செவ்வாய், 26 செப்டம்பர், 2017

ஆயர் பெண் கற்பு நெறி திருமணம் பற்றி இலக்கியம்

இருமணம்
விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்
அரு நெறி ஆயர் மகளிர்க்கு
இருமணம் கூடுதல் இல் இயல்பு அன்றே
சோழன் நல்லுருத்திரன். கலித்.114 :  19 – 21
விரிந்த திரை சூழ்ந்த கடலை ஆடையாக உடைய உலகத்தைப் பெற்றாலும்  - அற நெறியில் செல்லும் ஆயமகளிர்க்கு இருமணம் என்பது  குடிப்பிறப்பிற்கு இயல்பன்று.
( சிறந்த குடியில் பிறந்த மகளிர் விரும்பியவனையன்றி வேறொருவனைத் திருமணம் செய்து கொள்ளார் என்பதாம். ) இப்பாடலில் – திருமணத்தின்போது வீட்டில் புதுமண் பரப்பி – செம்மண் பூசி அழகுபடுத்துதலும் – பெண் எருமையின் கொம்பை வீட்டினுள் நட்டு வழிபட்டமையும்  சுட்டப்படுகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக