வெள்ளி, 13 நவம்பர், 2020

தமிழகம் ஈழத்தமிழர் க்கு சாதி சான்றிதழ் வழங்குதல்

 

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்செவ்., 30 ஏப்., 2019, பிற்பகல் 8:08
பெறுநர்: எனக்கு
தமிழகத்தில் வாழும் இலங்கையர்களுக்கு சாதி சான்றிதழ்
By சீலன் On Jul 14, 2014

பல தசாப்த போராட்டத்தின் பின்னர் தமிழகத்தில் வாழும் இலங்கையர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.புத்தூர் மற்றும் சுலியா மாவட்டங்களின் குடியிருப்புகளில் வாழும் இலங்கையர்களுக்கே இந்த சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
cer
இதற்கான அனுமதி சமூக நலன்சார் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த குடியிருப்புகளை சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் விண்ணப்பங்களை எடுத்துவரும் போது அதன்பேரில் சான்றிதழ்களை விநியோகிக்க முடியும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.முன்னர் இந்த விண்ணப்பங்களில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக கூறப்பட்டது. எனினும் தற்போது இதனை இலகுவாக நிரப்ப முடியும் என்று புத்தூர் மாவட்ட உதவி ஆணையாளர் எச்.கே கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
1970 ஆம் ஆண்டுகளில் 926 இலங்கை தமிழர் குடும்பங்கள் தமிழகத்துக்கு சென்றனர்.இதன்பின்னர் 1994 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் இவர்கள் விடயத்தில் விளக்கம் அளிக்கும்போது நாடற்றவர்களாக இருக்கும் இவர்களுக்கு சாதி சான்றிதழ்களை வழங்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தது.எனினும் கடந்த பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 1453 குடும்பங்களை சேர்ந்த 6343 பேருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதென்று முடிவெடுக்கப்பட்டது.
இந்தநிலையில் குறித்த சான்றிதழ் கிடைக்கப்பெற்றால் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்களில் இந்த இலங்கையர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கும் எனினும் இந்த நடைமுறையை தலித் பிரிவினர் கண்டித்துள்ளனர்.இலங்கையர்களுக்கு இந்த சான்றிதழ்கள் வழங்கப்படும் போது தமக்கான வாய்ப்புக்கள் குறைந்து போய்விடும் என்று அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்

குடியுரிமை சான்று அகமுடையார் அகதி முகாம் ஒற்றுமை தமிழ்ச்சாதி

https://senpakam.org/தமிழகத்தில்-வாழும்-இலங்க/


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக