செவ்வாய், 10 அக்டோபர், 2017

கார்த்திகை சொக்கப்பனை கொளுத்துதல் முன்னோர் வழிபாடு பண்டிகை வானியல் நாட்காட்டி

பாசுகரன் மகன் நவீனன் , 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் — சீனி.
மாணிக்கவாசகம் மற்றும் 71 பேர் உடன்.
கார்த்திகை விளக்கீடும் சொக்கப்பனையும்
========================================
நமது முன்னோர்கள், ஆடி அமாவாசையில் முன்னோர் உலகத்திலிருந்து புறப்பட்டு,
ஐப்பசி அமாசையில் படையலை ஏற்றுக்கொண்டு, தை அமாசைக்குள் மீண்டும்
முன்னோர் உலகம் சென்றுவிட வேண்டும் அல்லது இறைவனிடம் கலந்துவிட வேண்டும்.
ஐப்பசி அமாவாசை படையலை ஏற்றுக்கொண்டவர்களை மீண்டும் முன்னோர் உலகம்
அனுப்ப ஒளிப்பாதையை காட்டுவதே விளக்கீடு!!! மனைகளெங்கும் விளக்குகள்
ஏற்றி வைக்கப்படும். இறைவனிடம் வீடுபேறு வேண்டி பரணி விளக்கு
ஏற்றப்படும்.
வாரிசுகள் இல்லாத ஆன்மாக்களுக்கும் வழிக்காட்ட கோவில்கள் முன் பொதுவாக
சொக்கப்பனை ஏற்றப்படும். சிவன் கோவில்களில் கார்த்திகையிலும், திருமால்
கோவில்களில் உரோகிணியிலும் ஏற்றப்படும். இதன் மூலம் வாரிசுகள் இல்லாத
முன்னோர்களுக்கும் சேர்த்து வீடுபேறு கிடைக்க வேண்டப்படுகிறது!!!
யாதும் ஊரே!!! யாவரும் கேளிர்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக