செவ்வாய், 10 அக்டோபர், 2017

திருமுருகன் காந்தி பேட்டி விமர்சனம்

திருகுமுருகன் காந்தியின் திருகுதாளங்கள் 5..
1..
// தமிழ்நாட்டில் பெரும்பான்மை தமிழராக இருப்பதால் தமிழ்த்தேசியத்தை
முன்வைக்கிறோம்.
தமிழ்நாட்டை தமிழனே ஆளவேண்டும் என்பது தூய்மைவாதம். அது சிங்கள வெறிக்கு
ஒப்பானது.//
இரண்டுமே ஒன்றுக்கொன்று முரணானது. தமிழனே ஆளவேண்டும் என்பது தூய்மைவாத
சிங்கள இனவெறிக்கு ஒப்பானது என்றால்,
தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் பெரும்பான்மை என்பதால் முன்வைக்கிறோம்
என்பதும் தூய்மைவாதமல்லவா. இது இங்குள்ள தெலுங்கு தேசியம், மலையாள
தேசியம், கன்னட தேசியத்தை புறக்கணிப்பதல்லவா? எனில் தூய்மைவாத சிங்கள
வெறிக்கு ஒப்பான தமிழ்த்தேசியத்தை என்ன செய்வது?
2..
//தமிழ்த்தேசியத்தை யார் வழி நடத்துகிறார்களோ, அவரே தலைவர்.. இதில்
தமிழர்தான் தலைமை என மொழி பாகுபாடு கிடையாது //
தமிழ்த்தேசியத்தை தலைமை தாங்க தமிழனே இல்லை என்றால், ஈ வெ ரா சொன்ன தலைமை
தாங்கும் தகுதி தமிழனுக்கு இல்லையப்பா நிலைதான் இன்னுமா.. பின் தமிழன்
எங்கு போய் தலைமை தாங்குவது.. கன்னட மலையாள தெலுங்கு தேசியத்துக்கா?
தமிழ்த்தேசியத்தின் தலைமை தமிழனின் உரிமை.
3..
//தமிழ்த்தேசியம் மொழி பாகுபாடற்றது //
'தமிழ்' தேசியம் என்றுவிட்டு மொழிபாகுபடற்றது என்றால்? தமிழ்த்தேசியம்
என்பது தமிழை முன்னிறுத்துவது.. இதை மொழி பாகுபாடு என சிந்திப்பதே
மடத்தனம்.
4..
//தமிழ்த்தேசியம் மொழிபாகுபாடற்ற, உழைக்கும் மக்களுக்கான அரசியல்,
பண்பாட்டு, பொருளியல் விடுதலை //
இதை மக்கள் தேசியம், திராவிட தேசியம், கம்முனிசம் என சொல்லுங்கள்.. ஏன்
தமிழ்த்தேசியத்தை இழுக்கிறீர்கள்.. தமிழ்த்தேசியம் தமிழ் மொழி, தமிழின
மீட்சியை முன்னிலை வைப்பது..
5..
//சாதி ஒழிப்பும், தமிழ்தேசியமுமே இலக்குகள். ஊர் சேரி, சாதி இருக்கும்
வரை தமிழ்த்தேசியம் சாத்தியமில்லை //
திராவிடம் இந்தியம் எல்லாம் சாத்தியமானாலும் தமிழ்த்தேசியத்த
ுக்கு நிபந்தனைகள் வைக்கும் அதே திராவிட தலித்திய முட்டுச்சந்து.
சாதி ஒழிப்பும், தமிழ்த்தேசிய இன விடுதலையும் இலக்கு என்ற தமிழரசனின்
வரிகளில் சாதி ஒழிப்பை எடுத்துக்கொண்டு, தமிழ்த்தேசிய இன விடுதலை என
தனித்தமிழ்நாடு விடுதலையை சொல்லாமல் தமிழ்த்தேசியம் இலக்கு என மொட்டையாக
மழுக்குவதுதான் திருகுமுருகனின் திருகுதாளத்தின் உச்சம்..
பதிவு Mathi Vanan

1 கருத்து: