சனி, 29 ஏப்ரல், 2017

ஐயர் மதிப்பிற்குரியவர் வேர்ச்சொல் சொல்லாய்வு தொல்காப்பியம் அந்தணர் பார்ப்பனர் எனது

aathi tamil aathi1956@gmail.com

15/7/15
பெறுநர்: எனக்கு
‘ஐ’ என்பது தலைமையையும் அதன் காரணமாக.வியப்பையும் குறிக்கும் வேர்ச்சொல்.
இடைக்குலப் பெண்கள்தான் ‘ஐயை’ (கற்பில் சிறந்தவள், தலைமை சான்றவள்,
வியப்புக்குரியவள்) எனப் பெயர்பூண்டனர்.
‘ஐயை’ என்ற சொல்லின் ஆண்பாற்சொல் ‘ஐயன்’ (மரியாதை விகுதி சேரும்போது
‘ஐயர்’ என்றாகிறது).
 ஐயன், ஐயர் என்பவை.முதலில் முல்லை நிலம்.சார்பாகத் தோன்றிய சொற்களே.
கற்புக்கு அடையாளம் ‘கரணம்’ (திருமணச் சடங்கு) எனக்கருதப்பட்டதன் விளைவாக
முதன்முதலில் ‘ஐயர்கள்’ தான் கரணம் யாத்தனர் (திருமணச் சடங்குகளை
வரையறுத்தனர்).
 “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”
தொல்காப்பியம் கூறுகிறது.
அதாவது திருமண முறையை வகுப்பவர் ஐயர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக