செவ்வாய், 10 அக்டோபர், 2017

தமிழகம் சொத்து நிறுவனங்கள் அரசு அலகுகள் தனித்தமிழ்நாடு

சீனி. மாணிக்கவாசகம்
அண்டை மாநிலங்களுடன் நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சினைகள் வரும்
போதெல்லாம் திராவிட இயக்கங்களும், திராவிட கட்சிகளும், சிறியதும்
பெரியதுமான இயக்கங்களும் - கட்சிகளும், உள்ளூர் ரவுடி முதல் திரைப்படத்
துறையினர் வரை அனைவருமே "நெய்வேலி-யில் இருந்து கொடுக்கும் மின்சாரத்தை
நிறுத்துவோம்" என்று தொண்டை நரம்பு புடைக்க பேசுவார்கள்....
இதை அனைவரும் பார்த்து இருப்பீர்கள்...
அது என்ன நெய்வேலி மட்டும்?
தமிழன் தடுத்து நிறுத்த, தமிழனிடம் இருக்கும் சொத்தும் அதிகாரமும்
நெய்வேலி மின்சாரம் மட்டும் தானா?
ரயில்வே நிலையங்கள், ரயில்வே டிராக், ரயில்வே தொழிற்சாலைகள், விமான
நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், தபால்துறை அலுவலகங்கள், வங்கிகள்,
துறைமுகங்கள், வருமான வரி அலுவலகங்கள், அணு மின் நிலையங்கள், தமிழ்நாடு
ONGC, தமிழ்நாடு தொலைபேசி BSNL, சென்னை பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு
நிறுவனம் CPCL, இராணுவ கனரக வாகன தொழிற்சாலை HVF, சேலம் இரும்பு
தொழிற்சாலைSAIL, திருச்சி BHEL, தாம்பரம் ஆவடி சூலூர் தஞ்சாவூர்
விமானப்படை தளங்கள், அடையாறு அரக்கோணம் உச்சிப்புளி கடற்படை தளங்கள்,
சென்னை தரைப்படை தளங்கள், ஆவடி CRPF பயிற்சிப்பள்ளி, சென்னை IIT,
திருச்சி NIT, தூத்துக்குடி HWP etc etc என்று அனைத்துமே தமிழர்களின்
சொத்து தான்.... (மொத்த லிஸ்டையும் போட்டா ரெண்டு மைல் தூரத்துக்கு
வரும்)...
இந்திய அரசாங்கம் என்பது ஒரு கூட்டாட்சி காகித அமைப்பு மட்டுமே...
இந்தியா எங்கேயிருந்தும் சம்பாதித்துக் கொண்டுவந்து இங்கே சொத்து
வாங்கவில்லை, முதலீடு செய்யவில்லை... அனைத்துமே, பல்வேறு மாநிலங்களில்
இருந்து திரட்டப்படும் வரிகளில் இருந்து நிறுவப் பட்டவை மட்டுமே.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக