செவ்வாய், 10 அக்டோபர், 2017

குறவர் தமிழகம் முழுவதும் உண்டு பல தொழில் ஓரளவு முன்னேற்றம் நான்கு பிரிவு bc st

29/09 12:41] venkatesa kumarkFbH: குறவர்கள் ஆந்திராவில் மற்றும்
கேரளாவில் உள்ளார்கள்.. கர்நாடகாவில் இருக்கிறார்களா என்று சரியாக
தெரியவில்லை.
[29/09 12:42] venkatesa kumarkFbH: தமிழ்நாட்டின் அனைத்து
மாவட்டங்களிலுமே பரவலாக குறவர்கள் வாழ்கிறார்கள்..
[29/09 12:45] venkatesa kumarkFbH: நான் குறவர் சாதிதான்.. தமிழ்நாட்டை
ஒட்டிய ஆந்திர மாநில எல்லை மாவட்டங்களில் அதகமாகவே வசிக்கிறார்கள்..
எனக்கு உறவினர்களும் உண்டு அங்கு.. சித்தூர், V கோட்டா..
[29/09 12:47] venkatesa kumarkFbH: சமீபத்தில் ஒரு குடும்பம் என்
தம்பிக்கு பெண் கொடுக்க அனுகினார்கள்.. அந்த குடும்பம் சுமார்
25வருடங்களுக்கு முன் ஜோலார்பேட்டையில் இரயில்வே பணி நிமித்தமாக
குடியேறியுள்ளார்கள். அவர்கள் சொந்த ஊர் அனந்தப்பூர், ஆந்திரா.
[29/09 12:48] venkatesa kumarkFbH: அவர்கள் பெயரும் தெலுங்கு பெயராகவே
வைத்துள்ளார்கள்.. ஆனால் சாதி குறவர்தான்..
[29/09 12:55] venkatesa kumarkFbH: என் ஊர் திருப்பத்தூர் வேலூர்
மாவட்டம்.. என் மனைவி ஊர் ஆலங்காயம். எங்க ஊரில் மற்றும் சுற்றியுள்ள
ஊர்களில் வசிக்கும் குறவர்கள் அனைவரும் தமிழ்தான் பேசுகிறார்கள். ஆனால்
என் மனைவி ஊரான ஆலங்காயம் அருகில் உள்ள (ஜவ்வாது மலைத்தொடரின் ஒரு பகுதி)
கிராமங்களில் குறவர்களுக்கு தனி மொழி உள்ளது. அந்த மொழி தமிழ் கன்னடம்
தெலுங்கு கலந்த கலவையாக உள்ளது.. அவர்கள் நரிக்குறவர்கள் அல்ல..
[29/09 13:05] venkatesa kumarkFbH: ஆதி.. குற்றாலக் குறவஞ்சியோடு வேறு
சில குறவர்கள் பற்றி பதிவுசெய்யும் நூல்களையும் ஆராயவேண்டும் என்று
எதிர்நோக்குகிறேன்.
[29/09 13:13] venkatesa kumarkFbH: என் தாயின் சொந்த ஊர் பர்கூர்
அருகில் உள்ள ஒரு கிராமம்(கிருஷ்ணகிரி மாவட்டம்). அங்கு குறவர்கள்
வீட்டிலேயே தெலுங்குதான் பேசுகிறார்கள். குறவர்கள் சில குடம்பங்களே
ஊருக்கு.. அங்கு உள்ள பரையர்களுமே தெலுங்கு பேசுவார்கள்.. ஆனால்
அவ்விருவர்களுக்குமே தெரியும் தாங்கள் தமிழர்தானென்று. பெரும்பான்மை
மக்கள் தெலுங்கர்கள் மற்றும் ஆதிக்கசாதிகளும் தெலுங்கர்களே என்பதால்
பொதுவெளியிலும் அங்கு தெலுங்கே பேசப்படுகிறது. அதே வீட்டுமொழியாகவும்
உள்ளது..
[30/09 06:17] ஆதி பேரொளி: ஓ அப்படியா?
தமிழ் பேசும் குறவர்கள் குற்றால மலை சுற்றி மட்டுமே உண்டு
மற்றவர்கள் நரிக்குறவர்கள் என்று சாதி பற்றி ஆராயும் ஒருவர் கூறினார்.

ஆனால் உண்மை வேறாக உள்ளது.

மொழி மாறுவதுகூட பிரச்சனை இல்லை.
சிறுபான்மைப் பழங்குடிகள் சாதிக்குள் திருமணம் செய்வது முக்கியம்.

பிற இனத்து மலைச்சாதிகளுடன் கலக்காமல் இருந்தால் சரி.
[30/09 06:18] ஆதி பேரொளி: உங்களுக்குத் தெரிந்து குறவர்கள் நிலை
சிறிதேனும் மேம்பட்டுள்ளதா?

கல்வி, சொந்த வீடு, அரசு வேலை போன்றவற்றை கணக்கில் கொண்டு...
[30/09 08:26] venkatesa kumarkFbH: ஆம். நான் குறவர் சாதிதான்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல பிற மாநிலங்களிலுமே மலைகள் நிறைந்த ஊர்களில்
உறுதியாக குறவர் சாதி மக்கள் வாழ்கிறார்கள். மலைகளில் வாழ்ந்தவர்கள் கூட
கடந்த நான்கு தலைமுறையாக மலையடிவாரத்தில் குடியேறி வாழ்கிறார்கள்.
தமிழ்ச்சாதி குறவர்களுல் நான்கு குலங்களுண்டு. அந்த குலங்களில்
ஒன்றில்தான் திருமணம் செய்கிறோம், மொழியை தடையாக வைப்பதில்லை. காரணம்,
வாழும் இடத்தில் பெரும்பாண்மை இனம் என்ன மொழி பேசுகிறதோ அந்த மொழியையே
பேசவேண்டியிருப்பதால்.
[30/09 08:31] venkatesa kumarkFbH: கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து
துறையிலுமே ஓரளவுக்கு முன்னேற்றம் உள்ளது. குறவர் சாதி என்றால் குறி
சொல்பவர்களும் நரிக்குறவர்களும் மட்டுமே நம்மக்களின் பொதுபுத்தியில்
திணிக்கப்பட்டுள்ளது. அது ஏன் என்று புரியவில்லை. உண்மையில் குறவர்
சாதியினர் பல தொழில் செய்வோர்களாக இருந்துவருகிறார்கள்.
[30/09 08:50] venkatesa kumarkFbH: தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில்
குறவர்சாதியை பழங்குடியாக ஏற்பதில்லை. வேலூர் மாவட்டத்தில்
குறவர்சாதிக்கு சாதிச்சான்றிதழ் BC என்றே தருகிறார்கள். ST என்று
தருவதில்லை. போராடினால், கையூட்டு கொடுத்தால் SC என்று சிலருக்கு மட்டும்
தருகிறார்கள். அருகிலுள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில்
SC, ST என்று சான்றிதழ் தருகிறார்கள்.

தனியார் துறை வேலைவாய்ப்பினால் சாதி சான்றிதலை பெரிதாக என்னாமல் முன்னேறி
செல்கிறோம்.. குறவர் சாதியில் (சிறு)தொழில் சார்ந்து பல பிரிவுகள்
இருக்கிறது. அதில் சில பிரிவுகள் குழுவாக வாழும் ஊர்களில் முன்னேற்றம்
இல்லாமலும் உள்ளார்கள். அதற்கு சில சுற்றுப்புற காரணமிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக