செவ்வாய், 26 செப்டம்பர், 2017

பன்றி வேட்டை கறி விருந்து இலக்கியம் உணவு

பன்றிக் கறி விருந்து
பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு
கணைக்கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்
கல் அதர் அரும்புழை அல்கி கானவன்
வில்லின் தந்த வெண்கோட்டு ஏற்றை
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி
குடிமுறை பகுக்கும் …………………………
கபிலர். நற். 336 : 1 – 6
 சொரசொரப்பான பிடரியை உடைய ஆண் பன்றி  தோலாய் வற்றிவிட்ட முலையை உடைய பெண் பன்றியுடன் சென்று திரண்ட  அடிப்பகுதியைக் கொண்ட தினைக்கதிரைஅளவிறந்து தின்னும்; அதனையறிந்த கானவன் கல் நெருங்கிய அரிய வழியிடையே தங்கிப் பதுங்கி வில்லினால் அம்பு எய்து; வெண்மையான தந்தத்தையுடைய ஆண் பன்றியைக் கொல்வான் : தான் கொன்ற பன்றியை அழகூட்டிய கரிய கூந்தலையுடைய மனைவியிடம் கொடுத்தான். அவளும் அப்பன்றியை அறுத்துத் தன் குடியினர் யாவர்க்கும் முறையுடன் பகுத்துத் தருவாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக