செவ்வாய், 10 அக்டோபர், 2017

ஹிந்தியா விட தமிழகம் முன்னேற்றம் மின்சாரம் கல்வி தனித்தமிழ்நாடு

டீமானிட்டைசேசன் அறிவித்த பிறகு நடந்த கூட்டத்தில் மோடி பெருமிதத்துடன்
"கர்ப்பிணி பெண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் " என
அறிவித்தார். வட இந்திய மாநிலங்கள் சூப்பரப்பு என்றார்கள்.
தமிழ்நாட்டுக்காரன் அதை "இவ்ளோதான் உன் டக்கா? " என்பது போல பார்த்தான்.
ஏனென்றால் தமிழ்நாடு அரசு கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்கெனவே 18ஆயிரம்
ரூபாய் உதவித்தொகை வழங்கிவருகிறது.
இதோ இன்று ஏழைகள் நலத்திட்டம் என்ற பெயரில் எல்லா வீடுகளுக்கும் மின்
இணைப்பு என்று அறிவித்தார் . தமிழ்நாட்டுக்காரன் "என்னாது காந்தி
செத்துட்டாரா? " என்பது போல லுக் விடுறான். ஏனென்றால் இந்தியாவிலேயே
தமிழ்நாட்டில் தான் 99.5% வீடுகள் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுவிட்டன.
நீட் தேர்வுக்கு மற்ற மாநிலத்துக்காரங்க லாம் எதிர்ப்பு தெரிவிக்காத போது
தமிழ்நாட்டில் ஏன் எதிர்ப்பு என்றால் இதனால் தான் . இந்தியாவிலேயே
தமிழ்நாட்டில் தான் மிக அதிகளவிலே (24) அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன.
நவோதயா பள்ளிகளை பற்றி இங்கு வந்து பேசுகிறார்கள் . ஐந்தாம் வகுப்பு கூட
படிக்காத சிறார்கள் இந்தியாவில் 8% உள்ளனர். தமிழ்நாட்டில் 0.7% தான் .
இந்த வெளக்கெண்ணெய்கள் தமிழ் நாட்டின் தரத்தை பற்றி பேசுவதை பார்த்தால்,
"சீட்டாட்டத்துல ஒரு கட்டுக்கு எத்தனை சீட்டாவது தெரியுமா?" என்ற வடிவேலு
காமெடி தான் ஞாபகத்துக்கு வருகிறது.
உண்மையில் தரங்கெட்ட இந்தியாவில் ஒரு பகுதியாக இருக்கிறதே என்ற ஒரு
தரக்குறைவை தவிர மற்ற எல்லாவிதத்திலும் தமிழ்நாடு தரமாகத்தான்
இருக்கிறது.............
ராக்போர்ட் சந்துரு

1 கருத்து: