செவ்வாய், 10 அக்டோபர், 2017

திணை குறிஞ்சி சொல்லாய்வு பூ செடி ஆகுபெயர் வேர்ச்சொல்

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் , 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் — Suresh N உடன்.
ஐந்திணைப்பெயர் மூலம்:
1.குறிஞ்சி;-
குறி = அடையாளம், காலம், அளவு, தடவை.
குறி - குறிஞ்சி = ஒரு பல்லாண்டுக்கால அளவைக் குறிக்கும் பூ, அப்
பூப்பூக்கும் செடி, அச்செடி இயற்கையாக வளரும் மலை, மலையும் மலை
சார்ந்தஇடமும், மலைநாடு.
ஒ.நோ: நெரி - நெரிஞ்சி - நெருஞ்சி.
கோடைக்கானல் மலையிலும் நீலமலையிலும் உள்ள குறிஞ்சிச்
செடிகள்,பன்னீராண்டிற் கொருமுறை பூக்கின்றன. நீலமலையிலுள்ள தொதுவர்
(தோடர்), குறிஞ்சி பூக்குந்தடவையைக் கொண்டே தம் அகவையைக்
கணக்கிட்டுவந்தனர். குமரிநாட்டுக் குறிஞ்சி நில வாணரும் இங்ஙனமே
செய்திருத்தல் வேண்டும்.
ஆங்கிலேயர், இந்தியா முழுதுமுள்ள குறிஞ்சிச்செடிகளை யெல்லாம் ஆய்ந்து,
குறிஞ்சிவகைகள் மொத்தம் 46 என்றும், அவை பூக்கும்காலவிடையீடு ஓராண்டு
முதல் 16 ஆண்டுவரை பல்வேறு அளவுபட்டதென்றும், கண்டறிந்திருக்க
ின்றனர்.குமரிநாட்டில் எத்தனைவகை யிருந்தனவோ அறியோம்.--
(பாவாணர்:தமிழர் வரலாறு-பாகம்1-ப
க்கம்105)
குறிஞ்சி என்னும் பூவின் பெயர் அந்த பூவை உடைய செடிக்கு ஆகி வந்தது
சினையாகு பெயராகும்(சினை-
உறுப்பு), பூ என்னும் உறுப்பின் பெயர் அவ்வுறுப்பை உடைய செடிக்கு ஆகி
வந்ததால் சினை ஆகு பெயர் என்க.
செடியின் பெயர் அச்செடி உடைய நிலத்திற்கு ஆகி வந்ததால் இருமுடி ஆகுபெயராகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக