செவ்வாய், 26 செப்டம்பர், 2017

வன்னியர் ஓரங்கட்டல் தனி கட்சி படையாச்சி நாயகர் காமராசர் முகத்தில் கரி சாதி

கோ மகன் .
SS .ராமசாமி படையாட்சி அவர்கள்
கட்சி துவங்கிய வரலாறு
1952 பொதுத்தேர்தலில் காமராசர், வன்னியர் சமூகத்துக்கு
நாடாளுமன்றத்துக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்க முடியாது என்றும், சட்ட
மன்றத்திற்கு இரண்டு பேர்களுக்கு மட்டுமே தொகுதி ஒதுக்க முடியும் எனக்
கூறி வன்னியருக்கு அரசியல் பிரதிநிதித்துவம் தர மறுத்தார். அதே வேளை தான்
சார்ந்த நாடார் சாதிக்கு,
1.டி.பழலூர் 2.சேரன்மாதேவி 3.ஆலங்குளம் 4.தூத்துக்குடி 5.திருச்செந்தூர்
6.சாத்தான்குளம் 7.விளாத்திகுளம் 8.விருதுநகர் ஆகிய 8 சட்டமன்றத்
தொகுதிகளை ஒதுக்கியதோடு
1.சங்கரன்கோவில் 2.ஸ்ரீவில்லிபுத
்தூர் 3.ஸ்ரீவைகுண்டம் ஆகிய 3 நாடாளுமன்றத் தொகுதிகளையும் நாடார்களுக்கு
ஒதுக்கினார்.
தமிழ்நாட்டில் மிகப் பெரிய மக்கள் தொகையைக் கொண்ட வன்னிய சமூகத்திற்கு,
நாடார்களுக்கு ஒதுக்கப்பட்ட விகிதாச்சாரப்பட
ி தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமானால் 35 சட்டமன்றத் தொகுதிகளும், 13
நாடாளுமன்றத் தொகுதிகளும் ஒதுக்க வேண்டும்.நாடாளுமன்ற தொகுதி ஒன்று கூட
ஒதுக்க முடியாது என்றும், சட்ட மன்றத் தொகுதி இரண்டே இரண்டு தான் ஒதுக்க
முடியும் என்று மறுத்து விட்டார் காமராசர்.
இதை எதிர்த்து காங்கிரசிலிருந்து வெளியேறி, எஸ்.எஸ்.ராமசாமி
படையாட்சியார் தலைமையில் உழைப்பாளர் கட்சியும், மாணிக்கவேல் நாயகர்
தலைமையில் காமன் வீல் பார்ட்டி (பொதுநலக் கட்சி) என தனித்தனியாக இரு
கட்சிகள் தோன்றின. இவைகள் மற்ற கட்சிகளைப் போலவே வன்னியர் மடடுமல்லாமல்
மற்ற சாதியார்களையும் வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றி பெற வைத்தன.
எஸ்.எஸ்.இராமசாம
ி படையாட்சியாரின் உழைப்பாளர் கட்சியில் 29 பேர்கள் சட்டமன்றத்திற்க
ும், 6 பேர் நாடாளுமன்றத்திற்கும் போட்டியிடுகின்றனர்.19 பேர்
சட்டமன்றத்திற்கு வெற்றி பெறுகின்றனர். அதில் 11 பேர் வன்னியர் . 6 பேர்
தாழ்த்தப்பட்டோர். திருக்கோவிலூர் தொகுதியில் முத்துக்குமாரசாமி
புதுக்கோட்டையில் பாலகிருஷ்ணன் என்ற மாற்று சமூகத்தினரும் வெற்றி
பெறுகின்றனர்.
6 பேர் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டதில், 1 வன்னியரும் 1 தலித்தும்
தோல்வி அடைந்தனர் வெற்றி பெற்ற நால்வரில் 3 பேர் வன்னியர், ஒருவர் தலித்.
அதே போல் மாணிக்கவேல் நாயகரின் பொதுநலக்கட்சியில் 3 பேர் நாடாளுமன்ற
உறுப்பினராக வெற்றி பெறுகின்றனர். காஞ்சிபுரம் தொகுதியில் டாக்டர்
ஏ.கிருஷ்ணசாமி முதலியார் வெற்றி பெறுகிறார் மற்ற இருவரும் வன்னியர்.7
பேர் சட்ட மன்ற உறுப்பினராகின்றனர். 7 பேரும் வன்னியர்.
இவ்விரு கட்சிகளிலும் வன்னியர்களை மட்டுமே வேட்பாளர்கள் அல்லர்.
தலித்துகள்; முதலியார்; நாயுடு; உடையார் போன்றவர்களும் வேட்பாளர்களாக
நிறுத்தப்பட்டு, பல சாதியினரும் வெற்றி பெற்றனர்.
இரு கட்சிகளிலும் 26 சட்டமன்ற உறுப்பினர்களும், 7 நாடாளுமன்ற
உறுப்பினர்களும் வெற்றி பெறுகின்றனர். ஒரு நாடாளுமன்ற தொகுதி கூட தர
மறுத்த காமராசரின் முகத்தில் 7 தொகுதிகளில் வெற்றி பெற்று கரியைப்
பூசினர். அதே போல் இரண்டு சட்டமன்ற தொகுதி மட்டுமே தர முடியும் என்ற
காமராசரை எதிர்த்து 26 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
அந்தத் தேர்தலில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. வேறு
வழியில்லாமல் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும் என்று இவர்களிடமே ஆதரவு
கேட்டு சரணடைந்தார் காமராசர்.
தன் சாதியினருக்கு மட்டும் அதிக தொகுதிகளை ஒதுக்கிய காமராசருக்கு சாதி
வெறி இல்லையாம். இந்த வரலாற்று உண்மை தெரிந்த பிறகும் நீங்கள்
நம்புகிறீர்களா?
CR.Rajan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக