சனி, 29 ஏப்ரல், 2017

இறவாப்பேரினம் எனது கவிதை

aathi tamil aathi1956@gmail.com

15/7/15
பெறுநர்: எனக்கு
மானத்தமிழ் மண்ணை
மாயைகள் சூழ்ந்தனவே!

சீருடைதரித்தப் புலியொன்று
சீறிப்பாயும் படைகொண்டு

போரொன்று தொடுத்துப்
போலிகளைத் தோற்கடித்து

முற்றாகக் கைப்பற்றி
வெற்றிவாகை சூடும்

எதிர்நின்றால் எவரும் -இனி
அதிர்வேட்டு முழங்கும்

போரன்றி வேறறியாப் பொல்லாத வேங்கைகளே!

இறவாப்பேரினம் திரண்டு நின்றால்
இறையே வரினும் மிரண்டு போகும்

உலகே அதிர்வுற ஒரு
உரிமைப் போரும் நிகழும்

எதுவொரு போரும் கொடியது அன்றோ  -இல்லை
இதுவொரு விடுதலைப் போரன்றோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக