வெள்ளி, 13 நவம்பர், 2020

திருச்செந்தூர் தமிழ்ப் பார்ப்பனர் கைவிட்டு நம்பூதிரி பிடியில் பூசாரி கருவறை

 

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 26 மார்., 2019, பிற்பகல் 10:44
பெறுநர்: எனக்கு
திருத்த வரலாறு என்பதைக் காண்
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# தமிழ்க் கடவுளின் பூசாரி மலையாளி:-
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பணியாற்றும் தமிழ் ஐயர் சாதிப் பிரிவின் பெயர் "முக்காணி" ஆகும்.இவர்கள் முழுக்க முழுக்க முருகன் கோயிலுக்கு மட்டுமே பூசை செய்வார்கள். திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள முக்காணி என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். தற்போது திருச்செந்தூரில் உள்ளனர். (ஆனால் இப்போது அந்தக் கிராமத்தில் பார்ப்பனர்கள் யாரும் இல்லை).
திருச்செந்தூர் முருகன் கோயிலின் மூலக் கருவறையில் நுழைவதற்கு இச் சாதியினருக்கு அனுமதி கிடையாது.. மூலக் கருவறையில் இருப்பவர்கள் மலையாள நம்பூதிரிகள்...இந்த முக்காணிகள் (தமிழ் ஐயர்கள்) பிரகாரத்தில் உள்ள பரிகார தெய்வங்களுக்கும், உற்சவ முருகனுக்கும் மட்டுமே பூசை செய்ய முடியும்...
தமிழ்க் கடவுள் முருகனின் கோயிலில் மலையாளிகள் ஆதிக்கம். இதைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை... தமிழ்த் தேசிய அமைப்புகளும் இதைக் கண்டு கொண்டதில்லை...(பாவம் அவர்களுக்குத் தெரியாது)... தெரிந்ததெல்லாம் பார்ப்பனர்கள் அனைவரும் ஆரியர்கள் என்ற திராவிட கருத்து மட்டுமே...
*இது நான் பிறந்த சாதி

 வீர தமிழன் கோ.வே.மாரிமுத்து
உண்மை அண்ணா.முக்காணி சமுதாயத்தை சேர்ந்தவர்களுடன் சபரிமலைக்கு 10நாள் பாதயாத்திரை சென்றவன் என்ற முறையில் சொல்கிறேன்.அவர்களை மலையாள நம்பூதிரிகள் மதிப்பதுகூட கிடையாது.அவர்கள் சிலை சுமக்க எடுபிடி வேலைகள் செய்வதற்கே பயன்படுத்துகின்றனர்.

சு.கணேசன்
மலையாள போத்தீக்கள்தான் திருச்செந்தூர் முருகனுக்கு பூஜை செய்கிறார்கள் இன்றும்

முக்கானி மலையாளி அர்ச்சகர் கோவில் கோயில் முருகன் முருகர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக