சனி, 29 ஏப்ரல், 2017

கன்னியாகுமரி இல் ஒரு திருப்பதி கட்டி வசூல் செய்ய திட்டம் தெலுங்கர் ரெட்டி

aathi tamil aathi1956@gmail.com

15/7/15
பெறுநர்: எனக்கு
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வளாகத்தில்
திருப்பதி வெங்கடாசலபதி கோயில் அமைய உள்ள
இடத்தை திருமலை திருப்பதி தேவசம்போர்டு
அதிகாரிகள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு
செய்தனர். கோயில் கட்டும் பணிக்கான பூமி பூஜை
செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) நடைபெறுகிறது.
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில்
5.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.22 கோடியே 50 லட்சம்
செலவில் திருமலை திருப்பதி வெங்கடாசலபதி
கோயில் அமைக்கப்படவுள்ளது. அந்த இடத்தை திருமலை
திருப்பதி தேவஸ்தானம் சென்னை ஆலோசனைக் குழுமத்
தலைவர் கே.ஆனந்தகுமார் ரெட்டி, திருமலை
திருப்பதி தேவசம் போர்டு உறுப்பினர்கள்
சத்யநாராயணா, கிருஷ்ணராவ், வெங்கடாசலம்,
பிரபாகர ரெட்டி, மோகன்ராவ், தலைமைப் பொறியாளர்
ஜெகதீஸ்வர ரெட்டி, விவேகானந்த கேந்திர துணைத்
தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ஹனுமந்தராவ்,
பி.ஆர்.ஓ. ரகுநாதன் நாயர், தொழிலதிபர்
எம்.சந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
அதைத்தொடர்ந்து கே.ஆனந்தகுமார் ரெட்டி
செய்தியாளர்களிடம் கூறியது:
கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாசலபதி
கோயில் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை
செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு
நடைபெறுகிறது. இதில், திருமலை திருப்பதி
தேவஸ்தான டிரஸ்ட் தலைவர் பாபிராஜு எம்.பி.,
உறுப்பினர்கள் கமலா எம்.எல்.ஏ., பமுலா ராஜேஸ்வரி
தேவி எம்.எல்.ஏ., ராஜிரெட்டி எம்.எல்.ஏ. மற்றும்
பலர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்காக திருச்செந்தூர், ஸ்ரீவில்லிபுதூர்
உள்ளிட்ட 108 கோயில்களிலிருந்து தீர்த்தம்
கொண்டுவரப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி
தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு
செய்யப்படும்.
2 ஆண்டுக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்கத்
திட்டமிடப்பட்டுள்ளது. கோயில் கும்பாபிஷேகம்
மிகவும் பிரமாண்ட முறையில் நடத்தப்படும் என்றார்
அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக