செவ்வாய், 10 அக்டோபர், 2017

மபொசி புலிகள் எதிர்ப்பு அமைதிப்படை பற்றி அறிந்து மனமாற்றம் பாராட்டு

இந்தியப்படையைப் பிரபாகரன் எதிர்க்கத் துணிந்தபோது உண்மையில் கவலையும்,
வருத்தமும் கொண்டேன். ஈழத்தமிழர்களுக்காக உதவுவதற்காகச் சென்றிருக்கும்
படையைப் பிரபாகரன் எதிர்ப்பது எந்தவிதத்திலும் சரியாக இருக்காது எனக்
கருதித்தான் கண்டித்தேன். ஆனால், காலப்போக்கில் இந்திய அமைதிப்படை அங்கு
நடந்துகொண்ட முறைகள் எனக்குத் தெரியவந்தபோது உண்மையை உணர்ந்தேன்.

தன்னந்தனியாக நின்று இந்தியப் படையை எதிர்த்துப் போராடி இறுதியில் தங்கள்
நாட்டைவிட்டு இந்தியப்படையை  வெளியேற்றிய பிரபாகரன் உண்மையில்
மாவீரன்தான். பண்டைத்தமிழர்களின் வீரம் இன்னும் மறைந்துவிடவில்லை என
நிரூபித்த பிரபாகரனுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவியுங்கள்.

-சிலம்புச்செல்வர் ம.பொ.சி.

( பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் - பக்கம் 601ல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக