புதன், 30 செப்டம்பர், 2020

காங்கிரஸ் செய்த கேடுகள் பட்டியல் நடுவணரசு ஹிந்தியா விமர்சனம்

aathi1956 ஞாயி., 23 டிச., 2018, பிற்பகல் 1:54 பெறுநர்: எனக்கு //தமிழகத்தில் அனைத்து அவலத்திற்கும் காரணகர்த்தா காங்கிரஸ்-திராவிட உறவு தான். 1)தமிழகத்தின் எல்லைகளை சுறுக்கியது 2) பண்டாரி சிறிமாவோ ஒப்பந்ததின் படி ஈழ தமிழர்களின் குடியுரிமை பறித்து மீண்டும் தமிழகத்தில் குடியேற வழிவகுத்தது 3)தமிழகத்தில் இந்தி திணித்து போராட்டத்தின் போது ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்களை சுட்டு கொன்றது 4)1974ல் காவிரி வழக்கை உச்ச நீதிமன்றத்தில் வாபஸ் பெற வைத்தது 5)1975-1977 எமர்ஜென்சி காலகட்டத்தில் மாநில அரசின் உரிமைகளை பறித்தது.அதன் பிறகு மத்தியில் இருந்து மாநிலத்திற்கு ஒரு அதிகாரமும் திரும்ப தரவில்லை. 6)1987ல் இந்திய அமைதி படையை அனுப்பி ஈழத்தில் தமிழர்களை வேட்டையாடியது. 7)உலகமயம் தாராளமயம் தனியார் ஊக்குவிப்பு போன்ற திட்டங்களால் இந்திய வளம் பண்ணாட்டு முதலாளிகளுக்கு திறந்து விட்டது. 8)1991ல் காவிரி இடைக்கால தீர்ப்பு வழங்க பட்ட போது கருநாடகத்தில் கலவரம் நடத்த பட ஏராளமான தமிழர்கள் அகதிகளாக மாறினர்.அது தொடர்பாக சிறு நடவடிக்கை கூட கருநாடகத்தில் காங்கிரஸ் எடுக்க வில்லை. 9) கூடங்குளம் அணுஉலை தமிழகத்தில் திணித்தது. 10) 2009 இனப்படுகொலை 11)மீத்தேன் ஸ்டர்லைட் நியூட்ரினோ எட்டு வழிசாலை அவ்வளவு ஏன் இந்த நீட் தேர்வுக்கு கூட அச்சாரமே காங்கிரஸனின் குலாம் நபி ஆசாத் இந்திய சுகாதார அமைச்சராக பணியாற்றிய போது தான்.// கார்த்திகேயன் சேதுராசன் 2009க்கு பிறகு இனப்படுகொலைக்கு நியாயம் வேண்டி தெருவிற்கு வந்து போராடிய அத்தனை தமிழ் இயக்கங்களும் இன்னைக்கு என்னடானா விழுந்து விழுந்து இனப்படுகொலை செய்த காங்கிரஸை ஆட்சியில் அமர்ந்த பேரணி போரானுங்க. இது கூட பரவாயில்லை மை லார்டு .ஏனெனில் அவனுங்க தமிழ்நாடு தமிழர்கள் பூமி என கூற இயலாது .இங்கு அனைத்து மக்களும் வாழ்கிறார்கள் தமிழர்கள் கொஞ்சம் கூடுதலாக வாழ்கிறார்கள் அவ்வளவு தான் என்று பேசியது ஒரு குரூப்பு. இன்னொரு குரூப்பு தமிழினம் என்ற ஒன்றே கிடையாது என்று கூறுனவனுங்க.அதுவும் அவனுங்க நடத்துற freedom இதழில் தமிழுக்கென்று எந்தவித தேசமும் இல்லையாம் ஆனால் சில தமிழ்தேசிய வியாதிகள் இல்லாத தேசமாம் அதுக்கு பேர் தமிழ் தேசமாம் என நக்கலாக எழுதியவன்.இன்று தமிழ்நாட்டை தொடர்ச்சியாக தனது ஆதிக்கத்தை தக்க வைக்க மட்டுமே பேரணி ஊரணி என்று.... இத கூட ஒரு கணக்கில் சேர்த்து கொள்ளலாம் ஏனெனில் அவனுங்க நம் இனம் கிடையாது. அவனுங்க தமிழினமே உலகில் எங்கும் இல்லை என கற்பூரம் அடித்து சத்தியம் செய்வார்கள். ஆனால் இந்த தமிழ்தேசிய அமைப்புகள் என களமாடும் எந்தவித இயக்கமும் இந்த கருஞ்சட்டை பேரணிக்கு உள்ள நோக்கம் பற்றி இதுவரை பேசாதது ஏன்? மணியரசன் தியாகு போன்ற தமிழ்தேசிய தலைவர்கள் எல்லாம் தேர்தலில் போட்டி போட போவதில்லை. அவர்களுக்கு எந்தவித சமரசம் இல்லை. இதை பற்றிய உண்மை நோக்கம் பற்றி இவர்கள் பேசவில்லை. தேர்தலில் போட்டியிடும் தமிழ்தேசிய அமைப்புகள் கூட இதை பற்றி பேசாதது தான் ஐயத்தை கூட்டுகிறது. அவர்களின் நம்பகதன்மையை கேள்விக்குட்படுத்த தேவையும் உள்ளது. தமிழ்தேசியம் பேசுகிறார்கள் சரி அவர்கள் இந்த இனத்திற்கு உண்மையாக போராடுகிறார்களா அல்லது போராடும் இளைஞர்கள் உணர்வுகள் காயடிக்க வேலை செய்கிறார்களா என சுயபரிசோதனை மிகவும் அவசியமாகும். கடந்த ஐந்து வருடங்களாக காங்கிரஸ் பற்றி எந்தவித தமிழ்தேசிய இயக்கமோ ஊடகமோ அல்லது தேர்தலில் பங்கு வகிக்கும் தமிழ் கட்சியோ பேசாதது ஏன்? இந்திய ஒன்றியம் தனக்கான பிடி தமிழகத்தில் ஏதேனும் வைத்துக்கொண்டு இருக்கும். ஆனால் தமிழகம் கிட்டத்தட்ட இந்திய அடையாளம் அனைத்தையும் துறந்த நிலையில் உள்ளது. இங்கு தேசிய கட்சிகள் காலுன்ற தமிழகம் வாய்ப்பு அளிக்காதது ,டெல்லியின் அனைத்து மக்கள் எதிர்ப்பு திட்டத்தையும் ,சமஸ்கிருத இந்தி மற்றும் மாற்று இன கலாச்சார திணிப்பையும் தொடர்ந்து தமிழகம் எதிர்த்து தனது தேசிய இன அடையாளத்தை தக்க வைத்து கொண்டு உள்ளது. மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு செயலாளர் பேராசிரியர் ஐயா. தா.செயராமன் அவர்கள் கூறுவார் "இங்கு ஒரு ஒலக்கையை நட்டு வைத்து உரம் போட்டு தண்ணீர் ஊற்றி வளர்தால் அந்த ஒலக்கை கூட வேர் விட்டு துளிர் விட்டு துளிர்க்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஆரிய கருத்தியலை கொண்ட கட்சி ஒரு போதும் தமிழகத்தில் கால் ஊன்ற இயலாது". ஆம் இராயிரம் ஆண்டுகளாக ஆரியத்திற்கு எதிராக களமாடும் தமிழர்களை கொண்ட தமிழ் மண் இது.இங்கு ஒருபோதும் ஆரிய சிந்தனைகள் இங்கு வளர முடியாது. ஆனால் இந்த திராவிட இயக்கங்கள் திமுகவும் என்னமோ தாங்கள் தான் இம்மண்ணை ஆரியத்திடம் இருந்து காத்தது போல உதாரு விட்டு திரும்பவும் ஆரியத்திற்கு தமிழர்களை அடமானம் வைக்கும் கயமைகள்.இவர்கள் அடிக்கடி பேசுவது பார்ப்பணிய பனியா ஆதிக்கத்தை பற்றி. ஆனால் இவர்கள் தான் 1916 முதல் நீதிகட்சி என்றும் 1925 முதல் 1944 வரை சுயமரியாதை இயக்கமாகவும்.1944 முதல் இந்நாள் வரை திராவிட இயக்கமாகவும் ,மேலும் தேர்தலில் போட்டியிட்டு அதே கருத்தியிலுடன் 1967 முதல் இந்நாள் வரை தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வைத்து தமிழர்களை சுரண்டி கொண்டு இருக்கும் கட்சிகள். இவர்கள் பனியா பார்பனர்கள் ஆதிக்கத்தை எந்த அளவிற்கு ஒழித்துள்ளார்கள்.பார்ப்பனர்கள் கூட இம்மண்ணில் ஒரளவுக்கு இருந்தார்கள் .ஆனால் இந்த மார்வாடி பனியா மற்றும் இதர வடநாட்டவர்கள் எப்போது குடியேறி பெருகினார்கள் என்பது வெட்ட வெளிச்சம். இந்த பனியா கும்பலிடம் தமிழகத்தின் வணிகம் எப்படி சென்றது .ஏனெனில் இவர்களின் ஆதிக்கத்தை ஒழிக்கவே இயக்கம் நடத்தி தமிழகத்தில் ஆட்சி ஐம்பது ஆண்டுகளுக்கு நடத்தி பட்டி தொட்டி வரை மார்வாடிகளின் வணிக ஆதிக்த்தை அனுமதித்த கயவர்கள். இவர்கள் தங்கள் சொந்த கருத்தியலை கூட நிலை நாட்டாதவர்கள். மேலும் வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு எதற்காக இத்தனை இரயில் இயக்கப்படுறது.எந்த தமிழன் வேலை நிமித்தமாக இத்தனை இரயிலில் வட இந்தியா நோக்கி பயணிக்கிறான்.அங்கு உள்ள வட இந்திய கூலி தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் குடியேற உதவுவதற்காக இத்தனை இரயில்கள் இயக்கப்படுகிறதா என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த ஆளும் திராவிட கட்சிகள்எந்த விதத்தில் இதை தடுத்தது. இவர்களது இலக்கு தமிழ்நாட்டில் ஒரு உண்மையான தமிழர் ஆட்சி நடைபெற கூடாது என்பது தான். மேலும் இந்திய தேசிய கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் ஒரு இடத்தை உறுதி செய்யும் ஒரு ஏஜென்சி மட்டுமே இவர்கள். உதாரணமாக தமிழ்நாட்டில் காங்கிரஸை கூட்டணியில் திமுக சேர்க்காவிட்டால் ஒரு இடம் கூட அதனால் வெல்ல இயலாது. ஆனால் இல்லாத காங்கிரஸை தமிழகத்தில் உயிருட்டும் முயற்சி தான் திமுக செய்வது.இவர்கள் கருத்தியல் படி காங்கிரஸ் கூட பனியா ஆதிக்கம் நிறைந்த கட்சி தான். உண்மையான பார்பணியத்தின் முகவரி ,தேசிய இன விடுதலையை சிதைத்து இந்திய ஒன்றிய எல்லையை பாதுகாக்க போராடும் அமைப்பு அது. இன்னும் சொல்ல போனால் தமிழகத்தில் அனைத்து அவலத்திற்கும் காரணகர்த்தா காங்கிரஸ்-திராவிட உறவு தான். 1)தமிழகத்தின் எல்லைகளை சுறுக்கியது 2) பண்டாரி சிறிமாவோ ஒப்பந்ததின் படி ஈழ தமிழர்களின் குடியுரிமை பறித்து மீண்டும் தமிழகத்தில் குடியேற வழிவகுத்தது 3)தமிழகத்தில் இந்தி திணித்து போராட்டத்தின் போது ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்களை சுட்டு கொன்றது 4)1974ல் காவிரி வழக்கை உச்ச நீதிமன்றத்தில் வாபஸ் பெற வைத்தது 5)1975-1977 எமர்ஜென்சி காலகட்டத்தில் மாநில அரசின் உரிமைகளை பறித்தது.அதன் பிறகு மத்தியில் இருந்து மாநிலத்திற்கு ஒரு அதிகாரமும் திரும்ப தரவில்லை. 6)1987ல் இந்திய அமைதி படையை அனுப்பி ஈழத்தில் தமிழர்களை வேட்டையாடியது. 7)உலகமயம் தாராளமயம் தனியார் ஊக்குவிப்பு போன்ற திட்டங்களால் இந்திய வளம் பண்ணாட்டு முதலாளிகளுக்கு திறந்து விட்டது. 8)1991ல் காவிரி இடைக்கால தீர்ப்பு வழங்க பட்ட போது கருநாடகத்தில் கலவரம் நடத்த பட ஏராளமான தமிழர்கள் அகதிகளாக மாறினர்.அது தொடர்பாக சிறு நடவடிக்கை கூட கருநாடகத்தில் காங்கிரஸ் எடுக்க வில்லை. 9) கூடங்குளம் அணுஉலை தமிழகத்தில் திணித்தது. 10) 2009 இனப்படுகொலை 11)மீத்தேன் ஸ்டர்லைட் நியூட்ரினோ எட்டு வழிசாலை அவ்வளவு ஏன் இந்த நீட் தேர்வுக்கு கூட அச்சாரமே காங்கிரஸனின் குலாம் நபி ஆசாத் இந்திய சுகாதார அமைச்சராக பணியாற்றிய போது தான். இவ்வளவுக்கும் காரணமாக தமிழினத்தின் குரல்வளையை நெரித்ததே இந்த காங்கிரஸ் தான். இந்த காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு இவ்வளவு துரோகத்திற்கும் துணை நின்ற திமுக தொடர்ந்து இதை நீடிக்கவே இந்த கருஞ்சட்டை பேரணி .இவர்கள் தங்களது துரோகங்கள் எல்லாம் மறைக்க தமிழகத்தில் இல்லாத ஆரிய பாசவின் மீது தமிழர்கள் கவனத்தை திசை திருபுவதை மட்டுமே தொழிலாக வைத்து செயல்படுகின்றனர். தமிழர்கள் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். ஆரியத்தின் உண்மையான வேர் (மரம்) காங்கிரஸ் தான் பனியாவின் சேவை ஆளே காங்கிரஸ் தான். அதனுடைய கிளை தான் பாசக. தமிழகத்தில் எப்போதெல்லாம் மரத்தின் வேர் மீது கோபம் வரும் போதெல்லாம் இந்த திராவிட தலித்திய மற்றும் இந்துத்துவதிற்கு சொம்படிக்கும் நாதாரிகள் அந்த கோபத்தை மரத்தின் கிளை பக்கமே திருப்பி விடும் வேலையை செய்கிறார்கள். ஆகவே தமிழர்கள் திராவிடம் எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்தாக வேண்டும். பின்குறிப்பு:தமிழ்தேசிய அமைப்பு என்ற போர்டு தான் பல இயக்கங்கள் மாட்டி உள்ளது. உள்ளே போய் பார்த்தால் திராவிடதிற்கு மறைமுகமாக உதவுகிறது 2 மணி நேரம் · Facebook for Android · நண்பர்கள் சேமி நீங்கள், வெங்கடேசன் மற்றும் 5 பேர் உங்கள் கருத்தைச்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக