செவ்வாய், 10 அக்டோபர், 2017

மாட்டிறைச்சி தின்ற பாணர் எயினர் சிறப்புடன் வாழ்ந்தனர் சமணம் இதை மாற்றியது பாவாணர்

இருதமிழ் வளர்த்த பறையர்!!!
தமிழ்மொழி தொன்று தொட்டு மூவகைப் பட்டிருந்தது.முத்தமிழ் என்று
அழைக்கப்படும் அது இயற்றமிழ்,இசைத்
தமிழ்,நாடகத் தமிழ் என்று மூவகைத்து.முத்தமிழுக்கும் தமிழில் இலக்கணம்
இருந்து வந்துள்ளது.எனின
ும்,இன்று நம்மிடம் உள்ளதோ இயற்றமிழ் இலக்கணம் மட்டுமே.இன்று கூறப்பெறும்
ஐவகை இலக்கணங்களான எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி என்பன இயற்றமிழுள்
அடங்குபவை.இன்று கிடைக்கப்பெற்றுள்ள தமிழ் நூலகளுள் மிகவும் பழமையானது
தொல்காப்பியமே.அது கூறுவது இயற்றமிழ் இலக்கணம் மட்டுமே.எழுத்தை
யும்,சொல்லையும் தனி தனியாகவும்,யாப்பையும் அணியையும் பொருளுள்
அடக்கியும் அது கூறுகிறது.இசைத் இலக்கணமும்,நாடகத் தமிழ் இலக்கணமும்
அழிந்தது என்று கூறுவதை விட அழிக்கப்பட்டது என்பதே உண்மை.பாணர் என்னும்
தமிழ் வகுப்பார் இசை கலைஞராவர்.அவர் நால்வகைப்
படுவர்.பறைப்பாணர்(பறையர்),யாழ்பாணர்(பாணர்),குழற்பாணர்,இசைப்பாணர்(பாடகர்)..இசைத்
தமிழும்,நாடக தமிழும் வளர்த்த இவர் அனைவரும் இன்று பறையருள்
அடக்கப்பட்டுள்ளனர்.இவர்களை வீழ்த்திய பிராமணரே இன்று இசையிலும்,நாடகத
்திலும் சிறந்திருப்பது கவனிக்கத் தக்கது.ஊனணவும்,மாட்டுக் கறியும்
பண்டைய தமிழகத்தில் இழிவாக கருதப்படவில்லை என்பதற்கு மாட்டுக் கறி உண்ட
எயினரும்,பாணரும் கழக இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட
ுள்ளமையும்,குறிப்பாக பாணர் பல்வேறு அரசராலும் போற்றி சிறப்பிக்கப்
பட்டுள்ளமையும் சான்றாம்.சமணத்தின் வரவாலே இவர்கள் வீழ்த்தப்பட்டுள்ளதைப்
பாவாணர் சான்றுடன் விளக்குகிறார்.வ
ிண்ணில் மண் என்னும் நூலில் அவர் கூறியவற்றை கீழே இணைத்துள்ளேன்.

https://m.facebook.com/story.php?story_fbid=269339726904643&id=100014858532487&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr

தமிழிசை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக