செவ்வாய், 10 அக்டோபர், 2017

ஆடல் நடனம் தமிழ் கலை

தமிழர் ஆடற்கலைகள்..!
தமிழர்களின் ஆடற்கலைகள் என்றாலே நம் மனதில் முதலில்
தோன்றுவது பரதநாட்டியம் தான்.
அதைவிடுத்து வேறு ஆடல்கள் தமிழர்கள மத்தியில்
இல்லையா? இருக்கிறது. பல ஆடற்கலைகள் காலம்
காலமாக தமிழர்களால் ஆடப்பட்டு வருகிறது.
படம் ;- தமிழர் ஆடற்கலைகளில் சிறப்பு மிக்க சில
ஆடற்கலைகள்.
௧) கரகாட்டம் - தலையில் கரகம் வைத்துக் கொண்டு ஆடும்
நடனம்
௨) கும்மியாட்டம் - கும்மி பலர் கூடி ஆடும்
ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.
௩) கோலாட்டம் - கோலாட்டம் என்பது பல்வேறு நிறங்கள்
தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும்
ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும் நடனம்.
௪) பொய்க்கால் குதிரை ஆட்டம் - குதிரைக்
கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல்
பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால்
குதிரை ஆட்டம்
௫) புலியாட்டம் - புலி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம்
புலி ஆட்டம்
௬) மயிலாட்டம் - மயிலின் தோகையை உடையுடன்
சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும்
ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின்
ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம்
அமையும்.
௭) ஒயிலாட்டம் - ஒரே நிறத் துணியைத் தலையில்
கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான
துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான
குழு ஆட்டம்.
௮) குறவன் குறத்தி ஆட்டம் - குறவர் சமூகத்தினைச்
சார்ந்த ஆணான குறவனும், பெண்ணான குறத்தியும்
இசைத்தபடி ஆடும் ஆட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக