செவ்வாய், 26 செப்டம்பர், 2017

காதல் சாவுக்கு அஞ்சாது இலக்கியம் மறுபிறப்பு மறுபிறவி

காதல் – சாதல் அஞ்சேன்
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
 பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்
மறக்குவேன்கொல் என் காதலன் எனவே.
அம்மூவனார்.நற். 397 :  7 – 9
 தலைவன் பிரிவால் வாடும் தலைவி -  இவ்வுலகில் இறப்புக்கு அஞ்சேன்; இறந்து போனால் நேரும் மறுபிறப்பில் வேறுபட்டுப் போனால் என் காதலனை மறந்துவிட நேருமோ என்றே அஞ்சுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக