறியாதவர், அவர்.
மேடையில் எண்ணற்ற தமிழறிஞர்கள் குழுமி நின்று அப்பெருமகனாரை நோக்கி வினாக்கணைகளைத் தொடுக்கின்றனர். தம் அதிரடியான பதில்களால் அத்தனை வினாக்களையும் தடுத்து நிறுத்துகிறார் அந்தத் தமிழ் மேதை. அவர்தான் ஒரே நேரத்தில் 100 அலுவல்களை ஆற்றிய ‘சதாவதானி’ செய்குத்தம்பி பாவலர். அவரைச் சுற்றி நின்ற அறிஞர் கூட்டம் வியப்பில் திக்குமுக்காடி நின்றது.
மேடைதான் இப்படி யென்றால், அரங்கத்தில் திரண்டிருந்த மக்கள் வெள்ளம் அலைமோதியது. பண்டிதப் பெருமக்கள், பாமரர்கள், கிரந்த மொழி வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியப் பெருந்தகையர், வணிகப் பெருமக்கள் என கணக்கிட முடியாத அளவிற்கு பொது மக்கள் திரண்டிருந்தனர். மேடையிலும் அரங்கத்திலும் குழுமியிருந்தோர் பலவாறாக எண்ணிக் கொண்டும் பேசிக் கொண்டும் ஆர்வத்துடன் காத்திருக்க, திடீரென ஒர் நடுவர் எழுந்து, “கடவுள் வணக்கப் பாடலை சிலேடையாகப் பாடுவீராக?” என்று பாவலரைப் பார்த்து சொன்னதும், உடனே அந்த அபூர்வப் பாவலர்,
“சிரமாறுடையான் திருமாவடியைத்,
திரமாநினைவார் சிரமே பணிவார்,
பரமாதரவா பருகா ருருகார்,
வரமாதவமே மலிவார் பொலிவார்.” என்னும் பாடலைப்பாடினார்.
இந்தப்  பாடலில் வரும் ‘சிரமாறுடையான்’ என்ற சொற்றொடர் ஐவித கருத்துகளை தன்னகத்தே அடிக்கியுள்ளது. அதாவது,
சிரம் ஆறுடையான்-சிரத்தில் கங்கையாற்றை உடைய சிவபெருமான்,
சிரம்மாறு உடையான்-இயல்புக்கு மாறுபட்ட சிரத்தை உடைய கணபதி,
சிரம் ஆறுடையான்-ஆறுதலைகளை உடைய முருகன்,
சிரம் ‘ஆறு’ உடையான்-திருவரங்கத்தில் தலைப்பாகத்தில் காவிரியாறு ஓட(பாம்பு படுக்கையில்) பள்ளிகொண்ட திருமால்,
சிரம் ஆறு உடையான்-தலையாய நல்வழிகளை உலகிற்குக் காட்டும் அல்லாஹ் - என்பனவே அவை.
சங்கப் பாடலின் ஏதோ ஒரு வரியைச் சொன்னால் போதும், அதை முழுமையாகப் பாடி முடிப்பார்.  அந்த நாளுக்கு முற்பட்ட 1,000 ஆண்டுகளில் ஏதாவது ஓர் ஆண்டு, மாதம், நாளைக் குறிப்பிட்டால், அடுத்த நொடியே கிழமையைச் சரியாகச் சொல்வார். அப்படிப்பட்ட செய்குத் தம்பிப் பாவலர், சாதனைத் தமிழர். அரும்பாவலர்; பெரும்புலவர்.
இப்படியாக 99 அவதானங்கள் முடிந்து நூறாவது அவதானத்தை எட்டாமலேயே அவரை மேடையை விட்டு இறங்கி புறப்படும்படி கேட்டுக் கொண்ட நீதிபதிகள், மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒற்றைமாட்டு வண்டியில் ஏறும்படி கேட்டுக் கொண்டனர்.
நூறாவது அவதானம் அதுவும் நாசிக்குரிய அவதானத்தை நடத்தாமலேயே புறப்படும்படி கேட்கின்றனரே, எங்கே இந்தப் பயணம்? எதற்காக இந்த ஏற்பாட்டு என்று எண்ணியவாறே மாட்டு வண்டியில் பரப்பப்பட்டிருந்த வைக்கோலில் அமர்ந்த மறுவினாடியே துள்ளி எழுந்த பாவலர், இதற்குள் ஒரு தண்ணீர்ப் பாம்பு இருக்கிறது என்று சொன்னதுதான் தாமதம். கூடியிருந்தோர் அனைவரும் சதாவதானி வாழ்க!  சதாவதானி வாழ்க!! என்று முழங்கினர்.
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாருக்குப் பக்கத்தில் உள்ள இடலாக்குடிதான் பாவலரின் சொந்த ஊர். “வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் யானொருவன் அன்றோ!” என்ற இராமலிங்க அடிகளாரின் வாக்கிற்கு இணங்க குடும்பம், உறவு, சாதி, சமயம் கடந்த ஞானியர் பரம்பரையில் தோன்றிய பாவலர், பக்கீர் மீறான்-ஆமீனா தம்பதியர்க்கு மூன்றாம் மகனாக 1874, ஜூலை 31-ல் பிறந்தார்.
தமிழையும் இசுலாத்தையும் இரு விழியெனக் கருதி வாழ்ந்த இப்பெரும்பாவலர்-அறிஞர் பெருமகனார்-மேதையார் இம்மண்ணில் 74 ஆண்டுகள் உலாவந்து, 1950-ஆம் ஆண்டு இதே நாளில் மண்மாதா மடியில் தலை சாய்ந்தார்.


இசுலாமியர் தமிழ்மொழி தமிழ்த்தொண்டு தமிழறிஞர் 

சென்னை நாடார் இருப்பு சோழர் கால கல்வெட்டு கபாலீசுவரர் கோவில்

 

aathi1956 aathi1956@gmail.com

புத., 13 பிப்., 2019, முற்பகல் 11:06
பெறுநர்: எனக்கு
Raj Kumar
சென்னையில் மறைக்கபட்ட சாணார் குப்பம் (ஆயிரம் விளக்கு) ...
18 ம் நூற்றாண்டு ஆங்கிலேயர் கால ஆதாரம்...
தேனாம்பேட்டையின் உண்மையான பெயர் வெள்ளாள தேனாம்பேட்டை...
இந்த சாணார் குப்பத்தை சேர்ந்தவர் தான்
சென்னை மீட்பில் முக்கிய பங்காற்றிய ஐயா சிலம்பு செல்வர் மயிலாப்பூர் பொ.சிவஞான கிராமணியாவார்...
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் 13ம் நூற்றாண்டு சோழர் கால கல்வெட்டிலும் தண்டிபிடிக்கோண் சாணான் 22 ஆடுகள் தானமளித்து உலகாளுடைய நாயனார்க்கு இரண்டு விளக்குகள் கோவிலில் எரிய வைத்தமை குறிக்கபட்டுபட்டுள்ளது இங்கு நினைவு கூறதக்கது..
பின் குறிப்பு:
=========
ஆங்கிலேய காலத்தில் சென்னை பட்டணம் உருவாக்கத்தின் போது வடசென்னை தொ(த)ண்டையார்பே
ட்டையில் இருந்த நிலங்கள், தென்னந்தோப்புகள். சாணார்களிடம்(கிராமணிகளிடம்) இருந்து பிடுங்கபட்டதாகும்...
நேற்று அன்று முற்பகல் 12:45 மணிக்கு

கிராமணி வடதமிழ்நாடு பதிலடி 

வாணகோவரையன் கட்டிக் கொடுத்த 22 வீடுகள் அக்கிரகாரம்







seshadri sridharan <sseshadri27@gmail.com>

திங்., 11 பிப்., 2019, பிற்பகல் 2:34





பெறுநர்: seshadri, மறைநகல்: எனக்கு











வாணகோவரையன் கட்டிக் கொடுத்த 22 வீடு கள்




1. ஸ்வஸ்திஸ்ரீ வாணகோவரையன் (ஓலை சிற்றகழி ஊரவர் கண்டு தங்களூரில்) இருபத்

2. தெட்டாவது முதல் மகனார் சவுண்(ட)பர் நம(க்)கு நன்றாக வைத்த அ(கர)த்துக்குப்

3. பேர் கொண்ட பட்டர்கள் இருபத்தொரு(வரு)க்கு த(ங்க)ளூரிலே ஒருவர்க்கு ஒரு (ம)னையும் புன்

4. செய் நிலத்திலே ஒருவருக்கு ஒன்(ற)ரையாக வ(ந்த) புன்செய் நிலம் முப்ப(த்)தொன்றரை

5. யும் வைத்திய விருத்திக்கு ஒரு மனையும் பு(ன்)செய் நிலத்திலே ஒன்றரை நிலமும்

6. (ஆகப்பேர் இருபத்திருவருக்கும் மனை இருபத்திரண்டும் புன்செய்) நிலம் முப்பத்திரு வே

7. (லியும் இறையிலி ஆக இட்டோம். இந்நிலம் மகதேசன் கோலாலே அளந்து கொ)

8. ண்டு நமக்கு நன்றாக சந்திராதித்த(வ)ரையும் இறையிலிஆக அனுபவிப்பார்களாகப்

9. பண்ணுவதே. இவை வாணகோ(வ)ரையன் எழுத்து.

10. (இப்பட்டர்கள்) குடியிருக்

11. கிற மனைகளுக்கு நிலம் கா

12. லும் பாடிகாப்பானுள்

13. ளிட்டபணி செய் மக்களு

14. க்கு நிலம் காலும் ஆக நி

15. லம் முப்பத்திரு வேலியும்

16. சந்திராதித்தவரையும் இ

17. றையிலி ஆக விட்டோம்.

18. இந்நிலம் மகதேசன் கோலாலே அளந்து கொண்டு அனுபவிப்பார்களாகப் பண்ணவதே.

19. (கன்னட மொழியில் கையெழுத்து உள்ளது)

இடம்: பெரம்பலூர் வட்டம் சித்தளி கிராமம். வரதராஜபெருமாள் கோவில் மகாமண்டபம் தென்சுவரில் வெட்டப்பட்ட 19 வரி கல்வெட்டு.

மகன் – கீழ்ப்படிந்த வீரன், subordinate soldier; மனை – வீடு.

விளக்கம்: மூன்றாம் இராசராசனுக்கு 28 ஆவது ஆட்சிஆண்டில் (1244 AD) அவனுக்கு அடிபணிந்து ஆட்சிபுரிந்த மூன்றாம் அதிகார நிலை அரையனான வாணகோவரையன் தனக்கு உடல்நலம் தேறவேண்டி அவனுக்குக் கீழ்படிந்த வீரனான சவுண்டபர் அகரம் வைக்கிறான். அந்த அகரத்தை செய்த இன்றைய சித்தளியான அன்றைய சிற்றகழி ஊர் பிராமணர் 21 பேருக்கும், ஒரு மருத்துவரின் வளர்ச்சிக்கும் ஆக 22 பேருக்கு பேர் ஒருவருக்கு ஒரு வீடும், 1-1/2 புன்செய் நிலமும் பெறும்படியாக 32 வேலி நிலமும் அரசவரி இன்றி வழங்கப்படுகின்றது. இந்நிலங்கள் மகதேசன் கோலால் அளந்து கொடுக்க ஏற்பாடானது. நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரை இப்படி நடக்கவேண்டும் என்று வாணகோவரையன் ஆணைஓலை வெளியிட்டான். வாணர் கோலார் பகுதியில் இருந்து வந்ததால் அவர் தாய்மொழி கன்னடம் என்பதால் இறுதியில் கன்னடத்தில் கையொப்பம் இட்டான்.

இந்த பிராமண வீடுகளை ஒட்டி நிலம் காலும் ஒதுக்கப்படுகின்றது. அவை கொல்லைப்புறமாக இருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகின்றது. இவர்களுடன் பாடிகாவல் உள்ளிட்ட பிற பணியாளருக்கும் இறையிலியாக தலைக்கு கால்நிலம் என 32 வேலி நிலம் நிலவும் ஞாயிறும் நின்று நிலைக்கும் வரை செல்லக் கடவதாக வழங்கப்படுகின்றது.



22 பேருக்கு 32 வேலியை வகுத்தால் ஒருவருக்கு ஒன்றரையாக (1.45) நிலம் கிட்டுகின்றது. இந்த ஒன்றரையில் கால் என்பது சற்றொப்ப 0.242 என வருகின்றது. அப்படியானால் பாடிகாவல் உள்ளிட்ட பிற கோவில் பணிசெய்வோருக்கு நிலம்கால் என்ற அளவில் 32 வேலி நிலத்தை வகுத்தால் 128 பேர் நிலம் பெறுகின்றனர். ஆக ஒரு பழைய கோவில் ஊரை திருத்திச் சீரமைத்து பெரிய ஊராக அமைத்தான் வாணகோவரையன் என்பது விளங்குகின்றது. இந்த கால்நிலம் பெறும் 128 பேரில் 22 பிராமணரும் அடங்குவர் என்று தெரிகின்றது. அந்த 22 பேரைக் கழித்தால் 128 – 22 = 106 பிராமணரல்லாதார் நிலம் பெற்றனர். இந்த கால்நிலம் என்பது பயிர் நிலமல்ல மாறாக அவர்கள் தம் சொந்த செலவில் வீடு கட்டிக் கொள்வதற்கே என்று புரிகின்றது. பிராமணருக்கு அரசனே வீடு கட்டிக் கொடுத்ததால் அவை அளவில் பெரியவாகவும் கிணறு உடையவாகவும் இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை.

அதேநேரம் கால்நிலம் பெற்றவர்கள் எளியோர் என்பதால் அவர்களால் அதிகம் செலவழித்து பெரிய வீடு கட்ட முடியவில்லை என்பதோடு கிணறு வெட்டினால் கூடுதல் செலவாகும் எனபதால் கிணறுஅற்ற சிறு வீடுகளாகவே அவர்தம் வீடுகள் காட்சிப்படுகின்றன. கால்நிலம் என்பதும் சிறுபரப்பு நிலத்துண்டு தான் அதுவே சிறிய வீட்டிற்கும் காரணமாகின்றது.

மற்றொரு மடலாடல் குழுவில் 3 ஆண்டுகள் முன் பிராமணர் பிறர் வீடுகள் கிணறு அமையா வண்ணம் தடுத்துவிட்டனர் என்று தொல்லியலாளர் பத்மாவதி என்பவர் கருத்து கூறியதாக பதிவான போது அதை மறுத்து பிராமணர் வீடுகள் கிணறுடன் இருப்பதற்கு அவை வேந்தர், மன்னர், அரையர்களால் பெருஞ்செலவு செய்து கட்டப்பட்டவை. பிறருடைய வீடுகள் கிணறு இன்றி சிறியவாக இருப்பதற்கு காரணம் அவர்தம் வீடுகள் அவர் தம் சொந்த செலவால் கட்டப்பட்டதே காரணம் என்று பிழையை சுட்டிக் காட்டினேன். தொல்லியலாளர் பத்மாவதி திராவிட கருத்தியலின் தாக்கத்தால் அவ்வாறு தவறான ஒரு கருத்தை கல்வெட்டில் செய்தியாக கூறப்பட்டுள்ளது என திணித்துள்ளார் என்று எடுத்துரைத்தேன். இப்போது போல அப்போது என்னால் கல்வெட்டுச் சான்று ஏதும் தரஇயலவில்லை என்பதே குறை.

தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்கள் தம் சொந்தக் கருத்தை கல்வெட்டுச் செய்தியாக புகுத்தாமல், திணிக்காமல் இருப்பதுவே சாலவும் நன்று, அல்லவிட்டால் பல தலைமுறைக்கு அத்தவறான கருத்து எடுத்துச் செல்லப்பட்டு சமூகத்தில் குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தும் என்பதே நடப்பு உண்மை.

இப்போது இந்தக் கல்வெட்டின் மூலம் பெரம்பலூர் வட்டம் சித்தளி ஊரில் மட்டும் அல்ல, கோவில் அமைந்த பிற எல்லா ஊர்களிலும் இதே முறையில் தான் பிராமணருக்கு வீடும், பிறருக்கு வீட்டு மனை மட்டும் என வழங்கப்பட்டன. அதனால் தான் பிராமண வீடுகள் கிணறுள்ள பெரிய வீடாகவும், பிறருக்கு கிணறற்ற சிறிய வீடாகவும் அமைந்தன என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும். இன்றும் கோவில் ஊர்க் கிராமப் புறங்களில் வீடுகள் இதே நிலையில்தான் அமைந்துள்ளன என்பதைக் கண்டு தெளியலாம். இந்த வேறுபாட்டிற்கு ஏற்றத்தாழ்விற்கு வேந்தர், மன்னர், அரையர் தாம் காரணமே ஒழிய பிராமணர் காரணகர் அல்லர். அப்படியான நிலையில் பிராமணரைப் பழிப்பது நன்றன்று.

வேந்தர், மன்னர், அரையரான அரசர், நாட்டுக் கிழான் ஆகிய நாலடுக்கு அதிகார அமைப்பு பிராமணருக்கு வேத பாடசாலை அமைத்து கல்வி புகட்டி, கோவில் கட்டி வேலைவாய்ப்பு தந்து குடியிருக்க வீடும் ஏற்படுத்தித் தந்தது என்ற வகையில் 4 அகவை முதல் இறக்கும் காலம் வரை பாதுகாவலராக உத்தாரமாக (supportive) இருந்து தந்தைக்கு ஒப்பான நிலையில் பேணியதற்கு பிராமணர் நன்றி உணர்வுள்ளவராக இருத்தல் வேண்டும். ஆளப்பிறந்தவர், ஆண்டகுடி, மண்ஆண்டவர், அடக்கிஆண்டவர் என்று மார்தட்டிக் கொள்வோர் காரணமின்றி பிராமணரைப் பழிப்பது என்பது இதில் அவர்கள் போற்றும் அரசகுடியோரை பழிப்பதாகவே கருதத்தக்கதாக உள்ளது.



பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி III, பக். 100. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, எழும்பூர், சென்னை – 8.




பாரதியார் இஸ்லாம் பற்றி உரை நபி அராபிய பிராமணர் சாதி

 

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 10 பிப்., 2019, பிற்பகல் 10:06
பெறுநர்: எனக்கு
Saturday, December 24, 2011
at 7:39 AM இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை
[20-6-20, ஞாயிற்றுக்கிழமை மாலையில், பொட்டல் புதூரிலே தெற்குப் புதுமனைத் தெருவில், எல்லா வகைகளிலும் பெருமை பொருந்திய ஒரு முஸ்லீம் ஸபையின் முன்னே, “இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை” என்ற விஷயத்தைக் குறித்து ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியார் செய்த பிரசங்கத்தின் ஸாரம்.]
இன்று மாலை எடுத்துக்கொண்ட விஷயத்தைப் பற்றிப் பேசு முன்பு, நான் அல்லாவின் மீது பாடிக் கொணர்ந்திருக்கும் தமிழ்ப்பாட்டை இங்கு வாசித்துக்காட்ட அனுமதி தரும்படி வேண்டுகிறேன். ஏற்கெனவே அரபி பாஷையில் ‘பாத்திஹா’ (ஜபம்) ஓதி முடிந்துவிட்டது. அதற்கு அனுஸரணையாக இந்தத் தமிழ்ப் பாட்டைப் பாடுகிறேன்.
பல்லவி
அல்லா, அல்லா, அல்லா!
சரணங்கள்
பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லா வெளி வானிலே
நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்,
சொல்லாலு மனத்தாலுந் தொடரொணாத பெருஞ் ஜோதி
(அல்லா, அல்லா, அல்லா!)
கல்லாதவ ராயினும் உண்மை சொல்லாதவராயினும்
பொல்லாதவ ராயினும் தவமில்லாதவ ராயினும்
நல்லாரை நீதியின்படி நில்லாதவ ராயினும்
எல்லாரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச்செய்பவன்
(அல்லா, அல்லா, அல்லா!)
எனக்கு முதல் முதல் இஸ்லாம் மார்க்கத்தில் அன்பு உண்டானதன் காரணம் பின்வருமாறு:
பல வருஷங்களின் முன்பு நான் ஒரு ஆங்கிலேய பண்டிதர் எழுதிய புஸ்தகமொன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் முஹம்மது நபியின் சரித்திரத்தைக் குறித்த சில விஷயங்கள் காணப்பட்டன. அவற்றைப் படித்துப் பார்த்தபோது, நான் அற்புதமுண்டாய்ப் பரவசமடைந்தேன்.
மக்கா நகரத்தில், பூஜாரிகளின் ஸபை கூடியிருக்கிறது. பிரம்மாண்டமான ஸபை. நாட்டிலுள்ள பூஜாரிகள் அத்தனை பேரும் சேர்ந்து கூடும் வருஷாந்தக் கூட்டம் திருவிழாக் காலத்தை ஒட்டி நடந்தது. முஹம்மது நபி மேற்படி பூஜாரிகளின் வம்சத்தில் பிறந்தவர். அரபி தேசத்து ஜனங்கள் அந்தக் காலத்தில் விக்கிரஹாரதலையிலும் பல தேவ உபாஸனையிலும் தற்காலத்தில் தணிந்த ஜாதி ஹிந்துக்கள் எத்தனை மூழ்கிக் கிடக்கிறார்களோ, அத்தனை மூழ்கிக்கிடந்தார்கள். அவர்களிடையே முஹம்மது நபியின் குடும்பத்தார் கோவிற் குருக்களையும் பட்டர்களையும் ஒத்திருந்தனர். இவர்களுடைய வைதிக கோஷ்டியின் ஸபைக்கு நடுவே முஹம்மது நபி எழுந்து நின்று சொல்லுகிறார்: “நான் அல்லாவை நேரே பார்த்திருக்கிறேன். அவர் என்னைத் தமது முக்கிய பக்தராகவும் பிரதிநிதியாகவும் நியமனம் செய்திருக்கிறார். நீங்கள் இனிமேல் அவரைத் தொழுங்கள். அவரை மாத்திரம் தொழுதால் போதும். கடவுள் ஒருவர் தான் இருக்கிறார். பல ஈசுவரர் இல்லை. ஈசனைத் தவிர ஈசன் வேறில்லை. லா இலாஹா இல் அல்லா. அல்லாவைத் தவிர வேறு அல்லா கிடையாது. (அரபி பாஷையில் அல்லா என்ற பதத்திற்குக் கடவுள் என்று அர்த்தம்) அவர் நம்மைப்போல் தோலுடம்பும் கைகால் முதலில் உறுப்புக்களும் உடையவரல்லர். அவரைச் சிலைகள் வைத்துத் தொழுவதிலும் அவருக்கு உங்களுடைய ஆகாரங்களை நைவேத்தியம் பண்ணுவதிலும் பயனில்லை. அவர் எல்லாவற்றையும் படைத்து எல்லாவற்றையும் இயக்கிக் காத்து எல்லாவற்றையும் வடிவு மாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் எல்லாவற்றையும் தம்முடைய உடம்புகளாகவும் தம்முடைய ரூபங்களாகவும் உடையவர். அறிவு வடிவமாக நிற்பவர். அருள் வடிவமாக நிற்பவர். அவரை மனமாகிய கோயிலில் நிறுத்தி, வீரியம் பக்தி என்ற பூக்களால் அர்ச்சிப்பதே சரியான பூஜை, இடைவிடாமல் அசையாமல் அவரிடம் தீராத மாறாத பக்தி செலுத்துங்கள். அவ்விதமான பக்தி “இஸ்லாம்” என்று சொல்லப்படும். இந்த இஸ்லாமைத் தரித்திருப்போர் நித்தியானந்த வாழ்க்கையாகிய முக்தி வாழ்க்கையை எய்துவார்கள். ஆதலால், நீங்கள் இந்தப் புராதனக் கிரியைகளையும் கொள்கைகளையும் விட்டுவிட்டு என் மதத்தில் சேர்ந்து அல்லாவின் திருவடி நிழலை அடைந்துவாழ முதற்பட்டு வாருங்கள்” என்று முஹம்மது நபியாண்டவர் திருவாய் மலர்ந்தருளினார்.
இதைக் கேட்ட மாத்திரத்தில் அங்கிருந்த பெருச்சாளிக் குருக்களெல்லோரும் தங்கள் சிஷ்யர் ஸஹிதமாக முஹம்மது நபியைப் பரிஹாஸம் பண்ணினார்கள். அந்தச் சமயத்தில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலை ஹிவஸல்லம்) அவர்களின் மருமகனாகிய அலி என்பவர் எழுந்து, “மாமா, உங்கள் கொள்கையை யார் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, நான் நம்புகிறேன். லா இலாஹா இல் அல்லா, முஹம்மதுர்ரஜூல் உல்லா, அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவருக்குச் சிறந்த நபி முஹம்மது” என்று பிரதிக்கினை செய்து கொடுத்தார். இது ஒரு செய்தி.
இரண்டாவது செய்தி, முஹம்மது நபியைத் தம் குமாஸ்தாவாகப் பல வருஷம் வைத்திருந்து பிறகு அவருக்கே மாலையிட்டவராகிய கதீஜா பீவியம்மை அவருடைய மதத்தில் சேர்ந்துகொண்டது. ஒருவன் தான் நேரே கடவுளைப் பார்த்ததாகவும் அதினின்றும் தெய்வங்கள் தன்னிடத்தில் விளங்குவதாகவும் வெளியூராரிடம் சொல்லி, அவர்களை நம்பும்படி செய்தல் எளிது. இரவு பகல் கூடவே இருந்து, நீ நோய் வேதனை பொறுக்க மாட்டாமல் அழுவதையும், இன்னும் உன்னுடைய பலஹீனங்கள், அதைர்யங்கள், அச்சங்கள், அநீதிகள், குரூரங்கள், பொறாமைகள், அதர்மங்கள், குறைகள் எல்லாவற்றையும் ஸஹிப்போராகிய உன் சுற்றத்தாரும், அத்யந்த நண்பர்களும், பக்கத்து வீட்டாரும் உன்னைக் கடவுளின் அருளும் அம்சமும் அடைந்த மஹானென்று நம்ப வேண்டுமானால், நீ உண்மையிலேயே தெய்வத்தைக் கண்டால்தான் முடியும். மற்றப்படி ஏமாற்றலினாலும், வேஷங்களாலும், நடிப்புக்களாலும் இவர்களை நம்பும்படி செய்தல் சாத்தியமில்லை. இதுபற்றியே, இங்கிலீஷில், “எந்த மனிதனும் தன் சொந்த ஊரில் தீர்க்கதரிசியாக மாட்டான்” என்றொரு வசனம் சொல்லுகிறார்கள்.
முஹம்மது நபியை முதல்முதல் அலியும், அதைக் காட்டிலும் ஆச்சர்யம் தோன்றும்படி, கதீஜா பீவியும் கடவுளின் முக்கிய பக்தரென்றும், தெய்வ அருள் பெற்றவரென்றும், பூமண்டலத்தில் கடவுளுடைய பிரதிநிதியாக அவதரித்த மஹானென்றும் அங்கீகாரம் செய்து கொண்டதைக் கவனிக்குமிடத்தே, அவர் நிகரில்லாத ஞானி என்பதும், பக்த குல சிரோமணி என்பதும் மிகத் தெளிவாக விளங்குகின்றன.
மக்கத்தில் முஹம்மது நபிக்கு அநேகர் சீடராகச் சேர்ந்துவிட்டார்கள். அவருடைய மதம் நாளுக்கு நாள் பிரபலமாகத் தொடங்கிவிட்டது. இதைக் கண்டு பழைய விக்கிரகாராதனைக்காரருக்குப் பொறாமையும் அச்சமும் மிகுதிப்படலாயின. மக்கத்து அதிபதி, நபியவர்களையும் அவருடைய முக்கிய நண்பர்களையும் சீடரையும் பிடித்துச் சிறையிலிடும்படி, தன் சேவகரிடம் கட்டளையிட்டான். இந்தச் செய்தி நபி ஆண்டவனுடைய செவிக்கு எட்டிவிட்டது. இது 622 கி.பி. வருஷத்தில் நடந்தது. அப்பால், சில நண்பரின் வேண்டுகோளுக்கும் அல்லாவின் உத்தரவுக்கும் இணைந்த முஹம்மது ஒரே ஒரு சீடருடன் மதினாவுக்குப் புறப்பட்டார். போகிற வழியில் காடு; இவ்விருவரும் தனியே சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ஊரை விட்டுத் தப்பிய செய்தியறிந்து, மக்கத்து அதிபதி இவர்களின் பின்னே ஒரு குதிரைப்படையை அனுப்பினான். இவ்விருவரும் காட்டு வழியே போகையில், பின்னே குதிரைப்படை வரும் சத்தம் இவர்களுடைய காதிற்பட்டது. அங்கொரு புதருக்குள்ளே போய்ப் பதுங்கிக்கொண்டார்கள். குதிரைப் படையின் பாத ஒலி மிகவும் சமீபத்தில் கேட்டது. அப்போது நபியுடன் இருந்த சீடர்: “ஐயோ, இனி என்ன செய்யப் போகிறோம்? ஏது நாம் தப்புவது கிடையாது. நம்மை இவர்கள் பார்த்துத்தான் போடுவார்கள். மக்கத்திற்குப் போனால் நம்மை வெட்டிக் கொல்வார்களோ, தூக்குத்தான் போடுவார்களோ!” என்று சொல்லிப் பலவாறு பரிதபிக்கலானான். அப்போது முஹம்மது நபி (ஸல்லல்லா ஹு அலைஹி வஸ்ல்லம்) அவர் சொல்லுகிறார்;
“கேளாய், நண்பனே; நான் இந்த உலகத்தில் அல்லாவின் காரியஸ்தனாக வேலை செய்து வருகிறேன். அல்லாவினால் எனக்கு மானுஷ லோகத்தில் நிறைவேற்றும்படி விதிக்கப்பட்டிருக்கும் காரியங்களெல்லாம் நிறைவேறி முடியும்வரை, என்னை உலகத்து மன்னர்களெல்லோரும் ஒன்று கூடிக் கொல்ல விரும்பினாலும் எனக்கு ஒரு தீங்கும் வரமாட்டாது. என் தலையில் ஆயிரம் இடிகள் சேர்ந்து விழுந்த போதிலும் எனக்கு மரணம் நேரிடாது. அல்லா ஸ்ர்வ வல்லமையுடையவர். அவருடைய சக்திக்கு மேற்பட்ட சக்தி இந்த ஜகத்தில் வேறில்லை. ஆதனால் எனக்குப் பயமில்லை. என்னுடன் இருப்பதனால் உனக்கும் ஆபத்து வராது. நீயும் பயப்பட வேண்டிய அவசியமில்லை” என்றார்.
அப்பால் அந்தக் குதிரைப் படை அவர்களைப் பாராமலே போய்விட்டது.
இந்த ஸமாசாரத்தை நான் வாசித்துப் பார்த்தவுடனே, என் மனத்தில் முஹம்மது நபியிடமிருந்த மதிப்பு ஆயிரம் மடங்கு மிகுதியாயிற்று. ஸாதாரண காலங்களில் தைர்யத்துடன் இருப்பது ஸுலபம். ஆபத்து நேரே தலையை நோக்கி வரும்போது, “கடவுள் துணை செய்வார். எனக்குப் பயமில்லை” என்று மனத்துடன் சொல்வோன் உண்மையான தெய்வபக்தன். தெய்வ பத்தி ஒன்றைத் தவிர வேறெந்தச் சக்தியும் மனிதக் குண்டின் முன்னே தைர்யம் கொடுக்காது. சீறிவரும் பாம்பை நோக்கி அஞ்சாமல் நகைக்கவல்ல தீரர் கடவுளின் கருணை பெற்றோரேயாவர். மற்றப்படி வேறெந்தப் பலமும் அவ்விதமான தைர்யத்தைத் தராது. “பாம்பென்றால் படையும் நடுங்கும்.” இன்னும், மதீனாவுக்கு நபி சென்ற பிறகு இதுவரை பல தடவைகளில் மக்கத்தாரின் கொரேஷ் படைகள் எதிர்த்து வந்தன. முஹம்மது நபியிடம் சேர்ந்தவர்கல் தக்க ஸைன்யப் பயிற்சி பெறவில்லை. பயிற்சி பெற்று வந்த படைகளைப் பயிற்சியற்ற மனிதர்களைத் துணை கொண்டு முஹம்மது நபி வென்றார். ‘கலங்காத நெஞ்சுடைய ஞானதீரமும் அழியாத நம்பிக்கையும்’ அவரிடத்தே இருந்தன. ஆதலால் அவருக்கு,
எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கும் வெற்றி எதனிலும் வெற்றி
விடுத்ததாய் மொழிக் கொங்கணும் வெற்றி
வேண்டு முன்னர் அருளினர் அல்லா.
இடையிடையே நான் என் மனத்திற்குள் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றிச் சித்திரம் போட்டுப் பார்ப்பது வழக்கம். நடுப் பாலைவனத்தில் நள்ளிரவிலே தனி மணல் வெளியிலே, ஒட்டகையின்மீது தனியாக ஏறிக்கொண்டு போகிறார். அல்லது, அங்கொரு குன்றின்மேல் ஏறி நிற்கிறார். கேள்வியாலும் நெடுங்காலத்து பக்தியாலும், நிகரற்ற அன்பினாலும், ஞானத்தாலும் பக்குவப்பட்ட இவருடைய ஹ்ருதயம் அப்படிப்பட்ட இடத்தில் அல்லாவை நாடுகிறது. வேறு நினைப்புக்கு இடமில்லை. அப்போது அங்கு ஞான ஒளி வீசிற்று; நபி அல்லாவைக் கண்டார். சுகப் பிரம்ம ரிஷிக்கு நேர்ந்த அனுபவம் முஹம்மது நபிக்கு எய்திற்று.
அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ
எங்கும் ஏன் ஏன் என்ற தென்னே, பராபரமே
என்று தாயுமானவர் பாடியிருக்கிறார்.
இந்தக் கதை எப்படியென்றால், சுகப் பிரம்ம ரிஷி காட்டு வழியாகப் போய்க் கொண்டிருக்கையில் கடவுளைப் பார்க்க வேண்டுமென்ற தாகமெலீட்டால், “கடவுளே கடவுளே” என்று கதறிக்கொண்டு போனாராம். அப்போது காட்டியிருந்த கல், மண், மணல், நீர், புல், செடி, மரம், இலை, பூ, காய், காற்று, ஜந்துக்கள் எல்லாவற்றினின்றும், “ஏன், ஏன்” என்று மறுமொழி உண்டாயிற்று. அதாவது, கடவுள் ஞானமயமாய் எல்லாப் பொருள்களிலும் நிரம்பிக் கிடப்பதைச் சுக முனிவர் கண்டார் என்பது இக்கதையின் பொருள். முஹம்மது நபி மஹா ஸுந்தர புருஷர், மஹா சூரர், மஹா ஞானி, மஹா பண்டிதர், மஹா பக்தர், மஹா லெளகிக தந்திரி. வியாபாரமானாலும் யுத்தமானாலும் முஹம்மது நபி கவனித்தால், அந்த விஷயத்தில் வெற்றி மிகவும் உறுதி. ஆதலால் அவர் மிகவும் அபிமானிக்கப்பட்டார்.
எனினும், புதிய மதமொன்று கொண்டு வந்ததினினும் அவர் சுற்றத்தாரும் அத்யந்த நண்பர்களும் பகைமை செலுத்தலாயினர். ஆனால், நபி பொருட்டாக்கவில்லை முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலஹி வஸ்ல்லம்) அவர்கள், உலகத்தின் பொது நன்மைக்கும் தர்மத்திற்கும் நீதிக்கும் ஸ்த்யத்திற்கும் அல்லாவிற்கும் முன்னே, தம்முடைய சொந்த ஸுகங்களையும், அதனால் விளையும் பெருமைகளையும், இன்பங்களையும், ரக்ஷணைகளையும், உயிரின் பாதுகாப்பையுங்கூடச் சிறிய பொருளாகக் கருதினர்.
இவரிடத்தில் இத்தனை உறுதியான பக்தியிருப்பதை நோக்கியே, அல்லா இவரைத் தமக்கு மிகவும் பிரியமான நபியாகத் தெரிந்தெடுத்தார்.
அரபியா தேசத்தில் மக்கா நகரத்தில் அப்துல்லா என்ற மஹானுக்கும் அவருடைய தர்ம பத்தினியாகிய ஆமீனாவுக்கும் குமாரராக கி.பி. 570-ஆம் ஆண்டில் நம் நபி ஜனித்தார். புஸ்தகப் படிப்பு இல்லை. கேள்வியால் மஹா பண்டிதரானார்; ஸஹவாஸத்தால் உயர்ந்த ஞானியானார்; நிகரில்லாத பக்தியால் அரசனும், கலீபும் தீர்க்கதரிசியுமானார். மக்கத்தில் பெருஞ் செல்வியாகிய கதீஜா பீவியையும் வேறு எட்டு ஸ்திரீகளையும் மணம் புரிந்தார். தம்முடைய ஒன்பது பத்தினிகளிலே அபூ பக்கரின் குமாரியான ஆயிஷா பீவியைப் பிரதான நாயகியாகக் கொண்டிருந்தார். நாற்பதாம் ஆண்டில் தம்மை ஈசன் நபியாக்கிவிட்டதாக உலகத்துக்குத் தெரிவித்தார். கி.பி. 632-இல் இந்த மண்ணுலகை விட்டு முஹம்மது வானுலகம் புகுந்தார்.
மக்கத்தை விட்டு, இளமையிலேயே இவர் வியாபாரத்துக்காக வெளி நாடுகளில் ஸ்ஞ்சரிக்கும்படி நேர்ந்த ஸமயங்களில், யூத கிருஸ்தவ பண்டிதர்களைக் கண்டு அவர்களுடைய மதக் கொள்கையைப்பற்றி விசாரனை செய்வது வழக்கம். அதனின்றும் விக்கிரஹாராதனை விஷயத்திலும் பல தேவர் வணக்கத்திலும் இவருக்குப் பற்றுதலில்லாமற் போக ஹேது உண்டாயிற்று. ஏகேசுவர மதத்தைக் கைக்கொண்டார். யூதருக்கும் கிருஸ்தவருக்கும் பொதுவாகிய “பழைய ஏற்பாடு” என்ற பைபிலின் பூர்வ பாகத்தை இவர் உண்மையாகவே அங்கீகாரம் செய்துகொண்டார். கிருஸ்துவ நாதரையும் இவர் ஒரு சிறந்த நபியாகக் கொண்டார்; கடவுளின் அவதாரமாக ஒப்புக் கொள்ளவில்லை. விக்கிரஹங்களிடத்தே கடவுளைக் காட்டி வணங்குதல் பொருந்தாத கார்யமென்று யூதருக்கும் கிருஸ்தவருக்கும் தோன்றியது போலவே, ஒரு மனிதன் பக்தி ஞானங்களில் எவ்வளவு சிறப்பெய்திய போதிலும், அவன் கடவுளை நேருக்கு நேரே கண்டறிந்த வரையிலும் அதுபற்றி அவனை மிக உயர்ந்த பக்தனென்றும் முக்தனென்றும் போற்றலாமே யல்லது, மனித வடிவத்தில் ஸாக்ஷாத் கடவுளையே சார்த்துதல் பொருந்தாதென்று முஹம்மது நபி எண்ணினார் போலும். இந்த அம்சத்தில் என்னுடைய சொந்தக் கருத்து பின்வருமாறு:
இந்த உலகம் முக்காலத்திலும் உள்ளது; இது அசைகிறது; அண்டங்களாக இருந்து சுழன்றோடுகிறது; காற்றாகத் தோன்றி விரைகின்றது; மனமாக நின்று சலிக்கிறது; ஸ்தூல அணுக்களும் ஸூக்ஷ்ம அணுக்களும் ஸதா மஹா வேகத்துடன், மஹா மஹா மஹா மஹா வேகத்துடன், இயங்கிய வண்ணமாகவே இருக்கின்றன. இந்த உலகத்தில் இருந்துகொண்டு இதனை அசைக்கிற சக்தியையே கடவுளென்கிறோம். எல்லாம் அவன். உலகத்தின் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள்.
அவனுடைய நிஜ வடிவம், அதாவது, பூர்வ வடிவம் யாது? சைதன்யம் அல்லது சுத்தமான அறிவே கடவுளின் மூல ரூபம். மனிதருடைய ஸாதாரணச் செயல்கள் யாவுமே கடவுளின் செய்கைகளே யன்றி வேறில்லை எனினும் ஜகத்தில் ஞான மயமான கடவுள் எங்கும் நிரம்பிக் கிடப்பதை நேரே ஒருவன் கண்ட பிறகு, அந்த மனிதனுடைய செயல்களிற் பல, கடவுளின் நேரான கட்டளையின்படி செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலைமையை எய்தின மனிதனை நபி அல்லது தீர்க்கதரிசி என்கிறோம். அப்பால் அல்லா, எப்போதுமே ஒருவனுடைய ஹ்ருதயத்தில் அந்தக்கரணத்துக்கு நன்றாக விளங்கும் வண்ணம் குடி புகுந்து, கற்றறிந்தவனுடைய அறிவு முழுவதையும் தாம் விலை கொடுத்து வாங்கிய கருவிபோலே ஆக்கிக்கொண்டு, புறச் செயல்களும் உலகத்தாருக்கு வழிகாட்டிகளாகும்படி பரிபூர்ண சைதன்ய நிலையிலே நடத்திக்கொண்டு வரத் திருவுளம் பற்றுவராயின், அப்படிப்பட்ட மனிதனைக் கடவுளின் அவதாரமென்று சொல்லலாம். ஆனால், கிருஸ்து நாதர் இந்நிலை அடைந்ததாக முஹம்மது நபி நம்பவில்லை போலும். இது நிற்க.
இஸ்லாம் மார்க்கத்தின் முதலாவது கலீபாவாக முஹம்மது நபி அரசாண்டார். அவருக்குப்பின் அபுபகர் அந்த ஸ்தானத்தை ஐந்து வருஷம் வகித்தார். அப்பால் ஏழு வருஷம் உமர் கலீபாவாக ஆண்டார். அந்தக் காலத்திற்குப் பின்பு முஸல்மான்களிலே, ஷியா ஸுந்நி என்ற இரண்டு பிரிவுகள் உண்டாயின.
குரான் இஸ்லாம் மார்க்கத்திற்கு வேதம். இதை முஹம்மது நபி தம்முடைய வாக்காகச் சொல்லவில்லை. கடவுளுடைய வாக்கு தேவதூதரின் மூலமாகத் தமக்கு எட்டியதென்றும் தாம் அதை ஒரு கருவி போலே நின்று உலகத்தாருக்கு வெளியிடுவதாகவும் சொன்னார்.

பார்ப்பனர் பொட்டல்புதூர் தர்கா பாரதி ஒற்றுமை இசுலாமியர் திருநெல்வேலி

திருக்குறள் சமணம் தொடர்பு மலர்மிசை ஏகினான் அருகன் கடவுள்

 

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 10 பிப்., 2019, பிற்பகல் 9:48
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
திருக்குறளில் வரும் ஆதி பகவன் என்பவர் பல மதத்தவரும் தங்களுடைய கடவுளையே குறிக்கிறது என்று கூறிவரும் வேளையில் அது எந்தக் கடவுளையும் குறிக்கவில்லை ஆதி பகலவன் அதாவது சூரியனைக் குறிக்கிறது, அது சமய சார்பற்ற குறள் எனவும் பேசவும் எழுதவும் தொடங்கியுள்ளனர்.
ஆதி பகவன் என்ற பெயர் போக
மலர் மிசை ஏகினான்
எண் குணத்தான்
தமக்குவமை இல்லாதான்
அறவாழி அந்தணன்
வேண்டுதல் வேண்டாமை இல்லாதான்
பொறிவாயில் ஐந்தவித்தான்
இரு வினையுஞ் சேராவிறைவன்
இவர்கள் எல்லாம் யார்?
இப்பெயர்கள் குறித்து ஏராளமாய் தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றனவே அது குறித்து குறளை சமய சார்பற்றதாகச் சொல்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?
இனி வரும் பதிவுகளில் இப்பெயர்கள் குறித்து ஆராயலாம். முதலில் மலர் மிசை ஏகினான் என்ற பொருள் குறித்து பார்க்கத் தொடங்கலாம்.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
இக்குறளில் சொல்லப்படும் 'மலர்மிசை ஏகினான்' என்பது யாரைக்குறிக்கும
்? பல்வேறு மதத்தினரும் தங்களுடைய கடவுள் தானென்றும் திருக்குறள் தங்களுடையதென்றும் நிறுவ முயற்சிக்கின்றனர்.
'மலர் மேல் நடந்த திருவடி' என்று பொருள்தரும் என சூடாமணி நிகண்டு, சேந்தன் திவாகரம், பிங்கல நிகண்டுகள் கூறுகின்றன. இவை சமணரின் அருகக் கடவுளையே குறிக்கிறது என்பதை இதர சமண இலக்கியங்கள் வழியே அறிந்து கொள்ளமுடிகிறது.
தேவாரத்தில் எங்கேனும் சிவனுடைய பாதம் 'பூ மேல் நடந்தபாதம்' என்றுள்ளதா என ஆராய்ந்த ஆராய்ச்சிப் பேரறிஞர் சீனி வேங்கடசாமி அவர்கள் ஒரே ஒரு தேவாரப் பாடல் உண்டென்றும் அது கூட சமணத்திலிருந்து சைவம் சென்ற அப்பர் பாடியதாகும் என்கிறார்.
மலர்மிசை ஏகினான் அருகனையே குறிக்கும் என்பதைக்கூறும் சமணச் செய்யுட்கள் சில:
1 ) பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது
அருகர் அறவன் அறிவோற் கல்லதென்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா
மலர்மிசை நடந்தோன் மலரடி அல்லதென்
தலைமிசை உச்சி தானணிப் பொறாஅது” - நாடுகாண் காதை (200 - 205)
2) இரதநூபுரச் சருக்கத்தில்,
“விரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்
உரையணிந் தியாம்பரவ வுண்மகிழ்வா யல்லை
உண்மகிழ்வா யல்லை யெனினு முலகெல்லாங்
கண்மகிழ நின்றாய்கட் காதலொழி யோமே” - 18
3) “முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர்மேற் சென்றாய்
யருகணங்கு யேத்தி யதுமகிழ்வா யல்லை
யதுமகிழ்வா யல்லை யெனினும் பெயராக்
கதிமகிழ நின்றாய்கட் காத லொழியோமே” - 18
4) “மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய்
குணமயங்கி யாம்பரவக் கொண்டுவப்பா யல்லை
கொண்டுவப்பா யல்லை யெனினுங் குளிர்ந்துலகம்
கண்டுவப்ப நின்றாய்கட் காத லொழியோமே” - 189
5) அறநெறிச்சாரம் என்ற நூலின்கண் அமைந்த கடவுள் வாழ்த்தில்,
“தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப்
பூவின்மேல் சென்றான் புகழடியை - நாவின்
துதித்துஈண்டு அறநெறிச் சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருக்காய் விரைந்து” - (1)
6) அவிரோதி ஆழ்வார் அருளிய “திருவெம்பாவை” என்னும் நூலில்,
“வாரணங்கள் கூவ வரிவண்டு இசைபாடப்
பேரிகையுஞ் சங்கும் பிறதூரியமு ழங்கத்
தாரணியும் பிண்டிநிழல் தாமரையின் மீதிருந்த
வீரியனார் பாடலோ வீதிதொறும் கேட்டிலையோ
காரிகையாய் நீஇன்னும் கண்கள் விழித்திலையோ
பாரீச பட்டர்மேல் பாசமும் இத்தனையோ
மாரனொடு காலனை முன்வாரா மலேகாய்ந்த
ஈரேழ் புவிக்கு இறையைப் பாடலோர் எம்பாவாய்” - (9)
7) ஜீவசம்போதனை என்னும் நூலின்கண் அமையப் பெற்ற பாடல்,
“பன்னிரண்டு மாகணமு மேத்தப்பைந் தாமரைடின்
சென்னி மிசைநடந்த சேவடியை - யுன்னியுயி
ரல்லாத அன்னியமே யென்னும் மதிகாரம்
நல்லா யினியுரைப்ப னன்கு” - (185)
8 ) திருப்பாமாலை” என்னும் நூலில், கடவுள் வாழ்த்துப் பாடலில்,
“வாடாத் தாமரை மலர்மிசை யொதுங்கிய சேடுபடு சிறப்பிற் செல்வ! நின் திருத்தடி
வீடுபெறு புண்ணியம் உடையோர்க் அல்லது
கூடா தேத்துதல்! கொடுமைசெய் பல்லுயிர்
நீடுபல திரிதலும் அனந்தங் காலமென” - (1-5)
9) “மந்தாநிலம் வந்தசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிசை
இனிதின் ஒதுங்கிய இறைவனை
மனமொழி மெய்களின் வணங்குவதும் மகிழ்ந்தே”
10) உதீசி தேவர் அருளிய திருக்கலம்பகம் என்னும் நூலில்,
“ மயிலாபுரி நின்றவ ரரியாசன வும்பரின்
மலர்போதி லிருந்தவ ரலர்பூவி னடந்தவ
ரயிலார்விழி மென்கொடி மிடைதீபை நயந்தவ
ரமராபதி யிந்திர னணியாட லுகந்தவர்..” - (74)
11) “தாதார் மலர்மேல் நடந்தானை
தடம்சூழ் இஞ்சி நகரானை
தேதா எனவண்டு இடைபாடும்
செழுந்தண் பிண்டி நிழலானை
காதார் குழைகள் வெரிவீசக்
கனகப் பொற்றோள் கலந்திலங்கப்
போதார் மலர்கொண்டு அர்ச்சிக்கப்
புலராய் வாழி, பொழுதே நீ!” - (6)
12) “திருவில் மின்னார் கொலைபொய்யும்
சேரார் ஆதி அந்தமில்லார்
மருவு மரவும் தாதார
மன்னும் மலர்மேல் நடந்தானைப் பொருவில் காற்றில் நின்றிலங்கப்
பொங்கு பூவம் அங்கமுடன்
அருளும் கோல மணியார்தாள்
அணிய விடியாய், பொழுதே நீ!” - (11)
13) திரு இரட்டைமணி மாலை என்னும் நூலில்,
‘ஆக்கிய தொல்வினையும் ஆகும் வினைப்பயனும்
போக்கினேன் நம்பாற் புகுதாமல் நோக்கருஞ்சீர்
விண்ணவர்தம் கோமான் வெறிமலர் மேல்நடந்த
பண்ணவனைப் பாடிப் பணிந்து” - (1)
14) “சூடாமணி நிகண்டு” அருகனின் பெயர்களைக் கூறும்போது
பின்வருமாறு கூறுகிறது!
“அநகன், எண்குணன், நிச்சிந்தன்
அறவாழி வேந்தன் வாமன்
சினன் வரன் உறுவன் சாந்தன்
சினேந்திரன் நீதி நூலின்
முனைவன் மாசேனன் தேவன்
மூவுல குணர்ந்த மூர்த்தி
புனிதன் வென்றோன் விராகன்
பூமிசை நடந்தோன் போதன்..” - (9)
15) மலர்மிசை நடந்த மலரடி யல்லதுஎன்
தலைமிசை யுச்சி தானணிப் பொறா அது
(# சிலப்பதிகாரம் )
16) எங்கு முலகுமிருள் நீங்க இருந்த எந்தை பெருமானார்
தங்கு செந்தா மரையடி என் தலையவே என் தலையவே
(# சீவக_சிந்தாமணி )
17) மன்றனாறு மணிமுடிமேல் மலிந்தசூளா மணிபோலும்
வென்றோர் பெருமான் அறவாழி வேந்தன் விரிபூந்தாமரைமேல் சென்ற திருவாரடி ஏத்தித் தெளியும் பொருள்களோரைந்தும்
அன்றி யாரும் ஒன்பானும் ஆகுமென்பா ரறவோரே
(# முத்தியிலம்பகம் சீவக சிந்தாமணி)
18) விரைமணந்த தாமரைமேல் விணவணங்கச் சென்றாய
19) முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர் மேற்சென்றாய
20) மணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய
21) மணங்கமழுந் தாமரையின் மத்திவலை கொப்பளித்து மதர்த்து வாமன
22) அரும்பிவரும் அரவிந்தம் அறிவரன
தடிநிழல தடைந்தோ மென்ற
23) அழலணங்கு தாமரையார் அருளாளி
யுடையகோன் அடிகீழ்ச் சேர்ந்த
24) சேவடிகள் தாமரையின் சேயிதழ்கள் தீண்டச் சிவந்தனவோ?
(# சூளாமணி )
25) தாமரையே எத்தவங்கள் செய்தாய்!
சகமூன் றினுக்குந்
தாமரைசே என்று சாற்று
போலும் முச் சத்திரத்துத்
தாமரைசேர் திருவைத் திருமார்பிற்
றரித் தவர்செந்
தாமரையேய் சரணந்தலை மேற்கொண்டு
தாங்கு தற்கே
(# திருநூற்றந்தாதி )
26) ........................ தண்டா மரைமேல் நடந்தான்
தடந்தாள் வணங்கிக்
கண்டேன் கிடந்தேன் கனவின்னது
கண்ட வாறு
(# நீலகேசி )
27) தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப் பூவின்மேற் சென்றான் புகழடியை
(# அறநெறிச்சாரம் )
28) தாமரை மலர்புரை அடியினை
தாமரை மலர்மிசை ஒதுங்கின
29) மாதவர் தாதயை மலர்மிசை மகிழ்ந்தன
30) ஏடலர் தாமரை ஏந்தும் நின்னடி
வீடொன்று கட்டினை விளக்கும் நின்மொழ
(# யாப்பருங்கலவிருத்தி )
சரி, இவை புத்தரையும் குறிக்கும் எனவும் கூறுவர். ஆனால் குறள் புலால் உண்ணாமையை வலியுறுத்துவதன்படி மலர் மிசை ஏகினான் என்பது அருகக் கடவுளையே குறிக்கிறது.
மறுப்பவர்கள் தக்க சான்றுடன் மட்டுமே மறுக்க வேண்டும். அடுத்த பதிவில் எண் குணத்தான் என்பது குறித்து பார்ப்போம்.
சமணம் என்பது முழுக்க தமிழ் மரபு நெறியென்ற முறையில் பதிவிட்டப்பட்டுள்ளது. இது சைனம் அல்ல.
பதிவு:- காளிங்கன்

இலக்கியம் மதம் மெய்யியல்