திங்கள், 11 மார்ச், 2019

பறையர் சாதிவெறி வன்னியர் பதிலடி பாமக

aathi1956 aathi1956@gmail.com

வியா., 31 மே, 2018, முற்பகல் 10:18
பெறுநர்: நான்

காரைக்குறிச்சி ராஜா
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 'மணிகண்டன் மேல்பட்டாம்பாக்
கம்' என்ற தம்பி 'காடுவெட்டி குரு காலமானதைக் கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டது' என பட்டாசு கொளுத்தும் ஒரு வீடியோ பதிவு போட்டிருந்தார்.
நான் அவரது பதிவுக்குள்ளேயே சென்று இப்படிக் கேட்டேன்.
1.குடிதாங்கியில் பறையர் பிணத்தை வன்னியர் தெரு வழியே எடுத்துச் சென்று மருத்துவர் ராமதாஸ் அவர்கள் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார்.
2.ஆண்டிமடத்தில் காடுவெட்டி குரு ஆதி திராவிடர்களை ஊர்க் கோவிலுக்குள் அழைத்துச் சென்றார்.இரட்டைக் குவளை முறையை ஒழித்தார்.
3.மருத்துவர் அவர்கள் தம் சமுதாயத் தலைவரான ராமசாமிப் படையாட்சியாருக்குக் கூட சிலை திறக்காமல் ஊர்கள்தோறும் அம்பேத்கருக்கு சிலைகள் திறந்தார்.தைலாபுரம் தோட்டத்திலும் அம்பேத்கர் சிலை நிறுவி அஞ்சலி செலுத்திவருகிறார்.
4.எந்த ஜாதிக்கட்சியுமே தலித்களின் நீல நிறத்தை தன் கொடியில் வைக்காத நிலையில் தம் பா.ம.க கொடியில் வைத்து சிறப்பித்தார்.
5.தம் கட்சிக்குக் கிடைத்த மாநில மந்திரி பதவியல்ல; முதல் மத்திய அமைச்சர் பதவியை வன்னியர் யாருக்கும் தராமல் பறையர் சமூக 'தலித் எழில்மலை'க்குதான் தந்தார்.பிறகு அப்பதவியை பொன்னுசாமிக்கு வழங்கினார்.
6.தாம்பரம் சித்தமருத்துக் கல்லூரிக்கு ராமதாஸ் ஜாதி வெறியராக இருந்திருந்தால் தம்மின 'அர்த்தநாரீச வர்மா' பெயரை வைத்திருக்கலாம்
.ஆனால் பறையர் சமூக 'அயோத்திதாச பண்டிதர்' பெயரையே சூட்டி கவுரவப்படுத்தினார்.
7.பொறியியல் கல்விக்கு தமிழக அரசு பல ஆண்டுகளுக்கு முன் நுழைவுத் தேர்வு கொண்டு வந்தது.அதனால் முற்பட்ட ஜாதியினரே பொறியியல் படிப்பு படிக்கும் நிலை ஏற்பட்டது.+2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை வேண்டும் எனப்போராடி பெற்றுத் தந்தார்.அதனால் பயன் பெற்றது வன்னியர்கள் மட்டும்தானா?பறையர் சமூக இளைஞர்களும்தானே! இதர சமுதாயங்களின் ஏழைக் குடும்பங்களும்தானே!
8.அதற்கு முன் அரியலூர் மாவட்டத்துக்காரர்கள் ஆரம்பத்தில் திருச்சிராப்பள்ளி அதற்கடுத்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள்தான் செல்ல வேண்டி இருந்தது.அந்த நிலையை மாற்றி அரியலூரிலேயே அரசின் நலத்திட்டங்களை பெறும்படி அரியலூர் மாவட்டத்தைக் கருணாநிதியிடம் போராடி பெற்றுத் தந்தது பாமக-வும் குருவும்தான்!அத
னால் பயனடைந்தது வன்னியர்கள் மட்டும்தானா! பறையர்களும் மற்ற ஜாதியினரும் இல்லையா?
9.அதற்கு முன் விபத்தில் அடிபட்டுக் கிடந்தால் ஒருவர் கூட கிட்டே நெருங்கமாட்டார்கள்.செத்துப் போகவேண்டியதுதான! அதற்கு 108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டு வந்தது பாமக-வின் மத்திய அமைச்சர் அன்புமணிதான்! இதனால் உயிர் பிழைத்தது வன்னியர்கள் மட்டும்தானா?பறையர்கள் இல்லையா?
10.சேலத்தில் ரயில்வே கோட்டம், மத்திய அரசின் 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை' ஆகியவற்றைக் கொண்டு வந்தது பா.ம.க -தான்! இதனால் பறையர் வன்னியர்,இதரர் எல்லோரும்தானே பலனடைகிறார்கள்.
11.டாஸ்மாக் கடைகளில் சென்றுபார்த்தால் நிற்பவர்களில் 40% வன்னியர்,40% பறையர் மற்றெல்லா ஜாதியினரும் சேர்ந்து 20% தான்! குடியால் குடும்ப வருமானமும் இழந்து கல்லீரல் அழுகிப் போய் அல்ப ஆயுசிலேயே மனைவிகளை இளம் விதவைகளாக்கி குழந்தைகளை அநாதைகளாக்கி செத்துப் போகிறவர்கள் இந்த இரு சமுதாயத்தினரும்தான்.இதற்காக விசிக போராட முன்வராத நிலையிலும் தொடர்ந்து போராடி மதுக்கடைகளைக் குறைத்திருப்பது காடுவெட்டி குருவும் அவரது கட்சியும்தான்!
'குச்சுக் கொளுத்தி,குடிசைக் கொளுத்தி' என குருவையும் பாமக-வையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறீர்கள்.சாலை மறியல் போராட்டத்தின்போது பறையர் குடிசைகளை பழி வன்னியர்கள்மீது விழும்படியாக மறிக்கப்பட்ட திமுக-வினரும் போலீசாரும்தான் செய்தார்கள்.பறையர் வீடுகளைக் கொளுத்துவதால் வன்னியருக்கு எப்படி இட ஒதுக்கீடு கிடைக்கும்?
கடலூர் ஆலப்பாக்கத்தில் திருமாவளவன் தேர்தலில் நின்றபோது வன்னியர்களை ஓட்டுப்போட விடாமல் தடுத்ததால் தகறாறு ஏற்பட்டு இரு தரப்பும் மாறிமாறி குடிசைகளை கொளுத்திக்கொண்டன.அதில் பறையர் மட்டுமே பாதிக்கப்பட வில்லையே!ஆனையம்பேட்டை வன்னியர் வீடுகளைக் கொளுத்திய 'குச்சுக் கொளுத்திகள்' யார்?
மேலும் 1888-லேயே வன்னியர் சங்கம் உண்டாகிவிட்டது.1952-லேயே 'வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை' எனக்கூறி ஆதிதிராவிடர்களையும் இணைத்துக் கொண்டு எஸ்.எஸ்.ராமசாமிப் படையாட்சியார் பிள்ளைகள்,முதலியார்கள்,ரெட்டி,
நாயுடுகள் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டினார்.அந்தத் தேர்தலிலேயே அய்யாறு,முத்துசாமி,கட்டிமுத்து
,பழனிசாமி என 4 பறையர் சமுகத்தவரை எம்.எல்.ஏ-க்கள் ஆக்கினார்.
1888 முதல் திருமாவளவன் காலம்வரை 'வன்னியர் சங்கம்' இருந்தும் பறையர் வீடுகளைக் கொளுத்தியது உண்டா?
அதற்காக வன்னியர்கள் பறையர் வீடுகளைக் கொளுத்தி இருக்கவே மாட்டார்கள் என்று முழுதும் நான் மறுக்கவரவில்லை.'படையாட்சி பெண்டாட்டி பறையனுக்கு வைப்பாட்டி!' என கோஷமிட்டு,சுவரி
ல் எழுதி கேவலப்படுத்தினால் வன்னியனுக்கு கோபமே வராதா?இதையே நீங்கள் காவேரிக்குத் தெற்கே சென்று 'கள்ளன் பெண்டாட்டி பறையனுக்கு வைப்பாட்டி!' என்று சொல்லி ஊர் திரும்ப முடியுமா? தமிழ் சமுதாயம் கற்புக்கு முக்கியத்துவம் தரும், பெண்களை இழிவுபடுத்தினால் ஏற்காத சமுதாயம் என்பது தெரியாதா?அதனால் பறையர் வீடுகளைக் கொளுத்தியிருக்கலாம்.திடீரென கடலூர் மாவட்ட வன்னியர்களுக்கு பறையர்கள் வீடுகளைக் கொளுத்த அவர்களுக்கு ஒரே நாளில் 'சொல்லி வைத்தாற்போல்' பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன?
'ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு!' என்பதுதானே அறிவியல்.
அதற்காக வன்னியர்கள் 'பறையன் பெண்டாட்டி படையாட்சிக்கு வைப்பாட்டி!' என பதில் முழக்கமிட்டு,எழுதி இதுவரை வன்னியர்கள் கேவலப்படுத்தியத
ு உண்டா?
அ. திண்ணியத்தில் பறையரின் வாயில் கொங்குவேளாளர்கள் மலத்தைத் திணித்தார்கள்.அதுபோல வன்னியர்கள் பறையர்கள் வாயில் வடமாவட்டத்தில் எங்காவது மலத்தைத் திணித்து ஜாதிவெறியைக் காட்டியது உண்டா?
ஆ. கீழவளவில் தேவர்களின் வீட்டுக்குக்குள் நுழைந்தவரையல்ல, ஊராட்சிமன்றக் கட்டடத்தில் நுழைந்ததையே பொறுக்கமுடியாமல் பறையர் முருகேசனை முக்குலத்தோர் வெட்டிக்கொலை செய்தார்களே!அதே
போல் வட தமிழ்நாட்டில் வன்னியர்கள் ஜாதிவெறி முற்றிப்போய் எந்தப் பறையர் ஜாதி பஞ்சாயத்துத் தலைவரையாவது அலுவலகத்தால் பூந்து வெட்டிக் கொலை செய்தது உண்டா?குடிசை எரிந்து போனால் மீண்டும் 10 கீற்று வாங்கி ஒரு குடிசைக் கட்டிவிடலாம்.போன முருகேசன் உயிரைத் திரும்பக் கொண்டு வந்துவிட முடியுமா?
இ. 'வன்னியர்கள் வடக்கில் 4,5 மாவட்டத்தில்தான் இருக்கிறீர்கள்!
நாங்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறோம்!' என்று பெருமை பேசிய திருமாவளவன் கொடி கூட ஏற்ற முடியாமல் திரும்பிய நிலை கள்ளர்கள் வாழும் ஒரத்தநாடு வடசேரியில் 2015-இல் நிகழ்ந்தது.அங்க
ு அவர்மீது பெட்ரோல் குண்டும், கற்களும் வீசக் காத்திருந்த 12 இளைஞர்கள் கைதாயினர்.அவர் அங்கு போயிருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம்.இது போன்ற நிகழ்வுகள் வன்னியர் வாழும் வட தமிழ்நாட்டில் நடந்தது உண்டா?
விசிக-வும் மற்ற ஆதிக்க ஜாதி வெறியர்களும் ஊடகங்களும் தொடர்ந்து இழிவுபடுத்தியும
்,இருட்டடிப்பு செய்தும் வரும் நிலையிலேயே ஜாதிவெறியர் குரு,ராமதாஸ்,அன்புமணி ஆகியோரின் பா.ம.க பலமுறை எம்.எல்.ஏ-க்களைப் பெற்றுவிட்டதோடு அதிகபட்சமாய் 23 எம்.எல்.ஏ-க்களையும் பெற்றுவிட்டது.பலமுறை எம்.பி-க்களைப் பெற்று பல மத்தியமந்திரிகள
ையும் பெற்றுவிட்டது.கடந்த தேர்தலில் தனியாகவே நின்று பணம் தராமலேயே 5.5% வாக்குகளை வாங்கி அதிமுக,திமுக-வுக்கு அடுத்தபடியாக வாக்குகள் பெற்றுவிட்டது. நீங்கள் சொல்வது போல பாமக ஜாதி வெறிக்கட்சியாக மக்கள் நினைத்து இருந்தால் இவ்வளவு அதிசயங்கள் நிகழ்ந்திருக்கு
மா?
தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை உள்ள, 'தமிழ் இந்து' வின் இடதுசாரிகளின்,முற்போக்காளர்களி
ன் ஆதரவு பெற்ற 5 கட்சி கூட்டணியுடன் சென்ற விசிக-வால் 1.5% க்குமேல் வாக்கு பெறமுடியாமல் போனது ஏன்?திருமாவளவனால் 15 ஆண்டுகளாக கட்சி நடத்தியும் ஒரு மாநில மந்திரி,ஒரு மத்திய அமைச்சர் பதவியை இதுவரை வாங்க முடிந்ததா?அப்போது மக்கள் யாரை ஜாதிவெறிக்கட்சியாக நினைக்கிறார்கள் என்று எடை போட்டுப் பாருங்கள்!
வன்னியர்கள்போல பறையர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளும் ஜாதி இந்து/குடியான ஜாதி தமிழ்நாட்டில் சமுதாயம் வேறு எதுவும் இல்லை.வன்னியர்கள்போல் அரசியலில் பறையர்களுக்கு உதவிய சமுதாயமும் வேறில்லை.
அதனால் அப்படிப்பட்ட இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் இறப்பை வெடிவெடித்துக் கொண்டாடுவதும்,அவரைப் பன்றி போல் சித்தரித்துக் கேவலப்படுத்துவத
ும் விசிக தனக்குத்தானே வைத்துக் கொள்ளும் சூனியம்தான்!
விரோதத்தை வளர்க்கும் 'நாடகக் காதலை'க் கைவிட்டு, தலித்துகளுக்கு முழு இட ஒதுக்கீடு,நில ஒதுக்கீடு,மாநில ஆட்சி அதிகாரத்தை நாடார்,கொங்கு வேளாளர்,முக்குலத்தோர் ஆதிக்கவாதிகளிடமிருந்து கைப்பற்ற வன்னியர்களுடன் சேர்ந்தோ சேராமலோ போராடுவது இவைதான் ஆதிதிராவிட மக்களை பொருளாதாரத்தில் உயர்த்தி சமூகத்தில் உரிய மரியாதையை ஏற்படுத்தித்தரும் என நம்புகிறேன்.
இவற்றில் முற்பகுதிக் கருத்துகளை இட்டு பதில் கேட்டவுடன் மணிகண்டன் என்ன நினைத்தாரோ உடனே நீக்கிவிட்டார்.ஆனால் நியாமுள்ள பறையர் சமுதாய சகோதரர்களுக்கும் இதர நடுநிலையாளர்களுக்கும் சென்று சேரவே இப்பதிவு.
வடதமிழன் காவிரிச்செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக